Post by radha on Jul 13, 2012 2:40:46 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
திருப்பதி… திருப்பம்… திருப்தி — பி.சுவாமிநாதன்
’திருப்பதி சென்று திரும்பி வந்தால் திருப்பம் நேருமடா – உன் விருப்பம் கூடுமடா!’ என்றார் கண்ணதாசன்.
ஆந்திராவின் தென்கிழக்குப் பகுதியில், சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற திருத்தலம் திருப்பதி. ஒன்பது ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம் இது. மூலவர் ஸ்ரீவேங்கடம் உடையான் என்று அழைக்கப்பட்டாலும் – ஸ்ரீவேங்கடவன், ஸ்ரீவேங்கடாசலபதி, ஸ்ரீபாலாஜி, ஸ்ரீசீனிவாசப் பெருமாள், ஸ்ரீஏழுமலையான் என்று பல திருநாமங்களில் அழைக்கப்படுகிறார்.
உலகிலேயே மாபெரும் பணக்காரக் கடவுள் யார் என்று கேட்டால், சிறு குழந்தை கூட ‘திருப்பதி வேங்கடாசலபதி’ என்று யோசிக்காமல் சொல்லிவிடும். அந்த அளவுக்குப் பிரசித்தமானவர்.
விசேஷ காலங்களில் தினப்படி காணிக்கையாக இவருக்கு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் குவிகிறது என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன்!
இன்றைக்குத்தான் என்றில்லை. பண்டைய மன்னர்கள் காலத்தில் இருந்தே திருப்பதி ஏழுமலையான் ‘வசூல்ராஜா’வாகத்தான் விளங்கி வந்திருக்கிறார். இவரது சந்நிதிக்குச் செல்லும் எந்த ஒரு பக்தரும் பணத்தைக் கொட்டிவிட்டுத்தான் தரிசனம் செய்து திரும்புகிறார்.
திருப்பதி கோயிலுக்கு மன்னர் கிருஷ்ணதேவராயர் ஏராளமான தங்க, வைர ஆபரணங்களைக் காணிக்கையாக வழங்கி இருக்கிறார். இதில் ஒரு சுவாரஸ்யம். கிருஷ்ணதேவராயரின் இரண்டு மனைவியருக்கும் எதற்கெடுத்தாலும் போட்டிதான். கண்களைப் பறிக்கும் வேலைப்பாடுகள் அமைந்த ஒரு தங்கப் பேலாவை கிருஷ்ண தேவராயரின் ஒரு மனைவி திருப்பதி கோயிலுக்கு தானமாகக் கொடுத்தாள் என்றால், இன்னொரு மனைவி, அதைவிடப் பெரிய தங்கப்பேலாவை ஓரிரு வருட இடைவெளியில், திருப்பதி பெருமாளுக்கு தானம் கொடுத்திருக்கிறாள். இந்த விவரம், கன்னட மொழியில் ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது.
எண்ணற்ற குறுநில மன்னர்கள், ராஜாக்கள், பிரபுக்கள் போன்றோர் நிலங்கள், நகைகள், பொற்காசுகள், ஆபரணங்கள் என்று சகட்டுமேனிக்கு வாரி வழங்கி உள்ளனர் திருப்பதி பெருமாளுக்கு. தற்போது திருப்பதி தேவஸ்தானம் பாதுகாத்து வரும் நகைகளின் மதிப்பு மட்டும், பல்லாயிரம் கோடிகளைத் தாண்டும் என்பது ஒரு கணக்கு.
இன்றைக்குக் கோடீஸ்வரர் என்றாலும், ஸ்ரீபத்மாவதித் தாயாரைத் திருமணம் செய்து கொள்வதற்காக, குபேரனிடம் கடன் வாங்கினார் ஸ்ரீநிவாசப் பெருமாள் என்கிறது புராணம். ‘கலியுகம் முழுதும் வட்டி கட்டிவிட்டு, கலியுகம் நிறைவடையும்போது அசலைத் தருகிறேன்’ என்ற நிபந்தனையில், கடன் வாங்கித் திருமணம் செய்து கொண்டாராம். மாலவன் வாங்கிய கடனுக்கு வட்டியைச் செலுத்துவதற்காகத்தான், அவரது அருளுக்குப் பாத்திரமான அடியவர்கள், இன்று திருமலைக்குப் போய்க் கொட்டோ கொட்டென்று பணத்தையும் தங்கத்தையும் கொட்டி வருகிறார்கள் போலிருக்கிறது.
