Post by radha on Jul 20, 2012 9:32:52 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
நம் வாழ்வில் நாமும் அநேக விஷயங்களை நம்பத்தான் செய்கிறோம். ஆனால், அந்த நம்பிகையோடு கூடவே ஒரு மெல்லிய நூலளவுக்காவது. இது ஒரு வேளை நடக்காமல் போய்விட்டால் என்கிற ஒரு விஷயம் ஓடியபடியேதான் உள்ளது.
இன்றைய வாழ்க்கை முறையும் நமக்கு நம்பச் சொல்லித்தருவதைவிட, சந்தேகப்பட சொல்லித் தருவதே அதிகம்.
நம் கண் முன்னால் நம்பி ஜெயித்தவர்களைவிட, தோற்றவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். நமக்கு தைரியமளித்து ஊக்கப்படுத்துகிறவர்களைவிட ‘பார்த்து, கவனம்’ என்கிறவர்கள் அதிகம்.
நம்பிக்கை குறித்து ஒரு கதை உண்டு.
கைலாயத்தில் பார்வதி தேவிக்கே அம்மட்டில் ஓர் ஆச்சரியக் குழப்பம். பர மேஸ்வரனிடம் பூலோகத்தை காட்டி, பிரபோ… ஏன், பூவுலகில் மகிழ்வாக இருப்பவர்களைவிட துக்கப்படுகிறவர்கள் அதிகம் உள்ளனர்? ஒரு பக்தனாவது நான் பூரண திருப்தியோடு இருக்கிறேன். உன்னிடம் கேட்க ஒன்றுமில்லை என்று கூறுவதே இல்லையே.. ஏன்?
உங்கள் சன்னிதியிலும் சரி; எனது சன்னிதியிலும் சரி; கதறி அழுது அதைக் கொடு, இதைக்கொடு என்று கேட்கிறவர்களாகவே ஏன் எல்லோரும் உள்ளனர்?” என்று, எதுவும் தெரியாத ஒரு குடும்பப் பெண் போல கேட்டாளாம்.
அப்படியே, அனைவரையும் ரட்சிக்கும் கங்கை பாகின்ற பூவுலகில், அதில் நீராடியும் மக்கள் இப்படி பாவிகளாக மாயையை விட்டு விலகாதவர்களாக இருப்பது சரியா?” என்றும் கேட்டாளாம்.
அதற்கு வார்த்தையில் பதில் கூறுவதைவிட, நிதர்சனமா உணர்த்திவிடுவது மேல் என்று, பார்வதி தேவியோடு பூவுலகில் பிரசன்னமாகிவிட்டார் பரமேஸ்வரன்.
அதுவும் எப்படி?
அப்படி இப்படி அசைய முடியாத தொண்டுகிழமாக! அருகில் கிழவியாக பார்வதி.
இருவரும் கங்கைக் கரைக்கு சிறிது முன்னால் இருந்தனர். பரமேஸ்வரன் தரையில் சுருண்டு படுத்திருக்க, பார்வதி கங்கைக்கு போவோர் வருவோரை எல்லாம் பார்த்து, ஐயா என் கணவர் மிக வயதானவர், அவரால் நடக்க முடியவில்லை. தயவு செய்து அவரை சுமந்து வந்து கங்கைக்கரையில் விடுங்கள். அதற்காக நீங்கள் கேட்கும் பொன்னைத் தருகிறேன்” என்கிறாள்.
பொன் கிடைக்கிறது என்றவுடன் பலர் முன் வந்தனர். அப்படி வந்தவர்களிடம் அவர்கள் திகைக்கும்படியாக ஒரு விஷயத்தை கூறினாள் பார்வதி.
