|
Post by varagooran on Apr 4, 2020 12:41:21 GMT 5.5
"ஏ.ஜி.ஆபீஸ் வேலையில் சேர்ந்துவிடு"
பொய் சொல்லும் தொழில்களான, வக்கீல்,ஆடிட்டர் வேலைகளை நிராகரித்த பெரியவா.
ஒரு பக்தனுக்கு அறிவுரை.
தொகுப்பாசிரியர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
சொன்னவர்-எஸ்.சீதாராமன்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நான் சட்டக்கல்லூரியில் பயின்று தேர்ச்சி பெற்றேன். மேலும் ஒரு துறையில் சிறப்புக் கல்வி பெறுவதற்காக, அதற்கான இரண்டாண்டுப் படிப்பில் சேர்ந்திருந்தேன்.
அப்போது, அக்கௌண்டண்ட் ஜெனரல் அலுவலகத்திலிருந்து, பணி நியமன உத்தரவு வந்தது. நல்ல வேலை பணியில் சேரலாம். ஆனால், சட்டத் துறையில், சிறப்புக் கல்வி பெறுவது என்பது கனவாகப் போய்விடும் !.
குழப்பம்....
பக்தர்களின் குழப்பத்தைத் தீர்ப்பதற்காகத்தானே,ஒரு மகான் காஞ்சியில் காத்துக் கொண்டிருக்கிறார்!
சலோ,காஞ்சிபுரம் !
பெரியவாளிடம் என் பிரச்சினையை விவரித்தேன்.
பெரியவாளின் பதில்;
"இப்போது, இரண்டு தொழில்களில், நிறைய பொய் சொல்ல வேண்டியிருக்கு. ஒன்று,வக்கீல்; மற்றொன்று சார்ட்டர்டு அக்கௌண்டண்ட் !.
"சூரியன், உன் ஜாதகத்தில் உச்சத்தில் இருக்கிறான். அதனால், உனக்குப் பொய் சொல்ல வராது ! ஏ.ஜீ.ஆபீஸ் வேலையில் சேர்ந்துவிடு"
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சூரியன் உச்சத்தில் இருக்கிறானாமே? என் ஜாதகத்தைப் பெரியவா பார்த்ததே இல்லையே !
|
|
|
Post by padhu on Apr 4, 2020 20:21:12 GMT 5.5
Ellam therindha Mahan allava avar.
|
|