Post by radha on Jul 11, 2012 10:34:55 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA.,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
இத்தொடரை வாசிப்பவர்கள், அறிய வேண்டி, சுருக்கமாய் அந்த வரலாற்றுச் சம்பவத்தை அன்பர் கணபதி அவர்களை பிரார்த்தித்துக்கொண்டு, இத்தொடரிலும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
ஸ்ரீமடம் கைதான அந்தக் கதை, ஆச்சரியமூட்டுவதாகும்.
இது 1843-44களில் நடந்த சம்பவம்!
பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்று திருவானைக்காவல். இதில் குடிகொண்டிருப்பவள் அகிலாண்டேஸ்வரி. இவளது அனுக்கிரகத்துக்கு கவிராஜ காளமேகமே பெரும் சாட்சி.
இவளது அணிகளில் காதுத்தாடங்கம் என்பது ஒரு முக்கியமான அணி. திருக்கடவூரில் அபிராமி பட்டன் அமாவாசை அன்று நிலவுவரும் என்று தன்னை மறந்து சொல்லி விட, அந்த பட்டனின் – பக்தனின், வாக்கு பொய்யாகிவிடாதிருக்க, சரபோஜி மன்னன் முன்னாலே, அந்த அபிராமி தன் தாடங்கத்தை கழற்றித்தான் வானில் வீசி எறிந்தாள். அதுவே முழு நிலவாகி ஜொலித்து அபிராமி பட்டரை காப்பாற்றியது.
தாடங்கத்துக்கு பின்னாலே இப்படி ஒரு சம்பவம் உண்டு. இந்த தாடங்கங்கள் அகிலாண்டேஸ்வரிக்கும் மிக பிரசித்தி. காரணம் ஆதிசங்கர பகவத் பாதள்தான் முதலில் இவளுக்கு தாடங்கம் சாற்றி, அவளின் பேரெழிலை பிறர் காணச் செய்தவர்.
அதன்பிறகு அந்த தாடங்கம் தேய்ந்து போகும் போதோ, இல்லை பழசாகிப் போகும்போதோ புதிய ஒன்றை செய்து தருவது வழக்கம்.
1843லும் அப்படிச் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டு, அதை ஸ்ரீமடம் செய்து தந்தபோது, திருச்சியைச் சேர்ந்த ஒரு அன்பர், அம்பாளுக்கு அணி செய்யும் உரிமை தனக்கே உரியது என்று கோர்ட்டுக்கே போய்விட்டார். ஸ்ரீமடத்து உரிமையை அவருக்கு விட்டுத் தருவதில் கௌரவம் பார்த்த ஸ்ரீமடமும், தன் உரிமையை நிலைநாட்ட வக்கீல் வைத்து கோர்ட்டில் பதில் வழக்காடியது. வழக்கென்று வந்தால், அது என்ன அவ்வளவு சுலபத்தில் முடியுமா? கீழ் கோர்ட், மேல் கோர்ட் என்று சென்ற அது, ஒரு வழியாக முடிந்து மடத்துப்பக்கம் தீர்ப்பாகியது.
இதற்கு எத்தனை காலம் ஆனது என்று தேதிவாரியாக யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. ஏனென்றால் இன்றுபோல காலண்டர், கடிகாரம், ரிஸ்ட் வாட்ச், நாளிதழ்கள் என்று அன்று எதுவும் கிடையாது. கோயிலில் நடக்கும் விழாக்களை வைத்தும், தெருவில் தமுக்கு போடுபவன் செய்தி சொல்வதற்கு முன் தமிழ் வருஷ தேதி சொல்லி, செய்தி சொல்வதை வைத்தும்தான், அன்று வெகுஜனங்கள் நாள் கிழமைகளை தெரிந்து வந்தார்கள்.
