Post by anusham163 on Sept 18, 2012 15:38:10 GMT 5.5
விநாயகுநி
INTRODUCTION:
This episode connected with the above song by Sri Thyagaraja Swamigal was narrated by Sri Ra.Ganapathy anna in his book “ மஹா பெரியவாள் விருந்து” . This is quite an elaborate narration , starting from the rendering of the song by a poor devotee who came to have His Dharsan. Neither was he a well-to do person nor well educated, BUT his devotion for Mahaperiava compensated every other short-comings( if we can call them so!) he had . Mahaperiava showered His blessings on him like ‘கனகதாரை”. Ganapathy anna was a blessed witness to this incident.
In the course of this interesting episode, came a discussion on the song itself, as to its meaning, thathvam, etc. and most interestingly “ How Thyagaraja Swamigal composed this song, under what circumstances Swamigal did it.
I am reproducing here only the portion concerning the latter, omitting the portions concerned with the devotee himself. That is a very moving experience for both the devotee as well as Ganapathy anna. We shall see it separately some other time. Now we will read the portions concerning the song.
Ganapathy anna writes:
“ எழுத்தாளன்” என்று மீண்டும் என்னைக் கூப்பிட்டார் ஸ்ரீசரணர். “
பாட்டு அர்த்தம் உனக்குத் தெரியுமா?”
“ஒரு மாதிரி தெரியும்”
“தெலுங்கு தெரியும்?”
“தெரியாதுதான். ஆனா ஐயர்வாள், சாமா சாஸ்த்ரிகள் மாதிரியானவா பாட்டுக் கெல்லாம் அர்த்தம் தெரிஞ்சு வெச்சுக்கிறது முடிஞ்ச மட்டும் பதவுரையாவே.”
……………………………………………………………………………………………………………………………………..
“பதவுரையாவே தெரிஞ்சிண்டிருக்கிறவன் ஏன் ‘ ஒரு மாதிரி’ தெரியும்னே?”
…………………………………………………………………………………………….
நான் ஒன்றும் சொல்லவில்லை.
‘ நன்னாத் தெரிஞ்சாலும், அப்படி சொல்லிக்கப்படாதுன்னு ‘ஒரு மாதிரி’ ன்னேயாக்கும்? ஸரி! பிள்ளையார், அம்பாள் ரெண்டு பேர் சமாசாரமும் வரதே, அது என்ன? அர்த்தம் சொல்லு!” என்று சொல்லிவிட்டு,
ஆஹாஹா! அவர்களே கொஞ்சம் பாட்டாகவும், கொஞ்சம் வசனமாகவும் அந்த வசனமே ஒரு கானமாகவும் பல்லவி, அனுபல்லவிகளைப் பாடி, பேசினார்.
பல்லவி
வினாயகுநி வலெநு ப்ரோவவே நிநு
விநா வேல்புலெவரம்ம?
அனுபல்லவி
அநாதரக்ஷகி! ஸ்ரீ காமாக்ஷி! ஸூ-
ஜநாக மோசநி! சங்கரி! ஜனனி!
“ ‘அநாதரக்ஷகி, ஸ்ரீ கமாக்ஷி’—ன்னு கொண்டு போயிருக்கிற விதம் அப்படியே மனஸைக் கவ்வறது” என்று சுவைத்துச் சொன்ன அனாதரக்ஷகர் ,” நான் மூலம் சொல்லியாச்சு. நீ உரை சொல்லு” என்றார்.
நான் ஒரே தயக்கமாக—எத்தனை வழிந்தேனோ?
“ பிள்ளையாரைப் போலவே என்னையும் நெனச்சு ரக்ஷி, உன்னை விட்டா வேறே தெய்வம் யாரம்மா? அநாதைகளை ரக்ஷிக்கிறவளே! சங்கரி! தாயே!
”
“‘பிள்ளையாரைப்போல் என்னையும்’—னு நீ அவர் பேரையே வெச்சிண்டிருக்கிறவன் சொல்றச்சே வேடிக்கையாக இருக்கு” என்று கூறினார்.
எனக்கு ஒரு புறம் லஜ்ஜையாகவும் இன்னொருபுறம் பூரிப்பாகவும் இருந்தது.
லஜ்ஜை, பூரிப்பு ,இரண்டையும் அனந்தம் மடங்கு உயர்த்துவதாகத் தொடர்ந்தது, “ ஒனக்குப் பண்றாப்பல எனக்கும் அவ அனுக்ரஹம் பண்ணனும்னு கூடக் கேக்கலாமோன்னு தோண்றது” என்றார், ஒரு புறம் நகைச்சுவை மன்னராக, இன்னொரு புறம் எளிமையின் ஏந்தலாக!.
பெரியவா பேச்சை மாற்றினார். “ ஆமாம், ‘ஸுஜநாக மோசனி’---ன்னா ( நல்லவர்களுடைய பாபத்தைப் போக்குபவள்) நல்லவா என்கிறவாளையே பாபிகள்னும் சொல்றாப்பலன்னா இருக்கு!” என்று கேட்டார்.
“நானே பெரியவாளைக் கேக்கணும்னு நெனச்சேன்” என்றேன்.
‘கிராக்கி’ செய்து கொள்ளாமல் உடனே அற்புத விளக்கம் அளித்தார். “ லோகத்துலே நல்லவாளா இருக்கற பலபேரைப் பார்த்து நாம,’ இவ்வளவு நல்லவா இப்படியொரூ கஷ்டப்படறாளே’ ன்னு சொல்லும்படியாகவும் நெறய்ய நடக்கறதோல்லியோ? காரணம் அவாளோட பூர்வ (ஜன்ம) பாபந்தானே? அதிலேருந்து அம்பாள் அவாளை விடுவிச்சுடறாங்கிறதைத்தான் ‘ஸுஜனாக மோசனி’ ன்னு சொல்லியிருப்பார்.” என்றார்.
திடீரென்று ஒரு உத்ய்ஸாகம், குழந்தை மாதிரி! “ காமாக்ஷி ன்னா ஆச்சார்யாளை நெனைக்காம இருக்க முடியுமா? அதுதான் ‘சங்கரி’ ன்னு போட்டிருக்கார்” என்றார் நவகால சங்கரர்.
தொடர்ந்து, “ ஐயர்வாள் பரம பக்தரானாலும் அத்வைதத்திலேயும் ரொம்பப் பிடிமானம் உள்ளவர் தெரியுமோ?” என்றார்.
“ (டாக்டர் வே) ரகவன் அதைப்பத்தி எழுதியிருக்கார். ஐயர்வாள் உபனநிஷத் ப்ரஹ்மேந்திரரோட இன்ஃப்ளூயென்ஸிலே வந்ததாலே, அவர் மாதிரியே ராமபக்தியானாலும் அத்வைதத்திலேயே அந்த பக்தி கொண்டு சேக்கிறதை அங்கங்கே பாடியிருக்கார்னு நெறைய கொடேஷன் கொடுத்து எழுதியிருக்கார்.”
“ஸி ராமானுஜாச்சாரி பொஸ்தகத்துலதானே?”
“ஆமாம்”
அத்வைதத்திலே, நிர்குண ப்ரஹ்மம்னு சொல்றதுக்கும் ஸகுண ப்ரஹ்மம்னு சொல்றதுக்கும் நடுப்பற (நடுவில்) நாதப்ரஹ்மத்தை ஐயர்வாள் உபாஸிச்சிண்டிருந்தார். அப்ப முக்யமா அந்த நாத வித்தைக்கு மூலமா சிவனைத்தான் வெச்சிண்டிருந்தார். ஸங்கீத சாஸ்திரத்திலேயே அப்படித்தானே? அந்த மாதிரி சிவனை வெச்சுக்கறப்பவும் அவர் முக்யமா ‘சங்கர’ நாமத்திலேயே பாவிச்சிருக்கார். ‘நாததனுமநிசம் சங்கரம்; நாதோபாசனசே சங்கர—ன்னுட்டு அப்பறந்தான் ‘நாரயண’ன்னும் சேர்த்திருக்கார்!
“இந்த சமாசாரமெல்லாம் இருக்கட்டும். காஞ்சீபுரத்துல காமாக்ஷியைப் பார்த்துப் பாடறச்சே எதுக்காக ‘ விநாயகரை ரக்ஷிக்கிற மாதிரி என்னையும்’ னு சொல்லி ஆரம்பிக்கணும்? தியாகையர்வாள் லைஃபிலே இதைப்பத்தி ஏதாவது கதை, கிதை கேட்டிருக்கையா?” என்றார்.
‘பெரியவாளிடம் ஏதோ அபூர்வமான கதை இருக்கிறது, அப்புறம் சொல்லப்போகிறார். அதற்கே இந்த பூர்வாங்க நாடகம் ‘ என்று உள்ளூக்குள் சப்புக் கொட்டிக்கொண்டு, “ ஒண்ணும் கேட்டதில்லை. உபநிஷத் ப்ரஹ்மேந்திராள் ஸ்ரீமுகம் அனுப்பியதன் பேரிலே ஐயர்வாள் காஞ்சீபுரம் வந்தார்; அப்ப வரதராஜா, காமாக்ஷி அம்பாள் ரெண்டு பேர் மேலேயும் பாடினார்—ங்கறத்துகு மேலே ஒண்ணும் தெரிஞ்சுக்கலை.”
அந்த ஸ்வாமிகள் ஐயர்வாளுக்கு அனுப்பின ஸ்ரீமுகம் மதுரை சௌராஷ்ட்ரா ஸபாவிலே இருக்குன்னு தெரியுமோ?”
“பெரியவா சொன்னவிட்டு நெனைவு வரது.”
“ஐயர்வாள் வந்தப்போ கருடோத்ஸவம். அதை அவர் வரதராஜ க்ருதியிலேயே சொல்லியிருக்கார் தெரியுமோ?
“இப்பத்தான் தெரிஞ்சுக்கறேன்.
”
“ எனக்கும் இப்பதான் திருப்தி. நான் கேக்கிறதெல்லாம் ஒனக்கும் தெரியும், தெரியும்னா எனக்கு ஸ்வாரஸ்யப் படலை”----பந்தயத்தில் கெலித்த குழந்தை போல, ஒரு தேன் வெள்ளச் சிரிப்பு! இந்தப் ப்ருதிவியில் அப்படியொரு மனப்பாங்கு கண்டதுண்டோ?.
ஏதோ தைர்யம் கொடுத்ததில் , “ பெரியவாளுக்குத் தெரியறதுல அணுமாத்ரங்கூட யாருக்கும் தெரிய முடியாது. ஏன் பிள்ளாய்யாரை சம்பந்தப்படுத்தி ஐயர்வாள் காமாக்ஷியைப் பாடினார்—ங்கிறத்துக்கும், பெரியவாளுக்கு மட்டுமே தெரிஞ்சதா ஏதோ கதை இருக்கணும். பெரியவா சொல்லணும்.” என்று கைகுவித்து வேண்டினேன்.
“ பெரியவா சொல்றது, சொல்லாதது இருக்கட்டும். நீதான் எழுத்தாளன் ஆச்சே! ‘ கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு’ ன்னு எழுதறேளே, அப்படி ஏதாவது பண்ணீ ஒரு கதை ஜோடிச்சுப்பாரேன்!” என்றார்.
கற்பனைக் குதிரையைத் தட்டி விடுகிறதாமே! கர்னாடகத் துறவிக் கிழவர் எப்படி நவகாலப் பத்திரிகை வாசகங்களெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்!
ஸந்நியாஸ பட்டத்திலேயே ‘ஸரஸ்வதி’யைக் கொண்ட அந்த ஸர்வக்ஞரின் திவ்ய ஸன்னிதானத்தில் அவரே ஆணையிட்டதன் மேல் சிறிது சிந்தித்ததில் உண்மைக் கதை என்று சொல்லும் சாத்யக்கூறு உள்ள ஒரு ஸ்ருஷ்டி உருவாயிற்று.
என் ஸ்வபாவத்தை மீறி அன்று பல பேர் எதிரில் நான் அதைக்கூறியது அவர் செய்த ஆச்சரியம்தான். அந்தப் பல பேர் என் கண்ணுக்குத் தெரியாமல் அவரொருவரே தெரிந்ததால்தான் தைரியமாகச்சொன்னேன் என்றும் வைத்துக் கொள்ளலாம்.
“ஐயர்வாள் ஸ்ரீரங்கத்துக்குப் போய் ‘ஸ்ரீரங்கப் பஞ்சரத்னம்’ னே சொல்ற அஞ்சு க்ருதி பண்ணீயிருக்கார். திருச்சி கிட்டவே லால்குடிக்கும் போய் அங்கேயிருக்கிற அம்பாள் மேலேயும் ‘லால்குடி பஞ்சரத்னம்’னு அஞ்சு….”
ஸ்ரீசரணர் இடைமறித்து,” அந்த அம்பாள் மட்டுமில்லே; அங்கே இருக்கிற ஸ்வாமி, ஸப்தரிஷீஸ்வரர்னு பேரு. ஸப்தரிஷிகளும் தபஸ் பண்ணீன இடமானதினாலே லால்குடிக்குப் பேரே தபஸ்தீர்த்தபுரம்தான்---அந்த ஸ்வாமி பேர்லே ரெண்டும், அம்பாள் பேர்ல மூன்றுமா பஞ்சரத்னம் பண்ணீயிருக்கார். ஸரி, மேலே சொல்லு! ‘ஐயர்வாள் ஸ்ரீரங்கத்துக்கும் போயிருக்கார், லால்குடிக்கும் போயிருக்கார்’னு காஞ்சிபுரம் ஸமாசாரத்துக்கு எங்கேயோ தள்ளீ கதையை ஆரம்பிச்சிருக்கையே, மேலே சொல்லு” என்று வெகு ஆர்வமுள்ளவர் போல் ஊக்கினார்.
நானும் ‘குதிரை’யை, ஓட்டினேன். ஸ்ரீரங்கத்துக்கும் அவ்வளவு பிரசித்தி இல்லாத லால்குடிக்கும் போனவர் ஜம்புகேஸ்வரத்துக்கு( திருவானைக்காவுக்கு)ப் போகாமலிருந்திருக்க மாட்டார். அங்கே ஆச்சார்யாள் அம்பாளுக்குத் தாடங்கப் பிரதிஷ்டை பண்ணீ, அப்படியும் அவ முழுக்க சமனம் ஆயிருப்பாளோ மாட்டாளோன்னு நெனச்சு ( ஆசார்யாள் விஷயமானதால் ஏதும் அபசாரமாகப் பெரியவாள் நினைத்து விடக்கூடாதே என்று பயந்து பயந்து, தயங்கித் தயங்கி நான் சொல்ல, அவரோ ப்ரஸன்ன முகமாகவே கேட்டுக்கொண்டதால் தொடர்ந்தேன்). அவளோட த்ருஷ்டி செல்லப்பிள்ளையான பிள்ளையார் மேலே பட்டுட்டா தன்னால குளிர்ந்துடும்னு அவளுக்கு நேர் எதிரே பிள்ளையாரைப் பிரதிஷ்டை பண்ணின விஷயம் கேட்டிருப்பார். ஆனாலும் அவ்வளவா லோகத்துக்குத் தெரியாத லால்குடி அம்பாள் மேலே பாடினவர், அகிலாண்டெஸ்வரி மேலே பாடினதாத்தெரியல்லை. இருந்தாலும் அந்த விஷயம் மட்டும் அவர் மனஸுல நன்னாப் பதிஞ்சிருக்கலாம். அப்புறம் அவர் காஞ்சிபுரம் வந்து இங்கேயும் ஆசார்யாள் அம்பாளை சமனப்படுத்த அவளுக்கு நேரே ஸ்ரீசக்ர ப்ரதிஷ்டை பண்ணீனார்னு கேட்டவொடனே ஜம்புகேஸ்வரர் ஞாபகம் வந்து ‘வினயகுனி’--ன்னு ஆரம்பிச்சிருக்கலாம்.”
எல்.கே.ஜி குழந்தை ஒப்பிக்கும் பாட்டில் மகிழும் தாயாக அந்த ஸர்வஞ பிரபு ஸந்தோஷப்பட்டார்.” ஒன் குதிரை ஒரே தாவா ஜம்புகேஸ்வரத்துக்கும் காஞ்சிபுரத்துக்கும் தாவி கதை ஜோடனை பண்ணிடுத்து. கதை, ஜோடனைன்னு ஏன் சொல்லணும்? அப்படியே நடந்திருக்கலாம்.” என்றார்.
இன்ப வாரிதி பாய்ந்தது.
இதைப் பத்தி பெரியவா புதுசா ஏதோ சொல்றத்துக்கு இருக்கு. சொல்லணும்” என்று மீண்டும் விஞ்ஞாபித்தேன்.
“நீ ப்ரமாதமா சொல்லியிருக்கே, அந்த மாதிரியெல்லாம் எனக்கு வருமா? எனக்குத் தெரிஞ்சமட்டும் சொல்றேன். எனக்கு என்ன தோணித்துன்னா…..”
We will read , " பெரியவா சொன்ன கதை " in my next post.