இறைவன் தானாகவே விரும்பி வந்து எழுந்தருளிய தலங்கள் சிறப்பு கொண்டதாகச் சொல்லப்படுகின்றன. பரந்தாமனாகிய திருமால், அப்படித் தானே விரும்பி எழுந்தருளிய தலங்களாக திருவேங்கடம், திருவரங்கம், ஸ்ரீமுஷ்ணம், நைமிசாரண்யம், நாங்குநேரி, புஷ்கரம், பத்ரி, சாளக்கிராமம் போன்றவை சொல்லப்படுகின்றன. இவற்றுள் – திருவேங்கடம் என்கிற திருமலை திருப்பதி விசேஷமானது.
வேங்கடாசலபதி ஏழுமலைகளுக்கு உரியவர். அதனாலேயே அவரை ஏழுமலையான் என்று அழைக்கிறோம். சேஷாசலம், வேதாசலம், கருடாசலம், விருஷபாத்திரி, அஞ்சனாத்திரி, நாராயணகிரி, வேங்கடாசலம் ஆகியவையே அந்த ஏழுமலைகள்.
ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் கோயில் கொண்ட இடம் திருமலை என்றும், அவருடைய தேவியான ஸ்ரீபத்மாவதி தாயார் குடிகொண்டுள்ள அடிவாரம் திருப்பதி என்றும் வழங்கப்பட்டாலும், பெருமாள் குடிகொண்ட இடம் மேல் திருப்பதி எனவும், தாயார் குடிகொண்ட இடம் கீழ் திருப்பதி என அழைக்கப்படுவதே வழக்கமாக இருக்கிறது.
வேங்கடவனின் மாபெரும் பக்தரான தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்திஸ்வரூபமாகவும் பாடி, அந்தப் பாடல்களை செப்பேடுகளில் எழுதி வைத்துள்ளார்.
சிறந்த பக்தனான மன்னன் தொண்டைமான், தன்னை அண்டிய ஒரு குடும்பத்தைக் கவனிக்கத் தவறிவிட்டான். இது அவனது குற்றம் இல்லை என்றாலும், அந்தப் பொறுப்புக்கு உரியவன் ஆகிவிட்டான். அவன் திருவேங்கடமுடையானிடம் கதறியபோது, பெருமாள் பிரத்யட்சமாகத் தோன்றினார். அவனுடைய குறையைத் தீர்த்தார். பிறகு, கலியுகத்தில் வசித்து வரும் மனிதர்கள், நீ செய்தது போலவே அறிந்தும் அறியாமலும் கொடிய பாவங்களைச் செய்து வருகிறார்கள். அதன்பின் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டுக் கதறுகின்றனர். ஒரு வேளை, அவர்களை நான் காப்பாற்றவில்லை என்றால், என்னைக் குறை கூறுகின்றனர். பக்தர்கள் படும் துன்பத்தை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஆகவே, கலியுகம் பூர்த்தியாகும் வரையில், நான் விக்கிரக உருவில் இருப்பேன். உண்மை பக்தர்களிடம் பேசுவேன்” என்று சொல்லி, ஸ்ரீபத்மாவதி தாயாரை, தன் மார்பில் இருத்திக் கொண்டு சிலாரூபமானார்.
ஆனந்த விமானத்தின் கீழே, சுயம்புவாக எழுந்தருளிய இந்த மூலவர், சுமார் பத்தடி உயரம். நின்ற திருக்கோலம். கிழக்கு நோக்கிய சேவை.
தன் திருச்சன்னிதிக்கு முன்னால் நின்று ‘கோவிந்தா… கோவிந்தா’ என்று, இருகரம் கூப்பித் தொழும் பக்தர்களின் குறைகளைப் போக்கி, அவர்களின் வாழ்வில் என்றென்றும் ஆனந்தம் நிலவ ஆசிர்வதிக்கிறார்.
‘கோவிந்தா’ என்கிற நாமம், திருமலை பகவானுக்கு மிகவும் உகப்பானது. அந்தப் பெயரைச் சொன்ன மாத்திரத்திலேயே, அவர் உளம் கனிகிறார்; மனம் நெகிழ்கிறார்; ஓடோடி வந்து உதவுகிறார்.
‘அச்சுதா’, ‘அனந்தா’, ‘கோவிந்தா’ என்கிற பெயர்களை உச்சரிப்பதால், எல்லா வியாதிகளும் நீங்கிவிடும். இது உண்மை’ என்று இருமுறை சத்தியமிட்டுச் சொல்கிறார் வியாச முனிவர்.
‘உட்காரும்போதும், எழுந்திருக்கும் போதும், நடக்கும்போதும், தடுக்கும் போதும், தும்மினாலும், இருமினாலும், ‘கோவிந்தா’ என்று கூற வேண்டும். எந்த உணவைச் சாப்பிட்டாலும், ‘கோவிந்தா’ என்று கூறி, சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், நாம் எதிர்பாராத நன்மை உண்டாகும்’ என்று க்ஷத்ரபந்து என்ற மன்னனுக்கு, மாமுனிவர் ஒருவர் போதித்ததாக விஷ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது.
நம்முடைய பாவங்கள் அகல்வதற்கு சுலபமான ஒரு வழியைக் காட்டித் தருகிறார் நம்மாழ்வார். என்ன வழி? திருமலைக்குப் போய், கூட்டத்தில் இடி பட்டு, ஸ்ரீநிவாசனை சேவிக்கவேண்டியதில்லையாம். இருந்த இடத்தில் இருந்தபடியே, ‘திருமலையில் நித்யவாசம் செய்தருளுகிற பெருமானுக்கு நம:’ என்று சொல்லிவிட்டால் போதுமாம். அனுபவித்தே தீர்க்க வேண்டிய பாவங்களும், இனிமேல் வரக்கூடிய பாவங்களும் ஒட்டுமொத்தமாக அழிந்துவிடுமாம்.
எனவே, திருப்பதிக்குச் செல்ல முடியவில்லையே என்று கவலைப்படுகிறவர்கள், இருந்த இடத்தில் இருந்தபடியே அந்தப் பெருமாளை வணங்குங்கள்!
சரி; செல்வச் சீமானாக விளங்கும் ஏழுமலையானுக்கு பிரசித்தியான தினசரி நைவேத்தியம் என்ன தெரியுமா? ஒரு புத்தம்புதிய மண்சட்டியில் (அதுவும் இரண்டாக உடைந்த சட்டியில்) சாதாரண தயிர்சாதம்!
திருமலையில் பெருமாளுக்கு நைவேத்தியம் தயாராகிற மடைப்பள்ளி மிகவும் பெரியது. இந்த மடைப்பள்ளியில், லட்டு தவிர பொங்கல், தயிர்சாதம், புளிசாதம், சித்ரான்னங்கள், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயசம், தோசை, ரவா கேசரி, பாதாம் கேசரி, முந்திரிப் பருப்பு கேசரி… இப்படி எண்ணற்ற நைவேத்தியங்கள் தினம்தோறும் தயாராகின்றன.
தவிர, தினமும் ஒன்றரை லட்சம் லட்டுகள் தயாராகின்றன. ஒருநாள் லட்டு தயாரிக்க, 5 ஆயிரம் கிலோ கடலைப் பருப்பு, 10 ஆயிரம் கிலோசர்க்கரை, 300 கிலோ நெய், 600 கிலோ முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை 540 கிலோ, 150 கிலோ ஏலக்காய் போன்றவை தேவைப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. தற்போது தயாராகும் ஒரு லட்டின் எடை 800 கிராம்.
பணக்காரக் கடவுள் என்பதற்கேற்ப, பெருமாளின் வழிபாடு சம்பந்தப்பட்ட சில தகவல்கள், பிரமிப்பைத்தான் ஏற்படுத்துகின்றன. ஆம்ஸ்டர்டாமிலிருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், லவங்கம், குங்குமம், புனுகு போன்ற வாசனைப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
பெருமாளின் அபிஷேகத்துக்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ; நேபாளத்தில் இருந்து கஸ்தூரி; பாரீஸில் இருந்து வாசனை திரவியங்கள் போன்றவை வரவழைக்கப்படுகின்றன. விமரிசையான ஒரு அபிஷேகத்துக்கு உண்டான செலவு மட்டும் சுமார் ஒரு லட்ச ரூபாய்.
நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam
திருப்பதி… திருப்பம்… திருப்தி — பி.சுவாமிநாதன்
’திருப்பதி சென்று திரும்பி வந்தால் திருப்பம் நேருமடா – உன் விருப்பம் கூடுமடா!’ என்றார் கண்ணதாசன்.
ஆந்திராவின் தென்கிழக்குப் பகுதியில், சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற திருத்தலம் திருப்பதி. ஒன்பது ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம் இது. மூலவர் ஸ்ரீவேங்கடம் உடையான் என்று அழைக்கப்பட்டாலும் – ஸ்ரீவேங்கடவன், ஸ்ரீவேங்கடாசலபதி, ஸ்ரீபாலாஜி, ஸ்ரீசீனிவாசப் பெருமாள், ஸ்ரீஏழுமலையான் என்று பல திருநாமங்களில் அழைக்கப்படுகிறார்.
உலகிலேயே மாபெரும் பணக்காரக் கடவுள் யார் என்று கேட்டால், சிறு குழந்தை கூட ‘திருப்பதி வேங்கடாசலபதி’ என்று யோசிக்காமல் சொல்லிவிடும். அந்த அளவுக்குப் பிரசித்தமானவர்.
விசேஷ காலங்களில் தினப்படி காணிக்கையாக இவருக்கு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் குவிகிறது என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன்!
இன்றைக்குத்தான் என்றில்லை. பண்டைய மன்னர்கள் காலத்தில் இருந்தே திருப்பதி ஏழுமலையான் ‘வசூல்ராஜா’வாகத்தான் விளங்கி வந்திருக்கிறார். இவரது சந்நிதிக்குச் செல்லும் எந்த ஒரு பக்தரும் பணத்தைக் கொட்டிவிட்டுத்தான் தரிசனம் செய்து திரும்புகிறார்.
திருப்பதி கோயிலுக்கு மன்னர் கிருஷ்ணதேவராயர் ஏராளமான தங்க, வைர ஆபரணங்களைக் காணிக்கையாக வழங்கி இருக்கிறார். இதில் ஒரு சுவாரஸ்யம். கிருஷ்ணதேவராயரின் இரண்டு மனைவியருக்கும் எதற்கெடுத்தாலும் போட்டிதான். கண்களைப் பறிக்கும் வேலைப்பாடுகள் அமைந்த ஒரு தங்கப் பேலாவை கிருஷ்ண தேவராயரின் ஒரு மனைவி திருப்பதி கோயிலுக்கு தானமாகக் கொடுத்தாள் என்றால், இன்னொரு மனைவி, அதைவிடப் பெரிய தங்கப்பேலாவை ஓரிரு வருட இடைவெளியில், திருப்பதி பெருமாளுக்கு தானம் கொடுத்திருக்கிறாள். இந்த விவரம், கன்னட மொழியில் ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது.
எண்ணற்ற குறுநில மன்னர்கள், ராஜாக்கள், பிரபுக்கள் போன்றோர் நிலங்கள், நகைகள், பொற்காசுகள், ஆபரணங்கள் என்று சகட்டுமேனிக்கு வாரி வழங்கி உள்ளனர் திருப்பதி பெருமாளுக்கு. தற்போது திருப்பதி தேவஸ்தானம் பாதுகாத்து வரும் நகைகளின் மதிப்பு மட்டும், பல்லாயிரம் கோடிகளைத் தாண்டும் என்பது ஒரு கணக்கு.
இன்றைக்குக் கோடீஸ்வரர் என்றாலும், ஸ்ரீபத்மாவதித் தாயாரைத் திருமணம் செய்து கொள்வதற்காக, குபேரனிடம் கடன் வாங்கினார் ஸ்ரீநிவாசப் பெருமாள் என்கிறது புராணம். ‘கலியுகம் முழுதும் வட்டி கட்டிவிட்டு, கலியுகம் நிறைவடையும்போது அசலைத் தருகிறேன்’ என்ற நிபந்தனையில், கடன் வாங்கித் திருமணம் செய்து கொண்டாராம். மாலவன் வாங்கிய கடனுக்கு வட்டியைச் செலுத்துவதற்காகத்தான், அவரது அருளுக்குப் பாத்திரமான அடியவர்கள், இன்று திருமலைக்குப் போய்க் கொட்டோ கொட்டென்று பணத்தையும் தங்கத்தையும் கொட்டி வருகிறார்கள் போலிருக்கிறது.
