|
Post by saidevo on Oct 9, 2012 11:43:54 GMT 5.5
I have of late taken to studying and trying poetry in Tamizh. I shall post any poems relevant to this Forum here:
21. கடவுள் வாழ்த்து: கணபதி (சம்ஸ்க்ருத ஶ்லோகங்களின் தமிழ் முயற்சி) ரமணி, 09/10/2012
வெண்துகில் உடுத்தவர் எங்கும் நிறைந்தவர் வெண்ணிலா நிறத்தினர் நான்கு கரத்தினர் ஆனந்த முகத்தினர் இவரை தியானித்தால் விக்னங்கள் எல்லாம் வினையற்றுப் போகும்.
ஆனைமுகம் பூத கணங்கள் வழிபடும் பழுத்த விளாங்கனி நாவல்பழம் உண்டிடும் உமாமைந்தன் துன்பம் தொலையக் காரணன் பணிகிறேன் விக்னேஷ்வரர் பாதத் தாமரையில்.
வளைதுதிக்கை மாமேனி கோடிசூரியச் சுடரொளியே விக்னங்கள் அறச்செய்வாய் எப்போதும் எச்செயலிலும்.
*****
|
|
|
Post by venkatswam on Oct 9, 2012 13:34:18 GMT 5.5
Very nice, simple and lucid. Thanks
|
|
|
Post by subi24 on Oct 10, 2012 7:58:58 GMT 5.5
அருமையான முயற்சி ! மிக்க பாராட்டுகிறேன்!! தமிழ் மொழி பெயர்ப்பின் கூட சம்ஸ்க்ருத ஸ்லோகங்களும் இருந்தால் நிறைவாக இருக்கும் என எண்ணுகிறேன்.
|
|
|
Post by saidevo on Oct 11, 2012 8:58:33 GMT 5.5
ஸம்ஸ்க்ருத ஷ்லோகங்கள் பெரும்பாலும் இசை வடிவில் பாடத்தக்கன. இதுபோல் அவற்றின் தமிழாக்கத்துக்கும் இசை வடிவில் இன்னொரு செய்யுள் எழுதலாம். மேலுள்ள விரிவான தமிழாக்கத்தைக் கீழ்வரும் ராகத்தில் பாட ஏதுவாகச் சுருக்கி இப்படி எழுதலாம்: www.youtube.com/watch?v=klbqvg-MRTsவெண்துகி லணிந்த வியாபி நிலாவண்ணம் நாற்கரம் மலர்ந்த வதனம் தியானித்தால் விக்னமெல்லாமும் நீங்கிடும். [நான்கு அடிகளில் அங்கங்கே அடிகளில் சீர் குறைந்து வருவதால் இது ஆசிரியத் துறை.] காயத்ரியின் குரலில் வரும் ’கஜானனம்’ ஷ்லோகத்தை இப்படித் தமிழில் எழுதலாம். www.ziddu.com/download/20564606/gajAnanam-gAyatrI.mp3.htmlஆனைமுகம் பூத கணங்கள் வழிபடும் பழுத்த விளம்நாவல்பழ சாறு பருகிடும் உமாமகன் துன்பம் தொலையக் காரணன் பணிந்தேன் விக்னேஷ்வரர் பாதத் தாமரை. [நான்கு அடிகளில் வருவதால் இது கலிவிருத்தம்.] *****
|
|
|
Post by saidevo on Oct 11, 2012 9:03:44 GMT 5.5
22. கடவுள் வாழ்த்து: முப்பெரும் தேவியர், அனுமன், சிவா (சம்ஸ்க்ருத ஶ்லோகங்களின் தமிழ் முயற்சி) ரமணி, 11/10/2012 சம்ஸ்க்ருத ஶ்லோகங்களின் இசைக் கோப்புகள் இங்கே தரவிறக்கலாம்: www.ziddu.com/download/20573319/00kidshlokas-01.rar.htmlஅதே ராகத்தில் பாடும்படி இவற்றின் தமிழ் வடிவங்கள் கீழே: கரநுனியில் உறைவாள் லக்ஷ்மி, கரநடுவில் சரஸ்வதி கரக்கணுவில் இருப்பாள் கௌரி, வைகறையில் கரதரிசனம். [அளவொத்த இரண்டு அடிகளால் இது குறள் வெண்செந்துறை.] புத்தியும் பலமும் | புகழும் துணிவும் | அச்சமின்மை ஆரோக்யம் அறிவின்விழிப்பு சொல்வன்மை | அனைத்தும் வருமே | அனுமனை நினைத்தால். [அளவொத்த இரண்டு அடிகளால் இது குறள் வெண்செந்துறை.] கைகால்க ளால்சொல் | மேனிவழி | செயல்வழியே... காது கண்வழியே | உள்ள்ளத்தின் பாவங்கள் இட்டது இடாததுமே | எல்லாஆம் | இவை பொறுப்பாய் புகழ்மிகு அருட்கடலே | ஶ்ரீமஹாதேவ ஶம்போ! [நான்கு அடிகளில் அங்கங்கே அடிகளில் சீர் குறைந்து வருவதால் இது ஆசிரியத் துறை.] *****
|
|