Post by Sumi on Oct 2, 2012 7:36:55 GMT 5.5
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
பொதுவான தர்மங்கள்
வேத ரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலாக வேண்டும்?
Part 9 of 21
பல மந்திரங்களில் அர்த்தத்தைவிடக்கூட சப்தத்துக்கு முக்கியத்துவம் அதிகம். அவற்றின் அக்ஷரத்திற்கும் அவற்றைச் சொல்ல வேண்டிய ஸ்வரத்திற்குமே விசேஷ சக்தி உண்டு. அர்த்தத்துக்கு அந்த விசேஷமில்லை. உதாரணமாக, தேள் கொட்டு மந்திரத்தை எடுத்துக் கொண்டால், அதற்கு அர்த்தம் என்று ஒன்றும் விசேஷமாக இராது. அர்த்தத்தைச் சொல்லக் கூடாது என்றும் சொல்வார்கள். ஆனாலும் அந்த சப்தக் கோவையை ஜபித்தால், அதனால் ஆகாசத்தில் ஏற்படுகிற ஒலி அதிர்வுகளாலேயே (vibration) அதாவது, அக்ஷரங்களின் சக்தியினாலேயே விஷம் இறங்கி விடுகிறது. ஒவ்வொரு விதமான சப்தத்துக்கு ஒவ்வொரு விதமான சக்தி உண்டு. ஆபிசாரம் என்று பிறருக்குக் கெடுதல் செய்யக் கூடிய மந்திரமும் இருக்கிறது. அந்த சப்தங்களுக்குக் கெடுதல் செய்யக் கூடிய சக்தி இருக்கிறது. இவற்றில் எல்லாமே அக்ஷர சுத்தம்.
ஸ்வர சுத்தத்தில்தான் சக்தி, பில்லி, சூனியம் வைக்கிறவர்களின் பல்லைத் தட்டிவிடுவதுண்டு. ஏனென்றால் பல் போனால் சொல்லும் மாறுபடும். அவர்கள் ஜபிக்கிற மந்திரங்களில் சப்த தோஷம் உண்டாகும். அதனால் அவை பலன் தராமல் போகும். உச்சாரணம் சுத்தமாக இருந்தால்தான் அக்ஷரங்கள் பலன் தரும். சப்தங்களுக்கே இப்படி சக்தி இருப்பதை புரிந்து கொண்டோமானால், அப்புறம் எந்த மந்திரம் எந்த பாஷையில் இருக்கிறது. பாஷையை மாற்றலாமா என்ற எண்ணம் எழும்பாது. திவஸ மந்திரத்தை இங்கிலீஷில் மொழி பெயர்க்கலாம். தமிழில் சொன்னால்தானே நம் அப்பாவுக்கு புரியும் என்றெல்லாம் கேட்காமலிருப்போம்.
எந்த சப்தங்கள் சகல பிராணிகளுக்கும் இகபர நலன்களைத் தருமோ, அவையே வேதங்களில் உள்ள மந்திரங்கள். இதை நம்பினால்தான் உண்டு. நம் காதுகளுக்கும் கேட்காதது ரிஷிகளுக்கும் கேட்குமோ என்ரு கேட்கலாகாது. நமக்குத் தெரியாததைக் காண்கிற திவ்விய திருஷ்டி, நமக்குக் கேளாததைக் கேட்கும் திவ்விய சுரோத்திரம் எல்லாமே உண்டு. இப்போது நம் பார்வை, நம் கண்ணிலுள்ள லென்ஸைக் கொண்டு நடைபெறுகிறது. இந்த ஸென்ஸ் வேறுவிதமாக இருந்தால், நாம் பார்ப்பதெல்லாம் வேறு விதமாகத் தெரியும். யோக சாதனையினால் இந்த திவ்விய சக்திகளைப் பெற முடியும்.
(to be continued....)
பொதுவான தர்மங்கள்
வேத ரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலாக வேண்டும்?
Part 9 of 21
பல மந்திரங்களில் அர்த்தத்தைவிடக்கூட சப்தத்துக்கு முக்கியத்துவம் அதிகம். அவற்றின் அக்ஷரத்திற்கும் அவற்றைச் சொல்ல வேண்டிய ஸ்வரத்திற்குமே விசேஷ சக்தி உண்டு. அர்த்தத்துக்கு அந்த விசேஷமில்லை. உதாரணமாக, தேள் கொட்டு மந்திரத்தை எடுத்துக் கொண்டால், அதற்கு அர்த்தம் என்று ஒன்றும் விசேஷமாக இராது. அர்த்தத்தைச் சொல்லக் கூடாது என்றும் சொல்வார்கள். ஆனாலும் அந்த சப்தக் கோவையை ஜபித்தால், அதனால் ஆகாசத்தில் ஏற்படுகிற ஒலி அதிர்வுகளாலேயே (vibration) அதாவது, அக்ஷரங்களின் சக்தியினாலேயே விஷம் இறங்கி விடுகிறது. ஒவ்வொரு விதமான சப்தத்துக்கு ஒவ்வொரு விதமான சக்தி உண்டு. ஆபிசாரம் என்று பிறருக்குக் கெடுதல் செய்யக் கூடிய மந்திரமும் இருக்கிறது. அந்த சப்தங்களுக்குக் கெடுதல் செய்யக் கூடிய சக்தி இருக்கிறது. இவற்றில் எல்லாமே அக்ஷர சுத்தம்.
ஸ்வர சுத்தத்தில்தான் சக்தி, பில்லி, சூனியம் வைக்கிறவர்களின் பல்லைத் தட்டிவிடுவதுண்டு. ஏனென்றால் பல் போனால் சொல்லும் மாறுபடும். அவர்கள் ஜபிக்கிற மந்திரங்களில் சப்த தோஷம் உண்டாகும். அதனால் அவை பலன் தராமல் போகும். உச்சாரணம் சுத்தமாக இருந்தால்தான் அக்ஷரங்கள் பலன் தரும். சப்தங்களுக்கே இப்படி சக்தி இருப்பதை புரிந்து கொண்டோமானால், அப்புறம் எந்த மந்திரம் எந்த பாஷையில் இருக்கிறது. பாஷையை மாற்றலாமா என்ற எண்ணம் எழும்பாது. திவஸ மந்திரத்தை இங்கிலீஷில் மொழி பெயர்க்கலாம். தமிழில் சொன்னால்தானே நம் அப்பாவுக்கு புரியும் என்றெல்லாம் கேட்காமலிருப்போம்.
எந்த சப்தங்கள் சகல பிராணிகளுக்கும் இகபர நலன்களைத் தருமோ, அவையே வேதங்களில் உள்ள மந்திரங்கள். இதை நம்பினால்தான் உண்டு. நம் காதுகளுக்கும் கேட்காதது ரிஷிகளுக்கும் கேட்குமோ என்ரு கேட்கலாகாது. நமக்குத் தெரியாததைக் காண்கிற திவ்விய திருஷ்டி, நமக்குக் கேளாததைக் கேட்கும் திவ்விய சுரோத்திரம் எல்லாமே உண்டு. இப்போது நம் பார்வை, நம் கண்ணிலுள்ள லென்ஸைக் கொண்டு நடைபெறுகிறது. இந்த ஸென்ஸ் வேறுவிதமாக இருந்தால், நாம் பார்ப்பதெல்லாம் வேறு விதமாகத் தெரியும். யோக சாதனையினால் இந்த திவ்விய சக்திகளைப் பெற முடியும்.
(to be continued....)