Post by Sumi on Sept 27, 2012 8:34:20 GMT 5.5
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
பொதுவான தர்மங்கள்
வேத ரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலாக வேண்டும்?
Part 4/21
பெனதிகமாகவோ (physical) , மானஸிகமாகவோ (mental) ஒரு அசைவு என்ரு வந்துவிட்டால் அங்கே ஸயன்ஸ்படி சப்தமும் உண்டாகித்தான் ஆகவேண்டும்.
ஒவ்வொரு அசைவுக்கும் தனியாக ஒவ்வொரு சப்தம் இருக்கிறது. இதையே மாற்றிச் சொல்வதினால், ஒவ்வொரு விதமான சப்தத்தை உண்டாக்க வேண்டுமானால், அதற்கு ஒரு விதமான அசைவை உண்டாக்கித்தான் ஆக வேண்டும். ஒரு வித்வான் பாடுகிறார். அவர் பாடுகிற மாதிரியே நாம் பாட வேண்டும். அதே மாதிரியே புரட்ட வேண்டும் என்றால், அவர் தொண்டையில் என்னென்ன சலனங்களை உண்டாக்குகின்றாரோ அவற்றையே நாமும் பண்ணித்தான் வேண்டும்.
சப்தமும் அசைவும் சேர்ந்து சேர்ந்தே, ஒன்றாகவே உண்டாக்கியிருக்கின்றன. இப்படி உண்டான அப்புறம் அந்த அசைவுகளிலிருந்து ஒரு ஸ்தூலமான வஸ்து அல்லது மனோபாவம் உண்டாகிறது. ஆகக்கூடி சப்தத்திலிருந்தே சிருஷ்டி ஏற்படுகிறது. இந்தப் பிராசீனமான தத்துவம் ஸயன்ஸ் பகுத்தரிவுப்படியும் கூட சரியானதுதான் என்று தெரிகிறது.
சிருஷ்டி, அதிலே நடக்கிற பல காரியங்கள் எண்ணங்கள் இவற்றின் மூலமாக சப்தங்கள் ஆகாசத்தில் ( space ) அப்படியே நிறைந்துதான் இருக்கின்றன. நாம் கையைத் தட்டினவுடன் ஒரு சப்தம் உண்டாகிறது என்றால் அது என்ன ஆகிறது. அது அப்படியே ஆகாசத்தில் தங்கி விடுகிறது. நல்ல காரியங்கள் எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு சலனம், சப்தம் இருக்கிறது. இந்த சப்தத்தை உண்டாக்கி விட்டால் அந்த நல்லது அல்லது கெட்டதும் வந்துதான் ஆக வேண்டும். நல்லெண்ணங்கள் ஜநங்களுக்கு உண்டாகிறது என்றால் அப்படி உண்டாக்குகிற சலனங்கள் இருக்க வேண்டும். அவற்றிற்கான சப்தங்கள் இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட சப்தங்களை நாம் உண்டாக்க முடியுமானால் லோகத்தில் ஜனங்களுக்கு நல்ல எண்ணங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். ஜனங்களுக்கு உயர்ந்த எண்ணங்கள் இருப்பதைவிட லோகத்துக்குப் பெரிய க்ஷேமம் என்ன இருக்கிறது. அப்படி எண்ணுகிறவதற்கு அவர்களைத் தூண்டுகிற சக்தியைப் பெற்ற சப்தங்கள் வேத மந்த்ரங்கள். அது மட்டுமில்லை. ஜனங்கள் ஜீவிப்பதற்கு ஆகாரம் அவசியம். லோகத்தில் ஒரு மேகம் உண்டாகிறது. அது மழையாகப் பொழிகிறது என்றால், இந்தக் காரியங்கள் அநேக விதமான சலனங்களின் மீதே நடந்திருக்கிறது. எனவே, சில சப்தங்களினை உண்டாக்கி அதன் மூலம் இப்படிப்பட்ட சலனங்களை ஏற்படுத்தி விட்டால் மழை பெய்யத்தான் வேண்டும்.
இப்படியே வாழ்க்கைக்கு அவசியமானதையெல்லாம், நல்லவற்றையெல்லாம் சப்தங்கள் மூலம் உண்டாக்கிக் கொள்ளலாம். அநாவசியமானவை, கெட்டவை இவைகளையும் சிற்சில சப்தங்களால் பண்ணிக் கொள்ளலாம்தான். ஆனால் வேதத்தில் இருக்கப்பட்ட சப்தங்கள் லோக க்ஷேமார்த்தம் ஒன்றையே குறிக்கோளாக உடையவை.
