Post by radha on Feb 10, 2021 3:00:45 GMT 5.5
OM SRI GURUPYONAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
Do your work - Ramana Maharshi spiritual story
“வந்த வேலையைப் பார்”
--------------------------------------
நடராஜன் என்பவர் பகவான் ரமணரின் பக்தர். அவர் முதன்முறை அண்ணாமலைக்கு வந்தபோது பகவான் ரமணரின் அருட்காட்சி கிடைத்தது. அதன் ஈர்ப்பினால் மறுமுறையும் அண்ணாமலைக்கு வந்தார். விடியற்காலையில் எழுந்தவர், மலை மேல் சென்று ஏகாந்தத்தில் திளைத்திருந்தார். அவ்வப்போது தோன்றிய உணர்வுகளை கவிதையாக எழுதிக் கொண்டிருந்தார். நேரம் போனதே தெரியவில்லை. ஏழு கவிதைகளை எழுதி முடித்த பின் தான் உணர்ந்தார், ஆச்ரமத்தில் காலை உணவுக்கான நேரம் கடந்து விட்டது என்பதை. உடனடியாக ஆச்ரமத்திற்கு விரைந்தார்.
அங்கே எல்லோரும் உணவு உண்டு விட்டு ஒருவர் பின் ஒருவராக வெளியே வந்து கொண்டிருந்தனர். அதனால் நடராஜன் தயக்கத்துடன் ஒதுங்கி நின்றார். அங்கிருந்தவர்களில் ஒருவர், “ஏன் இங்கேயே நிற்கிறீர்கள் உள்ளே இலை போடப்பட்டு உங்களுக்கு உணவு தயாராக இருக்கிறது.. பகவான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். உள்ளே செல்லுங்கள்” என்றார்.
நடராஜன் உள்ளே சென்றார். பகவான் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நடராஜனுக்கும் இலை போடப்பட்டிருந்தது. சாப்பிடுமாறு அங்குள்ளோர் வலியுறுத்தவே கூச்சத்துடன் அமர்ந்து உண்ண ஆரம்பித்தார்.
சிறிது நேரத்தில் உணவை உண்டு விட்டு கை சுத்தம் செய்வதற்காக பகவான் எழுந்தார்.
பகவான் எழுந்து நிற்கும்போது தாம் அமர்ந்திருப்பது சரியன்று என்று நினைத்தார் நடராஜன். அதே சமயம் இலையிலிருந்து எழுந்தால் மீண்டும் அமர்ந்து உண்பது நியதிப்படி சரியல்ல என்றும் எண்ணியதால் இருக்கையிலிருந்து சற்றே எழுந்திருப்பது போல் தன் உடலை உயர்த்தினார்.
அதைப் பார்த்த பகவான், “வந்த வேலையைப் பார்” என்று சொல்லி விட்டு நகர்ந்தார். ”சாப்பிடுவதற்காக வந்த நீ சாப்பிடு. அதை விட்டு விட்டு இந்த மாதிரி எல்லாம் எழுந்து நின்று எனக்கு மரியாதை செய்ய வேண்டியதில்லை” என்று பகவான் சொன்னதாக உணர்ந்தார், நடராஜன். ஆகவே மீண்டும் சரியாக இலை முன் அமர்ந்து உண்ண ஆரம்பித்தார். அதே சமயம் பகவானையே பார்த்துக் கொண்டிருந்தார். சமையற்கூட வாசல் தாண்டிய பகவான் திரும்பி நடராஜனை உற்றுப் பார்த்தார். பின் மீண்டும், “வந்த வேலையைப் பார்” என்று சொல்லிவிட்டுப் படி இறங்கினார்.
நடராஜனுக்கு ஒரே திகைப்பு. பகவான் எதற்காக மீண்டும் அப்படிச் சொன்னார் என்பது தெரியாமல் குழம்பினார். “ஓ.. நாம் சாப்பிடுவதை விட்டு விட்டு பகவானை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதைத் தான் பகவான் அப்படிச் சொல்கிறாரோ, ஒருவேளை கவிதை எழுதிக் கொண்டிருந்தோமே, அதைப் பாதியில் விட்டு விட்டு சாப்பிட ஓடி வந்து விட்டோம். அதைத் தான் சொல்கிறாரோ என நினைத்துக் குழம்பினார். பின் உணவை உண்டு விட்டு மீண்டும் மலைமேல் சென்று கவிதை எழுத ஆரம்பித்தார்.
மதியம் ஆச்ரமம் வந்தவர், உணவு உண்டு விட்டு பகவானின் ஹாலில் போய் அமர்ந்தார். அப்போது பகவான் இவரை மீண்டும் உற்றுப் பார்த்தார். பின் மறுபடியும், “வந்த வேலையைப் பார்” என்று சொன்னார்.
நடராஜனுக்கு ஒன்றுமே புரியவில்லை. பகவான் ஏன் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்கிறார் என்பதும் தெரியவில்லை. பகவானிடம் விளக்கம் கேட்கவும் தயக்கமாக இருந்தது ஆகவே அதுபற்றிச் சிந்தித்து பேசாமல் அமர்ந்திருந்தார்.
”ஓ.. நாம் எதற்கு அருணாசலம் வந்தோம்? கவிதை எழுதவா? இல்லை அருணாசலரை தரிசிக்க. பகவானின் உபதேசம் பெற. அதை விடுத்து எதை எதையோ செய்கின்றாய் என்பதைத் தான் பகவான் “வந்த வேலையைப் பார்” என்று சொல்லி குறிப்பால் உணர்த்துகிறார் என்று நினைத்தார்.
சில நாட்கள் ஆச்ரமத்தில் தங்கினார். பின் தன் சொந்த ஊரான புன்னை நல்லூருக்குச் சென்றார். ஆனால் அங்கேயும் இருப்புக் கொள்ளவில்லை. “வந்த வேலையைப் பார்” என்ற குரல் அவருள் ஒலித்துக் கொண்டே இருந்தது தன் வேலையை விட்டு இட்டு ஆச்ரமத்துக்கே வருவதாக பகவானுக்குக் கடிதம் எழுதினார். ஆனால் பகவானின் சம்மதம் கிடைக்கவில்லை.
தினந்தோறும் தனிமையால் அமர்வார். தியானத்தில் ஆழ்வார். பகவானைப் பற்றிச் சிந்திப்பார்.
ஒருநாள் “வந்த வேலையைப் பார்” என்று பகவான் சொன்னதன் உண்மையான பொருள் அவருக்கு விளங்கியது.
“உடல் தாங்கி வந்திருக்கும் நீ இந்த உடலல்ல. ஆத்மா என்பதை உணர். அதற்காகத் தான் நீ வந்திருக்கிறாய் என்பதைப் புரிந்து அந்த உண்மையில் நிலைத்திரு” என்பதையே பகவான் உபதேசமாகத் தனக்கு உணர்த்தினார் என்பது புரிந்தது. அதன்பின் தன் சொத்துக்களை எல்லாம் விற்று விட்டு ரமணாச்ரமம் வந்தார். பகவானின் அனுமதி பெற்றுத் துறவறம் பூண்டார். ”சாது ஓம்” ஆனார். பகவானையே சரணடைந்து அருணாசலத்திலேயே வாழ்ந்து அங்கேயே நிறைவெய்தினார்.
பகவானைப் பற்றி ”ஸ்ரீ ரமண வழி”, ”உபதேச வுந்தியார் விளக்கவுரை”, ”ஸ்ரீ ரமண ஸஹஸ்ரம்”, ”ஸ்ரீ ரமண வருகை”, ”ஸ்ரீ பகவத் கீதாசாரம் பொழிப்புரை”, ”ஸ்ரீ அருணாசல ஸ்துதி பஞ்சகம் விளக்கவுரை”, ”குருவாசகக் கோவை உரை”, ”அநுவாத நூன்மாலை உரை”, ”ஸ்ரீ அருணாசல வெண்பா”, ”ஸ்ரீ ரமண கீதம்”, ”ஸ்ரீ ரமண வர்ணங்கள்” என பல நூல்களை எழுதியிருக்கிறார், சாது ஓம்.
அவர் வந்த வேலையைப் பார்த்து நிறைவெய்தினார்.
