Post by Sumi on Oct 20, 2012 10:34:56 GMT 5.5
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
பொதுவான தர்மங்கள்
என் காரியம்
Part 6 0f 11
சுருக்கமாக என்னச் செய்யச் சொல்கிறேன்?. ஆசாரியாள் சரீரத்தை விடுவதற்குமுன் சாரமாக உபதேசம் செய்த ஜந்து சுலோகங்களில், எடுத்த எடுப்பில் என்ன சொன்னாரோ அதையேதான் சொல்கிறேன். வேதோ நித்யம் அதீயதாம். இதையே மொழி பெயர்த்த மாதிரி அவ்வையாரும் உபதேசத்தை ஆரம்பிக்கும்போதே ஒதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்கிறாள். தினமும் வேதத்தை அத்யயனம் பண்ண வேண்டும் என்று ஆச்சாரியாள் பாஸிடிவ்வில் சொன்னதையே அவ்வை நெகடிவ் - ஆக ஒரு தினம்கூட அத்யயனம் பண்ணாமல் இருக்க வேண்டாம் என்றாள். ஒதுதல் என்று வெறுமனே சொன்னால் வேதம் ஒதுதல் அதாவது அத்யயனம் என்றுதான் அர்த்தம். எழுதாமல் படிக்காமல் வாயாலேயே ஒதவேண்டியது வேதம் என்பதால் இப்படிப் பெயர் வந்தது. வேதத்துக்கு ஒத்து என்றே பெயர். திருக்குறளிலும் இப்படி வருகிறது. வேதங்கள் ஈசுவரனை பூஜை செய்த வேதபுரி என்கிற ஸ்தலத்துக்கு திருவோத்தூர் திரு ஒத்து ஊர் என்றே பெயர் இருக்கிறது. பிரம்ம சிருஷ்டியிலிருந்து நம் வரைக்கும் வந்துள்ள இந்த ஒதும் பணி சாசுவதமாக நடக்க வேண்டும் என்று உங்கள் எல்லோருடைய காதிலும் போடத்தான், இப்படிப் பட்டணம் பட்டணமாகத் திரிந்து கொண்டு, உங்களுக்கெல்லாம் செலவு வைத்து, சிரமத்தைத் தந்து கொண்டிருக்கிறேன்.
இத்தனை ஆயிரம் பேர் கூடுகிற இடத்தில் சொன்னால் ஒரு பத்து இருபது மனசுக்குள்ளாவது அது இறங்கிக் காரியத்தில் பலிக்காதா என்று எனக்கு ஆசை.
பட்டண வாழ்க்கைக்கு வந்தபின்தான் தர்மவிருத்தமாக (முரணாக) போகவண்டிய நிற்பந்தம் வந்தது. இங்கேதான் நவநாகரீகத்தின் ஆட்டம் அதிகம். ஆகாயால் இனிமே பட்டணங்களுக்குப் போவதில்லை என்று நடுவாந்திரத்தில் நான் ஒரு தீர்மாணம் பண்ணிக் கொண்டு கிராமங்களிலேயே இருந்து வந்தேன். ஆனால் பட்டணத்துக்காரர்கள் வரவேண்டும் வரவேண்டும் என்று ரொம்பவும் பிரீதியோடு வற்புறுத்தினார்கள். அப்போது அவர்களிடம், நம்முடைய பழைய வழிக்கு நீங்கள் கொஞ்சமாவது திரும்பினால்தான் வருவேன். உடனே, அத்யயனத்துக்குத் திரும்பாவிட்டாலும் பரவாயில்லை. அதற்காக் ஏற்பட்ட வெளி அடையாளங்களாவது வைத்துக் கொள்ளுங்கள். வேதத்தைத் தூக்கிப் பிடிக்க வேண்டிய தீவட்டிக்காரன் என்றால் அதற்குச் சில அடையாளங்கள் சொல்லியிருக்கிறது. பியூன் என்றால் ஒரு டவாலி, யூனிஃபாரம் இருக்கிறதோ இல்லையோ அப்படித்தான் இவனுக்கும் சிகை (குடுமி) , பஞ்சகச்சம் இவைகளை அடையாளமாகச் சொல்லியிருக்கிறது. இவையெல்லாம் நான் உசத்தி என்று காட்டுகிற (superiority -க்கு) அடையாளம் ( symbol ) இல்லை. நான் சமஸ்த ஜனசமூகத்துக்கும் சேவகன், வேதத்தின் சேவகன் என்று தெரிவிக்கவே அவை இருக்கின்றன. இந்த அடையாளங்களை நீங்கள் போட்டுக் கொண்டால்தான் நான் பட்டணத்துக்கு வருவேன் என்று நான் கிராக்கி செய்து வந்தேன்.
