|
Post by anusham163 on Sept 18, 2012 23:55:04 GMT 5.5
“நிர்மல மௌனமாகச் சிரித்தார். “ரெண்டுமே ‘அராபியன் ஹார்ஸ் என்ன, ரெட்டை உச்சைஸ்ரவஸ்னுதான் வெச்சுக்கலாமே” என்றார் கோபுர வாசலாக மனஸை ஹோ என்று திறந்து போட்டுப் பேசும் எளிமையும் தெளிவும் அவருக்கே உரித்தானவை அல்லவா? அப்படிச் சொன்னார்: “ நீ ஜெனரலா, நடுநிலையா யோஜிச்சதிலே அகிலாண்டேஸ்வரிக்கு விக்னேஸ்வரர் கிட்ட இருக்கிற விசெஷ வாத்ஸல்யம் ஆசார்யாளாலே வெளிப்பட்டதையும், அதே ஆசார்யாள் காமாக்ஷியையும் அங்கே மாதிரியே சாந்தமாக்கிச் சக்ரப்ரதிஷ்டை பண்ணினதையும் அழகா முடிச்சுப்போட்டுக் கதையோ, ஊஹமோ, நெஜமேயோ ரசனை ( இலக்கிய உருவமைத்தல்) பண்ணீயிருக்கே. எனக்கு எல்லா ஸ்வாமிக்குள்ளேயும் அம்பாள்னா தனி முக்யம்; அந்த அம்பாளே அனேக ரூபங்களிலே இருக்கிறதுலே காமாக்ஷின்னா தனி முக்யம்னு ஒரு பக்ஷபாதம்.( அனைத்தும் தழுவும், அனைத்தும் அடங்கும் ஆத்ம ஞானியின் பக்தக்கோலத்தில் விளைந்த ‘பக்ஷபாதம் அழகாயில்லை?) அதனால் அகிலாண்டேஸ்வரியை, அவளை, இவளைக் கொண்டு வந்து காமாக்ஷி சம்பந்தமா ஒண்ணைக் காட்டுவானேன்னு என் வெளி மனஸுக்கே தெரியாம, அப்படித் தோணி… இந்தக் காமகோஷ்ட விஷயமாகவே பிள்ளையாருக்கு இருக்கிற விசேஷத்தையெல்லாம் முடிச்சுப் போட்டு ரசனை பண்ணியிருக்கேன் போலேயிருக்கு” Akhilaandeswari oil painting-----Narayanan Bala. Pillaiyaar sketch in post 1---: Rutu Paraadkar
|
|
|
Post by vramani12 on Sept 19, 2012 6:20:31 GMT 5.5
enna thavam seitheno
|
|
|
Post by baarvian on Sept 24, 2012 19:42:56 GMT 5.5
Enna oru arumaiyana MahaPeiyavavlin vilakkangal. Udambu silirthuvittathu!
Jaya Jaya Shankara Hara Hara Shankara
|
|