இறைவன் தானாகவே விரும்பி வந்து எழுந்தருளிய தலங்கள் சிறப்பு கொண்டதாகச் சொல்லப்படுகின்றன. பரந்தாமனாகிய திருமால், அப்படித் தானே விரும்பி எழுந்தருளிய தலங்களாக திருவேங்கடம், திருவரங்கம், ஸ்ரீமுஷ்ணம், நைமிசாரண்யம், நாங்குநேரி, புஷ்கரம், பத்ரி, சாளக்கிராமம் போன்றவை சொல்லப்படுகின்றன. இவற்றுள் – திருவேங்கடம் என்கிற திருமலை திருப்பதி விசேஷமானது.
வேங்கடாசலபதி ஏழுமலைகளுக்கு உரியவர். அதனாலேயே அவரை ஏழுமலையான் என்று அழைக்கிறோம். சேஷாசலம், வேதாசலம், கருடாசலம், விருஷபாத்திரி, அஞ்சனாத்திரி, நாராயணகிரி, வேங்கடாசலம் ஆகியவையே அந்த ஏழுமலைகள்.
ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் கோயில் கொண்ட இடம் திருமலை என்றும், அவருடைய தேவியான ஸ்ரீபத்மாவதி தாயார் குடிகொண்டுள்ள அடிவாரம் திருப்பதி என்றும் வழங்கப்பட்டாலும், பெருமாள் குடிகொண்ட இடம் மேல் திருப்பதி எனவும், தாயார் குடிகொண்ட இடம் கீழ் திருப்பதி என அழைக்கப்படுவதே வழக்கமாக இருக்கிறது.
வேங்கடவனின் மாபெரும் பக்தரான தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்திஸ்வரூபமாகவும் பாடி, அந்தப் பாடல்களை செப்பேடுகளில் எழுதி வைத்துள்ளார்.
சிறந்த பக்தனான மன்னன் தொண்டைமான், தன்னை அண்டிய ஒரு குடும்பத்தைக் கவனிக்கத் தவறிவிட்டான். இது அவனது குற்றம் இல்லை என்றாலும், அந்தப் பொறுப்புக்கு உரியவன் ஆகிவிட்டான். அவன் திருவேங்கடமுடையானிடம் கதறியபோது, பெருமாள் பிரத்யட்சமாகத் தோன்றினார். அவனுடைய குறையைத் தீர்த்தார். பிறகு, கலியுகத்தில் வசித்து வரும் மனிதர்கள், நீ செய்தது போலவே அறிந்தும் அறியாமலும் கொடிய பாவங்களைச் செய்து வருகிறார்கள். அதன்பின் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டுக் கதறுகின்றனர். ஒரு வேளை, அவர்களை நான் காப்பாற்றவில்லை என்றால், என்னைக் குறை கூறுகின்றனர். பக்தர்கள் படும் துன்பத்தை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஆகவே, கலியுகம் பூர்த்தியாகும் வரையில், நான் விக்கிரக உருவில் இருப்பேன். உண்மை பக்தர்களிடம் பேசுவேன்” என்று சொல்லி, ஸ்ரீபத்மாவதி தாயாரை, தன் மார்பில் இருத்திக் கொண்டு சிலாரூபமானார்.
ஆனந்த விமானத்தின் கீழே, சுயம்புவாக எழுந்தருளிய இந்த மூலவர், சுமார் பத்தடி உயரம். நின்ற திருக்கோலம். கிழக்கு நோக்கிய சேவை.
தன் திருச்சன்னிதிக்கு முன்னால் நின்று ‘கோவிந்தா… கோவிந்தா’ என்று, இருகரம் கூப்பித் தொழும் பக்தர்களின் குறைகளைப் போக்கி, அவர்களின் வாழ்வில் என்றென்றும் ஆனந்தம் நிலவ ஆசிர்வதிக்கிறார்.
‘கோவிந்தா’ என்கிற நாமம், திருமலை பகவானுக்கு மிகவும் உகப்பானது. அந்தப் பெயரைச் சொன்ன மாத்திரத்திலேயே, அவர் உளம் கனிகிறார்; மனம் நெகிழ்கிறார்; ஓடோடி வந்து உதவுகிறார்.
