Post by varagooran on Oct 10, 2018 6:39:12 GMT 5.5
"இங்கே ஏதோ ஒண்ணு அதிகப்படியா இருக்கு.. ஆங்..அதான் பெரியவாளோட தேஜஸ்...தேஜஸ்!"
(மத்திய அமைச்சரின் புகழாரம்)
(கட்டில்,மெத்தை,தலைகாணி மறுத்த சம்பவம்)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-84
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
சிவாஸ்தானத்தில் ஒரு கயிற்றுக் கட்டிலில்
பெரியவாள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அன்றைய தினம், டில்லியிலிருந்து ஓர் அமைச்சர் தரிசனத்துக்கு வந்தார்.. முதன் முதலாக,வடநாட்டுத் துறவிகளின் ஆசிரமங்களை போல...காஞ்சி மடம்
ஆசிரமும் பெரிய பெரிய கட்டடங்கள் உள்ளதாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தார் போலும். சோபா, ஏர் கண்டிஷன்,கம்பளம்,டேபிள் என்று
கற்பனையோடு வந்திருந்தார்.
ஆனால் உலகம் போற்றும் பெரியவாள்,
ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தார்கள்.
நாடு, மொழி, ஜாதி கடந்து உலகத்தோரால் தெய்வமாக மதிக்கப்படும் அவதார புருஷரா இவர்?
கட்டில் அருகில் வந்து வந்தனம் செய்ததும், அமைச்சரின் சந்தேகங்கள் விலவிட்டன. பெரியவாளுடைய பார்வையின் ஈர்ப்பினால் வசீகரிக்கப்பட்டு மெய் மறந்தார்.
எட்டாவது உப்பரிகையில், பத்து கடோத்கஜர்கள் பணிவிடை செய்ய வெல்வெட் மெத்தையில் அலட்சியமாக உட்கார்ந்திருக்க வேண்டிய மகாத்மா, நீளக் காவித் துணியை அரைகுறையாக அணிந்து கொண்டு,கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்தார்.
பெரியவாள், அமைச்சருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பின்னர் ஒரு சால்வையை போர்த்தி மரியாதை செய்யச் சொன்னார்கள்.
ஒரு மாம்பழத்தைப் பிரசாதமாகக் கொடுத்தார்கள்.
"பெரியவாகிட்ட ஒரு விண்ணப்பம்.." -அமைச்சர்.
"என்ன?"-பெரியவாள்.
"நான் ஊருக்குப் போய் நல்ல மரக்கட்டில், மெத்தை, தலைகாணி அனுப்பி வைக்கிறேன் .பெரியவ தயவுசெய்து ஏற்றுக் கொண்டு உபயோகிக்கணும்..."
பெரியவாள் சொன்னார்கள்;
"அடாடா..அப்படியெல்லாம் சிரமப்படாதீங்கோ ..அதெல்லாம் வேண்டாம்.கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொள்வதும்,உட்காருவதும் ரொம்ப சுகம்; ஈடு இணையே இல்லை. ஹம்ஸதூளிகா மஞ்சத்தில் படுத்துக் கொண்ட மாதிரி சுகமா இருக்கும்!"
வந்த அமைச்சருக்கு ஒரே ஏமாற்றம். ஒரு சிறு சேவை கூட செய்ய முடியவில்லையே என்று ஆதங்கம்.
"எளிமையாயிருக்கக் கூடிய காந்தி, வினோபா- வெல்லாம் பார்த்திருக்கேன். ஆனா, இங்கே ஏதோ ஒண்ணு அதிகப்படியா இருக்கு.. ஆங்..அதான் பெரியவாளோட தேஜஸ்...தேஜஸ்!"
பூரண திருப்தியுடன் திரும்பிச் சென்றார் மத்திய அமைச்சர்
(மத்திய அமைச்சரின் புகழாரம்)
(கட்டில்,மெத்தை,தலைகாணி மறுத்த சம்பவம்)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-84
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
சிவாஸ்தானத்தில் ஒரு கயிற்றுக் கட்டிலில்
பெரியவாள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அன்றைய தினம், டில்லியிலிருந்து ஓர் அமைச்சர் தரிசனத்துக்கு வந்தார்.. முதன் முதலாக,வடநாட்டுத் துறவிகளின் ஆசிரமங்களை போல...காஞ்சி மடம்
ஆசிரமும் பெரிய பெரிய கட்டடங்கள் உள்ளதாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தார் போலும். சோபா, ஏர் கண்டிஷன்,கம்பளம்,டேபிள் என்று
கற்பனையோடு வந்திருந்தார்.
ஆனால் உலகம் போற்றும் பெரியவாள்,
ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தார்கள்.
நாடு, மொழி, ஜாதி கடந்து உலகத்தோரால் தெய்வமாக மதிக்கப்படும் அவதார புருஷரா இவர்?
கட்டில் அருகில் வந்து வந்தனம் செய்ததும், அமைச்சரின் சந்தேகங்கள் விலவிட்டன. பெரியவாளுடைய பார்வையின் ஈர்ப்பினால் வசீகரிக்கப்பட்டு மெய் மறந்தார்.
எட்டாவது உப்பரிகையில், பத்து கடோத்கஜர்கள் பணிவிடை செய்ய வெல்வெட் மெத்தையில் அலட்சியமாக உட்கார்ந்திருக்க வேண்டிய மகாத்மா, நீளக் காவித் துணியை அரைகுறையாக அணிந்து கொண்டு,கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்தார்.
பெரியவாள், அமைச்சருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பின்னர் ஒரு சால்வையை போர்த்தி மரியாதை செய்யச் சொன்னார்கள்.
ஒரு மாம்பழத்தைப் பிரசாதமாகக் கொடுத்தார்கள்.
"பெரியவாகிட்ட ஒரு விண்ணப்பம்.." -அமைச்சர்.
"என்ன?"-பெரியவாள்.
"நான் ஊருக்குப் போய் நல்ல மரக்கட்டில், மெத்தை, தலைகாணி அனுப்பி வைக்கிறேன் .பெரியவ தயவுசெய்து ஏற்றுக் கொண்டு உபயோகிக்கணும்..."
பெரியவாள் சொன்னார்கள்;
"அடாடா..அப்படியெல்லாம் சிரமப்படாதீங்கோ ..அதெல்லாம் வேண்டாம்.கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொள்வதும்,உட்காருவதும் ரொம்ப சுகம்; ஈடு இணையே இல்லை. ஹம்ஸதூளிகா மஞ்சத்தில் படுத்துக் கொண்ட மாதிரி சுகமா இருக்கும்!"
வந்த அமைச்சருக்கு ஒரே ஏமாற்றம். ஒரு சிறு சேவை கூட செய்ய முடியவில்லையே என்று ஆதங்கம்.
"எளிமையாயிருக்கக் கூடிய காந்தி, வினோபா- வெல்லாம் பார்த்திருக்கேன். ஆனா, இங்கே ஏதோ ஒண்ணு அதிகப்படியா இருக்கு.. ஆங்..அதான் பெரியவாளோட தேஜஸ்...தேஜஸ்!"
பூரண திருப்தியுடன் திரும்பிச் சென்றார் மத்திய அமைச்சர்