Post by radha on Aug 28, 2012 2:18:26 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
ஆன்மிக சிந்தனைகள் »காஞ்சி பெரியவர்
வாழ்வை எளிதாக்கி கொள்வோம்
* அன்பை வெறும் பேச்சாக இல்லாமல், செயலில் காட்டினால் இறைவனின் அருள் கிடைக்கும்.
*வாழ்வை எளிதாக்கிக் கொண்டால், அடிப்படை பொருள்களைக் கூட தேடி அலைய வேண்டிய அவசியமில்லை.
* நமக்கு உணவு தருபவனுக்கு நல்ல உணவும், நமக்கு உடை தருபவனுக்கு நல்ல உடையும் கொடுக்கத் தவறி விட்டோம். நமது ஊர் கோயில் சுவாமியின் ஆடை, சுத்தமாக அழுக்கில்லாமல் இருக்கிறதா என்பதில் மனதைச் செலுத்தும் போது நம் மனதில் அழுக்கு போய்விடுகிறது.
* இறைவனை நினைத்து செய்யும் எந்த செயலுக்கும் பயன் கிடைக்கும், அறியாமல் செய்தால்கூட பலன் உண்டு.
* பொருளை பெருக்கிக் கொள்வதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விடாது. தரமான வாழ்க்கை மனநிறைவில் தான் கிடைக்கிறது.
* மனிதன் கடந்த காலத்தில் நடந்ததற்கு பரிகாரம் தேடுவதைவிடப், புதிய சுமை சேராமலும், பாவம் செய்யாமலும் வாழ்வதற்கு ஈஸ்வரனைத் துணை கொள்வதே முக்கியமாகும்.
- காஞ்சிப்பெரியவர்
ஆன்மிக சிந்தனைகள் »காஞ்சி பெரியவர்
சேரும் இடம் ஒன்றுதான்!
* ஆழ்வார்கள் விஷ்ணுவை பரம்பொருளாக பாடி வைத்தார்கள். நாயன்மார்கள் சிவபரமாகப் பாடினார்கள்.
* வேதம் சகல தெய்வங்களையும் ஒரே மாதிரி ஸ்தோத்திரம் செய்திருக்கிறது. உபநிஷதத்தில் தெய்வம் பற்றி அதிகம் பேச்சில்லாமல், எல்லாம் ஆத்ம தத்துவமாக சொல்லியிருக்கிறது.
* திருவள்ளுவரை எடுத்துக் கொண்டால் அவர் தெய்வம், தத்துவம் இவைகளைப் பற்றி சொல்லியிருந்தாலும் அதை விட ரொம்ப அதிகமாக தர்மம், நன்னெறி இவற்றையே சொல்கிறார். "இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொன்றைச் சொன்னால் எதை எடுத்துக் கொள்வது?' என்று கேட்டால், எதை எடுத்துக் கொண்டாலும் தப்பில்லை.
* நாம் எடுத்துக் கொண்டதை நடுவில் விடாமல், அதையே நம்பிக்கையோடு பிடித்துக் கொண்டே இருந்தால், முடிவில் எது பரமார்த்த சத்தியமோ அதை அடைந்து விடுவோம். ஆரம்பத்தில் இவை வேறு வேறு வழிகளாகத் தோன்றினாலும், முடிவில் எல்லாம் கொண்டு சேர்க்கிற இடம் ஒன்று தான்.
- காஞ்சிப்பெரியவர்
Kanchi Maha Periva Thiruvadigal Saranam
ஆன்மிக சிந்தனைகள் »காஞ்சி பெரியவர்
வாழ்வை எளிதாக்கி கொள்வோம்
* அன்பை வெறும் பேச்சாக இல்லாமல், செயலில் காட்டினால் இறைவனின் அருள் கிடைக்கும்.
*வாழ்வை எளிதாக்கிக் கொண்டால், அடிப்படை பொருள்களைக் கூட தேடி அலைய வேண்டிய அவசியமில்லை.
* நமக்கு உணவு தருபவனுக்கு நல்ல உணவும், நமக்கு உடை தருபவனுக்கு நல்ல உடையும் கொடுக்கத் தவறி விட்டோம். நமது ஊர் கோயில் சுவாமியின் ஆடை, சுத்தமாக அழுக்கில்லாமல் இருக்கிறதா என்பதில் மனதைச் செலுத்தும் போது நம் மனதில் அழுக்கு போய்விடுகிறது.
* இறைவனை நினைத்து செய்யும் எந்த செயலுக்கும் பயன் கிடைக்கும், அறியாமல் செய்தால்கூட பலன் உண்டு.
* பொருளை பெருக்கிக் கொள்வதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விடாது. தரமான வாழ்க்கை மனநிறைவில் தான் கிடைக்கிறது.
* மனிதன் கடந்த காலத்தில் நடந்ததற்கு பரிகாரம் தேடுவதைவிடப், புதிய சுமை சேராமலும், பாவம் செய்யாமலும் வாழ்வதற்கு ஈஸ்வரனைத் துணை கொள்வதே முக்கியமாகும்.
- காஞ்சிப்பெரியவர்
ஆன்மிக சிந்தனைகள் »காஞ்சி பெரியவர்
சேரும் இடம் ஒன்றுதான்!
* ஆழ்வார்கள் விஷ்ணுவை பரம்பொருளாக பாடி வைத்தார்கள். நாயன்மார்கள் சிவபரமாகப் பாடினார்கள்.
* வேதம் சகல தெய்வங்களையும் ஒரே மாதிரி ஸ்தோத்திரம் செய்திருக்கிறது. உபநிஷதத்தில் தெய்வம் பற்றி அதிகம் பேச்சில்லாமல், எல்லாம் ஆத்ம தத்துவமாக சொல்லியிருக்கிறது.
* திருவள்ளுவரை எடுத்துக் கொண்டால் அவர் தெய்வம், தத்துவம் இவைகளைப் பற்றி சொல்லியிருந்தாலும் அதை விட ரொம்ப அதிகமாக தர்மம், நன்னெறி இவற்றையே சொல்கிறார். "இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொன்றைச் சொன்னால் எதை எடுத்துக் கொள்வது?' என்று கேட்டால், எதை எடுத்துக் கொண்டாலும் தப்பில்லை.
* நாம் எடுத்துக் கொண்டதை நடுவில் விடாமல், அதையே நம்பிக்கையோடு பிடித்துக் கொண்டே இருந்தால், முடிவில் எது பரமார்த்த சத்தியமோ அதை அடைந்து விடுவோம். ஆரம்பத்தில் இவை வேறு வேறு வழிகளாகத் தோன்றினாலும், முடிவில் எல்லாம் கொண்டு சேர்க்கிற இடம் ஒன்று தான்.
- காஞ்சிப்பெரியவர்
Kanchi Maha Periva Thiruvadigal Saranam