ஆகையாலே, இந்த கேஸ் எவ்வளவு காலம் நடந்தது என்பதை அன்று சொன்ன விதம் மிக அலாதியானது. அதாவது, ஸ்ரீமடம் திருவானைக்காவலுக்கு போய் டேரா போட்டு அமர்ந்து பிறகுதான் தாடங்கத்தை சாத்தியது. அன்று சந்திர மௌலீஸ்வர பூஜையின்போது பிழியப்பட்ட எலுமிச்சம்பழத்தை வீசி எறிந்ததில், விழுந்த விதைகளில் சில எலுமிச்சை மரமாக முளைத்து, பின் பூவிட்டு பிஞ்சுவிட்டு காத்து திரும்பவும் சந்திர மௌளீஸ்வர பூஜைக்கே வந்து சேர்ந்ததாம். அதன்பிறகே, மடமும் அங்கிருந்து கிளம்பிய தாம்.
என்றால் எவ்வளவு காலம்?
ஒரு எலுமிச்சம் பழ விதையானது, மரமாகிப் பழம் தரும் அளவிலான காலம். அதாவது சுமாராக நான்கில் இருந்து ஐந்து வருடங்கள்!
இவ்வளவு நீண்ட காலம் வழக்கு நடத்திய தால், ஸ்ரீமடத்துக்கு நிறைய செலவு ஆகி கணக்கு பார்த்தபோது, ஸ்ரீமடம் கடனில் மூழ்கியிருந்ததாம்.
ஒரு தாடங்கச் சண்டையால் கடன் வந்ததை எண்ணி, அப்போதைய ஸ்வாமிகள் மிகவும் வருந்தினாராம். எப்படித் தெரியுமா? ‘பேசாமல் நான்தான் அணிவிப்பேன் என்ற அந்த நபருக்கே உரிமையை தந்திருக்கலாம்.
அம்பாளுக்கு யார் செய்தால் என்ன?
ஸ்ரீமடத்து உரிமை என்று கர்வப் பட்டதற்கு பலன், கடன். ஒரு மடாதிபதியான எனக்கு இது புரியாமல் போய்விட்டதே. ச்சே!’ என்று தன்னை மிக நொந்து கொண்டாராம் ஸ்வாமிகள். இதுதான் உண்மையான துறவியின் லட்சணம். இந்த மாதிரியான சத்யவிசாரமே துறவிகளையும் மேம்படுத்தும்.
இங்கே எங்கேயும் ஸ்வாமிகள் அம்பாளைப் பார்த்து, உனக்கு செய்யப்போய் நான் கடனாளி ஆகிவிட்டேனே என்று சராசரியாக நினைக்கவோ, ஸ்ரீமடத்துக்கு பொருள் வேண்டும் என்றும் பிரார்த்திக்கவோ இல்லை.
தான் இந்த உண்மையை உணர வேண்டும் என்றே வழக்கு, நீண்டு ஸ்ரீமடத்துக்கு கடனும் நேரிட்டது என்பதுதான் அவர் புரிந்துகொண்ட உண்மை.
அதே சமயம் இந்த கடனில் இருந்து விடுபட, அப்போது ஸ்வாமிகளுக்கு அடுத்த பட்டத்தில் இருந்த இளையவர் ஒரு திட்டம் போட்டார். அப்போது தஞ்சாவூருக்கு சரபோஜியின் பிள்ளைதான் ராஜாவாக இருந்தார். அவரிடம் போய் உதவி கேட்டார். இப்படி ராஜாவிடம் உதவி கேட்கப் போவதை பெரியவரிடம் கூறவில்லை. இளையவரின் எண்ணமே அப்போது வேறாக இருந்தது. ராஜாவின் உதவியோடு ஸ்ரீமடத்தின் கடனை நீக்கி, பழையபடி மடத்தை நிமிர்த்தி விட்டால், அது பெரியவருக்கும் மகிழ்ச்சியையும் புது தெம்பையும் தரும் என்று எண்ணியே, ராஜாவிடம் போய் உதவி கேட்டார்.
ஆனால், கொஞ்சமும் எதிர்பார்க்காத விதத்தில், சரபோஜியின் பிள்ளையோ, தன்னால் உதவமுடியாது. உதவிடும் நிலையிலும் நானில்லை” என்று கூறிவிட்டார். இதனால், இளையவருக்கு பெரிதும் ஏமாற்றமாகிவிட்டது. பின் தனக்கு ஏற்பட்ட தோல்வியை பெரியவரிடம் கூறி வருத்தப்படவும் செய்தார். ஆனால், அதன்பின் நடந்ததுதான் அற்புதம்… அது?