(to be continued....)
பொதுவான தர்மங்கள்
வேத ரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலாக வேண்டும்?
Part 4/21
பெனதிகமாகவோ (physical) , மானஸிகமாகவோ (mental) ஒரு அசைவு என்ரு வந்துவிட்டால் அங்கே ஸயன்ஸ்படி சப்தமும் உண்டாகித்தான் ஆகவேண்டும்.
ஒவ்வொரு அசைவுக்கும் தனியாக ஒவ்வொரு சப்தம் இருக்கிறது. இதையே மாற்றிச் சொல்வதினால், ஒவ்வொரு விதமான சப்தத்தை உண்டாக்க வேண்டுமானால், அதற்கு ஒரு விதமான அசைவை உண்டாக்கித்தான் ஆக வேண்டும். ஒரு வித்வான் பாடுகிறார். அவர் பாடுகிற மாதிரியே நாம் பாட வேண்டும். அதே மாதிரியே புரட்ட வேண்டும் என்றால், அவர் தொண்டையில் என்னென்ன சலனங்களை உண்டாக்குகின்றாரோ அவற்றையே நாமும் பண்ணித்தான் வேண்டும்.
சப்தமும் அசைவும் சேர்ந்து சேர்ந்தே, ஒன்றாகவே உண்டாக்கியிருக்கின்றன. இப்படி உண்டான அப்புறம் அந்த அசைவுகளிலிருந்து ஒரு ஸ்தூலமான வஸ்து அல்லது மனோபாவம் உண்டாகிறது. ஆகக்கூடி சப்தத்திலிருந்தே சிருஷ்டி ஏற்படுகிறது. இந்தப் பிராசீனமான தத்துவம் ஸயன்ஸ் பகுத்தரிவுப்படியும் கூட சரியானதுதான் என்று தெரிகிறது.
சிருஷ்டி, அதிலே நடக்கிற பல காரியங்கள் எண்ணங்கள் இவற்றின் மூலமாக சப்தங்கள் ஆகாசத்தில் ( space ) அப்படியே நிறைந்துதான் இருக்கின்றன. நாம் கையைத் தட்டினவுடன் ஒரு சப்தம் உண்டாகிறது என்றால் அது என்ன ஆகிறது. அது அப்படியே ஆகாசத்தில் தங்கி விடுகிறது. நல்ல காரியங்கள் எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு சலனம், சப்தம் இருக்கிறது. இந்த சப்தத்தை உண்டாக்கி விட்டால் அந்த நல்லது அல்லது கெட்டதும் வந்துதான் ஆக வேண்டும். நல்லெண்ணங்கள் ஜநங்களுக்கு உண்டாகிறது என்றால் அப்படி உண்டாக்குகிற சலனங்கள் இருக்க வேண்டும். அவற்றிற்கான சப்தங்கள் இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட சப்தங்களை நாம் உண்டாக்க முடியுமானால் லோகத்தில் ஜனங்களுக்கு நல்ல எண்ணங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். ஜனங்களுக்கு உயர்ந்த எண்ணங்கள் இருப்பதைவிட லோகத்துக்குப் பெரிய க்ஷேமம் என்ன இருக்கிறது. அப்படி எண்ணுகிறவதற்கு அவர்களைத் தூண்டுகிற சக்தியைப் பெற்ற சப்தங்கள் வேத மந்த்ரங்கள். அது மட்டுமில்லை. ஜனங்கள் ஜீவிப்பதற்கு ஆகாரம் அவசியம். லோகத்தில் ஒரு மேகம் உண்டாகிறது. அது மழையாகப் பொழிகிறது என்றால், இந்தக் காரியங்கள் அநேக விதமான சலனங்களின் மீதே நடந்திருக்கிறது. எனவே, சில சப்தங்களினை உண்டாக்கி அதன் மூலம் இப்படிப்பட்ட சலனங்களை ஏற்படுத்தி விட்டால் மழை பெய்யத்தான் வேண்டும்.
இப்படியே வாழ்க்கைக்கு அவசியமானதையெல்லாம், நல்லவற்றையெல்லாம் சப்தங்கள் மூலம் உண்டாக்கிக் கொள்ளலாம். அநாவசியமானவை, கெட்டவை இவைகளையும் சிற்சில சப்தங்களால் பண்ணிக் கொள்ளலாம்தான். ஆனால் வேதத்தில் இருக்கப்பட்ட சப்தங்கள் லோக க்ஷேமார்த்தம் ஒன்றையே குறிக்கோளாக உடையவை.
(to be continued....)