Post by Sumi on Sept 15, 2012 23:34:37 GMT 5.5
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
வைதிக மதம்
பொறுப்பாளி யார் ? பரிகாரம் எனன ?
Part 5 of 9
தானும் கெட்டு, சந்திர புஷ்கரணியையும் கெடுத்தானாம் என்கிற கதையாகப் பிராமணன் தானும் தர்மத்தை விட்டு, மற்றவர்களுக்கும் அவரவர் தர்மங்களைவிடுகிற மாதிரி செய்துவிட்டான். தன் தர்மத்தை விட்டபின் இவனுக்கு உயர்வு எதுவுமே இல்லை. தன் தர்மத்தைச் செய்தபோதும்கூட, இவனாக உயர்வு பாராட்ட நியாயமில்லை. ஒவ்வொருவனும் ஒன்றைச் செய்கிறார்கள். நான் இதைச் செய்கிறேன் என்றுதான் அடக்கமாக இருக்கவேண்டும். ஆனாலும் தன்னலமில்லாமல், கடும் விரத நியதிகளோடு இவன் தூய்மையாக வாழ்ந்ததைப் பார்த்து மற்றவர்களே இவனுக்கு ஒரு ஏற்றம் கொடுத்து கௌரவித்து வந்தார்கள். இப்போது அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக எல்லாரும் தன்னைத் தூற்றும்படி, கரித்துக் கொட்டும்படி இவனே ஆக்கிக் கொண்டு விட்டான்.
ஹிந்து சமூகம் பாழானதற்குப் பிராமணன்தான் காரணம் என்பது என் தீர்மானமான அபிப்பிராயம். சிலபேர் இதற்கு சமாதானம் சொல்கிறார்கள். வேதாத்யயனம், யக்ஞாதி கர்ம்க்களுக்கே பிராமணனுக்கு ஸதாஸர்வ காலமும் தேவையாயிருந்து. ஆயுசுக் காலம் முழுவதும் அதற்கே செய்விடுவதாக இருந்தது. இப்படி இவன் வேதம் ஒதுவது, வேள்வி செய்வது, சாஸ்திரங்களை ரக்ஷித்துத் தருவது என்றே பொழுது முழுவதையும் செலவழித்ததால், இவனுடைய ஜீவனோபாயத்துக்கு என்ன செய்வது. இவன் பொருள்தேடிப் போக ஆரம்பித்தால், ஆயுட்கால பிறவிப் பணி ( lifetime mission) நடக்காது. இந்தப் பிறவிப் பணிக்கோ part time போதாது. அப்படியே இவன் வயிற்றுக்காக வேறு வேலை என்று வைத்துக்கொண்டால் ஆசாரங்களுமம் கெட்டுப்போகும். அதன்பின் பத்தியமில்லாத மருந்துபோல் இவனுடைய அத்யயனவீரியம் குறைந்துபோய், அதனால் லோகத்துக் கிடைக்கிற க்ஷேமம் நஷ்டமாகிவிடும். இதனால்தான் பிராமண்ன் மந்த்ரம் யாசகம் செய்யலாம் என்று சாஸ்திரம் அனுமதித்தது. யாசகம் என்றில்லாமல், ராஜாக்களே இவனுடைய அத்யயனம், யக்ஞம் சாஸ்திர ரக்ஷணம் இவற்றில் ஏற்படுகிற சமூக சிரேயஸை முன்னிட்டு இவனுடைய அத்யாவசியத் தேவைகளுக்கு குறை வைக்கக்கூடாது என்று மானியங்கள் விட்டார்கள். பூதானம், கிருஹதானம், கோதானம், ஸ்வர்ணதானம் எல்லாம் செய்தார்கள். ஆனாலும் அவர்கள்தான் கொடுக்கிறார்களே என்று இவர்கள் வரம்பில்லாமல் வாங்கிக்கொள்ளக்கூடாது. அப்படிச் செய்தால் அது ரொம்பவும் இவர்களை இந்திரிய சுகத்தில் இழுத்துவிட்டு ஆத்மா அபிவிருத்தியைக் கொடுக்கும். அதோடு ரொம்பவும் கைநீட்டி வாங்கிவிட்டால் இவர்கல் கொடுக்கிறவனுக்கு பவ்யப்பட்டு சாஸ்திரங்களை இவர்கள் இஷ்டப்படி வளைத்து அர்த்தம் பண்ண வேண்டியிருக்கும். நடுநிலைமை தப்பிப்போகும்படி நேரிடும் - இந்தக் காரணங்களை உத்தேசித்து தர்ம சாஸ்திரங்கள் பிராமணன் உயிர் வாழ்வதற்கு அதம பட்சமாக எது தேவையோ அதற்கு மேல் ஒரு திருணமாத்திரம்கூட வைத்துக் கொள்ளக்கூடாது என்று விதித்தன. இந்த முறைப்படியே இவர்களும் ராஜாக்களின் போஷனையில் தங்கள் தர்மத்தைச் செய்துகொண்டு வந்தார்கள்.