‘அச்சுதா’, ‘அனந்தா’, ‘கோவிந்தா’ என்கிற பெயர்களை உச்சரிப்பதால், எல்லா வியாதிகளும் நீங்கிவிடும். இது உண்மை’ என்று இருமுறை சத்தியமிட்டுச் சொல்கிறார் வியாச முனிவர்.
‘உட்காரும்போதும், எழுந்திருக்கும் போதும், நடக்கும்போதும், தடுக்கும் போதும், தும்மினாலும், இருமினாலும், ‘கோவிந்தா’ என்று கூற வேண்டும். எந்த உணவைச் சாப்பிட்டாலும், ‘கோவிந்தா’ என்று கூறி, சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், நாம் எதிர்பாராத நன்மை உண்டாகும்’ என்று க்ஷத்ரபந்து என்ற மன்னனுக்கு, மாமுனிவர் ஒருவர் போதித்ததாக விஷ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது.
நம்முடைய பாவங்கள் அகல்வதற்கு சுலபமான ஒரு வழியைக் காட்டித் தருகிறார் நம்மாழ்வார். என்ன வழி? திருமலைக்குப் போய், கூட்டத்தில் இடி பட்டு, ஸ்ரீநிவாசனை சேவிக்கவேண்டியதில்லையாம். இருந்த இடத்தில் இருந்தபடியே, ‘திருமலையில் நித்யவாசம் செய்தருளுகிற பெருமானுக்கு நம:’ என்று சொல்லிவிட்டால் போதுமாம். அனுபவித்தே தீர்க்க வேண்டிய பாவங்களும், இனிமேல் வரக்கூடிய பாவங்களும் ஒட்டுமொத்தமாக அழிந்துவிடுமாம்.
எனவே, திருப்பதிக்குச் செல்ல முடியவில்லையே என்று கவலைப்படுகிறவர்கள், இருந்த இடத்தில் இருந்தபடியே அந்தப் பெருமாளை வணங்குங்கள்!
சரி; செல்வச் சீமானாக விளங்கும் ஏழுமலையானுக்கு பிரசித்தியான தினசரி நைவேத்தியம் என்ன தெரியுமா? ஒரு புத்தம்புதிய மண்சட்டியில் (அதுவும் இரண்டாக உடைந்த சட்டியில்) சாதாரண தயிர்சாதம்!
திருமலையில் பெருமாளுக்கு நைவேத்தியம் தயாராகிற மடைப்பள்ளி மிகவும் பெரியது. இந்த மடைப்பள்ளியில், லட்டு தவிர பொங்கல், தயிர்சாதம், புளிசாதம், சித்ரான்னங்கள், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயசம், தோசை, ரவா கேசரி, பாதாம் கேசரி, முந்திரிப் பருப்பு கேசரி… இப்படி எண்ணற்ற நைவேத்தியங்கள் தினம்தோறும் தயாராகின்றன.
தவிர, தினமும் ஒன்றரை லட்சம் லட்டுகள் தயாராகின்றன. ஒருநாள் லட்டு தயாரிக்க, 5 ஆயிரம் கிலோ கடலைப் பருப்பு, 10 ஆயிரம் கிலோசர்க்கரை, 300 கிலோ நெய், 600 கிலோ முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை 540 கிலோ, 150 கிலோ ஏலக்காய் போன்றவை தேவைப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. தற்போது தயாராகும் ஒரு லட்டின் எடை 800 கிராம்.
பணக்காரக் கடவுள் என்பதற்கேற்ப, பெருமாளின் வழிபாடு சம்பந்தப்பட்ட சில தகவல்கள், பிரமிப்பைத்தான் ஏற்படுத்துகின்றன. ஆம்ஸ்டர்டாமிலிருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், லவங்கம், குங்குமம், புனுகு போன்ற வாசனைப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
பெருமாளின் அபிஷேகத்துக்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ; நேபாளத்தில் இருந்து கஸ்தூரி; பாரீஸில் இருந்து வாசனை திரவியங்கள் போன்றவை வரவழைக்கப்படுகின்றன. விமரிசையான ஒரு அபிஷேகத்துக்கு உண்டான செலவு மட்டும் சுமார் ஒரு லட்ச ரூபாய்.
நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam