Post by radha on Sept 1, 2021 3:10:00 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
மகாமந்திரம் காயத்ரி
ஆகஸ்ட் 27,2021,17:02 IST
அன்று ஆவணி அவிட்ட நன்னாளை ஒட்டி பக்தர்கள் காஞ்சி மடத்தில் கூடியிருந்தனர். அவர்களிடம் மஹாசுவாமிகள், ''சாஸ்திரப்படி நாம் செய்ய வேண்டிய விஷயங்களில் மிக முக்கியமானது காயத்ரி ஜபம். வேதங்களிலிருந்து எடுத்துச் சேர்க்கப்பட்ட மகாமந்திரமே காயத்ரி. இதை விட்டு விட்டால் நமக்கு கதி ஏது? ரிக், யஜுர், சாம வேத சாரமே இது.
காயத்ரி என்றால் எவர் தன்னை கானம் பண்ணுகிறாரோ அவரை ரட்சிப்பது என்பது பொருள். கானம் பண்ணுவது என்றால் பாடுவது இல்லை. பக்தியுடன் உச்சரிப்பது. யார் தன்னை பக்தியுடன் ஜபம் பண்ணுகிறார்களோ அவர்களை காயத்ரி மந்திரம் ரட்சிக்கும்.
இதைப் பற்றி வேதத்தில், 'காயத்ரீம் சந்தஸாம் மாதா' என்று வருகிறது. சந்தஸ் என்றால் வேதம். மந்திரங்களுக்கு எல்லாம் தாய் காயத்ரி என்கிறது வேதம். இருபத்தி நான்கு அட்சரங்கள் கொண்ட இம்மந்திரத்தில் ஒவ்வொன்றும் எட்டெழுத்துக்கள் கொண்ட மூன்று பகுதிகள் உள்ளன. சகல வேத மந்திர சக்தியும் இதில் அடங்கியுள்ளது.
மற்ற மந்திரங்களுக்கு சக்தியைக் கொடுப்பதும் இதுவே. இதை ஜபிக்காவிட்டால் மற்ற மந்திர ஜபத்திற்கும் சக்தி இல்லை. இதை சரியாக ஜபித்தால் மட்டுமே மந்திர ஸித்தி உண்டாகும்.
நெற்றியில் திருநீறோ, திருமண்ணோ இட்டால் சிலர் கேலி செய்கிறார்கள் என பலர் என்னிடம் சொல்கிறார்கள். பொதுவாக ஆஸ்திகர்கள் கேலி செய்யப்படுகிறார்கள். ஏன் தெரியுமா? காயத்ரி ஜபிக்காததே. தினமும் காயத்ரி மந்திரத்தை ஜபித்தால், நிலைமை சரியாகும்.
48 நாள் ஜபித்தால், அதன் பயனை உணர்ந்து நீங்களே தொடர்ந்து ஜபம் செய்வீர்கள். காயத்ரி ஜபத்தன்று 1008 முறை ஜபித்து நம் ஆன்மிக ஆற்றலை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தினமும் மூன்று முறை ஜபிக்க வாழ்வில் நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.
காயத்ரியின் மகிமையை யாராலும் அளவிட முடியாது.
மஹாசுவாமிகளின் உரையைக் கேட்டு பக்தர்கள் தெளிவு பெற்றனர்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* எல்லோருக்கும் நல்ல நாளாக அமைய கடவுளை வேண்டுங்கள்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இருமுறையும் இஷ்ட தெய்வத்தை வாய்ப்பு கிடைக்கும் போதும் தரிசியுங்கள்.
* மனதை கெடுக்கும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.
* தாய் மதத்தை இழிவுபடுத்துபவர்களுக்கு ஓட்டு அளிக்காதீர்கள்.
உடல்நலம் பெற...காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்ம நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே
தினமலர்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
மகாமந்திரம் காயத்ரி
ஆகஸ்ட் 27,2021,17:02 IST
அன்று ஆவணி அவிட்ட நன்னாளை ஒட்டி பக்தர்கள் காஞ்சி மடத்தில் கூடியிருந்தனர். அவர்களிடம் மஹாசுவாமிகள், ''சாஸ்திரப்படி நாம் செய்ய வேண்டிய விஷயங்களில் மிக முக்கியமானது காயத்ரி ஜபம். வேதங்களிலிருந்து எடுத்துச் சேர்க்கப்பட்ட மகாமந்திரமே காயத்ரி. இதை விட்டு விட்டால் நமக்கு கதி ஏது? ரிக், யஜுர், சாம வேத சாரமே இது.
காயத்ரி என்றால் எவர் தன்னை கானம் பண்ணுகிறாரோ அவரை ரட்சிப்பது என்பது பொருள். கானம் பண்ணுவது என்றால் பாடுவது இல்லை. பக்தியுடன் உச்சரிப்பது. யார் தன்னை பக்தியுடன் ஜபம் பண்ணுகிறார்களோ அவர்களை காயத்ரி மந்திரம் ரட்சிக்கும்.
இதைப் பற்றி வேதத்தில், 'காயத்ரீம் சந்தஸாம் மாதா' என்று வருகிறது. சந்தஸ் என்றால் வேதம். மந்திரங்களுக்கு எல்லாம் தாய் காயத்ரி என்கிறது வேதம். இருபத்தி நான்கு அட்சரங்கள் கொண்ட இம்மந்திரத்தில் ஒவ்வொன்றும் எட்டெழுத்துக்கள் கொண்ட மூன்று பகுதிகள் உள்ளன. சகல வேத மந்திர சக்தியும் இதில் அடங்கியுள்ளது.
மற்ற மந்திரங்களுக்கு சக்தியைக் கொடுப்பதும் இதுவே. இதை ஜபிக்காவிட்டால் மற்ற மந்திர ஜபத்திற்கும் சக்தி இல்லை. இதை சரியாக ஜபித்தால் மட்டுமே மந்திர ஸித்தி உண்டாகும்.
நெற்றியில் திருநீறோ, திருமண்ணோ இட்டால் சிலர் கேலி செய்கிறார்கள் என பலர் என்னிடம் சொல்கிறார்கள். பொதுவாக ஆஸ்திகர்கள் கேலி செய்யப்படுகிறார்கள். ஏன் தெரியுமா? காயத்ரி ஜபிக்காததே. தினமும் காயத்ரி மந்திரத்தை ஜபித்தால், நிலைமை சரியாகும்.
48 நாள் ஜபித்தால், அதன் பயனை உணர்ந்து நீங்களே தொடர்ந்து ஜபம் செய்வீர்கள். காயத்ரி ஜபத்தன்று 1008 முறை ஜபித்து நம் ஆன்மிக ஆற்றலை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தினமும் மூன்று முறை ஜபிக்க வாழ்வில் நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.
காயத்ரியின் மகிமையை யாராலும் அளவிட முடியாது.
மஹாசுவாமிகளின் உரையைக் கேட்டு பக்தர்கள் தெளிவு பெற்றனர்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* எல்லோருக்கும் நல்ல நாளாக அமைய கடவுளை வேண்டுங்கள்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இருமுறையும் இஷ்ட தெய்வத்தை வாய்ப்பு கிடைக்கும் போதும் தரிசியுங்கள்.
* மனதை கெடுக்கும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.
* தாய் மதத்தை இழிவுபடுத்துபவர்களுக்கு ஓட்டு அளிக்காதீர்கள்.
உடல்நலம் பெற...காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்ம நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே
தினமலர்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM