Post by radha on May 1, 2023 7:32:07 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVAA
K.N.RAMESH
Apr 30, 2023,
ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருள்மொழிகள்
அனைத்துலகின் குருவான ஆதிசங்கரர்
பகவத்பாதரைப்பற்றி ஒரு ஸ்லோகம் கூறப்படுவதுண்டு.
ச்ருதி-ஸ்ம்ருதி-புராணானாம்
ஆலயம் கருணாலயம் |
நமாமி பகவத்பாத சங்கரம்லோகசங்கரம் ||
(ச்ருதி-ஸ்ம்ருதி, மற்றும் புராணங்களின் ஆலயமாய் விளங்குபவரும், கருணையின் ஆலயமானவரும், பகவத்பாத சங்கரருமாகிய வையகத்திற்கு நன்மை செய்பவரை வணங்குகிறேன்.)
பகவத்பாதர் உலகத்திற்கு நன்மையைச் செய்தவர். அதனால் ‘லோகசங்கரர்’ என்று கூறப்படுகிறார். உலகில் ஜனங்கள் போய்க் கொண்டிருக்கிற போக்கைப் பார்த்த சங்கரர் “இவர்கள் கடைசியாக சிரேயஸ்ஸை எவ்வாறு அடையப் போகிறார்கள்? உள்ளத்தில் காமம் (ஆசை), கோபம் (சினம்), லோபம் (பேராசை), மோஹம் (மயக்கம்) , மதம் (அகந்தை), மாத்ஸர்யம் (வயிற்றெரிச்சல்), என்னும் எதிரிகளையெல்லாம் வைத்துக்கொண்டு, ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு வாழும் மனிதர்கள் சிரேயஸ்ஸை எவ்வாறு சம்பாதிக்கப் போகிறார்கள்? என்ன தர்மத்தைச் செய்யப் போகிறார்கள்? தர்மம் செய்யவேண்டும் என்று மனதில் எண்ணமிருந்தாலும் காமமும், கோபமும் தர்மம் செய்ய விடாமல் மனிதர்களை எங்கோ கொண்டு செல்கின்றனவே” என பரிதாபம் கொண்டார். மனிதனுக்கு இருந்த அகந்தை, வயிற்றெரிச்சல் போன்றவற்றைப் போக்கி அவனை நல்வழியில் கொண்டு போக வேண்டும் என்ற எண்ணம் சங்கரருக்கு ஏற்பட்டது. அந்த எண்ணத்தைத்தான் நாம் ‘தயை’ என்று சொல்வோம். யாராவது துன்பத்தில் மாட்டிக் கொண்டிருந்தால் அவனை அதிலிருந்து விடுவித்துச் சமாதானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு உண்டோ அவரை நாம் ‘தயாசாலி’ என்று சொல்வோம். பகவத்பாதர் அப்படிப்பட்ட தயாசாலியாக விளங்கினார். அதனால்தான் அவர் ‘கருணாலயம்’ என்று போற்றப்பட்டிருக்கிறார்.
“ச்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம்” என்று சுலோகத்தில் வருகிறது. இந்த ‘ச்ருதி ஸ்ம்ருதி’ என்பதின் தாத்பர்யத்தை நாம் தீர்மானமாகத் தெரிந்துகொண்டிருந்தாலும், புராணம் என்பது நமக்குத் தெரியாது என்றால் வேதங்களின் பொருளை சுலபமாகப் புரிந்து கொள்வது முடியாது. புராணங்கள் வேதமோ–ஸ்ம்ருதியோ கூறும் சித்தாந்தத்தை நமக்கு மிகத் தெளிவாக விளக்குகின்றன. வேதத்தின் பொருள் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தால் மஹாபாரதம் போன்ற இதிஹாசத்தையோ, விஷ்ணு புராணம் போன்ற பதிணெண் புராணங்களையோ தெரிந்துகொண்டு பிறகு வேதத்திற்கு அர்த்தம் சொன்னால் அது நலம் பயக்கும். அப்படியில்லாமல் போனால், மனிதன் மந்திரங்களுக்கு விபரீதமான பொருளைப் புரிந்து கொண்டு, அதையே வேதம் சொல்வதாக மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுத்து, உலகத்தை அறியாமை என்னும் இருளில் மூழ்கடித்துவிடப் போகிறானே என்று வேதமே பயப்படுமளவிற்கு ஆகிவிடும். அதனால் தான் சங்கரர் ச்ருதி, ஸ்ம்ருதி, புராணம் என்பவற்றிற்கு ஆலயமாக விளங்குவதாக வர்ணிக்கப்பட்டிருக்கிறார். ச்ருதி, ஸ்ம்ருதி புராணங்களின் இருப்பிடமாம் சங்கரருக்கு கருணையும் இருந்ததால், உலகிற்கு நன்மை செய்வதில் அவருக்கு என்னதான் இடைஞ்சல் இருந்திருக்க முடியும்? அவர் பாரத நாடு முழுவதும் வேத சாஸ்திரங்களுக்கு வந்த எதிர்ப்புகளையெல்லாம் நீக்கி, வேத சாஸ்திரங்களைப் காப்பாற்றி வந்தார். வேத சாஸ்திரங்களைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை என்று சொல்லிக் கொடுத்தார். அதனால் தான் நாம் இன்றும் வேதத்தைக் கற்றுக் கொள்ள முடிகிறது.