- தொடரும்…
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam
இத்தொடரை வாசிப்பவர்கள், அறிய வேண்டி, சுருக்கமாய் அந்த வரலாற்றுச் சம்பவத்தை அன்பர் கணபதி அவர்களை பிரார்த்தித்துக்கொண்டு, இத்தொடரிலும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
ஸ்ரீமடம் கைதான அந்தக் கதை, ஆச்சரியமூட்டுவதாகும்.
இது 1843-44களில் நடந்த சம்பவம்!
பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்று திருவானைக்காவல். இதில் குடிகொண்டிருப்பவள் அகிலாண்டேஸ்வரி. இவளது அனுக்கிரகத்துக்கு கவிராஜ காளமேகமே பெரும் சாட்சி.
இவளது அணிகளில் காதுத்தாடங்கம் என்பது ஒரு முக்கியமான அணி. திருக்கடவூரில் அபிராமி பட்டன் அமாவாசை அன்று நிலவுவரும் என்று தன்னை மறந்து சொல்லி விட, அந்த பட்டனின் – பக்தனின், வாக்கு பொய்யாகிவிடாதிருக்க, சரபோஜி மன்னன் முன்னாலே, அந்த அபிராமி தன் தாடங்கத்தை கழற்றித்தான் வானில் வீசி எறிந்தாள். அதுவே முழு நிலவாகி ஜொலித்து அபிராமி பட்டரை காப்பாற்றியது.
தாடங்கத்துக்கு பின்னாலே இப்படி ஒரு சம்பவம் உண்டு. இந்த தாடங்கங்கள் அகிலாண்டேஸ்வரிக்கும் மிக பிரசித்தி. காரணம் ஆதிசங்கர பகவத் பாதள்தான் முதலில் இவளுக்கு தாடங்கம் சாற்றி, அவளின் பேரெழிலை பிறர் காணச் செய்தவர்.
அதன்பிறகு அந்த தாடங்கம் தேய்ந்து போகும் போதோ, இல்லை பழசாகிப் போகும்போதோ புதிய ஒன்றை செய்து தருவது வழக்கம்.
1843லும் அப்படிச் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டு, அதை ஸ்ரீமடம் செய்து தந்தபோது, திருச்சியைச் சேர்ந்த ஒரு அன்பர், அம்பாளுக்கு அணி செய்யும் உரிமை தனக்கே உரியது என்று கோர்ட்டுக்கே போய்விட்டார். ஸ்ரீமடத்து உரிமையை அவருக்கு விட்டுத் தருவதில் கௌரவம் பார்த்த ஸ்ரீமடமும், தன் உரிமையை நிலைநாட்ட வக்கீல் வைத்து கோர்ட்டில் பதில் வழக்காடியது. வழக்கென்று வந்தால், அது என்ன அவ்வளவு சுலபத்தில் முடியுமா? கீழ் கோர்ட், மேல் கோர்ட் என்று சென்ற அது, ஒரு வழியாக முடிந்து மடத்துப்பக்கம் தீர்ப்பாகியது.
இதற்கு எத்தனை காலம் ஆனது என்று தேதிவாரியாக யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. ஏனென்றால் இன்றுபோல காலண்டர், கடிகாரம், ரிஸ்ட் வாட்ச், நாளிதழ்கள் என்று அன்று எதுவும் கிடையாது. கோயிலில் நடக்கும் விழாக்களை வைத்தும், தெருவில் தமுக்கு போடுபவன் செய்தி சொல்வதற்கு முன் தமிழ் வருஷ தேதி சொல்லி, செய்தி சொல்வதை வைத்தும்தான், அன்று வெகுஜனங்கள் நாள் கிழமைகளை தெரிந்து வந்தார்கள்.
ஆகையாலே, இந்த கேஸ் எவ்வளவு காலம் நடந்தது என்பதை அன்று சொன்ன விதம் மிக அலாதியானது. அதாவது, ஸ்ரீமடம் திருவானைக்காவலுக்கு போய் டேரா போட்டு அமர்ந்து பிறகுதான் தாடங்கத்தை சாத்தியது. அன்று சந்திர மௌலீஸ்வர பூஜையின்போது பிழியப்பட்ட எலுமிச்சம்பழத்தை வீசி எறிந்ததில், விழுந்த விதைகளில் சில எலுமிச்சை மரமாக முளைத்து, பின் பூவிட்டு பிஞ்சுவிட்டு காத்து திரும்பவும் சந்திர மௌளீஸ்வர பூஜைக்கே வந்து சேர்ந்ததாம். அதன்பிறகே, மடமும் அங்கிருந்து கிளம்பிய தாம்.
என்றால் எவ்வளவு காலம்?
ஒரு எலுமிச்சம் பழ விதையானது, மரமாகிப் பழம் தரும் அளவிலான காலம். அதாவது சுமாராக நான்கில் இருந்து ஐந்து வருடங்கள்!
இவ்வளவு நீண்ட காலம் வழக்கு நடத்திய தால், ஸ்ரீமடத்துக்கு நிறைய செலவு ஆகி கணக்கு பார்த்தபோது, ஸ்ரீமடம் கடனில் மூழ்கியிருந்ததாம்.
ஒரு தாடங்கச் சண்டையால் கடன் வந்ததை எண்ணி, அப்போதைய ஸ்வாமிகள் மிகவும் வருந்தினாராம். எப்படித் தெரியுமா? ‘பேசாமல் நான்தான் அணிவிப்பேன் என்ற அந்த நபருக்கே உரிமையை தந்திருக்கலாம்.
அம்பாளுக்கு யார் செய்தால் என்ன?
ஸ்ரீமடத்து உரிமை என்று கர்வப் பட்டதற்கு பலன், கடன். ஒரு மடாதிபதியான எனக்கு இது புரியாமல் போய்விட்டதே. ச்சே!’ என்று தன்னை மிக நொந்து கொண்டாராம் ஸ்வாமிகள். இதுதான் உண்மையான துறவியின் லட்சணம். இந்த மாதிரியான சத்யவிசாரமே துறவிகளையும் மேம்படுத்தும்.
இங்கே எங்கேயும் ஸ்வாமிகள் அம்பாளைப் பார்த்து, உனக்கு செய்யப்போய் நான் கடனாளி ஆகிவிட்டேனே என்று சராசரியாக நினைக்கவோ, ஸ்ரீமடத்துக்கு பொருள் வேண்டும் என்றும் பிரார்த்திக்கவோ இல்லை.
தான் இந்த உண்மையை உணர வேண்டும் என்றே வழக்கு, நீண்டு ஸ்ரீமடத்துக்கு கடனும் நேரிட்டது என்பதுதான் அவர் புரிந்துகொண்ட உண்மை.
அதே சமயம் இந்த கடனில் இருந்து விடுபட, அப்போது ஸ்வாமிகளுக்கு அடுத்த பட்டத்தில் இருந்த இளையவர் ஒரு திட்டம் போட்டார். அப்போது தஞ்சாவூருக்கு சரபோஜியின் பிள்ளைதான் ராஜாவாக இருந்தார். அவரிடம் போய் உதவி கேட்டார். இப்படி ராஜாவிடம் உதவி கேட்கப் போவதை பெரியவரிடம் கூறவில்லை. இளையவரின் எண்ணமே அப்போது வேறாக இருந்தது. ராஜாவின் உதவியோடு ஸ்ரீமடத்தின் கடனை நீக்கி, பழையபடி மடத்தை நிமிர்த்தி விட்டால், அது பெரியவருக்கும் மகிழ்ச்சியையும் புது தெம்பையும் தரும் என்று எண்ணியே, ராஜாவிடம் போய் உதவி கேட்டார்.
ஆனால், கொஞ்சமும் எதிர்பார்க்காத விதத்தில், சரபோஜியின் பிள்ளையோ, தன்னால் உதவமுடியாது. உதவிடும் நிலையிலும் நானில்லை” என்று கூறிவிட்டார். இதனால், இளையவருக்கு பெரிதும் ஏமாற்றமாகிவிட்டது. பின் தனக்கு ஏற்பட்ட தோல்வியை பெரியவரிடம் கூறி வருத்தப்படவும் செய்தார். ஆனால், அதன்பின் நடந்ததுதான் அற்புதம்… அது?
- தொடரும்…
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam