Post by Sumi on Sept 7, 2012 8:25:04 GMT 5.5
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
வைதிக மதம்
இங்கு மட்டும் இருப்பானேன்
Part 5 or 6
பழைய வர்ண தர்மம் நடைமுறையில் இருந்தபோது, இப்படிப் புரட்சியில்லாமல், அதாவது ஜனங்களுக்கு அதிருப்தியில்லாமல், நாகரீகம் உயர்ந்து உயர்ந்து வளர்ந்து வந்தது ஒரு பக்கம் இருக்கட்டும். பழைய தொழில் பங்கீட்டைத் தகர்த்துக் கொண்டு (break) புதிதாக மற்ற தேசங்களின் வழியில் நாமும் முன்னேற்றம் சமத்துவம் என்று எதையோ நினைத்துக் கொண்டு, இப்போது புது முறையில் போக ஆரம்பித்தபின் எப்படியாகி இருக்கிறோம் என்பதையும் பார்த்தால், நம் தேசம் இப்போது எப்படி இருக்கிறது. பிரத்யக்ஷமாகவே பார்க்கிறோம். ஒழுங்கீனம், பொய், புரட்டு, லஞ்சம், விபச்சாரம் எல்லாம் தலை துளிர்ந்து விட்டன. தேசத்தில் எங்கு பார்த்தாலும் கிளர்ச்சி, ஸ்டிரைக், டெமான்ஸ்ட்ரேஷன் ஹர்த்தால், போலீஸ் தடியடி, கர்ஃப்யூ (ஊரடங்கு) இவைகளைத்தான் பார்க்கிறோம். மற்ற தேசங்களில் இருக்கிற அளவுக்குக்கூட வெளிநாட்டு வியாபாரம் முதலியவற்றில் நமக்கு நாணயம் இல்லாமல் அவை நம்மைப் பரிகசிக்கிற ஸ்திதிக்கு வந்திருக்கிறோம். இந்தியாவா ஆகா என்று சர்வ தேசத்திலும் கொண்டாடிய காலம் போய்விட்டது. பாகிஸ்தான் மாதிரி ஒரு சின்ன தேசம் நம்மை சண்டைக்கு இழுக்கிறது என்றால் என்ன அர்த்தம். தேசத்தின் ஆத்மபலம் அத்தனை குறைந்து விட்டது என்றுதான் அர்த்தம்.
எதனால் இப்படிக் குறைந்தது. எதை விட்டதால் நமக்கு இந்த பலஹீனம் வந்தது. எது நமக்கு இத்தனை ஆயிரம் வருஷங்கள் புஷ்டியைத் தந்து நம் நாகரீகத்தைத் தழைத்து வளர வைத்தது?. எதை விட்டபின் நாம் அந்த நாகரீகத்தின் வாரிசுகள் என்று சொல்லிக் கொள்வதற்கே வெட்கப்படும் படியான வந்திருக்கிறது. இதை ஆலோசித்துப் பார்த்தால் மற்ற தேசங்களில் இல்லாத வர்ண தர்மம் இங்கே மட்டும் இருந்தவரையில் நம் நாகரீகம் மாத்திரம் பாறாங்கல் மாதிரியான இத்தனை நூற்றாண்டுகள் உலகமே போற்றுகிற விதத்தில் வளர்ந்து வந்திருக்கிறதென்றும் இந்த தர்மத்துக்கு நலிவு உண்டாக ஆரம்பித்ததிலிருந்து நாமும் தினம் தினம் கீழே போய்க் கொண்டிருக்கிறோம் என்றும் தெரிகிறது.
வர்ண தர்மம் இங்கு மட்டும் இருப்பானேன்?என்றால் இந்த தேசத்தில் மட்டுமாவது ஆத்ம சிந்தனைக்கும், தெய்வ அநுபவத்துக்கும், கலைகளுக்கும், உத்தமமான பண்புகளுக்கும் அநுகூலமான ஒரு நாகரீகம் இருக்க வேண்டும் என்று நமக்கு ஆசையிருந்தால், இவற்றுக்கான வர்ண தர்மமும் இருக்க வேண்டும். இங்கு மட்டும் இருப்பானேன்?. என்றால் இங்கு மட்டுமாவது இருந்தால்தான் உலகத்துக்கே ஒரு நல்ல உதாரணம் கிடைக்கும் என்பதற்காகவே இருக்க வேண்டும்.
