Post by Sumi on Sept 3, 2012 8:50:54 GMT 5.5
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
வைதிக மதம்
இங்கு மட்டும் இருப்பானேன்
Part 1 or 6
உலகத்தில் மற்ற தேசங்கள் இல்லையா?. அங்கேயும் மதங்கள் இல்லையா?. அந்த மதங்கள் அந்த தேச ஜனங்களுக்கு இப்படிப் பாரம்பரியமாகத் தொழில்களை வருத்துக் கொடுத்து ஜாதி, ஜாதி என்று வைக்கவில்லையே!. நமக்கு மட்டும் எதற்கு?. என்ற கேள்வி பிறக்கிறது.
ஜாதிகள் என்று பிரித்து வைக்காத தேசங்களிலும், சாஸ்திரங்களையும் அறிவு நூல்களையும் வளர்க்கிறவர்கள், ராஜ்யபாரம் நமத்தி யுத்தம் செய்கிறவர்கள், வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளிகள் எல்லோரும் இருக்கத்தான் செய்தார்கள்!. இன்னைக்கும் இருக்கிறார்கள்.
ஆனாலும் 'இது நம் தேசம்'என்கிற சுய அபிமானம் இல்லாமல், நிஷ்பக்ஷிபாதமாகவே பார்த்தாலும், நம் தேசத்தின் மகோன்னதமான நாகரீகம் மாதிரி அங்கெல்லாம் எங்குமே கானோமே. மற்ற தேசங்களில் நடுநடுவில் ஒரு பெரிய நாகரீகம் தோன்றினாலும்கூட, அது இங்கே இருக்கிற மாதிரி இத்தனை ஆயிரம் வருஷங்கள் நீடித்து நிலைத்து நிற்கக் கானோமே. நாமே நம் பெருமையை சொல்லிக் கொள்வது என்றில்லை. அலெக்ஸாந்தர் காலத்திலிருந்து நாம் இத்தனை அகல பாதாளத்திற்கு போயிருக்கிற இன்றைக்கு வரையில்கூட, வெளிதேசத்தவர்கள் சகலருமே, ஹிந்து நாகரிமா (Hindu Civilisation) ஆ! அப்பாடா, அது எத்தனை மகோன்னதமாக இருக்கிறது! என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்களே! இதற்கு விசை என்ன?
அங்கெல்லாமும் மகாபுருஷர்கள், ஞானிகள், பக்தர்கள், பரோபகாரியங்கள், தியாகிகள், பிறந்துதான் இருக்கிறார்கள். ஆனாலும் கணக்குப் போட்டுப் பார்த்தால் நம் ஒரு தேசத்தில், அவிச்சின்னமாக (அறுபடாத தொடரிழையாக) எத்தனையோ ஆயிரம் வருஷங்களாக தலைமுறைக்குத் தலைமுறை கூட்டம் கூட்டமாக உத்தம புருஷர்கள், சாதுக்கள், ஞானிகள், தத்துவ சிந்தாந்திகள், பக்தர்கள் பரோபகாரிகள் தோன்றின மாதிரி வேறெங்குமே காணோம். அத்தனை வெளி தேசங்களிலும் இருக்கிற மகான்களைக் கூட்டினாலும் அதைவிட இங்கே மகாபுருஷர்கள் தோன்றியிருக்கிறார்கள். இதை land of saints, land of sages என்றெல்லாம் நாம் சொல்லவில்லை. சொல்ல வேண்டியதும் இல்லை. மற்ற தேசத்துக்காரர்களே தலைக்குமேல் தூக்கிவைத்துக் கொண்டு கூத்தாடுகிறார்கள். இப்படி ஒரு வேதாந்தமா? இப்படி ஒரு தத்துவங்களா?என்று நாம் கிரந்தங்களைக் கொண்டாடி நமஸ்காரம் செய்கிறார்கள்.
(to be continued...)
வைதிக மதம்
இங்கு மட்டும் இருப்பானேன்
Part 1 or 6
உலகத்தில் மற்ற தேசங்கள் இல்லையா?. அங்கேயும் மதங்கள் இல்லையா?. அந்த மதங்கள் அந்த தேச ஜனங்களுக்கு இப்படிப் பாரம்பரியமாகத் தொழில்களை வருத்துக் கொடுத்து ஜாதி, ஜாதி என்று வைக்கவில்லையே!. நமக்கு மட்டும் எதற்கு?. என்ற கேள்வி பிறக்கிறது.
ஜாதிகள் என்று பிரித்து வைக்காத தேசங்களிலும், சாஸ்திரங்களையும் அறிவு நூல்களையும் வளர்க்கிறவர்கள், ராஜ்யபாரம் நமத்தி யுத்தம் செய்கிறவர்கள், வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளிகள் எல்லோரும் இருக்கத்தான் செய்தார்கள்!. இன்னைக்கும் இருக்கிறார்கள்.
ஆனாலும் 'இது நம் தேசம்'என்கிற சுய அபிமானம் இல்லாமல், நிஷ்பக்ஷிபாதமாகவே பார்த்தாலும், நம் தேசத்தின் மகோன்னதமான நாகரீகம் மாதிரி அங்கெல்லாம் எங்குமே கானோமே. மற்ற தேசங்களில் நடுநடுவில் ஒரு பெரிய நாகரீகம் தோன்றினாலும்கூட, அது இங்கே இருக்கிற மாதிரி இத்தனை ஆயிரம் வருஷங்கள் நீடித்து நிலைத்து நிற்கக் கானோமே. நாமே நம் பெருமையை சொல்லிக் கொள்வது என்றில்லை. அலெக்ஸாந்தர் காலத்திலிருந்து நாம் இத்தனை அகல பாதாளத்திற்கு போயிருக்கிற இன்றைக்கு வரையில்கூட, வெளிதேசத்தவர்கள் சகலருமே, ஹிந்து நாகரிமா (Hindu Civilisation) ஆ! அப்பாடா, அது எத்தனை மகோன்னதமாக இருக்கிறது! என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்களே! இதற்கு விசை என்ன?
அங்கெல்லாமும் மகாபுருஷர்கள், ஞானிகள், பக்தர்கள், பரோபகாரியங்கள், தியாகிகள், பிறந்துதான் இருக்கிறார்கள். ஆனாலும் கணக்குப் போட்டுப் பார்த்தால் நம் ஒரு தேசத்தில், அவிச்சின்னமாக (அறுபடாத தொடரிழையாக) எத்தனையோ ஆயிரம் வருஷங்களாக தலைமுறைக்குத் தலைமுறை கூட்டம் கூட்டமாக உத்தம புருஷர்கள், சாதுக்கள், ஞானிகள், தத்துவ சிந்தாந்திகள், பக்தர்கள் பரோபகாரிகள் தோன்றின மாதிரி வேறெங்குமே காணோம். அத்தனை வெளி தேசங்களிலும் இருக்கிற மகான்களைக் கூட்டினாலும் அதைவிட இங்கே மகாபுருஷர்கள் தோன்றியிருக்கிறார்கள். இதை land of saints, land of sages என்றெல்லாம் நாம் சொல்லவில்லை. சொல்ல வேண்டியதும் இல்லை. மற்ற தேசத்துக்காரர்களே தலைக்குமேல் தூக்கிவைத்துக் கொண்டு கூத்தாடுகிறார்கள். இப்படி ஒரு வேதாந்தமா? இப்படி ஒரு தத்துவங்களா?என்று நாம் கிரந்தங்களைக் கொண்டாடி நமஸ்காரம் செய்கிறார்கள்.
(to be continued...)