Post by radha on Aug 24, 2012 4:21:57 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
எளிமையை மேற்கொண்டார்… கருணையை போதித்தார்!
எளியோரை எப்போதும் காத்தருள வேண்டும். அவர்களது மகிழ்ச்சியில், நன்றியில் நீயும் எந்நாளும் வாழ்ந்திருக்க வேண்டும்’ என்று திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரரை வேண்டியவர் பகவான் ரமண மகரிஷி.
‘பிறரை விட உயர்ந்தவன்’ என்றோ, ‘மாபெரும் ஞானி’ என்றோ தன்னை ஒருபோதும் கருதியதே இல்லை ரமணர். உலகின் பல மூலைகளில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் இவரை தரிசிக்க திருவண்ணாமலைக்கு வருவதுண்டு. அப்போது, விலை உயர்ந்த பொருட்களை எவரேனும் காணிக்கையாகக் கொடுத்தால், அன்புடன் மறுத்து விடுவார் ரமணர். அவரது எளிமைக்கும் பற்றற்ற தன்மைக்கும் உதாரணமாக விளங்கிய நிகழ்வுகள் இவை.
பரோடா மகாராணி ஒரு முறை, பட்டு ஜரிகைகளால் ஆன வெல்வெட் சால்வை ஒன்றை ரமண மகரிஷிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் ரமணரோ, ‘வெயில் காலத்தில் வியர்த்தால் முகம் துடைக்கவும், குளிர் காலத்தில் தேவைப்பட்டால் கீழே விரிக்கவும் அரை கஜ அகலமும் முக்கால் கஜ நீளமும் கொண்ட துண்டே போதும். இந்த வெல்வெட் சால்வை வேண்டாம்’ என்று மறுத்து விட்டார்.
இதேபோல், அன்பர் ஒருவர் வெள்ளிக் குமிழ் வைத்த பாதுகைகளை ரமணருக்கு வழங்கினார். ‘கடவுள் கொடுத்த பாதங்கள் இருக்க, இந்த அலங்காரமெல்லாம் எதற்கு?’ என்று கூறி அதை மறுத்து விட்டார்.
செல்வந்தர் ஒருவர் வெள்ளியால் ஆன ஸ்பூன், கப், சாஸர் ஆகியவற்றை ரமணரிடம் சமர்ப்பித்து, ‘இவற்றை நீங்கள் உபயோகிக்க வேண்டும்’ என்று வேண்ட… பகவா னும் மறுக்காமல் ஏற்றுக் கொண்டார். அந்த அன்பர் சென்றதும், ‘இவற்றை ஆசிரம அலுவலகத்தில் வைத்து விடுங்கள்’ என்றார். உடனே ஆசிரம அன்பர்கள், ‘பகவானது உபயோகத்துக்காக அல்லவா இதைக் கொடுத்துச் சென்றுள்ளார்?’ என்று கேட்டனர்.
அதற்கு ரமணர், ‘நமக்குத்தான் ஏற்கெனவே கப் இருக்கிறதே…’ என்றார். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு ரமணர், அருகில் இருந்த அன்பர் ஒருவரிடம் ஏதோ கூற… அந்த அன்பரும் தேங்காய் சிரட்டையைக் கொண்டு வந்தார். ‘இதுதான் நம்முடைய கப்’ என்றார் ரமணர். தொடர்ந்து அவரே, ‘வெள்ளியால் ஆனவை என்றால், அவற்றை கட்டிக் காக்க வேண்டும்; பத்திரமாக உள்ளதா என கவலைப்பட வேண்டும். இதுதான் பாதுகாப்பானது’ என்றார் சிரித்தபடி!
இதேபோல், அன்பர் ஒருவர் அளித்த வெள்ளிப் பூண் போட்ட அழகான கைத்தடியை ஏற்க மறுத்து, மரக்குச்சிகளைத் தானே அழகாகச் சீவி, கைத் தடியாக உபயோகித்து வந்தார்.
அன்பர்கள் பலர், விலை உயர்ந்த பேனா மற்றும் பென்சில்களை அளித்தபோதும் அவற்றைப் புறக்கணித்து விட்டு, சிறிய பென்சிலை மட்டுமே பயன்படுத்தினார்.
ஒருமுறை, விலை உயர்ந்த, சத்தான காய்கறி மற்றும் பழங்களைக் கொண்டு சூப் தயாரித்து கொண்டு வந்து கொடுத்தார் ஒரு அம்மாள். இதை அன்புடன் ஏற்றார் பகவான். மறு நாளும் இது தொடரவே… பகவான் மறுத்து விட்டார். ‘உடம்புக்கு நல்லது சாப்பிடுங்கள்’ என்று கொண்டு வந்தவர் பரிவுடன் சொல்ல, பகவானோ, ‘இங்கு உள்ள அனைவருக்கும் தர முடியுமா உங்களால்?’ என்று கேட்டார். ‘அதெப்படி? இதில் விலை உயர்ந்த காய்கறிகளும் பழங்களும் உள்ளனவே…’ என்றார் அந்தப் பெண்மணி. உடனே ரமணர், ‘பகவானது உடலுக்கு நல்லது என்றால், எல்லோருக்கும் நல்லதுதானே? இதற்கு பதிலாக கேழ்வரகு வாங்கி மாவாக்கி, கஞ்சி காய்ச்சினால் நூறு பேர் சாப்பிடலாம்; உடலுக்கும் நல்லது’ என்றார்.
‘தினமும் மிஞ்சுகிற பழைய சாதத்தை மண்பானையில் போட்டு, நிறைய தண்ணீர், வடித்த கஞ்சி சிறிதளவு, மோர், எலுமிச்சை இலை, சுக்கு, உப்பு என்று போட்டு வைத்தால் மறு நாள் அது புளித்து, சில்லென்று மேலே தெளிந்து நிற்கும். அந்தப் புளித்த கஞ்சியைக் குடித்தால் எந்த நோயும் வராது’ என்று எப்போதும் அறிவுறுத்தி வருவார் ரமணர்.
‘விரூபாக்ஷக் குகையில் தனிமையில் இருந்தபோது கிடைத்த சுகத்துக்கு ஈடு இணையே இல்லை. பின்னாளில் கட்டில், மெத்தை மற்றும் சத்தான உணவு என்று பல விஷயங்கள் இருந்தபோதிலும் அந்த சுகம் அலாதி’ என்பார் ரமணர்.
விரூபாக்ஷக் குகையில் சிறிய அளவில் ஒரு கட்டடப் பணியை ரமணரே மேற்கொண்டு செய்தார். அப்போது நடந்த வேடிக்கைச் சம்பவம் ஒன்று… அப்போது முதன் முறையாக அவரை தரிசிக்க வந்தவர், ‘ஸ்வாமி எங்கே?’ என அவரிடமே கேட்டார். உடனே ரமணரும், ‘ஸ்வாமியா… இப்பதான் எங்கேயோ போனார்’ என்று கூறி விட்டு வேலை யைத் தொடர்ந்தார்.
வந்தவர், மலையிலிருந்து இறங்க ஆரம்பித்து விட்டார். பகவானைத் தரிசிக்க முடியவில்லையே என்கிற ஏக்கத்தை, எதிரில் வந்த எச்சம்மா என்ற பக்தையிடம் சொன்னார். ‘வாருங்கள் என்னுடன். ஸ்வாமியைக்காட்டுகிறேன்’ என்று அவரை அழைத்து வந்து பகவான் முன் நிறுத்தினார். அன்பர் திகைத்தார்; தான் இங்கே வந்து சென்ற விவரத்தை எச்சம்மாவிடம் சொன்னார். ‘இவரிடம் ஏன் இப்படிச் சொன்னீர்கள்?’ என்று உரிமையுடன் ரமணரிடம் கேட்டார் எச்சம்மா. பகவான் சிரித்தபடி, ‘நான் தான் ஸ்வாமி என்று அட்டையில் எழுதித் தொங்கவிட்டுக் கொள்ள வேண்டுமா என்ன?’ என்றாராம்!
