Post by Sumi on Oct 18, 2012 8:36:13 GMT 5.5
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
பொதுவான தர்மங்கள்
என் காரியம்
Part 4 of 11
ஜாதி அழிவதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. லோக க்ஷேமம் போகிறதே என்றுதான் கவலைப் படுகிறேன். வேத ரக்ஷணம் விட்டுப்போனால் இந்தப் பரம்பரையை மறுபடியும் உண்டுபண்ண முடியாதே என்றுதான் கவலைப்படுகிறேன்.
லோக க்ஷேமம் என்று சொன்னது வேத சப்தத்தாலும், யகாஞாதி கர்மாக்களாலும் ஏற்படுகிற நன்மையை மட்டுமல்ல. வேதாந்தத்தைப் பார்த்தால்தான் சகல தேசங்களில் உள்ளவர்களுக்குமே பொதுப்படையான மகோன்னத் தத்துவங்கள் கிடைக்கின்றன. இந்தத் தத்வத்தால் எல்லா தேசத்தார்களும் ஆத்மாபிவிருத்தி அடைகிறார்கள். வேதாந்தத்தைப் பார்க்க வேண்டும் என்று இதர தேசத்தவர்களுக்கு எப்படி நாட்டம் வந்தது. அவர்கள் இங்கே வந்தபோது வேத ரக்ஷணமே ஜீவியப் பணி என்று ஒரு கூட்டம் இருந்ததால்தான். இதென்ன. இப்படி வாழ்க்கை முழுவதும் அர்ப்பணிக்கும்படியான புஸ்தகம் என்று அவர்களுக்கு ஒரு ஆர்வம் பிறந்தது. அதை ஆராய்ச்சி செய்தார்கள். பல விஷயங்களைத் தெரிந்து கொண்டார்கள். குறிப்பாக உலகம் முழுவதிலும் உள்ள பண்பாடுகளில் (culture) இருக்கிற ஒற்றுமைகளை இந்த ஆராய்ச்சியால் தெரிந்து கொண்டார்கள். லோகத்துக்கெல்லாம் உபயோகம் என்பது மட்டுமில்லாமல், லோகம் முழுக்கவே வேத கல்ச்சர்தான் ஆதியில் இருந்தது என்பது என் அபிப்ராயம். நன்றாக ஆராய்ந்து பார்த்தால் மற்றவர்களும் இந்த அபிப்ராயத்துக்கு வரலாம். எல்லோரும் பொதுவாக ஒன்று இருப்பதாக அறிவதிலேயே சர்வதேச செனஜன்யம் ஸர்வ மத சமரஸ பாவனை எல்லாம் வந்துவிடுகிறது. அது தவிர, இந்த தத்வங்களால் எந்த மதஸ்தர்களும் தங்களை உயர்த்திக் கொள்ளவும் முடிகிறது. வேதத்துக்காக என்றே சகலத்தையும் தியாகம் செய்கிற ஒரு கூட்டம் நம் தேசத்தில் இல்லா விட்டால், மற்றவர்களுக்கு அதன் தாத்பரியங்களை அறிவதில் எப்படி ஈடுபாடு உண்டாகும். அதாவது, நம் அசிரத்தையால் வேதத்திலிருந்து பிறர் பெறக்கூடிய பிரயோஜனத்தை அவர்களும் பெற முடியாமல் தடுத்தவர்களாகிறோம். நம் தேசத்தின் சகல ஜாதியாரை உத்தேசித்து வேத பரம்பரையைத் தொடர்ந்து இருக்கப் பண்ண வேண்டியது இப்போதைய தலைமுறையின் பெரிய பொறுப்பு. இதைச் செய்யாமல் எனக்குக் கனகாபிஷேகம் செய்து பிரயோஜனம் இல்லை.
பின் ஏன, கனகாபிஷேகத்துக்கு ஒப்புக் கொண்டேன் என்றால், அப்படி ஒப்புக் கொண்டால்தான் இப்படி உத்ஸவக் கூட்டமாக நீங்கள் கூடுகிறீர்கள். நான் சொல்ல வேண்டியதைக் கேட்பதற்கு நிறைய ஆள் கிடக்கிறீர்கள். கூட்டம் சேர்த்து என் காரியத்தை நடத்திக் கொள்வதற்குத்தான் உங்கள் ஆசையைப் பூர்த்தி பண்ணினேன்.
(to be continued....)
பொதுவான தர்மங்கள்
என் காரியம்
Part 4 of 11
ஜாதி அழிவதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. லோக க்ஷேமம் போகிறதே என்றுதான் கவலைப் படுகிறேன். வேத ரக்ஷணம் விட்டுப்போனால் இந்தப் பரம்பரையை மறுபடியும் உண்டுபண்ண முடியாதே என்றுதான் கவலைப்படுகிறேன்.
லோக க்ஷேமம் என்று சொன்னது வேத சப்தத்தாலும், யகாஞாதி கர்மாக்களாலும் ஏற்படுகிற நன்மையை மட்டுமல்ல. வேதாந்தத்தைப் பார்த்தால்தான் சகல தேசங்களில் உள்ளவர்களுக்குமே பொதுப்படையான மகோன்னத் தத்துவங்கள் கிடைக்கின்றன. இந்தத் தத்வத்தால் எல்லா தேசத்தார்களும் ஆத்மாபிவிருத்தி அடைகிறார்கள். வேதாந்தத்தைப் பார்க்க வேண்டும் என்று இதர தேசத்தவர்களுக்கு எப்படி நாட்டம் வந்தது. அவர்கள் இங்கே வந்தபோது வேத ரக்ஷணமே ஜீவியப் பணி என்று ஒரு கூட்டம் இருந்ததால்தான். இதென்ன. இப்படி வாழ்க்கை முழுவதும் அர்ப்பணிக்கும்படியான புஸ்தகம் என்று அவர்களுக்கு ஒரு ஆர்வம் பிறந்தது. அதை ஆராய்ச்சி செய்தார்கள். பல விஷயங்களைத் தெரிந்து கொண்டார்கள். குறிப்பாக உலகம் முழுவதிலும் உள்ள பண்பாடுகளில் (culture) இருக்கிற ஒற்றுமைகளை இந்த ஆராய்ச்சியால் தெரிந்து கொண்டார்கள். லோகத்துக்கெல்லாம் உபயோகம் என்பது மட்டுமில்லாமல், லோகம் முழுக்கவே வேத கல்ச்சர்தான் ஆதியில் இருந்தது என்பது என் அபிப்ராயம். நன்றாக ஆராய்ந்து பார்த்தால் மற்றவர்களும் இந்த அபிப்ராயத்துக்கு வரலாம். எல்லோரும் பொதுவாக ஒன்று இருப்பதாக அறிவதிலேயே சர்வதேச செனஜன்யம் ஸர்வ மத சமரஸ பாவனை எல்லாம் வந்துவிடுகிறது. அது தவிர, இந்த தத்வங்களால் எந்த மதஸ்தர்களும் தங்களை உயர்த்திக் கொள்ளவும் முடிகிறது. வேதத்துக்காக என்றே சகலத்தையும் தியாகம் செய்கிற ஒரு கூட்டம் நம் தேசத்தில் இல்லா விட்டால், மற்றவர்களுக்கு அதன் தாத்பரியங்களை அறிவதில் எப்படி ஈடுபாடு உண்டாகும். அதாவது, நம் அசிரத்தையால் வேதத்திலிருந்து பிறர் பெறக்கூடிய பிரயோஜனத்தை அவர்களும் பெற முடியாமல் தடுத்தவர்களாகிறோம். நம் தேசத்தின் சகல ஜாதியாரை உத்தேசித்து வேத பரம்பரையைத் தொடர்ந்து இருக்கப் பண்ண வேண்டியது இப்போதைய தலைமுறையின் பெரிய பொறுப்பு. இதைச் செய்யாமல் எனக்குக் கனகாபிஷேகம் செய்து பிரயோஜனம் இல்லை.
பின் ஏன, கனகாபிஷேகத்துக்கு ஒப்புக் கொண்டேன் என்றால், அப்படி ஒப்புக் கொண்டால்தான் இப்படி உத்ஸவக் கூட்டமாக நீங்கள் கூடுகிறீர்கள். நான் சொல்ல வேண்டியதைக் கேட்பதற்கு நிறைய ஆள் கிடக்கிறீர்கள். கூட்டம் சேர்த்து என் காரியத்தை நடத்திக் கொள்வதற்குத்தான் உங்கள் ஆசையைப் பூர்த்தி பண்ணினேன்.
(to be continued....)