Post by varagoorannarayanan on Jul 13, 2022 10:40:48 GMT 5.5
"தன் கஷ்டத்தை பொருட்படுத்தாது,மற்றவா கஷ்டத்தை உடனடி தீர்வு செய்த பேரியவா"
வயது முதிர்ந்த அம்மையாருக்கு செய்த உதவி.
பசுமாடு திருட்டுப்போய் விட்டது என்று வருத்தத்துடன் சொன்ன பாட்டிக்கு, மடத்திலிருந்து,கன்றுடன் கூடிய பால் கறக்கும் பசுமாட்டை கொடுத்த சம்பவம்.
கட்டுரையாளர்- வி.கிருஷ்ணமூர்த்தி
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, (கட்டுரை வெளியான ஆண்டு 2006) பூஜ்யஸ்ரீ மஹாபெரியவாள் தேனம்பாக்கத்தில் தங்கியிருந்தார்கள்.அப்பொழுது அங்கு பெரிய கட்டடங்களோ, மற்ற வசதிகளோ செய்யப்படவில்லை. ஸ்ரீ மஹாபெரியவாள் அங்குள்ள சின்னக்கோயிலின், முன்புறம் திண்ணையில், கயிற்றுக்கட்டிலில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
நானும், (கிருஷ்ணமூர்த்தி) இரு நண்பர்களும் தரிசனத்திற்காகச் சென்றோம்.என் திருச்சி நண்பர், திருவானைக்காவிலில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு, ஒரு அஷ்டோத்ர தங்கக்காசு மாலை செய்திருந்தார்.அந்த மாலையைப் பெரியவாளிடம் காண்பித்து அனுக்ரஹம் பெறச் சென்றிருந்தோம். பெரியவாள் அந்தத் தங்கக்காசுமாலையை வாங்கிப் பார்த்து,தன் சிரசில் வைத்துக்கொண்டு சந்தோஷப்பட்டு ஆசீர்வதித்தார்.
மஹாபெரியவர்கள், யாரேனும் மாலை கொண்டு வந்து சமர்ப்பித்தால், அதை தன்னுடைய சிரசில் வைத்துக் கொள்வதுதான் வழக்கம். இதன் தாத்பர்யம், தனக்கு என்று ஒன்றையும் ஏற்றுக் கொள்ளாமல், அம்பாளுக்கு அர்ப்பணித்ததாகப் பாவித்து, அம்பாளின் பிரசாதமாகக் கருதி, அதை சிரசில் வைத்துக்கொள்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்
என் நண்பரிடம், "நீ அம்பாளுக்குக் காசுமாலை செய்து வைத்திருக்கிறாய், எனக்கு ஒரு உதவி செய்வாயா?" என்று கேட்டார்கள், பெரியவா. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
பெரியவாள் சொல்கிறார்;
"இங்கு கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்க பித்தளைக் குடம் வைத்திருந்தேன். அதைத் திருடன் கொண்டு போய் விட்டான். யாரும் எடுத்துப் போகாதவாறு, ஒரு மண்குடம் தினமும் எனக்குக்.கிடைக்க ஏற்பாடு செய்வாயா?" என்றார்கள்- அந்த கைங்கர்யம் சில காலம் நடந்தது.
ஒரு சமயம் தரிசனத்தின் பொழுது, கணவனை இழந்த வயது முதிர்ந்த அம்மையார்,மஹாபெரியவாளிடம், "நான் கிராமத்தில் ஒரு பசுமாடு வைத்துக்கொண்டு, பராமரித்து,பால் கறந்து விற்று ஜீவனம் நடத்தி வந்தேன் அந்த மாட்டைத் திருடன் கொண்டு போய்விட்டான்" என்று வருத்தத்துடன் தெரிவித்தாள்.
பெரியவாள் ஹாஸ்யமாக, " அப்ப நீ என்னைத் திருடனைப் பிடித்துவரச் சொல்கிறாயா?" என்று சொல்லி. அடுத்த க்ஷணம் பக்கத்தில் உள்ள ஸ்ரீமடத்து சிப்பந்தியிடம், சிவாஸ்தானத்திலிருந்து, கன்றுடன் கூடிய பால் கறக்கும் பசு மாட்டை, இந்தப் பாட்டி வீட்டில் கட்டு" என்று ஆக்ஞையிட்டார்.
என்னே கருணை!
வயது முதிர்ந்த அம்மையாருக்கு செய்த உதவி.
பசுமாடு திருட்டுப்போய் விட்டது என்று வருத்தத்துடன் சொன்ன பாட்டிக்கு, மடத்திலிருந்து,கன்றுடன் கூடிய பால் கறக்கும் பசுமாட்டை கொடுத்த சம்பவம்.
கட்டுரையாளர்- வி.கிருஷ்ணமூர்த்தி
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, (கட்டுரை வெளியான ஆண்டு 2006) பூஜ்யஸ்ரீ மஹாபெரியவாள் தேனம்பாக்கத்தில் தங்கியிருந்தார்கள்.அப்பொழுது அங்கு பெரிய கட்டடங்களோ, மற்ற வசதிகளோ செய்யப்படவில்லை. ஸ்ரீ மஹாபெரியவாள் அங்குள்ள சின்னக்கோயிலின், முன்புறம் திண்ணையில், கயிற்றுக்கட்டிலில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
நானும், (கிருஷ்ணமூர்த்தி) இரு நண்பர்களும் தரிசனத்திற்காகச் சென்றோம்.என் திருச்சி நண்பர், திருவானைக்காவிலில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு, ஒரு அஷ்டோத்ர தங்கக்காசு மாலை செய்திருந்தார்.அந்த மாலையைப் பெரியவாளிடம் காண்பித்து அனுக்ரஹம் பெறச் சென்றிருந்தோம். பெரியவாள் அந்தத் தங்கக்காசுமாலையை வாங்கிப் பார்த்து,தன் சிரசில் வைத்துக்கொண்டு சந்தோஷப்பட்டு ஆசீர்வதித்தார்.
மஹாபெரியவர்கள், யாரேனும் மாலை கொண்டு வந்து சமர்ப்பித்தால், அதை தன்னுடைய சிரசில் வைத்துக் கொள்வதுதான் வழக்கம். இதன் தாத்பர்யம், தனக்கு என்று ஒன்றையும் ஏற்றுக் கொள்ளாமல், அம்பாளுக்கு அர்ப்பணித்ததாகப் பாவித்து, அம்பாளின் பிரசாதமாகக் கருதி, அதை சிரசில் வைத்துக்கொள்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்
என் நண்பரிடம், "நீ அம்பாளுக்குக் காசுமாலை செய்து வைத்திருக்கிறாய், எனக்கு ஒரு உதவி செய்வாயா?" என்று கேட்டார்கள், பெரியவா. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
பெரியவாள் சொல்கிறார்;
"இங்கு கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்க பித்தளைக் குடம் வைத்திருந்தேன். அதைத் திருடன் கொண்டு போய் விட்டான். யாரும் எடுத்துப் போகாதவாறு, ஒரு மண்குடம் தினமும் எனக்குக்.கிடைக்க ஏற்பாடு செய்வாயா?" என்றார்கள்- அந்த கைங்கர்யம் சில காலம் நடந்தது.
ஒரு சமயம் தரிசனத்தின் பொழுது, கணவனை இழந்த வயது முதிர்ந்த அம்மையார்,மஹாபெரியவாளிடம், "நான் கிராமத்தில் ஒரு பசுமாடு வைத்துக்கொண்டு, பராமரித்து,பால் கறந்து விற்று ஜீவனம் நடத்தி வந்தேன் அந்த மாட்டைத் திருடன் கொண்டு போய்விட்டான்" என்று வருத்தத்துடன் தெரிவித்தாள்.
பெரியவாள் ஹாஸ்யமாக, " அப்ப நீ என்னைத் திருடனைப் பிடித்துவரச் சொல்கிறாயா?" என்று சொல்லி. அடுத்த க்ஷணம் பக்கத்தில் உள்ள ஸ்ரீமடத்து சிப்பந்தியிடம், சிவாஸ்தானத்திலிருந்து, கன்றுடன் கூடிய பால் கறக்கும் பசு மாட்டை, இந்தப் பாட்டி வீட்டில் கட்டு" என்று ஆக்ஞையிட்டார்.
என்னே கருணை!