Post by anusham163 on Sept 21, 2012 22:00:59 GMT 5.5
Source------"MAHAPERIAVAL VIRUNDHU"
Author------Sri Ra. Ganapathy.
Publishers--- Divya Vidgya Trust
மஹாபெரியவா தன்னுடைய உபவாசத்திற்கு எவ்வளவு முக்யத்துவம் கொடுத்தார் என்பதற்கு ஒரு 'சாம்ப்பிள்':
ஸ்ரீ மஹாபெரியவாள் சிறு வயதிலேயே கடுமையான ஆஹார நியமங்களை மேற்கொண்டு ஒட்ட ஒட்டக் கிடந்ததில், அந்த அன்னதாதாவின் ( அன்னதானம் சிவனைக் குறிப்பிடுகிறார்) 'தாயுள்ளம்' பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. 1921ல் மஹாபெரியவாள் வெளீயூர்களீல் சஞ்சாரம் செய்த போது, நீண்ட நாட்கள் அந்த உபவாசம் தொடர்ந்ததால் மிகவும் மெலிந்து விட்டதாக சிவனுக்குச் செய்தி எட்டியது. உடனே கண்ணும் கண்ணீருமாக அவர் மஹாபெரியவாளுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், முக்யமான உபவாச தினங்கள் தவிர, மற்ற நாள்களில் அவர் அன்ன பிக்ஷை சிறிதாவது எடுத்துக் கொள்ளத்தான் வேண்டுமென்று மன்றாடிக் கேட்டுக் கொண்டிருந்தார். பிடிவாதமாகவும் வலியுறித்தியிருந்தார். தம்முடைய வேண்டுகோளை நிறைவேற்றுவதாக மடத்துச் சிப்பந்திகள் மூலம் மஹாபெரியவாள் கட்டாயம் பதில் அனுப்ப வேண்டுமென்று கேட்டுக்கொண்டு முடித்திருந்தார்.
மானேஜர் கடிதத்தைப் படிக்கப் படிக்க மஹாபெரியவாள் திருமுகத்தில் மந்தஹாசம் விதவிதமாக நடனம் புரிந்தது. ஆயினும் பதிலெதுவும் அவர் தெரிவிக்கவில்லை.
மறுதினமும் பொறுத்துப் பார்த்த மானேஜர் அன்றும் உத்தரவு வராததால் ," சிவனுக்கு என்ன பதில் எழுதுவது?" என்று கேட்டே விட்டார்.
"எல்லாம் அவர் மனஸ் போலவே நடக்கும்னு எழுதிடலாம்" என்று லேசாகக் கூறி மஹாபெரியவாள் விட்டு விட்டார்.
சிவனுக்கோ அந்த பதில் ரொம்ப லேசாகத் தோன்றிற்று. சரிவர ஆஹாரம் கொள்வதாக மஹாபெரியவாளிடமிருந்து வாக்குறுதி வாங்காமல் விடுவதில்லை என்ற வேகத்துடன் அவர் முகாமிட்டிருந்த ஊருக்கு நேரிலேயே வந்து விட்டார்.
கடிதத்தில் எழுதியதையே அதை விடவும் உருக்கமாக விண்ணப்பித்தார். அதை விட வலிவாக வற்புறுத்தவும் செய்தார்.
மஹாபெரியவாள் மிகவும் குழைந்து விட்டார். ஆனாலும் தர்மசாஸ்திர பிகு எப்படி ஆசாரமூர்த்தியான ஆசார்யரைக் குழைந்தே இருக்க விடும்? சிவனிடம், " உங்களுடைய அன்பும் விசாரமும் எனக்குத் தெரியறது. ஆனா இந்தப் பீடத்துல இருக்கறதுனாலே அனுஷ்டிக்க வேண்டிய யதி தர்மங்களை விட்டுக்கொடுக்கிறதுக்கு இல்லைன்னும் தெரியறது. எங்கேயாவது உங்க அபிப்ராயத்துக்கு எடம் கொடுக்கலாம்னு ஏற்பட்டா அப்படியே பண்ணப் பார்க்கிறேன். முறைப்படி பூர்ணமா தர்மானுஷ்டானம் பண்ணினா அதுவே, எத்தனை பட்டினி கிடந்தாலும் கூட சக்தி குடுக்கும். நான் அந்த மாதிரி ஆகிறதுக்குத்தான் நீங்களெல்லாம் பிரார்த்தனை பண்ணனும்.' என்று தமக்கே உரிய அன்புணர்வோடு, நெறியுணர்வோடு விநயத்தோடு கூறினார்.
சிவன் திருப்தி அடைந்தாரா என்பது சந்தேஹம்தான்.
Author------Sri Ra. Ganapathy.
Publishers--- Divya Vidgya Trust
மஹாபெரியவா தன்னுடைய உபவாசத்திற்கு எவ்வளவு முக்யத்துவம் கொடுத்தார் என்பதற்கு ஒரு 'சாம்ப்பிள்':
ஸ்ரீ மஹாபெரியவாள் சிறு வயதிலேயே கடுமையான ஆஹார நியமங்களை மேற்கொண்டு ஒட்ட ஒட்டக் கிடந்ததில், அந்த அன்னதாதாவின் ( அன்னதானம் சிவனைக் குறிப்பிடுகிறார்) 'தாயுள்ளம்' பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. 1921ல் மஹாபெரியவாள் வெளீயூர்களீல் சஞ்சாரம் செய்த போது, நீண்ட நாட்கள் அந்த உபவாசம் தொடர்ந்ததால் மிகவும் மெலிந்து விட்டதாக சிவனுக்குச் செய்தி எட்டியது. உடனே கண்ணும் கண்ணீருமாக அவர் மஹாபெரியவாளுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், முக்யமான உபவாச தினங்கள் தவிர, மற்ற நாள்களில் அவர் அன்ன பிக்ஷை சிறிதாவது எடுத்துக் கொள்ளத்தான் வேண்டுமென்று மன்றாடிக் கேட்டுக் கொண்டிருந்தார். பிடிவாதமாகவும் வலியுறித்தியிருந்தார். தம்முடைய வேண்டுகோளை நிறைவேற்றுவதாக மடத்துச் சிப்பந்திகள் மூலம் மஹாபெரியவாள் கட்டாயம் பதில் அனுப்ப வேண்டுமென்று கேட்டுக்கொண்டு முடித்திருந்தார்.
மானேஜர் கடிதத்தைப் படிக்கப் படிக்க மஹாபெரியவாள் திருமுகத்தில் மந்தஹாசம் விதவிதமாக நடனம் புரிந்தது. ஆயினும் பதிலெதுவும் அவர் தெரிவிக்கவில்லை.
மறுதினமும் பொறுத்துப் பார்த்த மானேஜர் அன்றும் உத்தரவு வராததால் ," சிவனுக்கு என்ன பதில் எழுதுவது?" என்று கேட்டே விட்டார்.
"எல்லாம் அவர் மனஸ் போலவே நடக்கும்னு எழுதிடலாம்" என்று லேசாகக் கூறி மஹாபெரியவாள் விட்டு விட்டார்.
சிவனுக்கோ அந்த பதில் ரொம்ப லேசாகத் தோன்றிற்று. சரிவர ஆஹாரம் கொள்வதாக மஹாபெரியவாளிடமிருந்து வாக்குறுதி வாங்காமல் விடுவதில்லை என்ற வேகத்துடன் அவர் முகாமிட்டிருந்த ஊருக்கு நேரிலேயே வந்து விட்டார்.
கடிதத்தில் எழுதியதையே அதை விடவும் உருக்கமாக விண்ணப்பித்தார். அதை விட வலிவாக வற்புறுத்தவும் செய்தார்.
மஹாபெரியவாள் மிகவும் குழைந்து விட்டார். ஆனாலும் தர்மசாஸ்திர பிகு எப்படி ஆசாரமூர்த்தியான ஆசார்யரைக் குழைந்தே இருக்க விடும்? சிவனிடம், " உங்களுடைய அன்பும் விசாரமும் எனக்குத் தெரியறது. ஆனா இந்தப் பீடத்துல இருக்கறதுனாலே அனுஷ்டிக்க வேண்டிய யதி தர்மங்களை விட்டுக்கொடுக்கிறதுக்கு இல்லைன்னும் தெரியறது. எங்கேயாவது உங்க அபிப்ராயத்துக்கு எடம் கொடுக்கலாம்னு ஏற்பட்டா அப்படியே பண்ணப் பார்க்கிறேன். முறைப்படி பூர்ணமா தர்மானுஷ்டானம் பண்ணினா அதுவே, எத்தனை பட்டினி கிடந்தாலும் கூட சக்தி குடுக்கும். நான் அந்த மாதிரி ஆகிறதுக்குத்தான் நீங்களெல்லாம் பிரார்த்தனை பண்ணனும்.' என்று தமக்கே உரிய அன்புணர்வோடு, நெறியுணர்வோடு விநயத்தோடு கூறினார்.
சிவன் திருப்தி அடைந்தாரா என்பது சந்தேஹம்தான்.