ச்லோகத்தில் அவர் “ பகவத்பாதசங்கரம் “ என்று கூறப்பட்டுள்ளார். ( நாம் ) விரும்புவன எல்லாவற்றையும் தரச் சக்தி வாய்ந்த, மிகவும் உத்தமமாகக் கருதிப் பூஜிப்பதற்குரிய பாததாமரைகளைக் கொண்டவர் சங்கரர். ‘பாதம் ‘ ஒரு மாமிசத் துண்டுதானே ! அது என்ன செய்ய முடியும்? என்று யாராவது கேட்கலாம். பாதங்களுக்கு அபிமானியாயிருக்கப்பட்ட எந்த ஒரு சைதன்யம் இருக்கிறதோ அதுவே பூஜிக்கத் தகுந்ததாகும். அதனால், “ நமாமி பகவத்பாதசங்கரம்” என்று கூறப்பட்டது.
பகவத்பாத சங்கரரான ஆதி சங்கரர் லோகசங்கரர் (உலகிற்கு நன்மை செய்பவர்) ஆவார். அவர் வழி காட்டியதால் இன்றைக்கு நாம் இந்த நாட்டில் பழங்காலந் தொட்டு இருந்துவரும் வைதிகப் பண்பாட்டைக் காப்பாற்றிக் கொண்டு வந்திருக்கிறோம். இனியும் நம்மால் காப்பாற்ற முடியும். அந்த வழியில் நாம் நடந்து கொண்டு சிரேயஸ்ஸை அடையவேண்டும்.
K.N.RAMESH
Apr 30, 2023,
ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருள்மொழிகள்
அனைத்துலகின் குருவான ஆதிசங்கரர்
பகவத்பாதரைப்பற்றி ஒரு ஸ்லோகம் கூறப்படுவதுண்டு.
ச்ருதி-ஸ்ம்ருதி-புராணானாம்
ஆலயம் கருணாலயம் |
நமாமி பகவத்பாத சங்கரம்லோகசங்கரம் ||
(ச்ருதி-ஸ்ம்ருதி, மற்றும் புராணங்களின் ஆலயமாய் விளங்குபவரும், கருணையின் ஆலயமானவரும், பகவத்பாத சங்கரருமாகிய வையகத்திற்கு நன்மை செய்பவரை வணங்குகிறேன்.)
பகவத்பாதர் உலகத்திற்கு நன்மையைச் செய்தவர். அதனால் ‘லோகசங்கரர்’ என்று கூறப்படுகிறார். உலகில் ஜனங்கள் போய்க் கொண்டிருக்கிற போக்கைப் பார்த்த சங்கரர் “இவர்கள் கடைசியாக சிரேயஸ்ஸை எவ்வாறு அடையப் போகிறார்கள்? உள்ளத்தில் காமம் (ஆசை), கோபம் (சினம்), லோபம் (பேராசை), மோஹம் (மயக்கம்) , மதம் (அகந்தை), மாத்ஸர்யம் (வயிற்றெரிச்சல்), என்னும் எதிரிகளையெல்லாம் வைத்துக்கொண்டு, ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு வாழும் மனிதர்கள் சிரேயஸ்ஸை எவ்வாறு சம்பாதிக்கப் போகிறார்கள்? என்ன தர்மத்தைச் செய்யப் போகிறார்கள்? தர்மம் செய்யவேண்டும் என்று மனதில் எண்ணமிருந்தாலும் காமமும், கோபமும் தர்மம் செய்ய விடாமல் மனிதர்களை எங்கோ கொண்டு செல்கின்றனவே” என பரிதாபம் கொண்டார். மனிதனுக்கு இருந்த அகந்தை, வயிற்றெரிச்சல் போன்றவற்றைப் போக்கி அவனை நல்வழியில் கொண்டு போக வேண்டும் என்ற எண்ணம் சங்கரருக்கு ஏற்பட்டது. அந்த எண்ணத்தைத்தான் நாம் ‘தயை’ என்று சொல்வோம். யாராவது துன்பத்தில் மாட்டிக் கொண்டிருந்தால் அவனை அதிலிருந்து விடுவித்துச் சமாதானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு உண்டோ அவரை நாம் ‘தயாசாலி’ என்று சொல்வோம். பகவத்பாதர் அப்படிப்பட்ட தயாசாலியாக விளங்கினார். அதனால்தான் அவர் ‘கருணாலயம்’ என்று போற்றப்பட்டிருக்கிறார்.
