Post by radha on Jan 19, 2020 9:56:06 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
கேட்ட வரம் கிடைத்தது
ஜனவரி 16,2020,17:21 IST
காலம் சென்ற எழுத்தாளர் அநுத்தமா என்ற ராஜேஸ்வரி, காஞ்சி மகாசுவாமிகளின் பக்தை. பத்மநாபனை 12 வயதிலேயே கரம் பிடித்தவர். மாமனார் தன் மகளாகக் கருதி பாசம் காட்டினார். மருமகள் எழுதத் தொடங்கிய போது ஆதரவு கொடுத்தவர் மாமனார் தான். 'அநுத்தமா' என பெயர் சூட்டியவரும் அவரே. லலிதா சஹஸ்ர நாமத்தில் வரும் அம்பிகையின் ஆயிரம் திருநாமங்களில் அநுத்தமா என்பதும் ஒன்று.
மாமனாரிடம் கல்வி கற்ற அநுத்தமாவின் ஆங்கிலப் புலமை அபாரமானது. எழுத்தாளர் தி.ஜானகிராமன் காலமான போது, சென்னை தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம் இரங்கல் கூட்டம் நடத்தியது. அதில் தி.ஜானகிராமனின் ரசிகர்களான ஆங்கிலேயர்கள் சிலரும் பங்கேற்றனர். அப்போது சி.சு.செல்லப்பா, க.நா.சுப்பிரமணியம், தீபம் நா.பார்த்தசாரதி போன்ற எழுத்தாளர்கள் முன்னிலையில் அநுத்தமா ஆங்கிலத்தில் பேசினார்.
'மணல் வீடு, நைந்த உள்ளம், தவம், நல்லதோர் வீணை, வேப்பமரத்துப் பங்களா, அங்கயற்கண்ணி' நாவல்களை எழுதி வாசகர் களின் பேரன்பைப் பெற்றவர் அநுத்தமா. ஒரு நாவல் மூலம் மகாசுவாமிகளின் மனதிலும் இடம் பிடித்தார். அந்த நாவல் 'கேட்டவரம்'. கேட்டவரம் பாளையம் என்னும் ஊரிலுள்ள பஜனை சம்பிரதாயம் பற்றிப் பேசும் படைப்பு அது.
அநுத்தமாவை அழைத்து பாராட்டினார் சுவாமிகள். அப்போது அவர் அடைந்த மனநிறைவுக்கு அளவில்லை.
தனக்கு நிம்மதியான மரணம் கிடைக்க வேண்டும் என சுவாமி களிடம் வேண்டினார் அநுத்தமா. சுவாமிகள் ஸித்தி அடைந்த பின்னர் அவரது திருவடியைச் சரணடைந்து வாழ்ந்தார்.
2010 டிச.3 இரவு 8:44 மணி வரை பேசிக் கொண்டிருந்த அநுத்தமா, 8:45க்குக் காலமாகி விட்டார். 'நல்ல ஆன்மாக்கள், கனிந்த பழம் மரத்திலிருந்து தானே நழுவி விழுவது மாதிரி மரணமடைவர்' என மூதறிஞர் ராஜாஜி குறிப்பிட்டுள்ளார். அநுத்தமா வாழ்வில் அது உண்மையாயிற்று. 'கேட்டவரம்' நாவலுக்காக சுவாமிகளின் பாராட்டைப் பெற்ற அநுத்தமாவுக்கு கேட்ட வரம் கிடைத்தது நிஜம் தானே!
திருப்பூர் கிருஷ்ணன்
உபதேசங்கள்
* நாடு செழிக்க பசுவை நேசியுங்கள்.
* தாய் மதம், தாய் மொழி, தாய் நாட்டை நேசியுங்கள்.
* பட்டு ஆடை உடுத்தாமல், பருத்தி ஆடை உடுத்துங்கள்.
* காபி, டீ குடிப்பதை தவிருங்கள்.
* மனதை பாழ்படுத்தும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற...
காஞ்சிப்பெரியவர் அருளிய ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
பொருள்: பரம்பொருளே! எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! மகத்துவம் கொண்டவரே! நீயே நோய்களைப் போக்கி எனக்கு நலம் தர வேண்டும்.
Advertisement
Tweet
மேலும் ஆன்மிக கட்டுரைகள் தினமலர் முதல் பக்கம்
கேட்ட வரம் கிடைத்தது
ஜனவரி 16,2020,17:21 IST
காலம் சென்ற எழுத்தாளர் அநுத்தமா என்ற ராஜேஸ்வரி, காஞ்சி மகாசுவாமிகளின் பக்தை. பத்மநாபனை 12 வயதிலேயே கரம் பிடித்தவர். மாமனார் தன் மகளாகக் கருதி பாசம் காட்டினார். மருமகள் எழுதத் தொடங்கிய போது ஆதரவு கொடுத்தவர் மாமனார் தான். 'அநுத்தமா' என பெயர் சூட்டியவரும் அவரே. லலிதா சஹஸ்ர நாமத்தில் வரும் அம்பிகையின் ஆயிரம் திருநாமங்களில் அநுத்தமா என்பதும் ஒன்று.
மாமனாரிடம் கல்வி கற்ற அநுத்தமாவின் ஆங்கிலப் புலமை அபாரமானது. எழுத்தாளர் தி.ஜானகிராமன் காலமான போது, சென்னை தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம் இரங்கல் கூட்டம் நடத்தியது. அதில் தி.ஜானகிராமனின் ரசிகர்களான ஆங்கிலேயர்கள் சிலரும் பங்கேற்றனர். அப்போது சி.சு.செல்லப்பா, க.நா.சுப்பிரமணியம், தீபம் நா.பார்த்தசாரதி போன்ற எழுத்தாளர்கள் முன்னிலையில் அநுத்தமா ஆங்கிலத்தில் பேசினார்.
'மணல் வீடு, நைந்த உள்ளம், தவம், நல்லதோர் வீணை, வேப்பமரத்துப் பங்களா, அங்கயற்கண்ணி' நாவல்களை எழுதி வாசகர் களின் பேரன்பைப் பெற்றவர் அநுத்தமா. ஒரு நாவல் மூலம் மகாசுவாமிகளின் மனதிலும் இடம் பிடித்தார். அந்த நாவல் 'கேட்டவரம்'. கேட்டவரம் பாளையம் என்னும் ஊரிலுள்ள பஜனை சம்பிரதாயம் பற்றிப் பேசும் படைப்பு அது.
அநுத்தமாவை அழைத்து பாராட்டினார் சுவாமிகள். அப்போது அவர் அடைந்த மனநிறைவுக்கு அளவில்லை.
தனக்கு நிம்மதியான மரணம் கிடைக்க வேண்டும் என சுவாமி களிடம் வேண்டினார் அநுத்தமா. சுவாமிகள் ஸித்தி அடைந்த பின்னர் அவரது திருவடியைச் சரணடைந்து வாழ்ந்தார்.
2010 டிச.3 இரவு 8:44 மணி வரை பேசிக் கொண்டிருந்த அநுத்தமா, 8:45க்குக் காலமாகி விட்டார். 'நல்ல ஆன்மாக்கள், கனிந்த பழம் மரத்திலிருந்து தானே நழுவி விழுவது மாதிரி மரணமடைவர்' என மூதறிஞர் ராஜாஜி குறிப்பிட்டுள்ளார். அநுத்தமா வாழ்வில் அது உண்மையாயிற்று. 'கேட்டவரம்' நாவலுக்காக சுவாமிகளின் பாராட்டைப் பெற்ற அநுத்தமாவுக்கு கேட்ட வரம் கிடைத்தது நிஜம் தானே!
திருப்பூர் கிருஷ்ணன்
உபதேசங்கள்
* நாடு செழிக்க பசுவை நேசியுங்கள்.
* தாய் மதம், தாய் மொழி, தாய் நாட்டை நேசியுங்கள்.
* பட்டு ஆடை உடுத்தாமல், பருத்தி ஆடை உடுத்துங்கள்.
* காபி, டீ குடிப்பதை தவிருங்கள்.
* மனதை பாழ்படுத்தும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற...
காஞ்சிப்பெரியவர் அருளிய ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
பொருள்: பரம்பொருளே! எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! மகத்துவம் கொண்டவரே! நீயே நோய்களைப் போக்கி எனக்கு நலம் தர வேண்டும்.
Advertisement
Tweet
மேலும் ஆன்மிக கட்டுரைகள் தினமலர் முதல் பக்கம்