Kanchi Maha Periva Thiruvadigal Saranam
எளிமையை மேற்கொண்டார்… கருணையை போதித்தார்!
எளியோரை எப்போதும் காத்தருள வேண்டும். அவர்களது மகிழ்ச்சியில், நன்றியில் நீயும் எந்நாளும் வாழ்ந்திருக்க வேண்டும்’ என்று திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரரை வேண்டியவர் பகவான் ரமண மகரிஷி.
‘பிறரை விட உயர்ந்தவன்’ என்றோ, ‘மாபெரும் ஞானி’ என்றோ தன்னை ஒருபோதும் கருதியதே இல்லை ரமணர். உலகின் பல மூலைகளில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் இவரை தரிசிக்க திருவண்ணாமலைக்கு வருவதுண்டு. அப்போது, விலை உயர்ந்த பொருட்களை எவரேனும் காணிக்கையாகக் கொடுத்தால், அன்புடன் மறுத்து விடுவார் ரமணர். அவரது எளிமைக்கும் பற்றற்ற தன்மைக்கும் உதாரணமாக விளங்கிய நிகழ்வுகள் இவை.
பரோடா மகாராணி ஒரு முறை, பட்டு ஜரிகைகளால் ஆன வெல்வெட் சால்வை ஒன்றை ரமண மகரிஷிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் ரமணரோ, ‘வெயில் காலத்தில் வியர்த்தால் முகம் துடைக்கவும், குளிர் காலத்தில் தேவைப்பட்டால் கீழே விரிக்கவும் அரை கஜ அகலமும் முக்கால் கஜ நீளமும் கொண்ட துண்டே போதும். இந்த வெல்வெட் சால்வை வேண்டாம்’ என்று மறுத்து விட்டார்.
இதேபோல், அன்பர் ஒருவர் வெள்ளிக் குமிழ் வைத்த பாதுகைகளை ரமணருக்கு வழங்கினார். ‘கடவுள் கொடுத்த பாதங்கள் இருக்க, இந்த அலங்காரமெல்லாம் எதற்கு?’ என்று கூறி அதை மறுத்து விட்டார்.
செல்வந்தர் ஒருவர் வெள்ளியால் ஆன ஸ்பூன், கப், சாஸர் ஆகியவற்றை ரமணரிடம் சமர்ப்பித்து, ‘இவற்றை நீங்கள் உபயோகிக்க வேண்டும்’ என்று வேண்ட… பகவா னும் மறுக்காமல் ஏற்றுக் கொண்டார். அந்த அன்பர் சென்றதும், ‘இவற்றை ஆசிரம அலுவலகத்தில் வைத்து விடுங்கள்’ என்றார். உடனே ஆசிரம அன்பர்கள், ‘பகவானது உபயோகத்துக்காக அல்லவா இதைக் கொடுத்துச் சென்றுள்ளார்?’ என்று கேட்டனர்.
அதற்கு ரமணர், ‘நமக்குத்தான் ஏற்கெனவே கப் இருக்கிறதே…’ என்றார். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு ரமணர், அருகில் இருந்த அன்பர் ஒருவரிடம் ஏதோ கூற… அந்த அன்பரும் தேங்காய் சிரட்டையைக் கொண்டு வந்தார். ‘இதுதான் நம்முடைய கப்’ என்றார் ரமணர். தொடர்ந்து அவரே, ‘வெள்ளியால் ஆனவை என்றால், அவற்றை கட்டிக் காக்க வேண்டும்; பத்திரமாக உள்ளதா என கவலைப்பட வேண்டும். இதுதான் பாதுகாப்பானது’ என்றார் சிரித்தபடி!
இதேபோல், அன்பர் ஒருவர் அளித்த வெள்ளிப் பூண் போட்ட அழகான கைத்தடியை ஏற்க மறுத்து, மரக்குச்சிகளைத் தானே அழகாகச் சீவி, கைத் தடியாக உபயோகித்து வந்தார்.
அன்பர்கள் பலர், விலை உயர்ந்த பேனா மற்றும் பென்சில்களை அளித்தபோதும் அவற்றைப் புறக்கணித்து விட்டு, சிறிய பென்சிலை மட்டுமே பயன்படுத்தினார்.
ஒருமுறை, விலை உயர்ந்த, சத்தான காய்கறி மற்றும் பழங்களைக் கொண்டு சூப் தயாரித்து கொண்டு வந்து கொடுத்தார் ஒரு அம்மாள். இதை அன்புடன் ஏற்றார் பகவான். மறு நாளும் இது தொடரவே… பகவான் மறுத்து விட்டார். ‘உடம்புக்கு நல்லது சாப்பிடுங்கள்’ என்று கொண்டு வந்தவர் பரிவுடன் சொல்ல, பகவானோ, ‘இங்கு உள்ள அனைவருக்கும் தர முடியுமா உங்களால்?’ என்று கேட்டார். ‘அதெப்படி? இதில் விலை உயர்ந்த காய்கறிகளும் பழங்களும் உள்ளனவே…’ என்றார் அந்தப் பெண்மணி. உடனே ரமணர், ‘பகவானது உடலுக்கு நல்லது என்றால், எல்லோருக்கும் நல்லதுதானே? இதற்கு பதிலாக கேழ்வரகு வாங்கி மாவாக்கி, கஞ்சி காய்ச்சினால் நூறு பேர் சாப்பிடலாம்; உடலுக்கும் நல்லது’ என்றார்.
‘தினமும் மிஞ்சுகிற பழைய சாதத்தை மண்பானையில் போட்டு, நிறைய தண்ணீர், வடித்த கஞ்சி சிறிதளவு, மோர், எலுமிச்சை இலை, சுக்கு, உப்பு என்று போட்டு வைத்தால் மறு நாள் அது புளித்து, சில்லென்று மேலே தெளிந்து நிற்கும். அந்தப் புளித்த கஞ்சியைக் குடித்தால் எந்த நோயும் வராது’ என்று எப்போதும் அறிவுறுத்தி வருவார் ரமணர்.
‘விரூபாக்ஷக் குகையில் தனிமையில் இருந்தபோது கிடைத்த சுகத்துக்கு ஈடு இணையே இல்லை. பின்னாளில் கட்டில், மெத்தை மற்றும் சத்தான உணவு என்று பல விஷயங்கள் இருந்தபோதிலும் அந்த சுகம் அலாதி’ என்பார் ரமணர்.
விரூபாக்ஷக் குகையில் சிறிய அளவில் ஒரு கட்டடப் பணியை ரமணரே மேற்கொண்டு செய்தார். அப்போது நடந்த வேடிக்கைச் சம்பவம் ஒன்று… அப்போது முதன் முறையாக அவரை தரிசிக்க வந்தவர், ‘ஸ்வாமி எங்கே?’ என அவரிடமே கேட்டார். உடனே ரமணரும், ‘ஸ்வாமியா… இப்பதான் எங்கேயோ போனார்’ என்று கூறி விட்டு வேலை யைத் தொடர்ந்தார்.
வந்தவர், மலையிலிருந்து இறங்க ஆரம்பித்து விட்டார். பகவானைத் தரிசிக்க முடியவில்லையே என்கிற ஏக்கத்தை, எதிரில் வந்த எச்சம்மா என்ற பக்தையிடம் சொன்னார். ‘வாருங்கள் என்னுடன். ஸ்வாமியைக்காட்டுகிறேன்’ என்று அவரை அழைத்து வந்து பகவான் முன் நிறுத்தினார். அன்பர் திகைத்தார்; தான் இங்கே வந்து சென்ற விவரத்தை எச்சம்மாவிடம் சொன்னார். ‘இவரிடம் ஏன் இப்படிச் சொன்னீர்கள்?’ என்று உரிமையுடன் ரமணரிடம் கேட்டார் எச்சம்மா. பகவான் சிரித்தபடி, ‘நான் தான் ஸ்வாமி என்று அட்டையில் எழுதித் தொங்கவிட்டுக் கொள்ள வேண்டுமா என்ன?’ என்றாராம்!
Kanchi Maha Periva Thiruvadigal Saranam