நாம்?
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
Do your work - Ramana Maharshi spiritual story
“வந்த வேலையைப் பார்”
--------------------------------------
நடராஜன் என்பவர் பகவான் ரமணரின் பக்தர். அவர் முதன்முறை அண்ணாமலைக்கு வந்தபோது பகவான் ரமணரின் அருட்காட்சி கிடைத்தது. அதன் ஈர்ப்பினால் மறுமுறையும் அண்ணாமலைக்கு வந்தார். விடியற்காலையில் எழுந்தவர், மலை மேல் சென்று ஏகாந்தத்தில் திளைத்திருந்தார். அவ்வப்போது தோன்றிய உணர்வுகளை கவிதையாக எழுதிக் கொண்டிருந்தார். நேரம் போனதே தெரியவில்லை. ஏழு கவிதைகளை எழுதி முடித்த பின் தான் உணர்ந்தார், ஆச்ரமத்தில் காலை உணவுக்கான நேரம் கடந்து விட்டது என்பதை. உடனடியாக ஆச்ரமத்திற்கு விரைந்தார்.
அங்கே எல்லோரும் உணவு உண்டு விட்டு ஒருவர் பின் ஒருவராக வெளியே வந்து கொண்டிருந்தனர். அதனால் நடராஜன் தயக்கத்துடன் ஒதுங்கி நின்றார். அங்கிருந்தவர்களில் ஒருவர், “ஏன் இங்கேயே நிற்கிறீர்கள் உள்ளே இலை போடப்பட்டு உங்களுக்கு உணவு தயாராக இருக்கிறது.. பகவான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். உள்ளே செல்லுங்கள்” என்றார்.
நடராஜன் உள்ளே சென்றார். பகவான் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நடராஜனுக்கும் இலை போடப்பட்டிருந்தது. சாப்பிடுமாறு அங்குள்ளோர் வலியுறுத்தவே கூச்சத்துடன் அமர்ந்து உண்ண ஆரம்பித்தார்.
சிறிது நேரத்தில் உணவை உண்டு விட்டு கை சுத்தம் செய்வதற்காக பகவான் எழுந்தார்.
பகவான் எழுந்து நிற்கும்போது தாம் அமர்ந்திருப்பது சரியன்று என்று நினைத்தார் நடராஜன். அதே சமயம் இலையிலிருந்து எழுந்தால் மீண்டும் அமர்ந்து உண்பது நியதிப்படி சரியல்ல என்றும் எண்ணியதால் இருக்கையிலிருந்து சற்றே எழுந்திருப்பது போல் தன் உடலை உயர்த்தினார்.
அதைப் பார்த்த பகவான், “வந்த வேலையைப் பார்” என்று சொல்லி விட்டு நகர்ந்தார். ”சாப்பிடுவதற்காக வந்த நீ சாப்பிடு. அதை விட்டு விட்டு இந்த மாதிரி எல்லாம் எழுந்து நின்று எனக்கு மரியாதை செய்ய வேண்டியதில்லை” என்று பகவான் சொன்னதாக உணர்ந்தார், நடராஜன். ஆகவே மீண்டும் சரியாக இலை முன் அமர்ந்து உண்ண ஆரம்பித்தார். அதே சமயம் பகவானையே பார்த்துக் கொண்டிருந்தார். சமையற்கூட வாசல் தாண்டிய பகவான் திரும்பி நடராஜனை உற்றுப் பார்த்தார். பின் மீண்டும், “வந்த வேலையைப் பார்” என்று சொல்லிவிட்டுப் படி இறங்கினார்.
நடராஜனுக்கு ஒரே திகைப்பு. பகவான் எதற்காக மீண்டும் அப்படிச் சொன்னார் என்பது தெரியாமல் குழம்பினார். “ஓ.. நாம் சாப்பிடுவதை விட்டு விட்டு பகவானை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதைத் தான் பகவான் அப்படிச் சொல்கிறாரோ, ஒருவேளை கவிதை எழுதிக் கொண்டிருந்தோமே, அதைப் பாதியில் விட்டு விட்டு சாப்பிட ஓடி வந்து விட்டோம். அதைத் தான் சொல்கிறாரோ என நினைத்துக் குழம்பினார். பின் உணவை உண்டு விட்டு மீண்டும் மலைமேல் சென்று கவிதை எழுத ஆரம்பித்தார்.
