Post by Sumi on Oct 19, 2012 8:20:28 GMT 5.5
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
பொதுவான தர்மங்கள்
என் காரியம்
Part 5 of 11
இப்போதிருக்கிற தூவேஷம், மனக்கசப்பு, கோபதாபங்கள் போக வேண்டுமானால், வேத ரக்ஷணம் என்கிற கடமையைப் பெற்றவர்கள் அதைச் செய்து, ஸாதுக்களாக, சாந்தர்களாக வாழ்ந்து காட்ட வேண்டும். இதன் பலன் மற்றவர்களுக்கு உடனே புரியாமல் போகலாம். ஹர்த்தால் வந்து கட்டைகளை மூடினால் உடனே சிரமம் தெரிகிற மாதிரி, வேத ரக்ஷணம் நிற்பதால் ஏற்படும் சிரமம் சமூகத்திற்குப் தெரியாமல் போகலாம். ஆனால் உண்மையில் இது நின்று போவதால் ஏற்படுகிற நஷ்டமே பெரிசு. இது நாளாவட்டத்தில் புரிந்து விடும். வேத ரக்ஷணத்துக்காக என்றே சிலர் ஆயுசை அர்ப்பணித்து வாழ்வதில் பெரிய சமூகப் பிரயோஜனம் இருக்கிறது என்று எல்லோரும் காலப்போக்கில் உணர்வார்கள்.
ஆதியில், மநு இருந்ததே தமிழ் நாட்டில்தான். இங்கேதான் வேத வித்யை, ஞானம் பக்தி எல்லாமே ரொம்பச் செழிப்பாக இருந்திருக்கிறது. 'த்ரவிடேஷ§ பூரிச'என்பார்கள். தமிழ்நாட்டில் தாயுமானவர், பட்டினத்தார் போன்றவர்தான் என்றில்லை. மதாந்தரங்களைச் (அன்னிய மதங்களை) சேர்ந்த வேதநாயகம்பிள்ளை, மஸ்தான் சாகிப் போன்றவர்கள்கூட தமிழ்நாட்டு மண்ணின் விசேஷத்தால் பரம வேதாந்திகளாக இருந்திருக்கிறார்கள். வேத தர்மத்துக்கு ஆதி வீடே இதுதான். அந்தத்திலும் கலி முடிவில் வேத ரக்ஷணத்துக்காக அவதரிக்கப் போகிற கல்கி திராவிட தேசத்தில் திருநெல்வேலிச் சீமையில் தோன்றப்போகிறார் என்றுதான் சொல்லியிருக்கிறது. அங்கேதான் வேத தர்மத்தில் தவறாத பிராம்மணர் இருக்கப் போகிறார் என்று புராணத்தில் சொல்லியிருக்கிறது. அப்படிப்பட்ட தேசத்தில் வைதிகத்துக்கு விரோதமே இருக்கக்கூடாது. இதைச் செய்வதற்கு விசை பிராம்மணர்களிடமேதான் இருக்கிறது என்று சொல்லத்தான் பட்டணத்துக்கு வந்திருக்கிறேன்.
மநுஷ்யனைத் தன் நிஜமான நிலைக்கு உயர்த்த எத்தனை கட்டுப்பாடுகள் வேண்டுமா அனைத்தையும் சொன்னது நம் மதம்தான். தன் மனிதனுக்குக் பலவிதக் கட்டுப்பாடுகள். சமூகத்துக்கும் பலவிதக் கட்டுப்பாடுகள், கட்டுப்பாடு என்றால் கரை போடுவது என்று அர்த்தம். கரையில்லாமல் ஒரு ஏரி இருக்கமுடியுமா. கட்டுப்படுத்தக் கூடாது என்று அப்படியே கரையை உடைத்துவிட்டால் ஜலம் முழுதும் பாழாகி ஊரும் பாழாக வேண்டியதுதான். ரொம்பவும் விசித்திரமாக இருப்பது என்னவென்றால், மிக அதிகமான கட்டுப்பாடுகள் உள்ள நம் மதத்தால்தான் இப்போது அடியோடு ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் ஆகிவிட்டிருக்கிறது.
இதில் சமூகத்துக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய பிராம்மணர்களாகக் கொஞ்சம் கட்டிப் போடலாம் என்றுதான் ஊர் ஊராகச் சுற்றி, ஒயாமல் உபந்நியாசம் பண்ணுகிறேன். பிராம்மணர்கள் அப்படி நினைக்கிறார்களோ இல்லையோ, அவர்கள் எனக்கு மற்றவர்களைவிடக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்கள் என்று பொதுவில் பரவலாக அபிப்ராயம் இருக்கிறது. எனவே முதலில் இவர்களை இவர்களுடைய தர்மத்தில் கொஞ்சம் கட்டுபட்டிருக்கச் செய்தாலே, அப்புறம் மற்ற ஜனங்கள் எல்லோருக்கும் அவரவர்களுக்குச் சொல்லவேண்டியதை நான் உபதேசிப்பதற்கு எனக்கு ஒரு சக்தி உண்டாகும். ஆகவே என் வார்த்தைகளுக்குப் பிராம்மணர்கள் கொஞ்சம் கொஞ்சம்
கட்டுப்பட்டு, இதர சமூகத்துக்கெல்லாம் நான் செய்யக்கூடியதை செய்வதற்கு சகாயம் பண்ண வேண்டும்.
(to be continued....)
பொதுவான தர்மங்கள்
என் காரியம்
Part 5 of 11
இப்போதிருக்கிற தூவேஷம், மனக்கசப்பு, கோபதாபங்கள் போக வேண்டுமானால், வேத ரக்ஷணம் என்கிற கடமையைப் பெற்றவர்கள் அதைச் செய்து, ஸாதுக்களாக, சாந்தர்களாக வாழ்ந்து காட்ட வேண்டும். இதன் பலன் மற்றவர்களுக்கு உடனே புரியாமல் போகலாம். ஹர்த்தால் வந்து கட்டைகளை மூடினால் உடனே சிரமம் தெரிகிற மாதிரி, வேத ரக்ஷணம் நிற்பதால் ஏற்படும் சிரமம் சமூகத்திற்குப் தெரியாமல் போகலாம். ஆனால் உண்மையில் இது நின்று போவதால் ஏற்படுகிற நஷ்டமே பெரிசு. இது நாளாவட்டத்தில் புரிந்து விடும். வேத ரக்ஷணத்துக்காக என்றே சிலர் ஆயுசை அர்ப்பணித்து வாழ்வதில் பெரிய சமூகப் பிரயோஜனம் இருக்கிறது என்று எல்லோரும் காலப்போக்கில் உணர்வார்கள்.
ஆதியில், மநு இருந்ததே தமிழ் நாட்டில்தான். இங்கேதான் வேத வித்யை, ஞானம் பக்தி எல்லாமே ரொம்பச் செழிப்பாக இருந்திருக்கிறது. 'த்ரவிடேஷ§ பூரிச'என்பார்கள். தமிழ்நாட்டில் தாயுமானவர், பட்டினத்தார் போன்றவர்தான் என்றில்லை. மதாந்தரங்களைச் (அன்னிய மதங்களை) சேர்ந்த வேதநாயகம்பிள்ளை, மஸ்தான் சாகிப் போன்றவர்கள்கூட தமிழ்நாட்டு மண்ணின் விசேஷத்தால் பரம வேதாந்திகளாக இருந்திருக்கிறார்கள். வேத தர்மத்துக்கு ஆதி வீடே இதுதான். அந்தத்திலும் கலி முடிவில் வேத ரக்ஷணத்துக்காக அவதரிக்கப் போகிற கல்கி திராவிட தேசத்தில் திருநெல்வேலிச் சீமையில் தோன்றப்போகிறார் என்றுதான் சொல்லியிருக்கிறது. அங்கேதான் வேத தர்மத்தில் தவறாத பிராம்மணர் இருக்கப் போகிறார் என்று புராணத்தில் சொல்லியிருக்கிறது. அப்படிப்பட்ட தேசத்தில் வைதிகத்துக்கு விரோதமே இருக்கக்கூடாது. இதைச் செய்வதற்கு விசை பிராம்மணர்களிடமேதான் இருக்கிறது என்று சொல்லத்தான் பட்டணத்துக்கு வந்திருக்கிறேன்.
மநுஷ்யனைத் தன் நிஜமான நிலைக்கு உயர்த்த எத்தனை கட்டுப்பாடுகள் வேண்டுமா அனைத்தையும் சொன்னது நம் மதம்தான். தன் மனிதனுக்குக் பலவிதக் கட்டுப்பாடுகள். சமூகத்துக்கும் பலவிதக் கட்டுப்பாடுகள், கட்டுப்பாடு என்றால் கரை போடுவது என்று அர்த்தம். கரையில்லாமல் ஒரு ஏரி இருக்கமுடியுமா. கட்டுப்படுத்தக் கூடாது என்று அப்படியே கரையை உடைத்துவிட்டால் ஜலம் முழுதும் பாழாகி ஊரும் பாழாக வேண்டியதுதான். ரொம்பவும் விசித்திரமாக இருப்பது என்னவென்றால், மிக அதிகமான கட்டுப்பாடுகள் உள்ள நம் மதத்தால்தான் இப்போது அடியோடு ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் ஆகிவிட்டிருக்கிறது.
இதில் சமூகத்துக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய பிராம்மணர்களாகக் கொஞ்சம் கட்டிப் போடலாம் என்றுதான் ஊர் ஊராகச் சுற்றி, ஒயாமல் உபந்நியாசம் பண்ணுகிறேன். பிராம்மணர்கள் அப்படி நினைக்கிறார்களோ இல்லையோ, அவர்கள் எனக்கு மற்றவர்களைவிடக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்கள் என்று பொதுவில் பரவலாக அபிப்ராயம் இருக்கிறது. எனவே முதலில் இவர்களை இவர்களுடைய தர்மத்தில் கொஞ்சம் கட்டுபட்டிருக்கச் செய்தாலே, அப்புறம் மற்ற ஜனங்கள் எல்லோருக்கும் அவரவர்களுக்குச் சொல்லவேண்டியதை நான் உபதேசிப்பதற்கு எனக்கு ஒரு சக்தி உண்டாகும். ஆகவே என் வார்த்தைகளுக்குப் பிராம்மணர்கள் கொஞ்சம் கொஞ்சம்
கட்டுப்பட்டு, இதர சமூகத்துக்கெல்லாம் நான் செய்யக்கூடியதை செய்வதற்கு சகாயம் பண்ண வேண்டும்.
(to be continued....)