Post by varagoorannarayanan on Jul 23, 2022 12:52:39 GMT 5.5
மௌன விரதம் கலைந்தது.
கண்பார்வை இல்லாத குழந்தைகளின் வரவினால், தன் மௌனத்தை முடித்துக்கொண்டு, ஒவ்வொரு குழந்தையாக நலம் நேரில் விசாரித்து ஆசீர்வதித்த சம்பவம்.
அழைத்து வந்த ஆசிரியர் ஆனந்தத்தில் அழுதார்.
கட்டுரையாளர்-பு.மா.ஜயசெந்தில்நாதன்.
தொகுப்பு-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
பூந்தமல்லியில் கண்பார்வையற்றோர் பள்ளியுள்ளது. இப்பள்ளியாசிரியர் ஒருவர், சிவாஸ்தானத்தில் மகா சுவாமிகள் தங்கியிருந்தபோது வந்து தரிசனம் செய்தார்.
அவர் சுவாமிகளிடம், "அடுத்த ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்குழந்தைகளைப் பெரியவரின் தரிசனத்திற்கு அழைத்து வரவுள்ளேன்.அக்குழந்தைகள் கண்பார்வையில்லாதவர்கள். அதனால் பெரியவர்களைகளைக் கண்ணால் கண்டு தரிசிக்க முடியாது. ஆதலின் பெரியவர்கள் அக்குழந்தைகளிடம் நாலு வார்த்தைகள் பேசி அவர்களை ஆசீர்வதிக்கவேண்டும். அதைச் சொல்லி விட்டுப் போகவே இன்று வந்தேன் - அனுக்ரஹம் வேண்டும்" என்று வேண்டினார். மகா சுவாமிகள் தம் திருச் செவிகளால் கேட்டுக் கொண்டார்கள் - அவ்வளவுதான்; வந்தவரும் போய் விட்டார்
அடுத்த ஞாயிறு காலை அந்த ஆசிரியர் கண் பார்வையில்லாத குழந்தைகளைத் தனிப் பேருந்தில் அழைத்து வந்தார் - பெரியவர் .தரிசனத்திற்கு வெளியே நிறுத்தினார்.
உடனிருப்பவர்கள், "பெரியவர் நேற்று முதல் மௌனம்" என்றனர். அவ்வளவுதான்! அவர் பட்ட கஷ்டத்திற்கு அளவேயில்லை. கதறியழுதார்; தலையில் அடித்துக் கொண்டார். கண்டோர் மனங்கலங்கினர்.
"ஐயோ! இந்தக் குழந்தைகளுக்குக் கண் பார்வையில்லையே! பெரியவர்களைப் பார்க்க முடியாதே! நாலு வார்த்தைகள் சொன்னால்தானே,கேட்டு மகிழ்வார்கள். எங்களுடன் பெரியவர் பேசா விட்டாலும்,தரிசனம் செய்து விட்டுப் போய் விடுவோம். இந்தக் குழந்தைகள் என்ன செய்யும்? இந்தக் குழந்தைகளுக்குத்தானே சென்ற வாரம் வந்து வேண்டிக்கொண்டேன். இவர்களை ஏமாற்றிய நான் மகாபாவியாகி விட்டேனே!" என்று தேம்பித் தேம்பிப் புலம்பினார்.
எதிர்பாராத நிலை, பெரியவர்கள் உள்ளிருந்து வெளியே வந்து, அந்த ஆசிரியரை அழுகையை நிறுத்தச் சொன்னார்கள். கிணற்றுப்பக்கத்தில் வெளியே மணை போடச் சொல்லி அமர்ந்தார்கள்.
மௌனம் கலைந்தது. அக்குழந்தைகள் அனைவரையும் அருகில் ஒவ்வொருவராக அழைத்து,பெயர் - ஊர் -பார்வைக்குறைபாடு எப்படி ஏற்பட்டது? என்றெல்லாம் பொறுமையாகக் கேட்டு ஆசீர்வதித்தார்கள். ஒருமணி நேரம், அக்குழந்தைகளுக்குப் பெரியவா அனுக்ரஹம் கிடைத்தது. பழங்கள்,திராட்சை, கற்கண்டு முதலியவற்றை பெரிய தட்டுகளில் வைத்து, அக்குழந்தைகளுக்குத் தருமாறு அந்த ஆசிரியரிடம் தந்து வழியனுப்பினார்கள்
எல்லோரும் இந்த அனுக்ரஹத்தைக் கண்டு நெஞ்சு குளிர்ந்தனர். அந்த ஆசிரியருக்கோ தலை,கால் புரியாத சந்தோஷம். அவர் இப்போதும் அழுதார். முன்பு அழுதது துக்கத்தில் - இப்போது அழுதது ஆனந்தத்தில்..
பாரத நாட்டின் ஜனாதிபதியும் (மேதகு வி.வி.கிரி அவர்கள்), பிரதமரும் (மாண்புமிகு இந்திராகாந்தி அவர்கள்) தரிசிக்க வந்த காலத்தும் கலைக்காத மௌனத்தை, பார்வையற்ற குழந்தைகளின் தேவை அறிந்து,மஹா சுவாமிகள் மௌனத்தை கலைத்து ஆசீர்வதித்தார்களே. அந்த நிகழ்வை இன்று நினைத்தாலும், நம் இதயம் இன்பத்தால் விம்முகிறது.
மகாசுவாமிகள் என்றும் அணையாத ஞான தீபம். அத்தீபவொளி நம்மை வழிநடத்திச் செல்லப் பிரார்த்திப்போம்.
