Post by radha on Oct 20, 2019 20:13:03 GMT 5.5
OM SRI GURUPNAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
மொதல்ல கயாவுக்கு போ!...
ஒருவர், மந்த்ராலயம் செல்வதற்காக பாம்பே மெயிலில் ஏறி உட்கார்ந்து கொண்டார்.
ரயில் தாலாட்டிய ஸுகத்தில் தூங்கிவிட்டார்! இரவு... அகாலத்தில், தூக்கக் கலக்கத்தில், மந்த்ராலயம் வந்துவிட்டது என்றெண்ணி, ஏதோ ஒரு ஸ்டேஷனில் இறங்கிவிட்டார்.
Train கிளம்பியதும் பார்த்தால்...
குண்டக்கல்!
தெலுங்கு, ஆங்கில எழுத்து கண்களில் பளிச்சென்று தெரிந்தது!
"அட, தேவுடா! எங்கியோ போய் எறங்கிட்டேனே!"
தன்னையே நொந்து கொண்டார். அதே platform-ல் மற்றொரு கோஷ்டி, தமிழ் பேசிக் கொண்டு நின்றது.
"ஸார்.... நீங்கள்ளாம் எங்க போறேள்?...... நா.... மந்த்ராலயம் போகணும். தப்பா குண்டக்கல்-ல எறங்கிட்டேன். அடுத்த train எப்போன்னு தெரியுமா?..."
"கவலப்படாதீங்கோ ஸார்! நாங்க.... பெரியவாளை தர்ஶனம் பண்றதுக்காக ஹகரி போறோம்.... பெரியவா ஸங்கல்பம்... ஒங்கள... இங்க எறக்கி விட்ருக்கு! எங்களோட வந்து பெரியவாளை தர்ஶனம் பண்ணிட்டு அப்றமா.... மந்த்ராலயம் போகலாமே!..."
பெரியவாளை.. இவர் தர்ஶிப்பது, இதுவே முதல் முறை!
எல்லோரும் வரிஸையாக நமஸ்காரம் பண்ணியதும், மந்த்ராலயத்தின் முறை வந்தது.
"இவர்..... இங்க வரதா இல்லியே? நீங்க அழைச்சிண்டு வந்தேளா?"
தூக்கிவாரிப் போட்டது!
"நா... பெரியவாளைப் பாக்காம.... மந்த்ராலயம் போகணும்னு நெனைச்சேன்...! அதான், நேர அங்க போக முடியாமப் போய்டுத்து"
பெரியவா அவரை அருகில் அழைத்து மெல்லிய குரலில் ஏதோ பேசினார்.
அவ்வளவுதான்! மயக்கம் போடாத குறையாய் அஸந்து போய் நின்றார் மந்த்ராலயம்...!
"என்ன ஸார்? என்னாச்சு? பெரியவா என்ன சொன்னா?..."
பெரியவா கேட்டது இதுதான்..............
"ஒங்கம்மா... கெணத்துல விழுந்து தற்கொலை பண்ணிண்டாளா?"
முதல் தடவை பார்த்து, முதல் முதலாக கேட்ட கேள்வியிலேயே மந்த்ராலயம் அதிர்ச்சி அடைந்தார்.
ஒப்புக்கொண்டார்.
"எவ்ளோ ஸீக்ரமா முடியுமோ, அவ்ளோ ஸீக்ரமா, கயா-க்குப் போயி... ஒங்கம்மாக்கு ஶ்ராத்தம் பண்ணு..! அவளுக்கு ஸத்கதி கெடைக்கும்"
என்ன ஒரு தீர்மானமான அனுக்ரஹம்!