ஐயா… நான் ஒரு உண்மையை கூறி விடவேண்டும். பொன்னுக்காக நீங்கள் இவரைச் சுமப்பதற்கு நன்றி. அதே சமயம் இவரைத் தீண்டுவோரை, இவர் செய்த பாவங்கள் பற்றிக்கொண்டு விடும் என்பது, இவர் பெற்றிருக்கும் வரம். அதையும் தெரிந்துகொள்ளுங்கள். வேண்டுமானால், அதற்குத் தனியாக நான் பொன் தருகிறேன்” என்றாளாம். கிட்டே வந்தவர்கள், ‘இது நல்ல கதையாக இருக்கிறதே’ என்று திரும்பிவிட்டனராம். காலையிலிருந்து, மாலை வரை ஒருவர் கூட உதவ முன் வரவில்லை. அந்திசாயும் நேரம். ஒருவன் முன் வந்தான். அவன் பார்வதி கூறியதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.
பரமேஸ்வரனைச் சுமந்து வந்து கங்கை கரையிலும் விட்டு, பொன் தர வந்த பார்வதியிடமும், வேண்டாம்” என்கிறான்.
பார்வதி ஏன் வேண்டாம் என்கிறா?” என்று கேட்கிறாள்.
தாயே… நான் என் பாவங்களை எல்லாம் நீக்கிக்கொள்ளவே, கங்கைக்கு வந்துள்ளேன். வழியில் இவரைச் சுமக்க நேர்ந்தது என் பாக்கியம். என் பல பாவச்செயல்களுக்கான ஒரு பரிகாரம் அது. அதே சமயம் அவரது பாவங்கள் என்னைப் பற்றியிருக்கும். அதனால் பாதகமில்லை. இவருக்கும் சேர்த்து நான் கங்கையில் மூழ்கும்போது, அது போய்விடுமே…? கங்கை இருக்கும்போது எனக்கென்ன கவலை?” என்று திருப்பிக் கேட்டானாம்.
பார்வதிக்கும் புரிந்தது, பல ஆயிரம் பேரில் ஒருவனிடம் தான் பூரணமான நம்பிக்கை இருந்திருக்கிறது. மற்றவர்களிடம் அது இல்லை. அதனாலேயே உலகம் முழுக்க தேவைக்குரல், அழுகை, வலிகளின் முனங்கல்… என்று!
நம்பிக்கை என்பது எப்படிப்பட்டது என்பதை உணர்த்தும் இந்தக் கதை, கட்டுக்கதையாகவே இருந்துவிட்டு போகட்டும். ஆனால், அதனுள் பிரகாசிப்பது ஒரு மறுக்கமுடியாத சத்தியமல்லவா? இப்படி ஒரு நம்பிக்கைதான் பெரியவரிடம் இருந்தது. அந்த நாளில் அன்றைய பெரியவரிடமும் இருந்தது.
சரி… திரும்பவும் பெரியவர், இளையவர், தஞ்சை சரபோஜிசிவாஜி இவர்களிடம் செல்வோமா?
அன்றைய பெரியவர், இளையவருக்கு ஆறுதல் கூறி திருவானைக்காவலை விட்டுப் புறப்பட்டார். மடத்து பரிவாரம் மிகப்பெரியது. யானை, குதிரை, காளை, ஒட்டகம் என்று அதன் கூட்டமும் பெரிதும் காட்சிக்குரியது.
அவ்வளவுபேருடன் கும்பகோணம் சென்று முகாமிடத் தீர்மானித்தார் பெரியவர். வழியில் இடையிடும் தஞ்சாவூரைத் தீண்டக் கூடாது. கோவிலடி வழியாக போய்விடலாம் என்று தீர்மானித்துச் சென்றபோது, திபுதிபுவென்று சரபோஜியின் சிப்பாய்கள் வந்து சுற்றி வளைத்துவிட்டனர்.
நாங்கள் கும்பகோணம் செல்கிறோம்” என்று கூறியதை காதிலேயே வாங்காமல், உங்கள் அவ்வளவு பேரையும் மடக்கி கைது செய்து அழைத்துவர உத்தரவு” என்றபோது, இளையவரிடம் கோபம்.
பெரியவரோ தன் முதிர்ச்சிக்கே உரிய சுபாவத்தோடு, ‘இதுவும் அம்பாள் சித்தம்’ என்றாராம்!
Kanchi Maha Periva Thiruvadigal Saranam
நம் வாழ்வில் நாமும் அநேக விஷயங்களை நம்பத்தான் செய்கிறோம். ஆனால், அந்த நம்பிகையோடு கூடவே ஒரு மெல்லிய நூலளவுக்காவது. இது ஒரு வேளை நடக்காமல் போய்விட்டால் என்கிற ஒரு விஷயம் ஓடியபடியேதான் உள்ளது.
இன்றைய வாழ்க்கை முறையும் நமக்கு நம்பச் சொல்லித்தருவதைவிட, சந்தேகப்பட சொல்லித் தருவதே அதிகம்.
நம் கண் முன்னால் நம்பி ஜெயித்தவர்களைவிட, தோற்றவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். நமக்கு தைரியமளித்து ஊக்கப்படுத்துகிறவர்களைவிட ‘பார்த்து, கவனம்’ என்கிறவர்கள் அதிகம்.
நம்பிக்கை குறித்து ஒரு கதை உண்டு.
கைலாயத்தில் பார்வதி தேவிக்கே அம்மட்டில் ஓர் ஆச்சரியக் குழப்பம். பர மேஸ்வரனிடம் பூலோகத்தை காட்டி, பிரபோ… ஏன், பூவுலகில் மகிழ்வாக இருப்பவர்களைவிட துக்கப்படுகிறவர்கள் அதிகம் உள்ளனர்? ஒரு பக்தனாவது நான் பூரண திருப்தியோடு இருக்கிறேன். உன்னிடம் கேட்க ஒன்றுமில்லை என்று கூறுவதே இல்லையே.. ஏன்?
உங்கள் சன்னிதியிலும் சரி; எனது சன்னிதியிலும் சரி; கதறி அழுது அதைக் கொடு, இதைக்கொடு என்று கேட்கிறவர்களாகவே ஏன் எல்லோரும் உள்ளனர்?” என்று, எதுவும் தெரியாத ஒரு குடும்பப் பெண் போல கேட்டாளாம்.
அப்படியே, அனைவரையும் ரட்சிக்கும் கங்கை பாகின்ற பூவுலகில், அதில் நீராடியும் மக்கள் இப்படி பாவிகளாக மாயையை விட்டு விலகாதவர்களாக இருப்பது சரியா?” என்றும் கேட்டாளாம்.
அதற்கு வார்த்தையில் பதில் கூறுவதைவிட, நிதர்சனமா உணர்த்திவிடுவது மேல் என்று, பார்வதி தேவியோடு பூவுலகில் பிரசன்னமாகிவிட்டார் பரமேஸ்வரன்.
அதுவும் எப்படி?
அப்படி இப்படி அசைய முடியாத தொண்டுகிழமாக! அருகில் கிழவியாக பார்வதி.
இருவரும் கங்கைக் கரைக்கு சிறிது முன்னால் இருந்தனர். பரமேஸ்வரன் தரையில் சுருண்டு படுத்திருக்க, பார்வதி கங்கைக்கு போவோர் வருவோரை எல்லாம் பார்த்து, ஐயா என் கணவர் மிக வயதானவர், அவரால் நடக்க முடியவில்லை. தயவு செய்து அவரை சுமந்து வந்து கங்கைக்கரையில் விடுங்கள். அதற்காக நீங்கள் கேட்கும் பொன்னைத் தருகிறேன்” என்கிறாள்.
பொன் கிடைக்கிறது என்றவுடன் பலர் முன் வந்தனர். அப்படி வந்தவர்களிடம் அவர்கள் திகைக்கும்படியாக ஒரு விஷயத்தை கூறினாள் பார்வதி.
