Post by radha on Jun 5, 2021 11:21:36 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA respectful PRANAMS to SRI KANCHI MAHA PERIVA
காஞ்சி பரமாச்சாரிய சுவாமிகளின் வாழ்வில் ஒரு நிகழ்வு . சுவாமிகள் அடிக்கடி மௌன விரதம் இருப்பதுண்டு . சில நாட்களில் சாதாரண மௌன விரதம் இருப்பார்கள் . அப்போது ஜாடையால் பேசுவார்கள் . பக்தர்கள் யாராவது தரிசிக்க வந்தால் கைகளை உயர்த்தி ஆசி கூறுவார்கள்.
சில நாட்களில் காஷ்ட மௌன விரதம் இருப்பார்கள் அன்று ஜாடையால் பேசுவது கூட கிடையாது . பக்தர்களை பார்க்கவும் மாட்டார்கள் .
அன்று அப்படித்தான் சுவாமிகள்
காஷ்ட மௌன விரதம் மேற்கொண்டிருந்தார் . ஒரு அறையில் அமர்ந்து இருந்த சுவாமிகளை பக்தர்கள் ஜன்னல் வழியாக பார்த்துவிட்டுப் போனார்கள் .
பல வருடங்கள் நெறி தவறாது
காஷ்ட மௌன விரதம் இருப்பார்கள்.
சுவாமிகள் , நாட்டின் தலைவர்கள் ,
ஜனாதிபதிகள் போன்றவர்கள் வரும்போது கூட சுவாமிகள் தன் விரதத்திலிருந்து தவறியதில்லை.
ஆனால் அன்று திடிரென்று சுவாமிகள் கத்தினார்கள் .
" அதோ போறான் பாரு , அவனை கூப்பிடு . உடனே கூப்பிடு . "
மடத்தில் இருந்தவர்களுக்கு அதிர்ச்சி சைகையால் கூடப் பேசாத சுவாமிகள் ஏன் வாய் திறந்து பேசுவானேன் ?
அதுவும் ஒரு பதற்றத்தோடு பேசுவானேன் ? அவர் கூப்பிடச் சொன்ன நபர் அப்படி ஒன்றும் முக்கியமான நபர் இல்லையே ! அந்த நபரை இன்று இல்லாவிட்டால் இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாமே . ஒரு தனிமனிதனுக்காக சுவாமிகள் ஏன் பல வருடங்களாகக் கட்டிக் காக்கும் ஒரு விரதத்தைக் குலைத்துக் கொள்ள வேண்டும் ? பொதுவாக உத்தமத் துறவிகளின் விரதத்திற்கு பங்கம் நேர்ந்தால் அது நாட்டிற்கு நல்லதில்லை என்று சொல்வார்கள் . சுவாமிகள் ஏன் இப்படிச் செய்ய வேண்டும். ?
மடத்தில் இருந்தவர்களின் மனதில் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் . என்றாலும் சுவாமிகள் சொன்ன நபரை அழைத்து வந்தனர் .
சுவாமிகள் அந்த நபரோடு அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள் . பின் ஆசிகள் வழங்கி அனுப்பி வைத்தார்கள் . அந்த நபர் போனதும் மடத்தில் இருந்த ஒருவரிடம் தன்னிலை விளக்கம் கொடுத்தார்கள் சுவாமிகள் .
" அவன் யார் தெரியுமா ? சுதந்திர போராட்டத்துல ஈடுபட்டவன் . போலீஸ் அவனைக் கன்னா பின்னான்னு அடிச்சதுலே அவன் இரண்டு கண்ணும் போயிடுச்சு . என்னைப் பார்க்கனும் என்று ரொம்ப தூரத்துலருந்து வந்திருக்கான் . கண்ணு தெரியாதவன் கிட்டே நான் எப்படி சைகை பாஷையில் பேச முடியும் ? அதான் விரதத்தை தள்ளி வச்சிட்டு அவன்கிட்ட பேசினேன் .
எவ்வளவு சந்தோஷமாகத் திரும்பிப் போறான் பார்த்தியா ? இந்த நாட்டுக்காக தன் கண்ணையே பறிகொடுத்த உத்தமண்டா அவன் . அவனுக்காக ஒரு சன்னியாசி ஒரு நாள் விரத்த்த விட்டுக் கொடுக்கறது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை .
இந்த அன்பு இறைவனுக்கு சமமான அன்பு , இந்த அன்பு சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் பார்க்காது .
சுவாமிகள் விரதத்தைக் குலைத்து கொண்டார் என்றவுடன் , அங்கு உள்ளவர்கள் முகத்தில் ஒரு மெல்லிய சுலிப்பு உண்டானது என்னவோ உண்மைதான் . அதற்குண்டான காரணம் தெரிந்தவுடன் நம்மிடம் ஒரு தீர்க்கமான சிலிர்ப்பு தான் ஏற்பட்டது . அதற்கு எத்தனை கோடி கொடுத்தாலும் தகும் .
தான் கட்டிக்காக்கும் நோன்பை விட அன்புதான் பெரியது என்பதை சுவாமிகள் போன்ற துறவிகள் தவிர வேறு பலரும் உணர்ந்திருந்தனர் .
~ வரலொட்டி ரெங்கசாமி எழுதிய
கண்ணா வருவாயா ,
புத்தகத்திலிருந்து
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
காஞ்சி பரமாச்சாரிய சுவாமிகளின் வாழ்வில் ஒரு நிகழ்வு . சுவாமிகள் அடிக்கடி மௌன விரதம் இருப்பதுண்டு . சில நாட்களில் சாதாரண மௌன விரதம் இருப்பார்கள் . அப்போது ஜாடையால் பேசுவார்கள் . பக்தர்கள் யாராவது தரிசிக்க வந்தால் கைகளை உயர்த்தி ஆசி கூறுவார்கள்.
சில நாட்களில் காஷ்ட மௌன விரதம் இருப்பார்கள் அன்று ஜாடையால் பேசுவது கூட கிடையாது . பக்தர்களை பார்க்கவும் மாட்டார்கள் .
அன்று அப்படித்தான் சுவாமிகள்
காஷ்ட மௌன விரதம் மேற்கொண்டிருந்தார் . ஒரு அறையில் அமர்ந்து இருந்த சுவாமிகளை பக்தர்கள் ஜன்னல் வழியாக பார்த்துவிட்டுப் போனார்கள் .
பல வருடங்கள் நெறி தவறாது
காஷ்ட மௌன விரதம் இருப்பார்கள்.
சுவாமிகள் , நாட்டின் தலைவர்கள் ,
ஜனாதிபதிகள் போன்றவர்கள் வரும்போது கூட சுவாமிகள் தன் விரதத்திலிருந்து தவறியதில்லை.
ஆனால் அன்று திடிரென்று சுவாமிகள் கத்தினார்கள் .
" அதோ போறான் பாரு , அவனை கூப்பிடு . உடனே கூப்பிடு . "
மடத்தில் இருந்தவர்களுக்கு அதிர்ச்சி சைகையால் கூடப் பேசாத சுவாமிகள் ஏன் வாய் திறந்து பேசுவானேன் ?
அதுவும் ஒரு பதற்றத்தோடு பேசுவானேன் ? அவர் கூப்பிடச் சொன்ன நபர் அப்படி ஒன்றும் முக்கியமான நபர் இல்லையே ! அந்த நபரை இன்று இல்லாவிட்டால் இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாமே . ஒரு தனிமனிதனுக்காக சுவாமிகள் ஏன் பல வருடங்களாகக் கட்டிக் காக்கும் ஒரு விரதத்தைக் குலைத்துக் கொள்ள வேண்டும் ? பொதுவாக உத்தமத் துறவிகளின் விரதத்திற்கு பங்கம் நேர்ந்தால் அது நாட்டிற்கு நல்லதில்லை என்று சொல்வார்கள் . சுவாமிகள் ஏன் இப்படிச் செய்ய வேண்டும். ?
மடத்தில் இருந்தவர்களின் மனதில் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் . என்றாலும் சுவாமிகள் சொன்ன நபரை அழைத்து வந்தனர் .
சுவாமிகள் அந்த நபரோடு அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள் . பின் ஆசிகள் வழங்கி அனுப்பி வைத்தார்கள் . அந்த நபர் போனதும் மடத்தில் இருந்த ஒருவரிடம் தன்னிலை விளக்கம் கொடுத்தார்கள் சுவாமிகள் .
" அவன் யார் தெரியுமா ? சுதந்திர போராட்டத்துல ஈடுபட்டவன் . போலீஸ் அவனைக் கன்னா பின்னான்னு அடிச்சதுலே அவன் இரண்டு கண்ணும் போயிடுச்சு . என்னைப் பார்க்கனும் என்று ரொம்ப தூரத்துலருந்து வந்திருக்கான் . கண்ணு தெரியாதவன் கிட்டே நான் எப்படி சைகை பாஷையில் பேச முடியும் ? அதான் விரதத்தை தள்ளி வச்சிட்டு அவன்கிட்ட பேசினேன் .
எவ்வளவு சந்தோஷமாகத் திரும்பிப் போறான் பார்த்தியா ? இந்த நாட்டுக்காக தன் கண்ணையே பறிகொடுத்த உத்தமண்டா அவன் . அவனுக்காக ஒரு சன்னியாசி ஒரு நாள் விரத்த்த விட்டுக் கொடுக்கறது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை .
இந்த அன்பு இறைவனுக்கு சமமான அன்பு , இந்த அன்பு சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் பார்க்காது .
சுவாமிகள் விரதத்தைக் குலைத்து கொண்டார் என்றவுடன் , அங்கு உள்ளவர்கள் முகத்தில் ஒரு மெல்லிய சுலிப்பு உண்டானது என்னவோ உண்மைதான் . அதற்குண்டான காரணம் தெரிந்தவுடன் நம்மிடம் ஒரு தீர்க்கமான சிலிர்ப்பு தான் ஏற்பட்டது . அதற்கு எத்தனை கோடி கொடுத்தாலும் தகும் .
தான் கட்டிக்காக்கும் நோன்பை விட அன்புதான் பெரியது என்பதை சுவாமிகள் போன்ற துறவிகள் தவிர வேறு பலரும் உணர்ந்திருந்தனர் .
~ வரலொட்டி ரெங்கசாமி எழுதிய
கண்ணா வருவாயா ,
புத்தகத்திலிருந்து
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM