Post by Kanchi Periva on Aug 11, 2012 11:23:04 GMT 5.5
Email message sent by Smt Premamani:
------------------------------------------------------------------------------------------------------------------------------
jaya jay shankara,Hara hara sankara.Anega namaskarams.
premasubramaniam
ப்ரும்மஸ்ரீ ராமமூர்த்தி சாஸ்த்ரிகள் மகாதானபுரம் பாடசாலையில் அத்யயனம் பண்ணியவர். பாவம் திக்குவாய். பேசும்போதுதான் திக்கும். வேதம் சொல்ல ஆரம்பித்தால், தங்கு தடையின்றி ப்ரவாஹமாக வரும். பிழைப்புக்கு ஏதாவது பண்ணியாகணுமே! ஆனாலும் இவரை யாருமே எதற்குமே அழைப்பதில்லை. வேதத்தின் கோவிலாக உள்ள ஒரு ஜீவனை பகவான் விடுவானா?
இருபத்திநாலு வயஸில் 1957 ல் மடத்தில் சேர்த்துவிட்டார் அவருடைய தந்தை. பெரியவாளிடம் "இவன் ஒண்ணுக்கும் ப்ரயோஜனமில்லே பெரியவா......புத்தியும் மந்தம்! மடத்ல எதாவுது கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கட்டும்.... பெரியவாதான் கதி" என்று வேண்டிக்கொண்டார்.
கருணாமூர்த்தி ராமமூர்த்தி சாஸ்த்ரிகளை பார்த்து, " மடத்ல வஸ்த்ரம் தோய்ச்சு ஒணத்து ! நித்யம் மூகபஞ்சசதி படி!..." அருட்கடாக்ஷத்தால் அணைத்துக் கொண்டார். இன்றும் சாஸ்த்ரிகளுடைய கைங்கர்யம் தொடர்கிறது! பெரியவாளைப் பற்றி பேசும்போதே மலர்ந்து போனார்.
"அப்போல்லாம் அது ரொம்ப ஆனந்தமான காலம்!....ரொம்ப பாக்யம் பண்ணியிருக்கேன்! பெரியவா சொன்னபடி மூகபஞ்சசதி படிச்சேன்...இப்போவும் படிக்கறேன். திக்குவாய் போன எடம் தெரியலே! பெரியவா அனுக்ரகம்!.. பெரியவா ஒருநாளைக்கு அஞ்சாறு தடவை குளிப்பா....அப்போல்லாம் நாங்க காகிதத்தை தொட்டாக்கூட விழுப்பு! ஒடனே நாங்க ஸ்நானம் பண்ணியே ஆகணும்! செல சந்தர்பங்கள்ள தர்சனம் பண்ணி நெறையப்பேர் வந்திருப்பா..... 'பூஜைக்கு நேரமாச்சு'..ன்னு நாங்க மெள்ளமா சொன்னா,"ஆகட்டும். இவ்ளோ.... பேரும் என்கேங்கேர்ந்தோ வந்திருக்கா....அவாளுக்கு த்ருப்தியாக வேண்டாமா?" என்று எல்லாரும் போகும்வரை பொறுமையாக அமர்ந்திருப்பார்.
1980 ல ரொம்ப கடுமையா வயத்துவலி வந்துது......தாங்க முடியலே! டாக்டர்கிட்ட காமிச்சா, ஆபரேஷன் பண்ணணும்னுட்டார்! பெரியவாகிட்ட வந்து சொன்னேன்."ஆபரேஷன்..ல்லாம் ஒண்ணும் வேணாம்"..னுட்டார். ஒரு சிஷ்யர் "பெரியவா உச்சிஷ்டத்தை சாப்டு...."ன்னதும், ஒருநாள் பெரியவா பிக்ஷை ஆனதும், அவா சாப்ட எலையிலே
மிச்சமிருந்ததை எடுத்து சாப்ட்டேன்! எதேச்சையா அங்க வந்த பெரியவா என்னைப்பாத்து சிரிச்சுட்டு போனா!.....அதுக்கு அப்புறம் வலி இருந்த எடம் தெரியலே!.....சாதாரணமா தர்சனம் பண்ண வர்றவா, எதாவுது ஆபரேஷன் பண்ணிக்கணும்ன்னு சொன்னா, பெரியவா "ஆபரேஷன் வேணாம்.....நோய் தானா செரியாப்போயிடும்"...ன்னு
சொல்லுவா......அவரோட அனுக்ரகம். சரியாப் போயிடும். " என்று பெரியவா என்னும் அருட்கடலில் மூழ்கி சில முத்துக்களை கொண்டு வந்தார் அந்த பக்தர்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------
jaya jay shankara,Hara hara sankara.Anega namaskarams.
premasubramaniam
ப்ரும்மஸ்ரீ ராமமூர்த்தி சாஸ்த்ரிகள் மகாதானபுரம் பாடசாலையில் அத்யயனம் பண்ணியவர். பாவம் திக்குவாய். பேசும்போதுதான் திக்கும். வேதம் சொல்ல ஆரம்பித்தால், தங்கு தடையின்றி ப்ரவாஹமாக வரும். பிழைப்புக்கு ஏதாவது பண்ணியாகணுமே! ஆனாலும் இவரை யாருமே எதற்குமே அழைப்பதில்லை. வேதத்தின் கோவிலாக உள்ள ஒரு ஜீவனை பகவான் விடுவானா?
இருபத்திநாலு வயஸில் 1957 ல் மடத்தில் சேர்த்துவிட்டார் அவருடைய தந்தை. பெரியவாளிடம் "இவன் ஒண்ணுக்கும் ப்ரயோஜனமில்லே பெரியவா......புத்தியும் மந்தம்! மடத்ல எதாவுது கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கட்டும்.... பெரியவாதான் கதி" என்று வேண்டிக்கொண்டார்.
கருணாமூர்த்தி ராமமூர்த்தி சாஸ்த்ரிகளை பார்த்து, " மடத்ல வஸ்த்ரம் தோய்ச்சு ஒணத்து ! நித்யம் மூகபஞ்சசதி படி!..." அருட்கடாக்ஷத்தால் அணைத்துக் கொண்டார். இன்றும் சாஸ்த்ரிகளுடைய கைங்கர்யம் தொடர்கிறது! பெரியவாளைப் பற்றி பேசும்போதே மலர்ந்து போனார்.
"அப்போல்லாம் அது ரொம்ப ஆனந்தமான காலம்!....ரொம்ப பாக்யம் பண்ணியிருக்கேன்! பெரியவா சொன்னபடி மூகபஞ்சசதி படிச்சேன்...இப்போவும் படிக்கறேன். திக்குவாய் போன எடம் தெரியலே! பெரியவா அனுக்ரகம்!.. பெரியவா ஒருநாளைக்கு அஞ்சாறு தடவை குளிப்பா....அப்போல்லாம் நாங்க காகிதத்தை தொட்டாக்கூட விழுப்பு! ஒடனே நாங்க ஸ்நானம் பண்ணியே ஆகணும்! செல சந்தர்பங்கள்ள தர்சனம் பண்ணி நெறையப்பேர் வந்திருப்பா..... 'பூஜைக்கு நேரமாச்சு'..ன்னு நாங்க மெள்ளமா சொன்னா,"ஆகட்டும். இவ்ளோ.... பேரும் என்கேங்கேர்ந்தோ வந்திருக்கா....அவாளுக்கு த்ருப்தியாக வேண்டாமா?" என்று எல்லாரும் போகும்வரை பொறுமையாக அமர்ந்திருப்பார்.
1980 ல ரொம்ப கடுமையா வயத்துவலி வந்துது......தாங்க முடியலே! டாக்டர்கிட்ட காமிச்சா, ஆபரேஷன் பண்ணணும்னுட்டார்! பெரியவாகிட்ட வந்து சொன்னேன்."ஆபரேஷன்..ல்லாம் ஒண்ணும் வேணாம்"..னுட்டார். ஒரு சிஷ்யர் "பெரியவா உச்சிஷ்டத்தை சாப்டு...."ன்னதும், ஒருநாள் பெரியவா பிக்ஷை ஆனதும், அவா சாப்ட எலையிலே
மிச்சமிருந்ததை எடுத்து சாப்ட்டேன்! எதேச்சையா அங்க வந்த பெரியவா என்னைப்பாத்து சிரிச்சுட்டு போனா!.....அதுக்கு அப்புறம் வலி இருந்த எடம் தெரியலே!.....சாதாரணமா தர்சனம் பண்ண வர்றவா, எதாவுது ஆபரேஷன் பண்ணிக்கணும்ன்னு சொன்னா, பெரியவா "ஆபரேஷன் வேணாம்.....நோய் தானா செரியாப்போயிடும்"...ன்னு
சொல்லுவா......அவரோட அனுக்ரகம். சரியாப் போயிடும். " என்று பெரியவா என்னும் அருட்கடலில் மூழ்கி சில முத்துக்களை கொண்டு வந்தார் அந்த பக்தர்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------