(to be continued...)
வைதிக மதம்
இங்கு மட்டும் இருப்பானேன்
Part 5 or 6
பழைய வர்ண தர்மம் நடைமுறையில் இருந்தபோது, இப்படிப் புரட்சியில்லாமல், அதாவது ஜனங்களுக்கு அதிருப்தியில்லாமல், நாகரீகம் உயர்ந்து உயர்ந்து வளர்ந்து வந்தது ஒரு பக்கம் இருக்கட்டும். பழைய தொழில் பங்கீட்டைத் தகர்த்துக் கொண்டு (break) புதிதாக மற்ற தேசங்களின் வழியில் நாமும் முன்னேற்றம் சமத்துவம் என்று எதையோ நினைத்துக் கொண்டு, இப்போது புது முறையில் போக ஆரம்பித்தபின் எப்படியாகி இருக்கிறோம் என்பதையும் பார்த்தால், நம் தேசம் இப்போது எப்படி இருக்கிறது. பிரத்யக்ஷமாகவே பார்க்கிறோம். ஒழுங்கீனம், பொய், புரட்டு, லஞ்சம், விபச்சாரம் எல்லாம் தலை துளிர்ந்து விட்டன. தேசத்தில் எங்கு பார்த்தாலும் கிளர்ச்சி, ஸ்டிரைக், டெமான்ஸ்ட்ரேஷன் ஹர்த்தால், போலீஸ் தடியடி, கர்ஃப்யூ (ஊரடங்கு) இவைகளைத்தான் பார்க்கிறோம். மற்ற தேசங்களில் இருக்கிற அளவுக்குக்கூட வெளிநாட்டு வியாபாரம் முதலியவற்றில் நமக்கு நாணயம் இல்லாமல் அவை நம்மைப் பரிகசிக்கிற ஸ்திதிக்கு வந்திருக்கிறோம். இந்தியாவா ஆகா என்று சர்வ தேசத்திலும் கொண்டாடிய காலம் போய்விட்டது. பாகிஸ்தான் மாதிரி ஒரு சின்ன தேசம் நம்மை சண்டைக்கு இழுக்கிறது என்றால் என்ன அர்த்தம். தேசத்தின் ஆத்மபலம் அத்தனை குறைந்து விட்டது என்றுதான் அர்த்தம்.
எதனால் இப்படிக் குறைந்தது. எதை விட்டதால் நமக்கு இந்த பலஹீனம் வந்தது. எது நமக்கு இத்தனை ஆயிரம் வருஷங்கள் புஷ்டியைத் தந்து நம் நாகரீகத்தைத் தழைத்து வளர வைத்தது?. எதை விட்டபின் நாம் அந்த நாகரீகத்தின் வாரிசுகள் என்று சொல்லிக் கொள்வதற்கே வெட்கப்படும் படியான வந்திருக்கிறது. இதை ஆலோசித்துப் பார்த்தால் மற்ற தேசங்களில் இல்லாத வர்ண தர்மம் இங்கே மட்டும் இருந்தவரையில் நம் நாகரீகம் மாத்திரம் பாறாங்கல் மாதிரியான இத்தனை நூற்றாண்டுகள் உலகமே போற்றுகிற விதத்தில் வளர்ந்து வந்திருக்கிறதென்றும் இந்த தர்மத்துக்கு நலிவு உண்டாக ஆரம்பித்ததிலிருந்து நாமும் தினம் தினம் கீழே போய்க் கொண்டிருக்கிறோம் என்றும் தெரிகிறது.
வர்ண தர்மம் இங்கு மட்டும் இருப்பானேன்?என்றால் இந்த தேசத்தில் மட்டுமாவது ஆத்ம சிந்தனைக்கும், தெய்வ அநுபவத்துக்கும், கலைகளுக்கும், உத்தமமான பண்புகளுக்கும் அநுகூலமான ஒரு நாகரீகம் இருக்க வேண்டும் என்று நமக்கு ஆசையிருந்தால், இவற்றுக்கான வர்ண தர்மமும் இருக்க வேண்டும். இங்கு மட்டும் இருப்பானேன்?. என்றால் இங்கு மட்டுமாவது இருந்தால்தான் உலகத்துக்கே ஒரு நல்ல உதாரணம் கிடைக்கும் என்பதற்காகவே இருக்க வேண்டும்.
(to be continued...)