Post by anusham163 on Oct 5, 2012 22:29:49 GMT 5.5
Here is an interesting and thought provoking episode, which describes how Mahaperiava united two warring camps of the same village---- and what is the reason for the enemity? Just a Tamarind tree!
Ra.Ganapathy anna narrates this in his book, 'Maithreem Bhajatha', published by 'Divya Vidhya Padippakam'.
தென்மாவட்டம் ஒன்றிலிருந்து வந்திருந்த ஒரு வயதான தம்பதியிடம் ஸ்ரீசரணர் மரத்தின் குசல விசாரணையுடன் ஸம்பாஷணையை ஆரம்பித்தார். " அந்தப் புளிய மரம் என்ன ஆச்சு?"
"ஸமீபத்தில் புயலில் விழுந்து விட்டது. முன்னமே பெரியவாள் சொல்லியிருந்ததின் அடிப்படையில் அதைக் கணக்குப்பிள்ளை விற்று, பணத்தை சிவன் கொவிலுக்குக் கொடுத்து விட்டர்." என்று பதில் வந்தது.
'அந்த'ப் புளியமரம் என்பது 'எந்த' என்பதை உடனிருந்தோருக்கு ஸ்ரீசரணாளே பெரிய கதையாக விஸ்தரித்துச் சொன்னார்.
சுருக்கமாக: அந்தப் பகுதிகளில் ஸ்ரீசரணர் பல வருஷம் முன்பு ஸஞ்சாரம் செய்கையில் மடத்து மானேஜர் புளியமரம் உள்ள கிராமத்தில் முகாமிடுவதற்கில்லை என்று ஸ்ரீசரணரிடம் கூறினார். என்ன காரணமெனில் அங்குள்ள இரு தனிகர்களுக்குள் பரஸ்பர விரோதமாம். ஊரே அவ்விருவரின் இரு தரப்பாகி இரண்டாகப் பேதப்பட்டிருந்ததாம். அங்கே பிக்ஷை செய்யக் கூடியவர்களோ அவ்விருவர்தான். அவர்களில் எவருடைய பிக்ஷையை ஏற்றாலும் எதிர்த் தரப்பின் அதிருப்திக்குப் பாத்திரமாகவேண்டிவரும். பிக்ஷையே நடக்காதபடிக் கூட எவரேனும் அசட்டுப் பொல்லாத்தனம் விளைவிக்கக்கூடும்.
மானேஜர் சொன்னதைப் பெரியவாள் வெறுமனே கேட்டுக்கொண்டார்.
பகவத்பாதாள் ஆக்ஞையான ஸனாதன தர்மப் பிரசாரத்தை முடிந்த மட்டும் எல்லாப் பட்டி தொட்டிகளிலும் பரப்ப ஆர்வமாயிருந்த நம் ஆசார்யப்பெருமானுக்கு ஒரு கிராமத்தை விட்டுவிட மனமில்லை. ஊரிலே பேதம் என்றால், ஐக்கியத்திற்கே அவதரித்த பகவத்பாதாளின் பிரதிநிதி என்ற முறையில் அதைத் தீர்க்க முயல்வதுதானே தம் கடமை என்றும் நினைத்தார். ஆயினும் மடத்து மேலாளர் நடைமுறைப் பிரச்சினையைச் சொன்னபோது மறுத்துப் பேசவில்லை.
இது ஒரு புறமிருக்க, விரோதிகளான அந்த இரு தலைவர்களுமே தனித்தனியாகப் பெரியவாளிடம் வந்து அவர் தங்கள் கிராமத்திற்கு எழுந்தருள வேண்டுமென்றும், அப்போது தனது கிருஹத்திலேயே தங்கவேண்டுமென்றும் பிரார்த்தித்துக் கொண்டனர். இரு தரப்பு கிராம ஜனங்களும் அவ்வாறே வேண்டினர்.
ஒரு தினம் பெரியவாள் அந்தக் கிராம எல்லையில் போய் உட்கார்ந்து கொண்டார். ஆளனுப்பி அவ்வூரிலிருந்த ஒரு மரியாதைப்பட்ட விருத்தரை வரவழைத்து அவ்விரு ப்ரபுகளுக்குள் எதனால் விரோதம் என்று கேட்டார்.
விருத்தர் சொன்னார். ஒரு புளியமரம்தான் விரோதத்தை விதைத்து விருக்ஷமாக வளர்த்துக் கொடுத்திருந்தது!
தனிகர் இருவருக்கும் அடுத்தடுத்து வீடுகள்; தோப்புச் சூழ்ந்த பெரிய வீடுகள். இரண்டுக்கும் சரியாக மையத்தில் ஒரு புளியமரம். அது இருபுறமும் ஒரேபோல் வேரும் கிளையும் விட்டிருந்தது. எவருக்கு அது சொந்தம் என்பதில்தான் தகராறு!
விருத்தர் விருத்தாந்தம் சொல்லிச் சென்றபின், பெரியவாள் ப்ரபுக்களில் ஒருவரைக் கூப்பிட்டனுப்பினார். அவர் பக்தியுடன் வந்தார். பெரியவாள், "ஒன் தோட்டத்துல பெரிசா புளியமரம் இருக்காமே! அதை எனக்குக் குடுக்கிறயா?" என்று கேட்டார்.
உள்ளம் கவர் கள்வனாக அவர் குழந்தை போல் கொள்ளையழகு காட்டிக் கேட்டால் எவர்தான் எதைத்தான் கொடுக்க மாட்டார்?
ஆஹா என்று சம்மதம் சொன்னார் தனிகர்.
அவர் சென்றபின், அவரது விரோதியான மற்ற தனிகரைப் பெரியவாள் கூப்பிட்டனுப்பி இதே கேள்வி கேட்டார்.
அவரும் இதே பதில் சொன்னார்.
பிறகு இருவரையும் பெரியவாள் கூட்டிப் பேசினார். விரோதத்திற்குக் காரணமான புளீயமரத்தை இருவரும் ஏகோபித்து மடத்துக்கு சாஸனம் செய்யச் சம்மதிப்பதால் இனியும் அவர்களுக்குள் விரோதம் நிலவ இடமில்லை; அவர்கள் எல்லா விதத்திலும் ஏகோபித்துப் போய்விடலாம் என்று அறிவுரை கூறினார்.
பேதம் பறந்தது! இன்றைய ஐக்யசக்தியவதாரர்தான் பறக்க வைத்தது!.
ஊர்ப்பகை தீர்த்து வைத்ததில் ஸ்வமடத்திற்கு ஆதாயம் பெறுவது தர்மமல்ல என்று ஸத்யமூர்தி எண்ணீனார்.
ஊர்க்கணக்குப்பிள்ளையைக் கூப்பிட்டனுப்பினார். புளியங்காய் மகசூலைக் கணக்குப்பிள்ளை விற்று பணத்தை சிவாலயத்திற்குச் சேர்ப்பித்து விடுவதற்குத் தக்க ஏற்பாடு செய்தார்..
அந்த கிராமத்திற்கு ஸபரிவாரம் விஜயம் செய்து இரு தனிகர் இல்லங்களிலும் தங்கி பிக்ஷைகள் பெற்றார். ஊரையே ஒன்றுபடுத்தி விட்டுப் புறப்பட்டார்.
'அந்த'ப் புளியமரம்தான் அவரது இன்றைய குசலப்ரசனம் பெற்றது. அவரது அருணோக்கத்தின் பலனாக அம்மரம் 'கைலாஸப் பிராப்தி' அடைந்த பின்பும் அதற்கான திரவியம் கைலாயநாதன் ஆலயத்திற்கே சென்றிருக்கிறது!
Ra.Ganapathy anna narrates this in his book, 'Maithreem Bhajatha', published by 'Divya Vidhya Padippakam'.
தென்மாவட்டம் ஒன்றிலிருந்து வந்திருந்த ஒரு வயதான தம்பதியிடம் ஸ்ரீசரணர் மரத்தின் குசல விசாரணையுடன் ஸம்பாஷணையை ஆரம்பித்தார். " அந்தப் புளிய மரம் என்ன ஆச்சு?"
"ஸமீபத்தில் புயலில் விழுந்து விட்டது. முன்னமே பெரியவாள் சொல்லியிருந்ததின் அடிப்படையில் அதைக் கணக்குப்பிள்ளை விற்று, பணத்தை சிவன் கொவிலுக்குக் கொடுத்து விட்டர்." என்று பதில் வந்தது.
'அந்த'ப் புளியமரம் என்பது 'எந்த' என்பதை உடனிருந்தோருக்கு ஸ்ரீசரணாளே பெரிய கதையாக விஸ்தரித்துச் சொன்னார்.
சுருக்கமாக: அந்தப் பகுதிகளில் ஸ்ரீசரணர் பல வருஷம் முன்பு ஸஞ்சாரம் செய்கையில் மடத்து மானேஜர் புளியமரம் உள்ள கிராமத்தில் முகாமிடுவதற்கில்லை என்று ஸ்ரீசரணரிடம் கூறினார். என்ன காரணமெனில் அங்குள்ள இரு தனிகர்களுக்குள் பரஸ்பர விரோதமாம். ஊரே அவ்விருவரின் இரு தரப்பாகி இரண்டாகப் பேதப்பட்டிருந்ததாம். அங்கே பிக்ஷை செய்யக் கூடியவர்களோ அவ்விருவர்தான். அவர்களில் எவருடைய பிக்ஷையை ஏற்றாலும் எதிர்த் தரப்பின் அதிருப்திக்குப் பாத்திரமாகவேண்டிவரும். பிக்ஷையே நடக்காதபடிக் கூட எவரேனும் அசட்டுப் பொல்லாத்தனம் விளைவிக்கக்கூடும்.
மானேஜர் சொன்னதைப் பெரியவாள் வெறுமனே கேட்டுக்கொண்டார்.
பகவத்பாதாள் ஆக்ஞையான ஸனாதன தர்மப் பிரசாரத்தை முடிந்த மட்டும் எல்லாப் பட்டி தொட்டிகளிலும் பரப்ப ஆர்வமாயிருந்த நம் ஆசார்யப்பெருமானுக்கு ஒரு கிராமத்தை விட்டுவிட மனமில்லை. ஊரிலே பேதம் என்றால், ஐக்கியத்திற்கே அவதரித்த பகவத்பாதாளின் பிரதிநிதி என்ற முறையில் அதைத் தீர்க்க முயல்வதுதானே தம் கடமை என்றும் நினைத்தார். ஆயினும் மடத்து மேலாளர் நடைமுறைப் பிரச்சினையைச் சொன்னபோது மறுத்துப் பேசவில்லை.
இது ஒரு புறமிருக்க, விரோதிகளான அந்த இரு தலைவர்களுமே தனித்தனியாகப் பெரியவாளிடம் வந்து அவர் தங்கள் கிராமத்திற்கு எழுந்தருள வேண்டுமென்றும், அப்போது தனது கிருஹத்திலேயே தங்கவேண்டுமென்றும் பிரார்த்தித்துக் கொண்டனர். இரு தரப்பு கிராம ஜனங்களும் அவ்வாறே வேண்டினர்.
ஒரு தினம் பெரியவாள் அந்தக் கிராம எல்லையில் போய் உட்கார்ந்து கொண்டார். ஆளனுப்பி அவ்வூரிலிருந்த ஒரு மரியாதைப்பட்ட விருத்தரை வரவழைத்து அவ்விரு ப்ரபுகளுக்குள் எதனால் விரோதம் என்று கேட்டார்.
விருத்தர் சொன்னார். ஒரு புளியமரம்தான் விரோதத்தை விதைத்து விருக்ஷமாக வளர்த்துக் கொடுத்திருந்தது!
தனிகர் இருவருக்கும் அடுத்தடுத்து வீடுகள்; தோப்புச் சூழ்ந்த பெரிய வீடுகள். இரண்டுக்கும் சரியாக மையத்தில் ஒரு புளியமரம். அது இருபுறமும் ஒரேபோல் வேரும் கிளையும் விட்டிருந்தது. எவருக்கு அது சொந்தம் என்பதில்தான் தகராறு!
விருத்தர் விருத்தாந்தம் சொல்லிச் சென்றபின், பெரியவாள் ப்ரபுக்களில் ஒருவரைக் கூப்பிட்டனுப்பினார். அவர் பக்தியுடன் வந்தார். பெரியவாள், "ஒன் தோட்டத்துல பெரிசா புளியமரம் இருக்காமே! அதை எனக்குக் குடுக்கிறயா?" என்று கேட்டார்.
உள்ளம் கவர் கள்வனாக அவர் குழந்தை போல் கொள்ளையழகு காட்டிக் கேட்டால் எவர்தான் எதைத்தான் கொடுக்க மாட்டார்?
ஆஹா என்று சம்மதம் சொன்னார் தனிகர்.
அவர் சென்றபின், அவரது விரோதியான மற்ற தனிகரைப் பெரியவாள் கூப்பிட்டனுப்பி இதே கேள்வி கேட்டார்.
அவரும் இதே பதில் சொன்னார்.
பிறகு இருவரையும் பெரியவாள் கூட்டிப் பேசினார். விரோதத்திற்குக் காரணமான புளீயமரத்தை இருவரும் ஏகோபித்து மடத்துக்கு சாஸனம் செய்யச் சம்மதிப்பதால் இனியும் அவர்களுக்குள் விரோதம் நிலவ இடமில்லை; அவர்கள் எல்லா விதத்திலும் ஏகோபித்துப் போய்விடலாம் என்று அறிவுரை கூறினார்.
பேதம் பறந்தது! இன்றைய ஐக்யசக்தியவதாரர்தான் பறக்க வைத்தது!.
ஊர்ப்பகை தீர்த்து வைத்ததில் ஸ்வமடத்திற்கு ஆதாயம் பெறுவது தர்மமல்ல என்று ஸத்யமூர்தி எண்ணீனார்.
ஊர்க்கணக்குப்பிள்ளையைக் கூப்பிட்டனுப்பினார். புளியங்காய் மகசூலைக் கணக்குப்பிள்ளை விற்று பணத்தை சிவாலயத்திற்குச் சேர்ப்பித்து விடுவதற்குத் தக்க ஏற்பாடு செய்தார்..
அந்த கிராமத்திற்கு ஸபரிவாரம் விஜயம் செய்து இரு தனிகர் இல்லங்களிலும் தங்கி பிக்ஷைகள் பெற்றார். ஊரையே ஒன்றுபடுத்தி விட்டுப் புறப்பட்டார்.
'அந்த'ப் புளியமரம்தான் அவரது இன்றைய குசலப்ரசனம் பெற்றது. அவரது அருணோக்கத்தின் பலனாக அம்மரம் 'கைலாஸப் பிராப்தி' அடைந்த பின்பும் அதற்கான திரவியம் கைலாயநாதன் ஆலயத்திற்கே சென்றிருக்கிறது!