(to be continued....)
வைதிக மதம்
பொறுப்பாளி யார் ? பரிகாரம் எனன ?
Part 5 of 9
தானும் கெட்டு, சந்திர புஷ்கரணியையும் கெடுத்தானாம் என்கிற கதையாகப் பிராமணன் தானும் தர்மத்தை விட்டு, மற்றவர்களுக்கும் அவரவர் தர்மங்களைவிடுகிற மாதிரி செய்துவிட்டான். தன் தர்மத்தை விட்டபின் இவனுக்கு உயர்வு எதுவுமே இல்லை. தன் தர்மத்தைச் செய்தபோதும்கூட, இவனாக உயர்வு பாராட்ட நியாயமில்லை. ஒவ்வொருவனும் ஒன்றைச் செய்கிறார்கள். நான் இதைச் செய்கிறேன் என்றுதான் அடக்கமாக இருக்கவேண்டும். ஆனாலும் தன்னலமில்லாமல், கடும் விரத நியதிகளோடு இவன் தூய்மையாக வாழ்ந்ததைப் பார்த்து மற்றவர்களே இவனுக்கு ஒரு ஏற்றம் கொடுத்து கௌரவித்து வந்தார்கள். இப்போது அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக எல்லாரும் தன்னைத் தூற்றும்படி, கரித்துக் கொட்டும்படி இவனே ஆக்கிக் கொண்டு விட்டான்.
ஹிந்து சமூகம் பாழானதற்குப் பிராமணன்தான் காரணம் என்பது என் தீர்மானமான அபிப்பிராயம். சிலபேர் இதற்கு சமாதானம் சொல்கிறார்கள். வேதாத்யயனம், யக்ஞாதி கர்ம்க்களுக்கே பிராமணனுக்கு ஸதாஸர்வ காலமும் தேவையாயிருந்து. ஆயுசுக் காலம் முழுவதும் அதற்கே செய்விடுவதாக இருந்தது. இப்படி இவன் வேதம் ஒதுவது, வேள்வி செய்வது, சாஸ்திரங்களை ரக்ஷித்துத் தருவது என்றே பொழுது முழுவதையும் செலவழித்ததால், இவனுடைய ஜீவனோபாயத்துக்கு என்ன செய்வது. இவன் பொருள்தேடிப் போக ஆரம்பித்தால், ஆயுட்கால பிறவிப் பணி ( lifetime mission) நடக்காது. இந்தப் பிறவிப் பணிக்கோ part time போதாது. அப்படியே இவன் வயிற்றுக்காக வேறு வேலை என்று வைத்துக்கொண்டால் ஆசாரங்களுமம் கெட்டுப்போகும். அதன்பின் பத்தியமில்லாத மருந்துபோல் இவனுடைய அத்யயனவீரியம் குறைந்துபோய், அதனால் லோகத்துக் கிடைக்கிற க்ஷேமம் நஷ்டமாகிவிடும். இதனால்தான் பிராமண்ன் மந்த்ரம் யாசகம் செய்யலாம் என்று சாஸ்திரம் அனுமதித்தது. யாசகம் என்றில்லாமல், ராஜாக்களே இவனுடைய அத்யயனம், யக்ஞம் சாஸ்திர ரக்ஷணம் இவற்றில் ஏற்படுகிற சமூக சிரேயஸை முன்னிட்டு இவனுடைய அத்யாவசியத் தேவைகளுக்கு குறை வைக்கக்கூடாது என்று மானியங்கள் விட்டார்கள். பூதானம், கிருஹதானம், கோதானம், ஸ்வர்ணதானம் எல்லாம் செய்தார்கள். ஆனாலும் அவர்கள்தான் கொடுக்கிறார்களே என்று இவர்கள் வரம்பில்லாமல் வாங்கிக்கொள்ளக்கூடாது. அப்படிச் செய்தால் அது ரொம்பவும் இவர்களை இந்திரிய சுகத்தில் இழுத்துவிட்டு ஆத்மா அபிவிருத்தியைக் கொடுக்கும். அதோடு ரொம்பவும் கைநீட்டி வாங்கிவிட்டால் இவர்கல் கொடுக்கிறவனுக்கு பவ்யப்பட்டு சாஸ்திரங்களை இவர்கள் இஷ்டப்படி வளைத்து அர்த்தம் பண்ண வேண்டியிருக்கும். நடுநிலைமை தப்பிப்போகும்படி நேரிடும் - இந்தக் காரணங்களை உத்தேசித்து தர்ம சாஸ்திரங்கள் பிராமணன் உயிர் வாழ்வதற்கு அதம பட்சமாக எது தேவையோ அதற்கு மேல் ஒரு திருணமாத்திரம்கூட வைத்துக் கொள்ளக்கூடாது என்று விதித்தன. இந்த முறைப்படியே இவர்களும் ராஜாக்களின் போஷனையில் தங்கள் தர்மத்தைச் செய்துகொண்டு வந்தார்கள்.
(to be continued....)