|
Post by varagoorannarayanan on Dec 22, 2020 14:08:47 GMT 5.5
"பெரியவா இருக்கிற இடத்திலிருந்து முந்நூறு அடி தூரம் வரை, எந்தக் கிரகமும் பேசாது. எந்த தேவதையும் பதில் சொல்லாது.-ஜோசியர்"
(ஒரு பார்வையிலேயே பெரியவாளை புரிந்து கொண்ட ஜோசியர்)
ஒரு சிறு பதிவு
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-34 தட்டச்சு-வரகூரான் நாராயணன் புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.அளித்தார்
கேரளாவில் இருந்து ஒரு ஜோசியர் தரிசனத்துக்கு வந்தார். அன்றைக்கு, பெரியவாள் காஷ்ட மௌனம்.
ஜோசியரிடம் பேசவில்லை.புன்முறுவல் செய்து ஒரு பழம் அளித்தார்கள்.
ஜோசியர் வெளியே வந்தார். ஸ்ரீ மடத்து சிப்பந்திகள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்.
எல்லாருக்கும் பிரச்னை இருப்பது சகஜம்தானே?
தமக்கு எப்போது விடிவு ஏற்படும்? என்றறிய எல்லாருக்கும் ஆவல்.
ஜோசியர் சொன்னார்;
"இந்த இடத்திலே என்னால் ஜோசியம் சொல்ல முடியாது. பெரியவாளுடைய சாந்நித்யம் பரிபூரணமாக இருக்கும் இடம் இது. பெரியவா இருக்கிற இடத்திலிருந்து முந்நூறு அடி தூரம் வரை, எந்தக் கிரகமும்பேசாது எந்த தேவதையும் பதில் சொல்லாது. நான் தங்கியிருக்கும் லாட்ஜுக்கு வாங்கோ, பதில் சொல்கிறேன்."
ஒரு பார்வையிலேயே பெரியவாளை புரிந்து கொண்டுவிட்டார் ஜோசியர்.
|
|
|
Post by padhu on Dec 23, 2020 18:24:23 GMT 5.5
Ellam ari dha gnani allava nam Periyava.
|
|