கண்பார்வை இல்லாத குழந்தைகளின் வரவினால், தன் மௌனத்தை முடித்துக்கொண்டு, ஒவ்வொரு குழந்தையாக நலம் நேரில் விசாரித்து ஆசீர்வதித்த சம்பவம்.
அழைத்து வந்த ஆசிரியர் ஆனந்தத்தில் அழுதார்.
கட்டுரையாளர்-பு.மா.ஜயசெந்தில்நாதன்.
தொகுப்பு-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
பூந்தமல்லியில் கண்பார்வையற்றோர் பள்ளியுள்ளது. இப்பள்ளியாசிரியர் ஒருவர், சிவாஸ்தானத்தில் மகா சுவாமிகள் தங்கியிருந்தபோது வந்து தரிசனம் செய்தார்.
அவர் சுவாமிகளிடம், "அடுத்த ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்குழந்தைகளைப் பெரியவரின் தரிசனத்திற்கு அழைத்து வரவுள்ளேன்.அக்குழந்தைகள் கண்பார்வையில்லாதவர்கள். அதனால் பெரியவர்களைகளைக் கண்ணால் கண்டு தரிசிக்க முடியாது. ஆதலின் பெரியவர்கள் அக்குழந்தைகளிடம் நாலு வார்த்தைகள் பேசி அவர்களை ஆசீர்வதிக்கவேண்டும். அதைச் சொல்லி விட்டுப் போகவே இன்று வந்தேன் - அனுக்ரஹம் வேண்டும்" என்று வேண்டினார். மகா சுவாமிகள் தம் திருச் செவிகளால் கேட்டுக் கொண்டார்கள் - அவ்வளவுதான்; வந்தவரும் போய் விட்டார்
அடுத்த ஞாயிறு காலை அந்த ஆசிரியர் கண் பார்வையில்லாத குழந்தைகளைத் தனிப் பேருந்தில் அழைத்து வந்தார் - பெரியவர் .தரிசனத்திற்கு வெளியே நிறுத்தினார்.
உடனிருப்பவர்கள், "பெரியவர் நேற்று முதல் மௌனம்" என்றனர். அவ்வளவுதான்! அவர் பட்ட கஷ்டத்திற்கு அளவேயில்லை. கதறியழுதார்; தலையில் அடித்துக் கொண்டார். கண்டோர் மனங்கலங்கினர்.
"ஐயோ! இந்தக் குழந்தைகளுக்குக் கண் பார்வையில்லையே! பெரியவர்களைப் பார்க்க முடியாதே! நாலு வார்த்தைகள் சொன்னால்தானே,கேட்டு மகிழ்வார்கள். எங்களுடன் பெரியவர் பேசா விட்டாலும்,தரிசனம் செய்து விட்டுப் போய் விடுவோம். இந்தக் குழந்தைகள் என்ன செய்யும்? இந்தக் குழந்தைகளுக்குத்தானே சென்ற வாரம் வந்து வேண்டிக்கொண்டேன். இவர்களை ஏமாற்றிய நான் மகாபாவியாகி விட்டேனே!" என்று தேம்பித் தேம்பிப் புலம்பினார்.
எதிர்பாராத நிலை, பெரியவர்கள் உள்ளிருந்து வெளியே வந்து, அந்த ஆசிரியரை அழுகையை நிறுத்தச் சொன்னார்கள். கிணற்றுப்பக்கத்தில் வெளியே மணை போடச் சொல்லி அமர்ந்தார்கள்.
மௌனம் கலைந்தது. அக்குழந்தைகள் அனைவரையும் அருகில் ஒவ்வொருவராக அழைத்து,பெயர் - ஊர் -பார்வைக்குறைபாடு எப்படி ஏற்பட்டது? என்றெல்லாம் பொறுமையாகக் கேட்டு ஆசீர்வதித்தார்கள். ஒருமணி நேரம், அக்குழந்தைகளுக்குப் பெரியவா அனுக்ரஹம் கிடைத்தது. பழங்கள்,திராட்சை, கற்கண்டு முதலியவற்றை பெரிய தட்டுகளில் வைத்து, அக்குழந்தைகளுக்குத் தருமாறு அந்த ஆசிரியரிடம் தந்து வழியனுப்பினார்கள்
எல்லோரும் இந்த அனுக்ரஹத்தைக் கண்டு நெஞ்சு குளிர்ந்தனர். அந்த ஆசிரியருக்கோ தலை,கால் புரியாத சந்தோஷம். அவர் இப்போதும் அழுதார். முன்பு அழுதது துக்கத்தில் - இப்போது அழுதது ஆனந்தத்தில்..
பாரத நாட்டின் ஜனாதிபதியும் (மேதகு வி.வி.கிரி அவர்கள்), பிரதமரும் (மாண்புமிகு இந்திராகாந்தி அவர்கள்) தரிசிக்க வந்த காலத்தும் கலைக்காத மௌனத்தை, பார்வையற்ற குழந்தைகளின் தேவை அறிந்து,மஹா சுவாமிகள் மௌனத்தை கலைத்து ஆசீர்வதித்தார்களே. அந்த நிகழ்வை இன்று நினைத்தாலும், நம் இதயம் இன்பத்தால் விம்முகிறது.
மகாசுவாமிகள் என்றும் அணையாத ஞான தீபம். அத்தீபவொளி நம்மை வழிநடத்திச் செல்லப் பிரார்த்திப்போம்.