Post by radha on Aug 5, 2012 2:42:37 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
Subject: - குட்பை சொன்ன பெரியவா
அமெரிக்க பேராசிரியர் ராபின்சன், கிரேக்க வேதாந்த துறையில் தேர்ச்சி பெற்றவர். சென்னை வந்த அவரிடம் பெரியவாளின் அத்யந்த பக்தர் ஒருவர், "இந்தியாவை விட்டுப் போகும்முன் அவர் பெரியவாளை தர்சனம் பண்ண வேண்டும்" என்று சொன்னார். ராபின்சன் சிரித்துக் கொண்டே அன்றுதான் தான் காஞ்சிபுரம் சென்று வந்ததாகக் கூறி, அந்த இனிய அனுபவத்தை சொன்னார்.
"நாங்கள் காஞ்சிபுரம் சென்றதும் சிறு சிறு குழுக்களாக பிரிந்து ஊரை சுற்றிப் பார்க்க போனோம். சங்கர மடம் பற்றியோ, பெரியவர்களைப் பற்றியோ எதுவுமே தெரியாது. நாங்கள் எதேச்சையாக சங்கரமடம் வாசலுக்கு வந்துவிட்டு, அது ஏதோ கோவில் என்று நினைத்து உள்ளே நுழைந்தோம்! அங்கே உள்ளே ஒரு கயிற்று கட்டில் போல இருந்தது. அதில் அதிக வயஸான ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். சுற்றி ஒரே கூட்டம்!எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை! அப்போது எங்களைநோக்கி ஒரு பையன் ஓடி வந்தான்....
"நீங்க அமெரிக்காவிலேர்ந்து வந்திருக்கேளா?..." என்று கேட்டான். எங்களுக்கோ ஒரே வியப்பு! "ஆமாம்" என்றோம். யாருக்குமே எங்களை தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. அதைவிட அவன் கேட்ட அடுத்த கேள்வி ஆச்சர்யத்தில் என் மூச்சையே நிறுத்தி விட்டது! "உங்களில் யார் பேராசிரியர் ராபின்சன்? அவரை மட்டும் உள்ளே பெரியவா அழைச்சிண்டு வரச் சொன்னார்" என்றான். எனவே நான் மட்டும் ஏதோ கனவுலகில் நடப்பது போல அவன் பின்னால் சென்றேன். கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்திருந்த "பெரியவரை" பார்த்தேன்! அருகில் அமரச் சொன்னார். அவ்வளவுதான்! காலம், இடம் எதுவுமே எனக்கு நினைவில் இல்லை!..." ராபின்சனால் அதற்கு மேல் பேசமுடியாமல் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
பிறகு 1994 ஏப்ரல் மாசம் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு வந்தவர், முன்பு சந்தித்த பெரியவாளுடைய பக்தருக்கு போன் செய்து "காஞ்சியில் பெரியவர் சௌக்யமாக இருக்கிறாரா?.." என்றார்.
"ஸ்ரீ ஸ்வாமிகள் ஸித்தி அடைந்து விட்டார்..." என்று மறுமுனையில் பதில் வந்தது.
"Is it on Jan 8th or 9th ?......" என்று கேட்டார் ராபின்சன்.
"அதெப்படி அவ்வளவு சரியாக கேட்டீர்கள்? 8 ஆம் தேதிதான்" என்றார் பக்தர்.
"இதுவும் பெரியவருடைய அருள்தான்! ஏனென்றால் 8 ஆம் தேதி எனக்கு பெரியவர் தர்சனம் குடுத்து Good - bye என்று மூன்று தடவை சொல்லி, கையை அசைத்து விட்டு மறைந்தார்.....இந்த செய்தியை எங்கள் ஊரில் யாரிடமாவது சொன்னால், அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அதனால் இதை யாரிடமும் கேட்கவும் முடியவில்லை..." என்று நாத் தழுதழுக்கக் கூறினார்.
----------------------------------------------
SOME PEOPLE,SOME INCIDENCE IN LIFE, SOME CONTACTS IN LIFE REMAIN IN MYSTERY AND EVERLASTING THROUGH ONE'S LIFE !
----------------------------------------------------------------------------
Kanchi Maha Periva Thiruvadigal Saranam
Subject: - குட்பை சொன்ன பெரியவா
அமெரிக்க பேராசிரியர் ராபின்சன், கிரேக்க வேதாந்த துறையில் தேர்ச்சி பெற்றவர். சென்னை வந்த அவரிடம் பெரியவாளின் அத்யந்த பக்தர் ஒருவர், "இந்தியாவை விட்டுப் போகும்முன் அவர் பெரியவாளை தர்சனம் பண்ண வேண்டும்" என்று சொன்னார். ராபின்சன் சிரித்துக் கொண்டே அன்றுதான் தான் காஞ்சிபுரம் சென்று வந்ததாகக் கூறி, அந்த இனிய அனுபவத்தை சொன்னார்.
"நாங்கள் காஞ்சிபுரம் சென்றதும் சிறு சிறு குழுக்களாக பிரிந்து ஊரை சுற்றிப் பார்க்க போனோம். சங்கர மடம் பற்றியோ, பெரியவர்களைப் பற்றியோ எதுவுமே தெரியாது. நாங்கள் எதேச்சையாக சங்கரமடம் வாசலுக்கு வந்துவிட்டு, அது ஏதோ கோவில் என்று நினைத்து உள்ளே நுழைந்தோம்! அங்கே உள்ளே ஒரு கயிற்று கட்டில் போல இருந்தது. அதில் அதிக வயஸான ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். சுற்றி ஒரே கூட்டம்!எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை! அப்போது எங்களைநோக்கி ஒரு பையன் ஓடி வந்தான்....
"நீங்க அமெரிக்காவிலேர்ந்து வந்திருக்கேளா?..." என்று கேட்டான். எங்களுக்கோ ஒரே வியப்பு! "ஆமாம்" என்றோம். யாருக்குமே எங்களை தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. அதைவிட அவன் கேட்ட அடுத்த கேள்வி ஆச்சர்யத்தில் என் மூச்சையே நிறுத்தி விட்டது! "உங்களில் யார் பேராசிரியர் ராபின்சன்? அவரை மட்டும் உள்ளே பெரியவா அழைச்சிண்டு வரச் சொன்னார்" என்றான். எனவே நான் மட்டும் ஏதோ கனவுலகில் நடப்பது போல அவன் பின்னால் சென்றேன். கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்திருந்த "பெரியவரை" பார்த்தேன்! அருகில் அமரச் சொன்னார். அவ்வளவுதான்! காலம், இடம் எதுவுமே எனக்கு நினைவில் இல்லை!..." ராபின்சனால் அதற்கு மேல் பேசமுடியாமல் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
பிறகு 1994 ஏப்ரல் மாசம் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு வந்தவர், முன்பு சந்தித்த பெரியவாளுடைய பக்தருக்கு போன் செய்து "காஞ்சியில் பெரியவர் சௌக்யமாக இருக்கிறாரா?.." என்றார்.
"ஸ்ரீ ஸ்வாமிகள் ஸித்தி அடைந்து விட்டார்..." என்று மறுமுனையில் பதில் வந்தது.
"Is it on Jan 8th or 9th ?......" என்று கேட்டார் ராபின்சன்.
"அதெப்படி அவ்வளவு சரியாக கேட்டீர்கள்? 8 ஆம் தேதிதான்" என்றார் பக்தர்.
"இதுவும் பெரியவருடைய அருள்தான்! ஏனென்றால் 8 ஆம் தேதி எனக்கு பெரியவர் தர்சனம் குடுத்து Good - bye என்று மூன்று தடவை சொல்லி, கையை அசைத்து விட்டு மறைந்தார்.....இந்த செய்தியை எங்கள் ஊரில் யாரிடமாவது சொன்னால், அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அதனால் இதை யாரிடமும் கேட்கவும் முடியவில்லை..." என்று நாத் தழுதழுக்கக் கூறினார்.
----------------------------------------------
SOME PEOPLE,SOME INCIDENCE IN LIFE, SOME CONTACTS IN LIFE REMAIN IN MYSTERY AND EVERLASTING THROUGH ONE'S LIFE !
----------------------------------------------------------------------------
Kanchi Maha Periva Thiruvadigal Saranam