“ச்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம்” என்று சுலோகத்தில் வருகிறது. இந்த ‘ச்ருதி ஸ்ம்ருதி’ என்பதின் தாத்பர்யத்தை நாம் தீர்மானமாகத் தெரிந்துகொண்டிருந்தாலும், புராணம் என்பது நமக்குத் தெரியாது என்றால் வேதங்களின் பொருளை சுலபமாகப் புரிந்து கொள்வது முடியாது. புராணங்கள் வேதமோ–ஸ்ம்ருதியோ கூறும் சித்தாந்தத்தை நமக்கு மிகத் தெளிவாக விளக்குகின்றன. வேதத்தின் பொருள் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தால் மஹாபாரதம் போன்ற இதிஹாசத்தையோ, விஷ்ணு புராணம் போன்ற பதிணெண் புராணங்களையோ தெரிந்துகொண்டு பிறகு வேதத்திற்கு அர்த்தம் சொன்னால் அது நலம் பயக்கும். அப்படியில்லாமல் போனால், மனிதன் மந்திரங்களுக்கு விபரீதமான பொருளைப் புரிந்து கொண்டு, அதையே வேதம் சொல்வதாக மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுத்து, உலகத்தை அறியாமை என்னும் இருளில் மூழ்கடித்துவிடப் போகிறானே என்று வேதமே பயப்படுமளவிற்கு ஆகிவிடும். அதனால் தான் சங்கரர் ச்ருதி, ஸ்ம்ருதி, புராணம் என்பவற்றிற்கு ஆலயமாக விளங்குவதாக வர்ணிக்கப்பட்டிருக்கிறார். ச்ருதி, ஸ்ம்ருதி புராணங்களின் இருப்பிடமாம் சங்கரருக்கு கருணையும் இருந்ததால், உலகிற்கு நன்மை செய்வதில் அவருக்கு என்னதான் இடைஞ்சல் இருந்திருக்க முடியும்? அவர் பாரத நாடு முழுவதும் வேத சாஸ்திரங்களுக்கு வந்த எதிர்ப்புகளையெல்லாம் நீக்கி, வேத சாஸ்திரங்களைப் காப்பாற்றி வந்தார். வேத சாஸ்திரங்களைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை என்று சொல்லிக் கொடுத்தார். அதனால் தான் நாம் இன்றும் வேதத்தைக் கற்றுக் கொள்ள முடிகிறது.
ச்லோகத்தில் அவர் “ பகவத்பாதசங்கரம் “ என்று கூறப்பட்டுள்ளார். ( நாம் ) விரும்புவன எல்லாவற்றையும் தரச் சக்தி வாய்ந்த, மிகவும் உத்தமமாகக் கருதிப் பூஜிப்பதற்குரிய பாததாமரைகளைக் கொண்டவர் சங்கரர். ‘பாதம் ‘ ஒரு மாமிசத் துண்டுதானே ! அது என்ன செய்ய முடியும்? என்று யாராவது கேட்கலாம். பாதங்களுக்கு அபிமானியாயிருக்கப்பட்ட எந்த ஒரு சைதன்யம் இருக்கிறதோ அதுவே பூஜிக்கத் தகுந்ததாகும். அதனால், “ நமாமி பகவத்பாதசங்கரம்” என்று கூறப்பட்டது.
பகவத்பாத சங்கரரான ஆதி சங்கரர் லோகசங்கரர் (உலகிற்கு நன்மை செய்பவர்) ஆவார். அவர் வழி காட்டியதால் இன்றைக்கு நாம் இந்த நாட்டில் பழங்காலந் தொட்டு இருந்துவரும் வைதிகப் பண்பாட்டைக் காப்பாற்றிக் கொண்டு வந்திருக்கிறோம். இனியும் நம்மால் காப்பாற்ற முடியும். அந்த வழியில் நாம் நடந்து கொண்டு சிரேயஸ்ஸை அடையவேண்டும்.