(to be continued...)
பொதுவான தர்மங்கள்
என் காரியம்
Part 6 0f 11
சுருக்கமாக என்னச் செய்யச் சொல்கிறேன்?. ஆசாரியாள் சரீரத்தை விடுவதற்குமுன் சாரமாக உபதேசம் செய்த ஜந்து சுலோகங்களில், எடுத்த எடுப்பில் என்ன சொன்னாரோ அதையேதான் சொல்கிறேன். வேதோ நித்யம் அதீயதாம். இதையே மொழி பெயர்த்த மாதிரி அவ்வையாரும் உபதேசத்தை ஆரம்பிக்கும்போதே ஒதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்கிறாள். தினமும் வேதத்தை அத்யயனம் பண்ண வேண்டும் என்று ஆச்சாரியாள் பாஸிடிவ்வில் சொன்னதையே அவ்வை நெகடிவ் - ஆக ஒரு தினம்கூட அத்யயனம் பண்ணாமல் இருக்க வேண்டாம் என்றாள். ஒதுதல் என்று வெறுமனே சொன்னால் வேதம் ஒதுதல் அதாவது அத்யயனம் என்றுதான் அர்த்தம். எழுதாமல் படிக்காமல் வாயாலேயே ஒதவேண்டியது வேதம் என்பதால் இப்படிப் பெயர் வந்தது. வேதத்துக்கு ஒத்து என்றே பெயர். திருக்குறளிலும் இப்படி வருகிறது. வேதங்கள் ஈசுவரனை பூஜை செய்த வேதபுரி என்கிற ஸ்தலத்துக்கு திருவோத்தூர் திரு ஒத்து ஊர் என்றே பெயர் இருக்கிறது. பிரம்ம சிருஷ்டியிலிருந்து நம் வரைக்கும் வந்துள்ள இந்த ஒதும் பணி சாசுவதமாக நடக்க வேண்டும் என்று உங்கள் எல்லோருடைய காதிலும் போடத்தான், இப்படிப் பட்டணம் பட்டணமாகத் திரிந்து கொண்டு, உங்களுக்கெல்லாம் செலவு வைத்து, சிரமத்தைத் தந்து கொண்டிருக்கிறேன்.
இத்தனை ஆயிரம் பேர் கூடுகிற இடத்தில் சொன்னால் ஒரு பத்து இருபது மனசுக்குள்ளாவது அது இறங்கிக் காரியத்தில் பலிக்காதா என்று எனக்கு ஆசை.
பட்டண வாழ்க்கைக்கு வந்தபின்தான் தர்மவிருத்தமாக (முரணாக) போகவண்டிய நிற்பந்தம் வந்தது. இங்கேதான் நவநாகரீகத்தின் ஆட்டம் அதிகம். ஆகாயால் இனிமே பட்டணங்களுக்குப் போவதில்லை என்று நடுவாந்திரத்தில் நான் ஒரு தீர்மாணம் பண்ணிக் கொண்டு கிராமங்களிலேயே இருந்து வந்தேன். ஆனால் பட்டணத்துக்காரர்கள் வரவேண்டும் வரவேண்டும் என்று ரொம்பவும் பிரீதியோடு வற்புறுத்தினார்கள். அப்போது அவர்களிடம், நம்முடைய பழைய வழிக்கு நீங்கள் கொஞ்சமாவது திரும்பினால்தான் வருவேன். உடனே, அத்யயனத்துக்குத் திரும்பாவிட்டாலும் பரவாயில்லை. அதற்காக் ஏற்பட்ட வெளி அடையாளங்களாவது வைத்துக் கொள்ளுங்கள். வேதத்தைத் தூக்கிப் பிடிக்க வேண்டிய தீவட்டிக்காரன் என்றால் அதற்குச் சில அடையாளங்கள் சொல்லியிருக்கிறது. பியூன் என்றால் ஒரு டவாலி, யூனிஃபாரம் இருக்கிறதோ இல்லையோ அப்படித்தான் இவனுக்கும் சிகை (குடுமி) , பஞ்சகச்சம் இவைகளை அடையாளமாகச் சொல்லியிருக்கிறது. இவையெல்லாம் நான் உசத்தி என்று காட்டுகிற (superiority -க்கு) அடையாளம் ( symbol ) இல்லை. நான் சமஸ்த ஜனசமூகத்துக்கும் சேவகன், வேதத்தின் சேவகன் என்று தெரிவிக்கவே அவை இருக்கின்றன. இந்த அடையாளங்களை நீங்கள் போட்டுக் கொண்டால்தான் நான் பட்டணத்துக்கு வருவேன் என்று நான் கிராக்கி செய்து வந்தேன்.
(to be continued...)