Post by radha on Jul 14, 2012 2:35:34 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
நீதிமன்ற ஹெட்க்ளார்க் ஒருவர் பெரியவாளிடம் மிகுந்த பக்தி கொண்டவர். ஒரு அனுஷத்தன்று காமாக்ஷி கோவிலில் த்ரிசதி அர்ச்சனை பண்ணிவிட்டு ப்ரசாதத்தை பெரியவாளிடம் சமர்ப்பிக்கச் சென்றார். அப்போது நல்ல கூட்டம். பெரியவா திடீரென்று "சிரஸ்தாரை கூப்டு!" என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்த பாரிஷதரிடம் சொன்னார். சிரஸ்தார் என்றால் யாருக்கு தெரியும்? கூட்டத்தில் ஏக காலத்தில் "சிரஸ்தார்! சிரஸ்தார்!" என்று பல குரல்கள் ஒலித்தன. அதற்குள் யாரோ "கோர்ட் ஹெட்க்ளார்க்தான் இருக்கார்....சிரஸ்தார் யாரும் கெடையாது" என்று சொல்லிவிட்டு இந்த பக்தரை பெரியவா முன்னால் நிறுத்தினர்.
"பெரியவா.....நா,சிரஸ்தார் இல்லே...ஹெட் க்ளார்க்தான்...."
"ஓஹோ! ஏன்? நீ சிரஸ்தார் ஆகமுடியாதா?"
"நான் வெறும் SSLC தான் .....எனக்குக் கீழ BABL MABL படிச்சவா இருக்கா. கல்வித்தகுதில எனக்கு சான்ஸே கெடையாது ! அதுவும் இப்போ இருக்கற district ஜட்ஜ் கண்டிப்பா என்னை சிபார்சு பண்ணவே மாட்டார்"
ப்ரஸாதம் குடுத்து அனுப்பினார். சிலநாட்களில் சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து surprise inspection என்று சிலபேர் வந்தார்கள். இந்த பக்தரின் திறமையையும், உழைப்பையும் பார்த்துவிட்டு, "சிரஸ்தார் பதவிக்கு இவர்தான் தகுந்தவர்" என்று மேலதிகாரிக்கு ரகசிய அறிக்கை குடுத்தார்கள்! அடுத்த சில நாட்களில் இந்த பக்தருக்கு "சிரஸ்தார்" பதவிக்கான ஆர்டரே வந்துவிட்டது! ' இவருக்கு இல்லை.'..என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இது ஒரு பேரிடியாக இருந்தது!
அடுத்த அனுஷத்துக்கு பெரியவாளை தர்சிக்கப் போனபோது, காமாக்ஷி ப்ரசாதத்தை பெரியவாளிடம் சமர்ப்பிக்கையில் தலைமேல் கையை வைத்துக் காண்பித்து "சிரஸ்தார்..ன்னு இப்போ கூப்டலாமா?..." என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.
குருக்ருபை இருக்கையில் அசாத்யமும் சாத்யமே!
O.N. I think this is a repeat post in this forum,but worth to read again,I feel
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam
------------------------------------------------------------------
நீதிமன்ற ஹெட்க்ளார்க் ஒருவர் பெரியவாளிடம் மிகுந்த பக்தி கொண்டவர். ஒரு அனுஷத்தன்று காமாக்ஷி கோவிலில் த்ரிசதி அர்ச்சனை பண்ணிவிட்டு ப்ரசாதத்தை பெரியவாளிடம் சமர்ப்பிக்கச் சென்றார். அப்போது நல்ல கூட்டம். பெரியவா திடீரென்று "சிரஸ்தாரை கூப்டு!" என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்த பாரிஷதரிடம் சொன்னார். சிரஸ்தார் என்றால் யாருக்கு தெரியும்? கூட்டத்தில் ஏக காலத்தில் "சிரஸ்தார்! சிரஸ்தார்!" என்று பல குரல்கள் ஒலித்தன. அதற்குள் யாரோ "கோர்ட் ஹெட்க்ளார்க்தான் இருக்கார்....சிரஸ்தார் யாரும் கெடையாது" என்று சொல்லிவிட்டு இந்த பக்தரை பெரியவா முன்னால் நிறுத்தினர்.
"பெரியவா.....நா,சிரஸ்தார் இல்லே...ஹெட் க்ளார்க்தான்...."
"ஓஹோ! ஏன்? நீ சிரஸ்தார் ஆகமுடியாதா?"
"நான் வெறும் SSLC தான் .....எனக்குக் கீழ BABL MABL படிச்சவா இருக்கா. கல்வித்தகுதில எனக்கு சான்ஸே கெடையாது ! அதுவும் இப்போ இருக்கற district ஜட்ஜ் கண்டிப்பா என்னை சிபார்சு பண்ணவே மாட்டார்"
ப்ரஸாதம் குடுத்து அனுப்பினார். சிலநாட்களில் சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து surprise inspection என்று சிலபேர் வந்தார்கள். இந்த பக்தரின் திறமையையும், உழைப்பையும் பார்த்துவிட்டு, "சிரஸ்தார் பதவிக்கு இவர்தான் தகுந்தவர்" என்று மேலதிகாரிக்கு ரகசிய அறிக்கை குடுத்தார்கள்! அடுத்த சில நாட்களில் இந்த பக்தருக்கு "சிரஸ்தார்" பதவிக்கான ஆர்டரே வந்துவிட்டது! ' இவருக்கு இல்லை.'..என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இது ஒரு பேரிடியாக இருந்தது!
அடுத்த அனுஷத்துக்கு பெரியவாளை தர்சிக்கப் போனபோது, காமாக்ஷி ப்ரசாதத்தை பெரியவாளிடம் சமர்ப்பிக்கையில் தலைமேல் கையை வைத்துக் காண்பித்து "சிரஸ்தார்..ன்னு இப்போ கூப்டலாமா?..." என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.
குருக்ருபை இருக்கையில் அசாத்யமும் சாத்யமே!
O.N. I think this is a repeat post in this forum,but worth to read again,I feel
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam
------------------------------------------------------------------