"கெணத்துல விழுந்து உஸுரை விட்ட அவர் அம்மாவோட ஆவி, தான் நிர்கதியாத் தவிச்சுண்டு இருக்கறதை சொல்லி, தனக்கு விமோசனம் கேட்டுப் பெரியவாகிட்ட ப்ரார்த்தனை பண்ணியிருக்கும்.! அதான், மந்த்ராலயம் போக இருந்த பிள்ளையாண்டானை குண்டக்கல்-ல எறங்கப் பண்ணி, தங்கிட்ட வரவழைச்சிண்டா... பெரியவா"
ஒரு பரம பக்தர், நெகிழ்ச்சியோடு கூறினார்.
உண்மைதான். நாம் நம்புகிறோமோ இல்லையோ, நாம் காஶி, கயா யாத்திரை செல்லப்போவதாக ஸங்கல்பம் செய்து கொண்டதுமே, நம்முடைய பித்ருக்கள் ஸந்தோஷமடைந்து, கயாவில் நாம் தரப்போகும் பிண்டத்திற்காக காத்திருப்பார்கள்.
ஸ்ரீ ராகவேந்த்ர ஸ்வாமிகளுடைய பூர்வாஶ்ரம மனைவி, அவருடைய பிரிவைத் தாங்காமல் ப்ராணஹத்தி பண்ணிக்கொண்டு, ஸ்வாமிகள் முன்னால் ஆவி ரூபத்தில் வந்து அரற்றியதும், ஸ்வாமிகள் அவள் மேல் தன் கமண்டல தீர்த்தத்தை தெளித்து நல்ல கதியை அளித்தாரே!
வேறு வேறு காலங்களில், வேறு வேறு மஹான்களின் ரூபத்தில் தெய்வம் தோன்றினாலும், அந்த தெய்வத்தன்மை எக்காலத்திலும் மாறாது.
அந்த தெய்வத்தின் பலகோடி படைப்புகளில் ஒன்றான ஆறறிவு மனிதனுடைய அஹங்காரம் அழிந்தால், அனைத்தையும் அறிந்த அறிவுக்கறிவான தெய்வம், தெய்வமே! என்பதை புரிந்து கொள்வதோடு மட்டுமில்லாமல், அந்த தெய்வமாகவே ஆகிவிடலாம் என்பதையும் உணர்வான்.
ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
FROM FB MESSAGE
மொதல்ல கயாவுக்கு போ!...
ஒருவர், மந்த்ராலயம் செல்வதற்காக பாம்பே மெயிலில் ஏறி உட்கார்ந்து கொண்டார்.
ரயில் தாலாட்டிய ஸுகத்தில் தூங்கிவிட்டார்! இரவு... அகாலத்தில், தூக்கக் கலக்கத்தில், மந்த்ராலயம் வந்துவிட்டது என்றெண்ணி, ஏதோ ஒரு ஸ்டேஷனில் இறங்கிவிட்டார்.
Train கிளம்பியதும் பார்த்தால்...
குண்டக்கல்!
தெலுங்கு, ஆங்கில எழுத்து கண்களில் பளிச்சென்று தெரிந்தது!
"அட, தேவுடா! எங்கியோ போய் எறங்கிட்டேனே!"
தன்னையே நொந்து கொண்டார். அதே platform-ல் மற்றொரு கோஷ்டி, தமிழ் பேசிக் கொண்டு நின்றது.
"ஸார்.... நீங்கள்ளாம் எங்க போறேள்?...... நா.... மந்த்ராலயம் போகணும். தப்பா குண்டக்கல்-ல எறங்கிட்டேன். அடுத்த train எப்போன்னு தெரியுமா?..."
"கவலப்படாதீங்கோ ஸார்! நாங்க.... பெரியவாளை தர்ஶனம் பண்றதுக்காக ஹகரி போறோம்.... பெரியவா ஸங்கல்பம்... ஒங்கள... இங்க எறக்கி விட்ருக்கு! எங்களோட வந்து பெரியவாளை தர்ஶனம் பண்ணிட்டு அப்றமா.... மந்த்ராலயம் போகலாமே!..."
பெரியவாளை.. இவர் தர்ஶிப்பது, இதுவே முதல் முறை!
