Post by Sumi on Sept 19, 2012 7:22:31 GMT 5.5
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
வைதிக மதம்
பொறுப்பாளி யார் ? பரிகாரம் எனன ?
Part 9 of 9
பிராமணன் தேகம் இந்திரிய சுகதத்துக்காக ஏற்பட்டிருக்கிறதே அல்ல. அது லோக க்ஷேமார்த்தமாக வேதத்தை ரக்ஷிப்பதற்கு என்ன நியமங்களை அவற்றைச் செய்யவே ஏற்பட்டது. அதில் அதிகப்படியான எந்த போக்ய வஸ்துவும் சேர்க்கக் கூடாது என்பதுதான் அடிப்படை தர்மம். அந்த தர்மத்தை, அதில் உள்ள தியாகப் பண்பை விட்டுவிட்டு, நவீன உபகரணங்களால் சுலபத்தில் கிடைக்கிற சுகங்களுக்கு இவன் ஆசைப்பட்டது அடியோடு தவறுதான். பாதகமான சூழ்நிலையிலும் ஸ்வதர்மத்தை ரட்சிப்பதுதான் பெருமை. அப்படி அவர்கள் செய்யாதது பெரிய தப்பு. அதன் பலனைத்தான் இப்போது ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகளாக இருந்த நமமிடையில் வந்துவிட்ட துவேஷ உணர்ச்சியில் அநுபவிக்கிறோம். மற்றவர்களுக்கும் பெரிய கிலேசத்தை உண்டாக்கி விட்டோம். முதலில் பிராமணனுக்கு காலேஜிலே இடமில்லை. வேலையில்லை என்று ஆனதே, பிறகு படிப்படியாக மற்றவர்களுக்கும் அந்தக் கதிதான் என்கிற நிலைக்கு முற்றி இருக்கிறது. மனித சக்தியினாலேயே கிராம வாழ்க்கையை எளிதாக நடத்தியமட்டும் எல்லாம் சரியாயிருந்தது. யந்திர சக்தி, ஆலைத்தொழில் எல்லாம் வந்து, தேவைகளும் ரொம்ப அதிகமாகி, வாழ்க்கையே சிக்கலாகிவிட்ட (Compilcated) இன்றைய நிலையில் காலேஜ் அட்மிஷன், வேலை இவற்றுக்கு எல்லோருமே திண்டாடும்படியாகத்தான் ஆகியிருக்கிறது.
இப்போது என்ன பரிகாரம் (remedy) ?பிராமணர்கள் எல்லோரும் இப்போதிருக்கிற வாழ்க்கை முறைகளை விட்டு, அத்யயனத்துக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா?. என்று என்னைக் கேட்டால், அப்படி நான் எதிர் பார்க்கிறார்களோ இல்லையோ. அவர்கள் இப்படித்தான் செய்தாக வேண்டும் என்றுதான் நான் சொல்ல வேண்டும். நம் மூலதர்மமே பறிபோய்விட்டது என்று வாயை மூடிக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பதற்கு குரு பீடம், ஆசாரிய ஸ்தானம் எதுவும் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. முடியாததாகத் தோன்றினாலும்கூட, அப்படிப்பட்ட நல்ல லக்ஷியங்களுக்குத்தான் அவை தங்கள் பூரண சக்தியையும் செலவழித்துப் பாடுபட வேண்டும். சத்தியாக்கிரஹத்தால் வெள்ளைக்காரனைப் போகப் பண்ணுவதாவது, இதெல்லாம் நடக்காத காரியம் என்று சொன்னவர்கள் இருக்கத்தான் செய்தார்கள். நடக்க முடியாது என்று நினைத்த எத்தனையோ இந்த உலகத்தில் நடந்துதான் இருக்கிறது. இது நடக்க முடியாத விஷயம் என்று நினைத்து, தர்மத்தையும் சத்தியத்தையும் விட்டுக் கொடுத்துப் பேசுவது எனக்கான காரியமில்லை. நடத்துவதும் நடக்காததும் உங்கள் கையில் இருக்கிற விஷயம். நான் செய்யக்கூடியது எல்லாம் நம்முடைய தர்ம சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறவைகளை அலுக்காமல் சலிக்காமல் உங்கள் காதில் போடுவதுதான். சாஸ்திரங்கள் எவற்றை உங்கள் கடமை என்ரு விதித்திருக்கின்றனவோ அவற்றை உங்களுக்கு எடுத்துச் சொல்லி, எத்தனை பிரதிகூலங்கள் இருந்தாலும் நீங்கள் அதன்படிதான் நடக்கவேண்டும் என்று வலியுறுத்துவதுதான்.
வைதிக மதம்
பொறுப்பாளி யார் ? பரிகாரம் எனன ?
Part 9 of 9
பிராமணன் தேகம் இந்திரிய சுகதத்துக்காக ஏற்பட்டிருக்கிறதே அல்ல. அது லோக க்ஷேமார்த்தமாக வேதத்தை ரக்ஷிப்பதற்கு என்ன நியமங்களை அவற்றைச் செய்யவே ஏற்பட்டது. அதில் அதிகப்படியான எந்த போக்ய வஸ்துவும் சேர்க்கக் கூடாது என்பதுதான் அடிப்படை தர்மம். அந்த தர்மத்தை, அதில் உள்ள தியாகப் பண்பை விட்டுவிட்டு, நவீன உபகரணங்களால் சுலபத்தில் கிடைக்கிற சுகங்களுக்கு இவன் ஆசைப்பட்டது அடியோடு தவறுதான். பாதகமான சூழ்நிலையிலும் ஸ்வதர்மத்தை ரட்சிப்பதுதான் பெருமை. அப்படி அவர்கள் செய்யாதது பெரிய தப்பு. அதன் பலனைத்தான் இப்போது ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகளாக இருந்த நமமிடையில் வந்துவிட்ட துவேஷ உணர்ச்சியில் அநுபவிக்கிறோம். மற்றவர்களுக்கும் பெரிய கிலேசத்தை உண்டாக்கி விட்டோம். முதலில் பிராமணனுக்கு காலேஜிலே இடமில்லை. வேலையில்லை என்று ஆனதே, பிறகு படிப்படியாக மற்றவர்களுக்கும் அந்தக் கதிதான் என்கிற நிலைக்கு முற்றி இருக்கிறது. மனித சக்தியினாலேயே கிராம வாழ்க்கையை எளிதாக நடத்தியமட்டும் எல்லாம் சரியாயிருந்தது. யந்திர சக்தி, ஆலைத்தொழில் எல்லாம் வந்து, தேவைகளும் ரொம்ப அதிகமாகி, வாழ்க்கையே சிக்கலாகிவிட்ட (Compilcated) இன்றைய நிலையில் காலேஜ் அட்மிஷன், வேலை இவற்றுக்கு எல்லோருமே திண்டாடும்படியாகத்தான் ஆகியிருக்கிறது.
இப்போது என்ன பரிகாரம் (remedy) ?பிராமணர்கள் எல்லோரும் இப்போதிருக்கிற வாழ்க்கை முறைகளை விட்டு, அத்யயனத்துக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா?. என்று என்னைக் கேட்டால், அப்படி நான் எதிர் பார்க்கிறார்களோ இல்லையோ. அவர்கள் இப்படித்தான் செய்தாக வேண்டும் என்றுதான் நான் சொல்ல வேண்டும். நம் மூலதர்மமே பறிபோய்விட்டது என்று வாயை மூடிக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பதற்கு குரு பீடம், ஆசாரிய ஸ்தானம் எதுவும் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. முடியாததாகத் தோன்றினாலும்கூட, அப்படிப்பட்ட நல்ல லக்ஷியங்களுக்குத்தான் அவை தங்கள் பூரண சக்தியையும் செலவழித்துப் பாடுபட வேண்டும். சத்தியாக்கிரஹத்தால் வெள்ளைக்காரனைப் போகப் பண்ணுவதாவது, இதெல்லாம் நடக்காத காரியம் என்று சொன்னவர்கள் இருக்கத்தான் செய்தார்கள். நடக்க முடியாது என்று நினைத்த எத்தனையோ இந்த உலகத்தில் நடந்துதான் இருக்கிறது. இது நடக்க முடியாத விஷயம் என்று நினைத்து, தர்மத்தையும் சத்தியத்தையும் விட்டுக் கொடுத்துப் பேசுவது எனக்கான காரியமில்லை. நடத்துவதும் நடக்காததும் உங்கள் கையில் இருக்கிற விஷயம். நான் செய்யக்கூடியது எல்லாம் நம்முடைய தர்ம சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறவைகளை அலுக்காமல் சலிக்காமல் உங்கள் காதில் போடுவதுதான். சாஸ்திரங்கள் எவற்றை உங்கள் கடமை என்ரு விதித்திருக்கின்றனவோ அவற்றை உங்களுக்கு எடுத்துச் சொல்லி, எத்தனை பிரதிகூலங்கள் இருந்தாலும் நீங்கள் அதன்படிதான் நடக்கவேண்டும் என்று வலியுறுத்துவதுதான்.