|
Post by radha on Aug 25, 2012 6:38:11 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
காஞ்சி மடமும், இசையும் – கிளாரினெட் வித்வான் திரு.ஏ.கே.சி.நடராஜன்
Source:-BalHanuman.Blog
கிளாரினெட் வித்வான் திரு.ஏ.கே.சி.நடராஜன் கூறுகிறார்…..
பெரிய மடங்கள் அனைத்திலும் வாசித்து இருக்கிறேன். 30 வருடங்கள் பெரியவர் காஞ்சிமடத்தில் இருந்தபோது, வியாச பூஜைக்கு வாசித்திருக்கிறேன். டாலர், ருத்ராட்சம் எல்லாம் பரிசளித்திருக்கிறார் பெரியவர். அவருடைய ஜன்ம நட்சத்திரத்திற்கு காலை 9 மணிமுதல் மாலைவரை பூஜை செய்வார், அவ்வளவு நேரமும் தொடர்ந்து வாசித்திருக்கிறேன். ஒருமுறை ஒருவர், காஞ்சிப் பெரியவரைப் பார்க்க வந்திருந்தார். அவர் 10,000, 20,000 ரூபாய் பணக்கட்டுக்களைத் தட்டில் வைத்து அவரிடம் கொடுத்தார். ஆனால், அவர் அதை என்னிடம் கொடுக்கச் சொல்லிவிட்டார். நான், “எனக்கு வாசிப்பதற்கு மடத்தில் பணம் தருகிறார்கள், எனவே இது வேண்டாம்” என்று அந்தப் பணத்தை வாங்க மறுத்தேன். பெரியவரோ, ‘அது கணக்கு, இது சன்மானம்’ என்று கூறி கொடுத்தார்கள். நான் கணக்கு வைத்திருப்பவரிடம் சென்று எனக்கு பெரியவர் பணம் கொடுத்து விட்டார் என்றேன். ஆனால் அவரோ, திரும்பவும் அங்கும் எனக்குப் பணம் கொடுக்கச் செய்தார்.
– ‘குருவே சரணம்’ (இந்நூலை பின்வரும் முகவரியில் அணுகிப் பெற்றுக் கொள்ளலாம்)
சதுரம் பதிப்பகம்,
#34,சிட்லபாக்கம் 2ஆம் பிரதான சாலை,
தாம்பரம் சானடோரியம், சென்னை-600 047.
Phone: 2223 1879
Kanchi Maha Periva Thiruvadigal Saranam
|
|
|
Post by krsiyer on Aug 25, 2012 14:50:22 GMT 5.5
great ! thanks for sharing jaya jaya sankara, hara hara sankara !
|
|