எல்லோரும் வரிஸையாக நமஸ்காரம் பண்ணியதும், மந்த்ராலயத்தின் முறை வந்தது.
"இவர்..... இங்க வரதா இல்லியே? நீங்க அழைச்சிண்டு வந்தேளா?"
தூக்கிவாரிப் போட்டது!
"நா... பெரியவாளைப் பாக்காம.... மந்த்ராலயம் போகணும்னு நெனைச்சேன்...! அதான், நேர அங்க போக முடியாமப் போய்டுத்து"
பெரியவா அவரை அருகில் அழைத்து மெல்லிய குரலில் ஏதோ பேசினார்.
அவ்வளவுதான்! மயக்கம் போடாத குறையாய் அஸந்து போய் நின்றார் மந்த்ராலயம்...!
"என்ன ஸார்? என்னாச்சு? பெரியவா என்ன சொன்னா?..."
பெரியவா கேட்டது இதுதான்..............
"ஒங்கம்மா... கெணத்துல விழுந்து தற்கொலை பண்ணிண்டாளா?"
முதல் தடவை பார்த்து, முதல் முதலாக கேட்ட கேள்வியிலேயே மந்த்ராலயம் அதிர்ச்சி அடைந்தார்.
ஒப்புக்கொண்டார்.
"எவ்ளோ ஸீக்ரமா முடியுமோ, அவ்ளோ ஸீக்ரமா, கயா-க்குப் போயி... ஒங்கம்மாக்கு ஶ்ராத்தம் பண்ணு..! அவளுக்கு ஸத்கதி கெடைக்கும்"
என்ன ஒரு தீர்மானமான அனுக்ரஹம்!
"கெணத்துல விழுந்து உஸுரை விட்ட அவர் அம்மாவோட ஆவி, தான் நிர்கதியாத் தவிச்சுண்டு இருக்கறதை சொல்லி, தனக்கு விமோசனம் கேட்டுப் பெரியவாகிட்ட ப்ரார்த்தனை பண்ணியிருக்கும்.! அதான், மந்த்ராலயம் போக இருந்த பிள்ளையாண்டானை குண்டக்கல்-ல எறங்கப் பண்ணி, தங்கிட்ட வரவழைச்சிண்டா... பெரியவா"
ஒரு பரம பக்தர், நெகிழ்ச்சியோடு கூறினார்.
உண்மைதான். நாம் நம்புகிறோமோ இல்லையோ, நாம் காஶி, கயா யாத்திரை செல்லப்போவதாக ஸங்கல்பம் செய்து கொண்டதுமே, நம்முடைய பித்ருக்கள் ஸந்தோஷமடைந்து, கயாவில் நாம் தரப்போகும் பிண்டத்திற்காக காத்திருப்பார்கள்.
ஸ்ரீ ராகவேந்த்ர ஸ்வாமிகளுடைய பூர்வாஶ்ரம மனைவி, அவருடைய பிரிவைத் தாங்காமல் ப்ராணஹத்தி பண்ணிக்கொண்டு, ஸ்வாமிகள் முன்னால் ஆவி ரூபத்தில் வந்து அரற்றியதும், ஸ்வாமிகள் அவள் மேல் தன் கமண்டல தீர்த்தத்தை தெளித்து நல்ல கதியை அளித்தாரே!
வேறு வேறு காலங்களில், வேறு வேறு மஹான்களின் ரூபத்தில் தெய்வம் தோன்றினாலும், அந்த தெய்வத்தன்மை எக்காலத்திலும் மாறாது.
அந்த தெய்வத்தின் பலகோடி படைப்புகளில் ஒன்றான ஆறறிவு மனிதனுடைய அஹங்காரம் அழிந்தால், அனைத்தையும் அறிந்த அறிவுக்கறிவான தெய்வம், தெய்வமே! என்பதை புரிந்து கொள்வதோடு மட்டுமில்லாமல், அந்த தெய்வமாகவே ஆகிவிடலாம் என்பதையும் உணர்வான்.
ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
FROM FB MESSAGE