மதியம் ஆச்ரமம் வந்தவர், உணவு உண்டு விட்டு பகவானின் ஹாலில் போய் அமர்ந்தார். அப்போது பகவான் இவரை மீண்டும் உற்றுப் பார்த்தார். பின் மறுபடியும், “வந்த வேலையைப் பார்” என்று சொன்னார்.
நடராஜனுக்கு ஒன்றுமே புரியவில்லை. பகவான் ஏன் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்கிறார் என்பதும் தெரியவில்லை. பகவானிடம் விளக்கம் கேட்கவும் தயக்கமாக இருந்தது ஆகவே அதுபற்றிச் சிந்தித்து பேசாமல் அமர்ந்திருந்தார்.
”ஓ.. நாம் எதற்கு அருணாசலம் வந்தோம்? கவிதை எழுதவா? இல்லை அருணாசலரை தரிசிக்க. பகவானின் உபதேசம் பெற. அதை விடுத்து எதை எதையோ செய்கின்றாய் என்பதைத் தான் பகவான் “வந்த வேலையைப் பார்” என்று சொல்லி குறிப்பால் உணர்த்துகிறார் என்று நினைத்தார்.
சில நாட்கள் ஆச்ரமத்தில் தங்கினார். பின் தன் சொந்த ஊரான புன்னை நல்லூருக்குச் சென்றார். ஆனால் அங்கேயும் இருப்புக் கொள்ளவில்லை. “வந்த வேலையைப் பார்” என்ற குரல் அவருள் ஒலித்துக் கொண்டே இருந்தது தன் வேலையை விட்டு இட்டு ஆச்ரமத்துக்கே வருவதாக பகவானுக்குக் கடிதம் எழுதினார். ஆனால் பகவானின் சம்மதம் கிடைக்கவில்லை.
தினந்தோறும் தனிமையால் அமர்வார். தியானத்தில் ஆழ்வார். பகவானைப் பற்றிச் சிந்திப்பார்.
ஒருநாள் “வந்த வேலையைப் பார்” என்று பகவான் சொன்னதன் உண்மையான பொருள் அவருக்கு விளங்கியது.
“உடல் தாங்கி வந்திருக்கும் நீ இந்த உடலல்ல. ஆத்மா என்பதை உணர். அதற்காகத் தான் நீ வந்திருக்கிறாய் என்பதைப் புரிந்து அந்த உண்மையில் நிலைத்திரு” என்பதையே பகவான் உபதேசமாகத் தனக்கு உணர்த்தினார் என்பது புரிந்தது. அதன்பின் தன் சொத்துக்களை எல்லாம் விற்று விட்டு ரமணாச்ரமம் வந்தார். பகவானின் அனுமதி பெற்றுத் துறவறம் பூண்டார். ”சாது ஓம்” ஆனார். பகவானையே சரணடைந்து அருணாசலத்திலேயே வாழ்ந்து அங்கேயே நிறைவெய்தினார்.
பகவானைப் பற்றி ”ஸ்ரீ ரமண வழி”, ”உபதேச வுந்தியார் விளக்கவுரை”, ”ஸ்ரீ ரமண ஸஹஸ்ரம்”, ”ஸ்ரீ ரமண வருகை”, ”ஸ்ரீ பகவத் கீதாசாரம் பொழிப்புரை”, ”ஸ்ரீ அருணாசல ஸ்துதி பஞ்சகம் விளக்கவுரை”, ”குருவாசகக் கோவை உரை”, ”அநுவாத நூன்மாலை உரை”, ”ஸ்ரீ அருணாசல வெண்பா”, ”ஸ்ரீ ரமண கீதம்”, ”ஸ்ரீ ரமண வர்ணங்கள்” என பல நூல்களை எழுதியிருக்கிறார், சாது ஓம்.
அவர் வந்த வேலையைப் பார்த்து நிறைவெய்தினார்.
நாம்?
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM