Post by varagooran on Nov 19, 2018 5:58:18 GMT 5.5
"பார்த்துட்டேன், காமாட்சி பார்த்துட்டேன். ஜோதி ரூபத்துல உன்னைப் பார்த்துட்டேன்'-அலறிய பெண்மணி.
(ரெண்டு கண்ணும் பார்வையில்லாத பெண்மணிக்கு சகஸ்ராரத்துல ஜோதி தரிசனம் காட்டின பெரியவா).
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-30-11-2017 தேதியிட்ட குமுதம் பக்தி (ஒரு பகுதி)
திருவிசநல்லூர்னு ஒரு திருத்தலம் இருக்கிறது. பலருக்கும் தெரிஞ்சிருக்கும்.இந்த ஊர்லதான் ஸ்ரீதர் அய்யாவாள்ங்கற பக்தரோட வீட்டுக் கிணற்றுல கங்கை பெருகி வந்து அந்த ஊரையே வெள்ளமா நிறைச்சா.(மெம்பர்களுக்கு அந்த நாள் தான் கார்த்திகை அமாவாசை) அத்தனை பெருமை உடைய ஊர்.அந்த ஊர்ல ஒரு சமயம் முகாமிட்டிருந்தா மகாபெரியவா.
அந்த சமயத்துல ரெண்டு கண்ணுலயும் பார்வை இல்லாத ஒரு பெண்மணி பரமாசார்யாளை தரிசனம் பண்ண வந்திருந்தா.அவ தான் யாரு? மகாபெரியவாளை தரிசிக்க அங்கே வந்ததுக்கான காரணம் என்ன? எந்த விஷயத்தையும் யார்கிட்டேயும் சொல்லலை.
வரிசைல நின்னவா பலபேர் அவ பார்வை இழந்தவள்னு தெரிஞ்சதும், "வேணும்னா வரிசைல நிற்காம முன்னால போய் ஆசிர்வாதம் வாங்கிண்டு போங்கோ"ன்னு சொன்னா. ஆனா,அந்தப் பெண்மணி அதுக்கு ஒத்துக்கலை.
மகாபெரியவா பக்தர்களுக்கு தரிசனம் தர்றதுக்காக யதாஸ்தானத்துல வந்து உட்கார்ந்தார். அவரோட முதல் பார்வையே அந்தப் பெண்மணி மேல்தான் பதிஞ்சுது. உடனே தன் பக்கத்துல நின்னுண்டு இருந்த சீடன் ஒருத்தனைக் கூப்பிட்டார்.
"அதோ நிற்கறாளே அவா அம்பாளை ஸ்ரீசக்கர ரூபத்துல உபாசனை பண்ணறவா. நீ அவாளைக் கூட்டிண்டுபோய் உக்ராண அறைக்குப் பக்கத்துல இருக்க அறையில் தங்கிக்கச் சொல்லு. அப்புறமா நானே அங்கு வந்து தரிசனம் தரேன்னு சொல்லு" அப்படின்னார்.
பெரியவா சொன்னதை அப்படியே அந்தப் பெண்மணிகிட்டே போய் சொன்னார்,சீடர். அதைக் கேட்டதும் அவாளுக்கு ஒரே ஆச்சரியம்" நானே பெரியவா தனியா இருக்கறச்சே என்னோட பிரார்த்தனையை அவர்கிட்டே சொல்லணும்தான் நினைச்சுண்டு இருந்தேன். அது எப்படி அவருக்கு தெரிஞ்சுது? அதுமட்டுமல்லாம நான் ஸ்ரீசக்கர ரூபத்துல அம்பாளை தியானம் பண்ணறதை அவர் எப்படி தெரிஞ்சுண்டார் அப்படின்னெல்லாம் ஆச்சரியமா கேட்டா.
பெரியவா சொன்ன இடத்துல அந்த பெண்மணியை அழைச்சுண்டுபோய் விட்டுட்டு வந்துட்டார் அந்த சிஷ்யர். கொஞ்சநேரம் கழிச்சு, 'அடடா,குடிக்க ஜலம் வேணுமான்னு கூட கேட்காம வந்துட்டோமே ..அவாளுக்கு ஏதாவது வேணும்னா என்ன செய்யறது'ன்னு நினைச்சார் சீடர்.
அவர் மனசுல இருந்ததைப் புரிஞ்சுண்டவர் மாதிரி, "என்ன அந்த அம்மாளுக்கு எதுவும் தராம வந்துட்டோமேன்னு நினைக்கறியா? அவா ஆசாரமான ஆகாரத்தைத்தான் எடுத்துப்பா.நீயே உப்புமா வேணுமான்னு கேட்டு பண்ணிக்குடு"! பரமாசார்யா சொல்ல,சிஷ்யருக்கு ஆச்சரியம் தாங்கலை .அதே வியப்போட அந்த பெண்மணி இருந்த அறைக்குப் போனவருக்கு அங்கே இன்னொரு ஆச்சரியம் காத்துண்டு இருந்தது.
தியான நிலையில அமர்ந்து தன்னோட கையை முத்திரை நிலையில வைச்சுண்டு அமர்ந்திருந்தா அந்தப் பெண்மணி
.
சீடர் அவாகிட்டேபோய் மகாபெரியவா உத்தரவுபடி 'ஆகாரம் ஏதாவது பண்ணித் தரட்டுமா?'ன்னு என்று கேட்டார்
பெரியவா சொன்னதை நிரூபிக்கறமாதிரி ,"கொஞ்சம் உப்புமா கிண்டிக் குடுத்தா போதும்!" அப்படின்னார் அந்த பெண்மணி.
சீடர் உப்புமா கிண்டி எடுத்துண்டுபோய் அவா முன்னால ஒரு இலையில வைச்சார். கையில் கொஞ்சம் ஜலத்தை எடுத்துண்டு இலையில இருந்த உப்புமாவை நைவேத்யம் பண்ண்ற மாதிரி மூணு சுத்து சுத்தினா அந்தப் பெண்மணி . அந்த சமயத்துல எங்கேர்ந்தோ வந்தமாதிரி ஒளிவட்டமா ஒரு ஸ்ரீசக்ரம் அவா கையில வந்து சில விநாடி பிரகாசிச்சுட்டு சட்டுன்னு மறைஞ்சுடுத்து.
பார்த்துண்டே இருந்த சீடருக்கு ஒரே அதிர்ச்சி!. என்னடா இது மாயமா மாந்திரீகமா? என்னென்னவோ செய்யறாளே,ஆசார்யா இவாளைத் தனியா இருக்கவைன்னு சொன்னதுக்கும் இதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா? அப்படின்னெல்லாம் நினைச்ச சீடர், மகாபெரியவா இவாளுக்கு தரிசனம் தர வர்ற சமயத்துல கண்டிப்பா தானும் வந்து என்ன நடக்கறதுன்னு பார்க்கணும்னு தீர்மானிச்சுண்டார்.
ஆச்சு..சாயங்காலம் ஆச்சு..! ராத்திரியும் நெருங்கி எல்லா இடத்துலயும் தீபங்களை ஏத்திவைக்க ஆரம்பிச்சா.
அந்த சமயத்துல பரமாசார்யா, தள்ளி நின்னுண்டு இருந்த அந்த சீடரை சொடக்குப் போட்டு கூப்பிட்டார்.
"நீயும் வரணும்னு தீர்மானிச்சுட்டு இப்படி அசட்டையா இருந்தா எப்படி? கை வெளக்கை எடுத்துண்டு கூடவே வா!" அப்படின்னு அந்தப் பெண்மணி இருந்த அறைக்குப் போனார்.
அந்த அறையில ஒரே ஒரு தீபம் எரிஞ்சுண்டு இருந்தது. அந்தப் பெண்மணி இப்பவும் தியானம் பண்றாப்புலதான் உட்கார்ந்துண்டு இருந்தா. அவளுக்கு முன்னால போய் நின்னார் மகாபெரியவா.
"ஆசார்யா எழுந்தருளியிருக்கார்!" சொன்னார் சீடர்.
தியான நிலையில இருந்து அப்படியே மாறி குரல் வந்த திக்குல நமஸ்காரம் செஞ்சுட்டு உட்கார்ந்தா அந்தப் பெண்மணி.
"என்ன விஷயமா இங்கே வந்திருக்கே?" கேட்டார் மகாபெரியவா.
"பெரியவா நான் எதுக்காக வந்திருக்கேன்னு உங்களுக்குத் தெரியாதா?" அப்படின்னு பணிவா சொன்னா.
"பரவாயில்லை நீயே சொல்லு!"ன்னார் ஆசார்யா
"நானும் பல காலமா முயற்சி பண்றேன். சகஸ்ராரத்துல ஜோதி தரிசனம் கிடைக்கவே மாட்டேங்கறது. ஒரு வேளை என்னை மாதிரியானவளுக்கு அந்த தரிசனம்..! "வார்த்தையை முடிக்காமல் இழுத்தா அவா.
"ஓ இதுதான் விஷயமா? நீ கொஞ்ச நேரம் தியானம் பண்ணு. அப்புறம் நான் சொல்றேன்!" மகாபெரியவா சொன்னதும் சட்டுனு தியான நிலையில ஆழ்ந்துட்டா அந்தப் பெண்மணி.
என்ன நடக்கப் போறதுன்னு புரியாமலே கைவெளக்கை வெச்சுண்டு பேசாம நின்னுண்டு இருந்தார் அந்த சீடர். ஒரு சில நிமிஷம் ஆனதும், "வெளக்கை அணைச்சுடு!" அப்படிங்கற மாதிரி சீடனுக்கு ஜாடை காட்டினார், மகாபெரியவா.
சீடரும் கைவெளக்கை அணைக்க,ரூம்ல எரிஞ்சுண்டு இருந்த சின்ன தீபத்தையும் நிறுத்தச் சொன்னார் பெரியவா. சீடர் அதையும் செய்ய கும் இருட்டு அங்கே பரவின.
இரண்டாவது நொடி அந்தப் பெண்மணி, "பார்த்துட்டேன், காமாட்சி பார்த்துட்டேன் .ஜோதி ரூபத்துல உன்னைப் பார்த்துட்டேன்'னு ஆனந்தக் குரல் எழுப்பினா.
சீடர் என்ன நடக்கறதுன்னு புரியாம தவிக்க,ஒரு சிலவிநாடியில "போதும்,போதும் காமாட்சி போதும்..என்னால இந்த ஜோதிப் பிரகாசத்தைத் தாங்க முடியலை!" அப்படின்னு குரல் எழுப்பினா அந்தப் பெண்மணி. சட்டுன்னு விளக்கை ஏத்தச் சொன்னார் மகாபெரியவா.
விளக்கு ஏத்தப்பட்டதும் அப்படியே நமஸ்காரம் செஞ்ச அவகிட்டே, "என்ன உன்னோட மனோரதம் பூர்த்தி ஆச்சா? சந்தோஷமா பொறப்படு!" அப்படின்னு சொன்ன ஆசார்யா, அவளை பத்திரமா வழியனுப்பும்படி சீடரிடம் சொன்னார்.
வழியனுப்பப்போன சீடர் சந்தேகம் தாங்காம 'என்ன நடந்தது? என்ன பார்த்தேள்? எதுக்காக அப்படிக் கத்தினேள்?'ன்னு கேட்டார்.
"தியானத்துல உட்கார்ந்த சில நிமிஷத்துல எல்லாம் சகஸ்ராரத்துல பெரிய ஜோதி ரூபமா காமாட்சியோட தரிசனம் தெரிஞ்சுது. சில நொடிகளுக்கு மேல் அந்த ஜொலிப்பின் பிரகாசத்தை என்னால் தாங்கிக்க முடியலை. அதை எப்படி மறைய வைக்கறதுன்னும் தெரியலை. அதான் அலறிட்டேன்! எத்தனையோ ஆயிரம் வருஷம் தவமிருந்தவாளுக்குக் கூட இந்த பாக்யம் கிடைக்காமப் போயிருக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன். கேட்ட நிமிஷத்துலயே எனக்கு அந்த அனுக்ரஹத்தை பெரியவாளால் தரமுடிஞ்சுதுன்னா, அவர் சாட்சாத் காமாட்ச்யேதான்னு எனக்குத் தோணறது...!" அப்படின்னு சொல்லிட்டு புறப்பட்டா அந்தப் பெண்மணி
(ரெண்டு கண்ணும் பார்வையில்லாத பெண்மணிக்கு சகஸ்ராரத்துல ஜோதி தரிசனம் காட்டின பெரியவா).
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-30-11-2017 தேதியிட்ட குமுதம் பக்தி (ஒரு பகுதி)
திருவிசநல்லூர்னு ஒரு திருத்தலம் இருக்கிறது. பலருக்கும் தெரிஞ்சிருக்கும்.இந்த ஊர்லதான் ஸ்ரீதர் அய்யாவாள்ங்கற பக்தரோட வீட்டுக் கிணற்றுல கங்கை பெருகி வந்து அந்த ஊரையே வெள்ளமா நிறைச்சா.(மெம்பர்களுக்கு அந்த நாள் தான் கார்த்திகை அமாவாசை) அத்தனை பெருமை உடைய ஊர்.அந்த ஊர்ல ஒரு சமயம் முகாமிட்டிருந்தா மகாபெரியவா.
அந்த சமயத்துல ரெண்டு கண்ணுலயும் பார்வை இல்லாத ஒரு பெண்மணி பரமாசார்யாளை தரிசனம் பண்ண வந்திருந்தா.அவ தான் யாரு? மகாபெரியவாளை தரிசிக்க அங்கே வந்ததுக்கான காரணம் என்ன? எந்த விஷயத்தையும் யார்கிட்டேயும் சொல்லலை.
வரிசைல நின்னவா பலபேர் அவ பார்வை இழந்தவள்னு தெரிஞ்சதும், "வேணும்னா வரிசைல நிற்காம முன்னால போய் ஆசிர்வாதம் வாங்கிண்டு போங்கோ"ன்னு சொன்னா. ஆனா,அந்தப் பெண்மணி அதுக்கு ஒத்துக்கலை.
மகாபெரியவா பக்தர்களுக்கு தரிசனம் தர்றதுக்காக யதாஸ்தானத்துல வந்து உட்கார்ந்தார். அவரோட முதல் பார்வையே அந்தப் பெண்மணி மேல்தான் பதிஞ்சுது. உடனே தன் பக்கத்துல நின்னுண்டு இருந்த சீடன் ஒருத்தனைக் கூப்பிட்டார்.
"அதோ நிற்கறாளே அவா அம்பாளை ஸ்ரீசக்கர ரூபத்துல உபாசனை பண்ணறவா. நீ அவாளைக் கூட்டிண்டுபோய் உக்ராண அறைக்குப் பக்கத்துல இருக்க அறையில் தங்கிக்கச் சொல்லு. அப்புறமா நானே அங்கு வந்து தரிசனம் தரேன்னு சொல்லு" அப்படின்னார்.
பெரியவா சொன்னதை அப்படியே அந்தப் பெண்மணிகிட்டே போய் சொன்னார்,சீடர். அதைக் கேட்டதும் அவாளுக்கு ஒரே ஆச்சரியம்" நானே பெரியவா தனியா இருக்கறச்சே என்னோட பிரார்த்தனையை அவர்கிட்டே சொல்லணும்தான் நினைச்சுண்டு இருந்தேன். அது எப்படி அவருக்கு தெரிஞ்சுது? அதுமட்டுமல்லாம நான் ஸ்ரீசக்கர ரூபத்துல அம்பாளை தியானம் பண்ணறதை அவர் எப்படி தெரிஞ்சுண்டார் அப்படின்னெல்லாம் ஆச்சரியமா கேட்டா.
பெரியவா சொன்ன இடத்துல அந்த பெண்மணியை அழைச்சுண்டுபோய் விட்டுட்டு வந்துட்டார் அந்த சிஷ்யர். கொஞ்சநேரம் கழிச்சு, 'அடடா,குடிக்க ஜலம் வேணுமான்னு கூட கேட்காம வந்துட்டோமே ..அவாளுக்கு ஏதாவது வேணும்னா என்ன செய்யறது'ன்னு நினைச்சார் சீடர்.
அவர் மனசுல இருந்ததைப் புரிஞ்சுண்டவர் மாதிரி, "என்ன அந்த அம்மாளுக்கு எதுவும் தராம வந்துட்டோமேன்னு நினைக்கறியா? அவா ஆசாரமான ஆகாரத்தைத்தான் எடுத்துப்பா.நீயே உப்புமா வேணுமான்னு கேட்டு பண்ணிக்குடு"! பரமாசார்யா சொல்ல,சிஷ்யருக்கு ஆச்சரியம் தாங்கலை .அதே வியப்போட அந்த பெண்மணி இருந்த அறைக்குப் போனவருக்கு அங்கே இன்னொரு ஆச்சரியம் காத்துண்டு இருந்தது.
தியான நிலையில அமர்ந்து தன்னோட கையை முத்திரை நிலையில வைச்சுண்டு அமர்ந்திருந்தா அந்தப் பெண்மணி
.
சீடர் அவாகிட்டேபோய் மகாபெரியவா உத்தரவுபடி 'ஆகாரம் ஏதாவது பண்ணித் தரட்டுமா?'ன்னு என்று கேட்டார்
பெரியவா சொன்னதை நிரூபிக்கறமாதிரி ,"கொஞ்சம் உப்புமா கிண்டிக் குடுத்தா போதும்!" அப்படின்னார் அந்த பெண்மணி.
சீடர் உப்புமா கிண்டி எடுத்துண்டுபோய் அவா முன்னால ஒரு இலையில வைச்சார். கையில் கொஞ்சம் ஜலத்தை எடுத்துண்டு இலையில இருந்த உப்புமாவை நைவேத்யம் பண்ண்ற மாதிரி மூணு சுத்து சுத்தினா அந்தப் பெண்மணி . அந்த சமயத்துல எங்கேர்ந்தோ வந்தமாதிரி ஒளிவட்டமா ஒரு ஸ்ரீசக்ரம் அவா கையில வந்து சில விநாடி பிரகாசிச்சுட்டு சட்டுன்னு மறைஞ்சுடுத்து.
பார்த்துண்டே இருந்த சீடருக்கு ஒரே அதிர்ச்சி!. என்னடா இது மாயமா மாந்திரீகமா? என்னென்னவோ செய்யறாளே,ஆசார்யா இவாளைத் தனியா இருக்கவைன்னு சொன்னதுக்கும் இதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா? அப்படின்னெல்லாம் நினைச்ச சீடர், மகாபெரியவா இவாளுக்கு தரிசனம் தர வர்ற சமயத்துல கண்டிப்பா தானும் வந்து என்ன நடக்கறதுன்னு பார்க்கணும்னு தீர்மானிச்சுண்டார்.
ஆச்சு..சாயங்காலம் ஆச்சு..! ராத்திரியும் நெருங்கி எல்லா இடத்துலயும் தீபங்களை ஏத்திவைக்க ஆரம்பிச்சா.
அந்த சமயத்துல பரமாசார்யா, தள்ளி நின்னுண்டு இருந்த அந்த சீடரை சொடக்குப் போட்டு கூப்பிட்டார்.
"நீயும் வரணும்னு தீர்மானிச்சுட்டு இப்படி அசட்டையா இருந்தா எப்படி? கை வெளக்கை எடுத்துண்டு கூடவே வா!" அப்படின்னு அந்தப் பெண்மணி இருந்த அறைக்குப் போனார்.
அந்த அறையில ஒரே ஒரு தீபம் எரிஞ்சுண்டு இருந்தது. அந்தப் பெண்மணி இப்பவும் தியானம் பண்றாப்புலதான் உட்கார்ந்துண்டு இருந்தா. அவளுக்கு முன்னால போய் நின்னார் மகாபெரியவா.
"ஆசார்யா எழுந்தருளியிருக்கார்!" சொன்னார் சீடர்.
தியான நிலையில இருந்து அப்படியே மாறி குரல் வந்த திக்குல நமஸ்காரம் செஞ்சுட்டு உட்கார்ந்தா அந்தப் பெண்மணி.
"என்ன விஷயமா இங்கே வந்திருக்கே?" கேட்டார் மகாபெரியவா.
"பெரியவா நான் எதுக்காக வந்திருக்கேன்னு உங்களுக்குத் தெரியாதா?" அப்படின்னு பணிவா சொன்னா.
"பரவாயில்லை நீயே சொல்லு!"ன்னார் ஆசார்யா
"நானும் பல காலமா முயற்சி பண்றேன். சகஸ்ராரத்துல ஜோதி தரிசனம் கிடைக்கவே மாட்டேங்கறது. ஒரு வேளை என்னை மாதிரியானவளுக்கு அந்த தரிசனம்..! "வார்த்தையை முடிக்காமல் இழுத்தா அவா.
"ஓ இதுதான் விஷயமா? நீ கொஞ்ச நேரம் தியானம் பண்ணு. அப்புறம் நான் சொல்றேன்!" மகாபெரியவா சொன்னதும் சட்டுனு தியான நிலையில ஆழ்ந்துட்டா அந்தப் பெண்மணி.
என்ன நடக்கப் போறதுன்னு புரியாமலே கைவெளக்கை வெச்சுண்டு பேசாம நின்னுண்டு இருந்தார் அந்த சீடர். ஒரு சில நிமிஷம் ஆனதும், "வெளக்கை அணைச்சுடு!" அப்படிங்கற மாதிரி சீடனுக்கு ஜாடை காட்டினார், மகாபெரியவா.
சீடரும் கைவெளக்கை அணைக்க,ரூம்ல எரிஞ்சுண்டு இருந்த சின்ன தீபத்தையும் நிறுத்தச் சொன்னார் பெரியவா. சீடர் அதையும் செய்ய கும் இருட்டு அங்கே பரவின.
இரண்டாவது நொடி அந்தப் பெண்மணி, "பார்த்துட்டேன், காமாட்சி பார்த்துட்டேன் .ஜோதி ரூபத்துல உன்னைப் பார்த்துட்டேன்'னு ஆனந்தக் குரல் எழுப்பினா.
சீடர் என்ன நடக்கறதுன்னு புரியாம தவிக்க,ஒரு சிலவிநாடியில "போதும்,போதும் காமாட்சி போதும்..என்னால இந்த ஜோதிப் பிரகாசத்தைத் தாங்க முடியலை!" அப்படின்னு குரல் எழுப்பினா அந்தப் பெண்மணி. சட்டுன்னு விளக்கை ஏத்தச் சொன்னார் மகாபெரியவா.
விளக்கு ஏத்தப்பட்டதும் அப்படியே நமஸ்காரம் செஞ்ச அவகிட்டே, "என்ன உன்னோட மனோரதம் பூர்த்தி ஆச்சா? சந்தோஷமா பொறப்படு!" அப்படின்னு சொன்ன ஆசார்யா, அவளை பத்திரமா வழியனுப்பும்படி சீடரிடம் சொன்னார்.
வழியனுப்பப்போன சீடர் சந்தேகம் தாங்காம 'என்ன நடந்தது? என்ன பார்த்தேள்? எதுக்காக அப்படிக் கத்தினேள்?'ன்னு கேட்டார்.
"தியானத்துல உட்கார்ந்த சில நிமிஷத்துல எல்லாம் சகஸ்ராரத்துல பெரிய ஜோதி ரூபமா காமாட்சியோட தரிசனம் தெரிஞ்சுது. சில நொடிகளுக்கு மேல் அந்த ஜொலிப்பின் பிரகாசத்தை என்னால் தாங்கிக்க முடியலை. அதை எப்படி மறைய வைக்கறதுன்னும் தெரியலை. அதான் அலறிட்டேன்! எத்தனையோ ஆயிரம் வருஷம் தவமிருந்தவாளுக்குக் கூட இந்த பாக்யம் கிடைக்காமப் போயிருக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன். கேட்ட நிமிஷத்துலயே எனக்கு அந்த அனுக்ரஹத்தை பெரியவாளால் தரமுடிஞ்சுதுன்னா, அவர் சாட்சாத் காமாட்ச்யேதான்னு எனக்குத் தோணறது...!" அப்படின்னு சொல்லிட்டு புறப்பட்டா அந்தப் பெண்மணி