|
Post by Sumi on Oct 19, 2012 12:34:49 GMT 5.5
ஆசை நம்மிடம் அடங்கமாட்டேன் என்றாலும், திரும்பத் திரும்ப அடக்கப் பார்த்துக் கொண்டே தானிருக்க வேண்டும். வைராக்யம் என்பதான ஆசையின்மையை, பற்றின்மையை சம்பாதித்துக் கொள்ள விடாமுயற்சி பண்ணிக் கொண்டே இருக்கவேண்டும். ஏனென்றால் ஆசை என்ற இந்த ஒரே சத்ருவை (எதிரி) எப்படியோ ஒரு தினுசில் எப்பாடு பட்டாவது ஒழித்துக் கட்டி விட்டால் போதும், அப்புறம் நீங்க ராஜா தான். ராஜா என்றால் இந்த உலகத்து ராஜா இல்லை. அவனுக்குள்ள ஆசையும் தொல்லையும் நமக்கு வேண்டவே வேண்டாம். ஆசை கிட்டேயே வராத சாஸ்வத சாந்தத்தை உடைய ராஜா. மனதில் எழும் பல நூறாயிரம் கெட்ட விஷயங்களை ஒவ்வொன்றாக அடக்கப் பார்த்து பிரயோஜனமில்லை. அது முடியாத காரியம். ஆகையால் அவை கிளைகள் என்றால் அவற்றுக்கு வேராக உள்ள ஆசை என்ற ஒன்றை வெட்டிவிட்டால் போதும். ஆனால், வெளியே நீண்டிருக்கும் கிளையை வெட்டுவதைவிட, உள்ளே புதைந்துள்ள வேரைத் தோண்டி அழிப்பது ரொம்பவும் கஷ்டம் தான். இருந்தாலும் இதைச் செய்யாவிட்டால் வெட்டிய கிளைகள் மறுபடி மறுபடி முளைத்துக் கொண்டு தான் இருக்கும் என்பதால் எப்படியாவது இதைசாதித்துத் தான் ஆகவேண்டும்.
|
|
|
Post by radha on Oct 20, 2012 0:40:16 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
THE ROOT CAUSE FOR NOT REALIZING "ATMA' IS OUR DESIRES AND ATTACHMENTS.IN ORDER TO GET MOKSHA OR REALIZATION OF THE "SELF" WE HAVE TO CONSTANTLY WIN OVER OUR DESIRES AND ATTACHMENTS.AS MAHA PERIVA SAYS THOUGH IT IS DIFFICULT IT IS NOT IMPOSSIBLE. FAITH AND GURU KATAKSHAM WILL MAKE IMPOSSIBLE ,POSSIBLE !
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam
|
|
|
Post by radha on Oct 21, 2012 5:52:44 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
Source:-Vellukudi Krishnan Swamigal--Kannan Chollum Kathaigal Following quotation is from the above article.
"இந்திரியம் எனும் குதிரையை நம்மால் அடக்கமுடியாது. அதை அடக்கியாள்வதற்கு மனம் என்கிற கடிவாளம் தேவையாக இருக்கிறது. அந்த மனத்தில் இறைவனை நினைத்து அமர்த்திக்கொண்டுவிட்டால், மனத்தை அப்படியே இறைவனிடம் ஒப்படைத்துவிட்டால், கடிவாளம் போட்டு இந்திரியங்களை அடக்கி, நம்மை நிம்மதியுடனும் அமைதியுடனும் இனிதே வாழச் செய்வான் நாயகன் ஸ்ரீகிருஷ்ணன்.
மனத்தைக் கடவுள் பக்கம் திருப்புங்கள். மொத்த மனத்தையும் அவனிடம் ஒப்படைத்துவிடுங்கள். அதற்குப் பெயர்தான் சரணாகதி!"
கடவுளிடம் சரணடைதல் என்பது உயர்வான விஷயம். உத்தமமான காரியம். அப்படி ஒப்புக்கொடுக்கிறவர்களே, சரணடைபவர்களே பாக்கியவான்கள்! Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam
|
|
|
Post by vlalithakumar on Oct 22, 2012 1:24:13 GMT 5.5
NAMASKARS. Desire is the first,fore most and the only root cause for all our faulty requirements. desire tempts one to think and planning to grab that which/what you want (by any means).to kill the desire at it"s root is next to impossible.it is the baby of (MANAS) as we name it in tamizh. the only way is to divert the attention towards ALMIGHTY .we have pray HIM to protect us from the dragon of desire.NAMASKARS.vlalithakumar
|
|