|
Post by hemalathak on Aug 7, 2012 8:47:09 GMT 5.5
JANMASHTAMI VOW
Sri Krishna taught us Karma Yoga. He strongly dictated in Gita that a man is bound to get the fruits of his actions. If he has done good actions/deeds throughout his life, he will get good results. The real meaning of Janamashtami vow is to become Karamyogi like Krishna. One should always follow the right path and never tolerate injustice. Karma yoga is action (karma) performed without expectations or thought of reward. This selfless service of karma yoga is the path by which the mind is most quickly purified and its limits transcended. The karma yogi works hard, both physically and mentally. He seeks to eliminate the ego and its attachments, to serve humanity without expecting rewards, and to see unity in diversity . This enables him to tune to the one underlying divine essence that dwells within all beings. Karma yoga is most suitable for people who have an active temperament. It involves working in the world and giving of oneself in a selfless way. The real essence is to become a selfless Karamyogi.
Following are the words of Krishna
yad yad acarati shresthasthat devetaro janah
sa yat pramam kurute lokas tadanuvartate
This is thus the preaching of life and the simple solution of finding happiness, peace and prosperity in life
|
|
|
Post by kramans on Aug 7, 2012 9:41:40 GMT 5.5
No words required!!! View and listen Krishnashtakam for Krishnashtami www.youtube.com/watch?v=GDQyd1xI5m8 To see, read and hear on Periva’s and his voice click the link below www.periva.org/ Sri Kanchi Maha Periva Thiruvadigal Charanam
|
|
|
Post by Sumi on Aug 7, 2012 10:05:07 GMT 5.5
Looking at the picture, I could recollect a story I read somewhere. Here it goes.
குழந்தைக் கண்ணன் கடுமையான சேஷ்டைகள் செய்து கொண்டிருந்தான். ""ஏன் உபத்திரவம் செய்கிறாய்?,'' என்று கண்டித்த யசோதை, அவனது காதை கோபத்துடன் திருகினாள். உரலில் பிணைத்துக் கட்ட கயிறைத் தேடிப்போனாள். அவள் வரும்வரை ஆடாமல் அசையாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தான் கண்ணன்.
அவனைக் கட்டும் போது, கயிறை முடிச்சுப் போட முடியாமல் தவித்தாள். ஆயர்பாடியில், அத்தனை பேர் வீட்டில் இருந்தும் கயிறை எடுத்து வந்து கட்டியும் அவனைக் கட்ட முடியவில்லை. ஒரே ஒரு கயிறு தான் பாக்கி! அது தான் அங்குள்ள பெண்களின் கழுத்தில் கிடந்த தாலிக்கயிறு. அதை யாராவது தருவார்களா என்ன!
அம்மா, தன்னைக் கட்டிப் போட முடியாமல் திணறுவதைப் பார்த்து கண்ணனுக்கே என்னவோ மாதிரியாகி விட்டது! ஒரு கயிறைப் பார்த்து, ""நீ என்னைக் கட்டு,'' என்று அவன் மனதுக்குள் உத்தரவு போட்ட பிறகு தான் அதைக் கொண்டு யசோதை கட்டிப் போட்டாள்.
பக்தி என்று வந்து விட்டால், தன் காதைத் திருகவும், கயிறால் கட்டவும் கூட பரம்பொருள் அனுமதிக்கிறான்.
கண்ணனின் இந்த எளிமையைப் பற்றி படித்த நம்மாழ்வாருக்கு மயக்கமே வந்து விட்டதாம். மூர்ச்சையாகி கீழே விழுந்து விட்டார். தெளிய ஆறுமாதம் ஆனது. விழித்தவர் மீண்டும் மயங்கி விட்டார்.
இப்படி நம்மாழ்வார் கண்ணன் கயிறால் கட்டுண்ட கதையை நினைத்து 18 மாதம் தொடர் மயக்கத்தில் கழித்தார் என்று சொல்வர்.
|
|
|
Post by radha on Aug 7, 2012 10:36:33 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
தீராத விளையாட்டுப் பிள்ளை!
லீலாசுகர் சிறந்த கிருஷ்ண பக்தர். அவர் தன்னுடைய நூலில் கிருஷ்ணனின் லீலைகளை அழகாக விவரிக்கிறார். வெண்ணெய் திருடுவதற்காக ஒரு வீட்டுக்குள் நுழைந்தான் கண்ணன். பரணில் ஒளித்து வைத்திருந்த வெண்ணெய்ப் பாத்திரத்தைக் கண்டுபிடித்து வெண்ணெயை எடுப்பதற்காக பாத்திரத்தில் கை நுழைத்தான். அப்போது வீட்டுக்கு சொந்தக்காரி வந்துவிட்டாள். அதிர்ச்சியடைந்தவள், ""யாரடா நீ?'' என்று கண்ணனைப் பார்த்துக் கேட்க, அதற்கு கண்ணன் சொன்ன பதில் சிரிப்பை வரவழைக்கும். ""என் கன்றுக்குட்டியைத் தேடி வந்தேன். பாத்திரத்தில் கைவிட்டுப் பார்த்தேன். அதில் கன்றுக்குட்டி இல்லை. நான் போய் வருகிறேன்''. யசோதையின் மடியில் கண்ணன், பால் குடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்தான். ""கண்ணா நீ பால்குடித்தால்தான் தலை மயிர் நன்றாக வளரும்'' என்றாள் யசோதை. அதன்பின் கொஞ்சம் பாலைக் குடித்த கண்ணன்,உடனே தன் தலையைத் தடவிப்பார்த்துவிட்டு, "அப்படியொன்றும் முளைக்கவில்லையே' என்றதும் யசோதை சிரித்துவிட்டாள். யசோதையின் வீட்டில், தரையில் ரத்தினங்களும் மணிகளும் பதிக்கப்பட்டிருந்தன. அதனால் தரை பளபளவென்று மின்னியது. தரையில் தவழ்ந்து செல்கிறான் குழந்தை கண்னன். அவனுடைய தாமரை போன்ற பிஞ்சு முகம் கண்ணாடி போன்ற அந்தத் தரையில் பிரதிபலித்தது. அங்கே இன்னொரு குழந்தை இருக்கிறது என்று நினைத்தான் கண்ணன். அந்த இன்னொரு குழந்தையை கைகளால் பிடிக்க முயற்சி செய்தான். பிம்பத்தை எப்படிப் பிடிக்க முடியும்? அந்தக் குழந்தை (பிம்பம்) கைக்கு வராததால், உரக்க அழுதான் கண்ணன். Kanchi Maha Periva Thiruvadigal Saranam
|
|