Post by radha on Jul 20, 2012 9:26:22 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI 7-சந்திரசேகரம்–இந்திரா-செளந்தர்ராஜன்
மடத்தின் கடனை அடைக்க வேண்டும் என்கிற பிரயாசை, அன்றைய இளையவரை, தஞ்சாவூர் சென்று சரபோஜியின் பிள்ளையான சிவாஜியை பார்த்து உதவியை கேட்கச் செய்தது. ஆனால், அவரோ ‘தனக்கு வசதிப்படாது. தன் நிர்வாகமே சிரமத்தில் இருக்கிறது ’என்பதுபோல கூறி அனுப்பிவிட்டார்.
இளையவர் இதை கொஞ்சம்கூட எதிர்பாக்கவில்லை. பெரும் ஏமாற்றமாகி விட்டது.
கிட்டத்தட்ட இடிந்த கோயிலை கட்டுவதற்காக டொனேஷன் கேட்டு, ஒருவரிடம் செல்ல, அவர் மறுதலித்துப் பேசும் போது, நமக்கு ஏற்படுமே அப்படி ஒரு ஏமாற்றம்தான் இது!
நமக்கு இது தாங்கும். சில நாட்களில் சரியாகிவிடும். ஆனால், இளையவர் போன்ற பீடாதிபதிகளை, இந்த மாதிரியான ஏமாற்றங்கள் பெரிதாகவே பாதிக்கும். ‘நாமே நேரில் போயும் காரியம் பலிதமாகவில்லையே…? என்றால், இந்த மடத்துக்கும், சங்கரர் வழி நடக்கும் சன்னியாசியான தமக்கும் மதிப்பில்லையா?
ஒருவேளை பொருள் கேட்டு, தான் செல்லாதிருந்தால் மதிக்கப்பட்டிருப் பேனோ? நேரில் சென்றது பிழையோ?’ இப்படி இளையவருக்குள் ஏராளமான கேள்விகள்!
மனபாரம் தாளாமல் பெரியவரிடம் அதை இறக்கவும், பெரியவர் அதற்கு சொன்ன பதிலில், அவரது முதிர்ச்சியும் தவசீலமும் தெரிந்தது.
போகட்டும் விடு… மடத்தை நாம் நடத்துவதாக கருதுவதே தவறு! அந்த சந்திரமௌலியும், காமாட்சியுமல்லவா வழிநடத்துகிறார்கள். எனவே, இதை அவளிடம் விட்டுவிட்டு, நாம் நம் கடமையைச் செய்வோம். இதற்கு மேல் இது குறித்து கவலைப்படுவது நமக்கு அழகல்ல. அது நமக்கு தெளிவில்லை என்றாகிவிடும்” என்றாராம்.
இளையவர் துறவுக்குப் புதியவர். அதே சமயம் வயதில் இளையவர். இதனால் லௌகீகமா காம்யார்த்தமாய் யோசித்து செயல்பட்டுவிட்டார். பெரிய வரும் அதற்காக அவரை கோபிக்காமல் ஆற்றுப்படுத்தினார். அப்படிச் செயல்படும்போது, தம் அனுபவத்தையும் அதில் காட்டினார்.
உச்சபட்சமாக அவர் சொன்னது, ‘இந்த மடத்தை நாம் எங்கே வழி நடத்துகிறோம்? அந்த சந்திரமௌலியும் காமாட்சியுமல்லவா வழி நடத்துகிறார்கள்!’ என்றதுதான்!
இது ஒருவித சரணாகதி…
இதுதான் உண்மையில் நான் என்கிற பற்றறுத்த நிலைப்பாடு.
இதுவே உத்தமத்துறவியின் லட்சணம். (இன்று இப்படியா உள்ளது?)
நமது பெரியவர் வரையிலும்கூட இப்படி ஒரு விஷயம் நடைபெற்றது. அதை சிந்தித்துவிட்டு, பிறகு, சென்ற நூற்றாண்டு விஷயத்துக்கு செல்வது உசிதம் என்று படுகிறது. ஏனென்றால், இந்த இடத்தை விட்டுவிட்டால், இப்போது சொல்லப்போகும் விஷயத்தைச் சொல்ல, ஒரு சரியான இடம் கிடைக்காமல் போகலாம்.
ஒரு கிராமத்தில் பெரியவர் முகாமிட்டிருந்த சமயம். துடைத்துப் போட்ட மாதிரி, எல்லா உணவுப் பொருட்களும் தீர்ந்துவிட்டிருந்தன. காரியதரிசியும், பரிசாரகரும் (சமையல் செய்பவர்) பெரியவரிடம் வந்து தெரிவித்தனர்.
இன்று இரவுப் பொழுதை எப்படியாவது கடத்திவிடலாம். நாளைக்கு மடத்தில் தம்பிடிகூட அரிசி பருப்பில்லை” என்ற அவர்கள் குரலில் பெரும் வருத்தம்.
ஆனால், பெரியவர் அதைக்கேட்டு வருத்தப்படவில்லை.
‘அப்படியா?’ என்று, மற்ற விஷயங்களைச் சொல்லும்போது கேட்டுக் கொள்வதுபோலதான் கேட்டுக்கொண்டாராம்!
அவர்களுக்கோ, ‘என்ன இப்படி இருக்கிறார். காஞ்சிபுரத்துக்கோ, இல்லை பெரியவர் சொன்னால், செய்ய தயாராக உள்ள தனவான்களுக்கோ, தகவல் அனுப்பினால் அல்லவா, இந்த சிக்கலில் இருந்து மீள முடியும்’ என்று கவலை.
நன்றாகக் கவனியுங்கள். இவர்களும் அம்பாள் பார்த்துக்கொள்வாள் என்று நினைக்கவில்லை. நினைக்கவும் முடியாது. ஏனென்றால், இது விஞ்ஞான காலம். அற்புதங்கள் எல்லாம் கதை கட்டுரைகளில்தான் சாத்தியம் என்கிற அளவுக்கே நம் நம்பிக்கையின் வீர்யம் உள்ளது.
ஆனால், பெரியவரோ, “காமாட்சி பார்த்துக்கொள்வாள் கவலையை விடு” என்று கூறிவிட்டு, தியானத்தில் உட்கார்ந்துவிட்டாராம்.
அவர்களால் பெரியவரிடம் போய் மல்லுக்கு நிற்க முடியவில்லை. பதட்டத்தோடு பொழுதும் விடிந்தது. அதிசயம் போல, ஒரு வண்டி நிறைய அரிசி, பருப்பு, காகறிகள், பழம் என்று வந்து இறங்கியது. ‘யார் அனுப்பினார்கள் இதை?’ என்ற கேள்விக்குக் கிடைத்த விடையில்தான், அற்புதங்கள் இந்த நாளிலும் நடக்க முடியும் என்பதற்கான விஷயம் உள்ளது.
பக்கத்து கிராமத்தில் ஒரு திருமணம் நடக்க இருந்தது. அந்த திருமண விருந்துக்கான உணவுப் பொருட்கள்தான் அவை எல்லாம். ஆனால், கடைசி நிமிடத்தில் மாப்பிள்ளைப் பையனுக்கு அம்மை போட்டதில் கல்யாணம் செய்ய முடியாத நிலை.
வாங்கிவிட்ட அவ்வளவையும் என்ன செய்வது? என்று யோசித்தபோது, மடம் வந்து முகாமிட்டிருப்பது, அந்தத் திருமண வீட்டைச் சேர்ந்த பெரியவருக்கு தெரிய வந்தது. மடத்தில் தினமும் அன்னபோஷணம் நடப்பதை தெரிந்து வைத்திருந்த அவர், இதை மடத்துக்கு கொடுத்துவிடுவோம். வீணாகாமல் நல்ல விதமாய் பயன்படும் என்று கருதி, வண்டியோடு அவ்வளவு சரக்கையும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டார்.
மூட்டையில் அரிசி, கூடைகூடையாக காய்கறி, பழங்கள், பருப்பு, எண்ணெய் என்று சகலமும் வந்து இறங்கியதைப் பார்த்த காரியதரிசியும் பரிசாரகரும் திகைத்துப்போய், பெரியவரிடம் கூறவும் சிரித்த பெரியவர், காமாட்சி பாத்துப் பானப்போ உனக்கு என் மேலகூட கோபம் வந்துருக்கும். ஆனால், இப்ப என்ன சொல்றே?” என்று கேட்டாராம். அவர்களால் பதிலுக்கு என்ன சொல்ல முடியும், சிலிர்ப்பதைத் தவிர…!
ஒரு விஷயத்தில் குழப்பமே இல்லாமல், நூறு சதவிகிதம் நம்புவது என்பதில் தான் அற்புதங்கள் நிகழ்கின்றன.
இந்த வகை நம்பிக்கையைத்தான், ‘நம்பினார் கெடுவதில்லை. நான்கு மறைதீர்ப்பு’ என்றனர் சான்றோர்.MAHA PERIVA.
Kanchi Maha Periva Thiruvadigal Saranam
மடத்தின் கடனை அடைக்க வேண்டும் என்கிற பிரயாசை, அன்றைய இளையவரை, தஞ்சாவூர் சென்று சரபோஜியின் பிள்ளையான சிவாஜியை பார்த்து உதவியை கேட்கச் செய்தது. ஆனால், அவரோ ‘தனக்கு வசதிப்படாது. தன் நிர்வாகமே சிரமத்தில் இருக்கிறது ’என்பதுபோல கூறி அனுப்பிவிட்டார்.
இளையவர் இதை கொஞ்சம்கூட எதிர்பாக்கவில்லை. பெரும் ஏமாற்றமாகி விட்டது.
கிட்டத்தட்ட இடிந்த கோயிலை கட்டுவதற்காக டொனேஷன் கேட்டு, ஒருவரிடம் செல்ல, அவர் மறுதலித்துப் பேசும் போது, நமக்கு ஏற்படுமே அப்படி ஒரு ஏமாற்றம்தான் இது!
நமக்கு இது தாங்கும். சில நாட்களில் சரியாகிவிடும். ஆனால், இளையவர் போன்ற பீடாதிபதிகளை, இந்த மாதிரியான ஏமாற்றங்கள் பெரிதாகவே பாதிக்கும். ‘நாமே நேரில் போயும் காரியம் பலிதமாகவில்லையே…? என்றால், இந்த மடத்துக்கும், சங்கரர் வழி நடக்கும் சன்னியாசியான தமக்கும் மதிப்பில்லையா?
ஒருவேளை பொருள் கேட்டு, தான் செல்லாதிருந்தால் மதிக்கப்பட்டிருப் பேனோ? நேரில் சென்றது பிழையோ?’ இப்படி இளையவருக்குள் ஏராளமான கேள்விகள்!
மனபாரம் தாளாமல் பெரியவரிடம் அதை இறக்கவும், பெரியவர் அதற்கு சொன்ன பதிலில், அவரது முதிர்ச்சியும் தவசீலமும் தெரிந்தது.
போகட்டும் விடு… மடத்தை நாம் நடத்துவதாக கருதுவதே தவறு! அந்த சந்திரமௌலியும், காமாட்சியுமல்லவா வழிநடத்துகிறார்கள். எனவே, இதை அவளிடம் விட்டுவிட்டு, நாம் நம் கடமையைச் செய்வோம். இதற்கு மேல் இது குறித்து கவலைப்படுவது நமக்கு அழகல்ல. அது நமக்கு தெளிவில்லை என்றாகிவிடும்” என்றாராம்.
இளையவர் துறவுக்குப் புதியவர். அதே சமயம் வயதில் இளையவர். இதனால் லௌகீகமா காம்யார்த்தமாய் யோசித்து செயல்பட்டுவிட்டார். பெரிய வரும் அதற்காக அவரை கோபிக்காமல் ஆற்றுப்படுத்தினார். அப்படிச் செயல்படும்போது, தம் அனுபவத்தையும் அதில் காட்டினார்.
உச்சபட்சமாக அவர் சொன்னது, ‘இந்த மடத்தை நாம் எங்கே வழி நடத்துகிறோம்? அந்த சந்திரமௌலியும் காமாட்சியுமல்லவா வழி நடத்துகிறார்கள்!’ என்றதுதான்!
இது ஒருவித சரணாகதி…
இதுதான் உண்மையில் நான் என்கிற பற்றறுத்த நிலைப்பாடு.
இதுவே உத்தமத்துறவியின் லட்சணம். (இன்று இப்படியா உள்ளது?)
நமது பெரியவர் வரையிலும்கூட இப்படி ஒரு விஷயம் நடைபெற்றது. அதை சிந்தித்துவிட்டு, பிறகு, சென்ற நூற்றாண்டு விஷயத்துக்கு செல்வது உசிதம் என்று படுகிறது. ஏனென்றால், இந்த இடத்தை விட்டுவிட்டால், இப்போது சொல்லப்போகும் விஷயத்தைச் சொல்ல, ஒரு சரியான இடம் கிடைக்காமல் போகலாம்.
ஒரு கிராமத்தில் பெரியவர் முகாமிட்டிருந்த சமயம். துடைத்துப் போட்ட மாதிரி, எல்லா உணவுப் பொருட்களும் தீர்ந்துவிட்டிருந்தன. காரியதரிசியும், பரிசாரகரும் (சமையல் செய்பவர்) பெரியவரிடம் வந்து தெரிவித்தனர்.
இன்று இரவுப் பொழுதை எப்படியாவது கடத்திவிடலாம். நாளைக்கு மடத்தில் தம்பிடிகூட அரிசி பருப்பில்லை” என்ற அவர்கள் குரலில் பெரும் வருத்தம்.
ஆனால், பெரியவர் அதைக்கேட்டு வருத்தப்படவில்லை.
‘அப்படியா?’ என்று, மற்ற விஷயங்களைச் சொல்லும்போது கேட்டுக் கொள்வதுபோலதான் கேட்டுக்கொண்டாராம்!
அவர்களுக்கோ, ‘என்ன இப்படி இருக்கிறார். காஞ்சிபுரத்துக்கோ, இல்லை பெரியவர் சொன்னால், செய்ய தயாராக உள்ள தனவான்களுக்கோ, தகவல் அனுப்பினால் அல்லவா, இந்த சிக்கலில் இருந்து மீள முடியும்’ என்று கவலை.
நன்றாகக் கவனியுங்கள். இவர்களும் அம்பாள் பார்த்துக்கொள்வாள் என்று நினைக்கவில்லை. நினைக்கவும் முடியாது. ஏனென்றால், இது விஞ்ஞான காலம். அற்புதங்கள் எல்லாம் கதை கட்டுரைகளில்தான் சாத்தியம் என்கிற அளவுக்கே நம் நம்பிக்கையின் வீர்யம் உள்ளது.
ஆனால், பெரியவரோ, “காமாட்சி பார்த்துக்கொள்வாள் கவலையை விடு” என்று கூறிவிட்டு, தியானத்தில் உட்கார்ந்துவிட்டாராம்.
அவர்களால் பெரியவரிடம் போய் மல்லுக்கு நிற்க முடியவில்லை. பதட்டத்தோடு பொழுதும் விடிந்தது. அதிசயம் போல, ஒரு வண்டி நிறைய அரிசி, பருப்பு, காகறிகள், பழம் என்று வந்து இறங்கியது. ‘யார் அனுப்பினார்கள் இதை?’ என்ற கேள்விக்குக் கிடைத்த விடையில்தான், அற்புதங்கள் இந்த நாளிலும் நடக்க முடியும் என்பதற்கான விஷயம் உள்ளது.
பக்கத்து கிராமத்தில் ஒரு திருமணம் நடக்க இருந்தது. அந்த திருமண விருந்துக்கான உணவுப் பொருட்கள்தான் அவை எல்லாம். ஆனால், கடைசி நிமிடத்தில் மாப்பிள்ளைப் பையனுக்கு அம்மை போட்டதில் கல்யாணம் செய்ய முடியாத நிலை.
வாங்கிவிட்ட அவ்வளவையும் என்ன செய்வது? என்று யோசித்தபோது, மடம் வந்து முகாமிட்டிருப்பது, அந்தத் திருமண வீட்டைச் சேர்ந்த பெரியவருக்கு தெரிய வந்தது. மடத்தில் தினமும் அன்னபோஷணம் நடப்பதை தெரிந்து வைத்திருந்த அவர், இதை மடத்துக்கு கொடுத்துவிடுவோம். வீணாகாமல் நல்ல விதமாய் பயன்படும் என்று கருதி, வண்டியோடு அவ்வளவு சரக்கையும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டார்.
மூட்டையில் அரிசி, கூடைகூடையாக காய்கறி, பழங்கள், பருப்பு, எண்ணெய் என்று சகலமும் வந்து இறங்கியதைப் பார்த்த காரியதரிசியும் பரிசாரகரும் திகைத்துப்போய், பெரியவரிடம் கூறவும் சிரித்த பெரியவர், காமாட்சி பாத்துப் பானப்போ உனக்கு என் மேலகூட கோபம் வந்துருக்கும். ஆனால், இப்ப என்ன சொல்றே?” என்று கேட்டாராம். அவர்களால் பதிலுக்கு என்ன சொல்ல முடியும், சிலிர்ப்பதைத் தவிர…!
ஒரு விஷயத்தில் குழப்பமே இல்லாமல், நூறு சதவிகிதம் நம்புவது என்பதில் தான் அற்புதங்கள் நிகழ்கின்றன.
இந்த வகை நம்பிக்கையைத்தான், ‘நம்பினார் கெடுவதில்லை. நான்கு மறைதீர்ப்பு’ என்றனர் சான்றோர்.MAHA PERIVA.
Kanchi Maha Periva Thiruvadigal Saranam