|
Post by Sumi on Aug 14, 2012 9:07:14 GMT 5.5
Source: Maha Periyavaal Darisana Anubhavangal Part 5நடுத்தர வயது தம்பதிகள் தரிசனத்துக்கு வந்தார்கள். முகத்தில் ஏக்கம் தெரிந்தது. "கல்யாணமாகி பத்து வருஷமாச்சு.. சந்ததி இல்லை..." "மேலே சொல்லு' என்று கேட்கிற மாதிரி பெரியவாள் பார்த்தார்கள். "ராமேஸ்வரத்தில் நாகப் பிரதிஷ்டை பண்ணினேன். சந்தானகோபால மந்திரம் ஆயிரக்கணக்காக பண்ணினேன்..." பெரியவாள் கண்களை மூடிக்கொண்டு மெளனமாக இருந்தார்கள். "உன் பாட்டி எப்படி செத்துபோனாள்? தெரியுமா? வந்தவருக்கு, சாட்டையால் அடித்தாற்போல் இருந்தது. "இத்தனை பேர்கள் எதிரில், அதை எப்படி சொல்வது? பெரியவாள் சொன்னார்கள்.: "உன் தாத்தா ரொம்ப முன்கோபி. சதா காலமும் பாட்டியை திட்டுவார்; அடிப்பார். அவர் அட்டகாசம் பொறுக்கல்லே. ஒரு நாள், உன் பாட்டி கொல்லை கிணத்தில் விழுந்து தற்கொலை பண்ணிண்டுட்டா..." "உன் குடும்பத்துக்கு ஸ்திரீ சாபம் இருக்கு. நல்ல ஜோசியர் - உபாசர்களிடம் கேட்டு பரிஹாரம் செய். அப்புறம் புத்திர பிராப்தி உண்டாகும்..." தம்பதிகள் நெகிழ்ந்தே போனார்கள். பாட்டி கிணற்றில் விழுந்தது பையனுக்கு தெரியும் (அவன் மனைவிக்குகூட சொன்னதில்லை!) அந்த ரகசியம் பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது? அது பரம ரகசியம்!
|
|
|
Post by krsiyer on Aug 14, 2012 13:01:53 GMT 5.5
He knew everything ! thanks for sharing. jaya jaya sankara, hara hara sankara !
|
|