ஐயா… நான் ஒரு உண்மையை கூறி விடவேண்டும். பொன்னுக்காக நீங்கள் இவரைச் சுமப்பதற்கு நன்றி. அதே சமயம் இவரைத் தீண்டுவோரை, இவர் செய்த பாவங்கள் பற்றிக்கொண்டு விடும் என்பது, இவர் பெற்றிருக்கும் வரம். அதையும் தெரிந்துகொள்ளுங்கள். வேண்டுமானால், அதற்குத் தனியாக நான் பொன் தருகிறேன்” என்றாளாம். கிட்டே வந்தவர்கள், ‘இது நல்ல கதையாக இருக்கிறதே’ என்று திரும்பிவிட்டனராம். காலையிலிருந்து, மாலை வரை ஒருவர் கூட உதவ முன் வரவில்லை. அந்திசாயும் நேரம். ஒருவன் முன் வந்தான். அவன் பார்வதி கூறியதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.
பரமேஸ்வரனைச் சுமந்து வந்து கங்கை கரையிலும் விட்டு, பொன் தர வந்த பார்வதியிடமும், வேண்டாம்” என்கிறான்.
பார்வதி ஏன் வேண்டாம் என்கிறா?” என்று கேட்கிறாள்.
தாயே… நான் என் பாவங்களை எல்லாம் நீக்கிக்கொள்ளவே, கங்கைக்கு வந்துள்ளேன். வழியில் இவரைச் சுமக்க நேர்ந்தது என் பாக்கியம். என் பல பாவச்செயல்களுக்கான ஒரு பரிகாரம் அது. அதே சமயம் அவரது பாவங்கள் என்னைப் பற்றியிருக்கும். அதனால் பாதகமில்லை. இவருக்கும் சேர்த்து நான் கங்கையில் மூழ்கும்போது, அது போய்விடுமே…? கங்கை இருக்கும்போது எனக்கென்ன கவலை?” என்று திருப்பிக் கேட்டானாம்.
பார்வதிக்கும் புரிந்தது, பல ஆயிரம் பேரில் ஒருவனிடம் தான் பூரணமான நம்பிக்கை இருந்திருக்கிறது. மற்றவர்களிடம் அது இல்லை. அதனாலேயே உலகம் முழுக்க தேவைக்குரல், அழுகை, வலிகளின் முனங்கல்… என்று!
நம்பிக்கை என்பது எப்படிப்பட்டது என்பதை உணர்த்தும் இந்தக் கதை, கட்டுக்கதையாகவே இருந்துவிட்டு போகட்டும். ஆனால், அதனுள் பிரகாசிப்பது ஒரு மறுக்கமுடியாத சத்தியமல்லவா? இப்படி ஒரு நம்பிக்கைதான் பெரியவரிடம் இருந்தது. அந்த நாளில் அன்றைய பெரியவரிடமும் இருந்தது.
சரி… திரும்பவும் பெரியவர், இளையவர், தஞ்சை சரபோஜிசிவாஜி இவர்களிடம் செல்வோமா?
அன்றைய பெரியவர், இளையவருக்கு ஆறுதல் கூறி திருவானைக்காவலை விட்டுப் புறப்பட்டார். மடத்து பரிவாரம் மிகப்பெரியது. யானை, குதிரை, காளை, ஒட்டகம் என்று அதன் கூட்டமும் பெரிதும் காட்சிக்குரியது.
அவ்வளவுபேருடன் கும்பகோணம் சென்று முகாமிடத் தீர்மானித்தார் பெரியவர். வழியில் இடையிடும் தஞ்சாவூரைத் தீண்டக் கூடாது. கோவிலடி வழியாக போய்விடலாம் என்று தீர்மானித்துச் சென்றபோது, திபுதிபுவென்று சரபோஜியின் சிப்பாய்கள் வந்து சுற்றி வளைத்துவிட்டனர்.
நாங்கள் கும்பகோணம் செல்கிறோம்” என்று கூறியதை காதிலேயே வாங்காமல், உங்கள் அவ்வளவு பேரையும் மடக்கி கைது செய்து அழைத்துவர உத்தரவு” என்றபோது, இளையவரிடம் கோபம்.
பெரியவரோ தன் முதிர்ச்சிக்கே உரிய சுபாவத்தோடு, ‘இதுவும் அம்பாள் சித்தம்’ என்றாராம்!
Kanchi Maha Periva Thiruvadigal Saranam