Post by radha on Jul 11, 2012 10:30:14 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
6-சந்திரசேகரம்–இந்திரா-செளந்தர்ராஜன்
…
அந்த நள்ளிரவில் புலவரின் காரை வழிமறித்து, நீங்கள்தானே புலவர்?” என்று அந்த பிராம்மணர் கேட்டபோது, அந்த புலவருக்கு பெரும் வியப்பு. ஏனென்றால், அவர் அங்கு பிரவேசம் செய்திருப்பதே எதிர்பாராத விதம்.
‘நான் வந்தபடி இருக்கிறேன்’ என்று கூற, இன்றுபோல கைபேசி வசதிகளும் இல்லாத காலம் அது. அப்படி இருக்க, இந்த பிராம்மணருக்கு தன் வருகை எப்படித் தெரிந்திருக்க முடியும் என்கிற கேள்வி, அந்த புலவருக்கு மட்டுமல்ல; புலவர் குடும்பத்தவர்க்கும் சேர்ந்தே ஏற்பட்டுவிட்டது.
அதைத் தொடர்ந்து நடந்தவைகளும் ஆச்சர்யமூட்டும் அனுபவங்கள்தான். அந்த பிராமணர், அவரை பெரியவர் தங்கியிருக்கும் படத்துக்கு அழைத்துப் போய், கைகால் கழுவி வரச் செய்து பின் அமர்வித்து தையல் இலை போட்டு, அதில் அரிசி உப்புமா, பிட்லே என்று சுடச்சுட பரிமாறியபோது புலவர் குடும்பம் சிலிர்த்துப் போனது. சாப்பிட்டு முடித்த கையோடு, பெரியவர் காத்திருப்பதாக கூறி, அவர்களை அழைத்துச் சென்று நிறுத்தியபோது பெரியவரும் விழித்திருந்தார்.
புலவரும் அவர் குடும்பத்தவரும் அந்த சாப்பாட்டையும் எதிர்பாக்கவில்லை – அந்த தரிசனத்தையும் எதிர்பாக்கவில்லை. புலவருக்கு ஆனந்தக் கண்ணீரே வந்து விட்டது.
இப்போது நடந்த அவ்வளவும் எங்கள் பாக்கியம். நாங்கள் துளியும் எதிர்பாராதது. எங்கள் வருகையும் சரி; பசியும் சரி; உங்களுக்கு எப்படித் தெரியும் என்றே தெரியவில்லை” என்றார் புலவர். அதற்கெல்லாம் எந்த பதிலையும் கூறவில்லை பெரியவர். ஒரு புன்னகைதான் பதில்.
சரி நாங்கள் இப்போதே தஞ்சாவூர் புறப்படுகிறோம்” என்று புலவர் கூறவும், படுத்து உறங்கிவிட்டு காலையில் போய்க்கொள்ளலாம்” என்று உறுதியாக கூறிவிட்டார் பெரியவர்.
படுக்கச் சென்ற இடத்தில் சூடாக பால் வேறு!
புலவர் கூட வந்தவர்களில் கைக்குழந்தை ஒன்றும் அடக்கம். அதற்கு பால்தானே சரியான உணவு!
புலவர், பெரியவரின் கருணையையும் உதவியையும் எண்ணி நெகிழ்ந்துபோனார்.
இந்தப் புலவர் யாரோ அல்ல. அந்த நாளில் புகழ்பெற்று விளங்கிய ஏ.கே. வேலன் என்பவர்தான் இவர். திராவிட இயக்கத் தொடர்போடு ஹிந்தி எதிர்ப்பு, விலைவாசி உயர்வு என்று பல போராட்டங்களில் கலந்துகொண்டவர். ஆன்மிகத்தில் நிறைய கேள்விகளை கொண்டிருந்தவர்.
இவரிடம் பெரியவர் எந்த உபன்யாசமும் செய்யவில்லை. அவர் போன வழியையும் தவறென்றோ சரியென்றோ கூறவில்லை. பெரியவர் மேல் புலவருக்கு ஒரு மதிப்பும் மரியாதையும் இருந்தது. இச்சம்பவத்துக்குப் பிறகு அது பக்தியாய் மாறிவிட்டது.
உண்மையான தவசிக்கு மாற்றுக் கருத்து உடையவர்களும் சரி; மதித்து பின் தொடர்பவர்களும் சரி, ஒன்றுதான்.
இன்றும் காஞ்சி மடத்துக்கு வெளியே ஈ.வெ.ரா. பெரியாரின் சிலை உள்ளது. தொடக்கத்தில் அங்கே சிலை நிறுவ அந்த இயக்கத்தவர்கள் முனைந்தபோது, பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியது. அது ஒரு வம்புக்கு வரும் செயல். இதனால் கலவரம் மூளும் என்றெல்லாம் பலரும் பயந்தார்கள். ஆனால், பெரியவர் அவர்களை சமாதானம் செய்து, அவர்கள் விருப்பப்படி நடந்துகொள்ளட்டும் என்று கூறிவிட்டாராம். அதற்கு அவர் சொன்ன காரணம்தான் உன்னதமானது.
எதிர்கருத்து உடையவர்கள், தங்கள் கருத்தை வலியுறுத்தத்தான் அந்த சிலையை அங்கே நிறுவுகிறார்கள். அது ஜனநாயக உரிமை. அந்த சிலையை பார்க்கும் போதெல்லாம் எனக்கும் ஒரு உத்வேகம் ஏற்படும். இத்தனை கோயில்களும் பௌராணிகர்களும் இருந்தே, இப்படி எதிர்க்கருத்து ஏற்படுகிறதென்றால், இதெல்லாம் ஏற்படாத அளவுக்கு ஆன்மிக ஞானத்தையும் அதற்கான தெளிவையும் உருவாக்கவும், அதை வழி நடத்தவுமான கடமை நமக்கு நிறைய இருக்கிறது என்பதைத்தான் அந்த சிலை வாயிலாக நான் உணர்கிறேன்!” என்றாராம். என்ன ஒரு அற்புதமான பார்வை? என்ன ஒரு தெளிவான அணுகுமுறை!
பெரியவரின் இந்த கண்ணியமான அணுகுமுறை, அந்த இயக்கத்தைச் சார்ந்தவர்களையே வியக்க வைத்தாதாகவும் நான் அறிந்தேன்.
இன்று ஆன்மிக வழி நடப்பதாக கூறிக் கொள்ளும் பல சன்னியாசிகள் மேல் நிறையவே குற்றச்சாட்டுகள். போலீஸ் அந்த சன்னியாசிகளை பிடித்து உள்ளே போடுவதும், அவர்கள் ஜாமினில் வருவதும் சகஜமாக உள்ளது. தன்னை ஒரு சன்னியாசியாக கூறிக்கொண்ட ஒருவர், பெரும் குற்றவாளிகள் கூட பெற்றிராத அளவு நீண்ட கால ஜெயில் தண்டனை பெற்று ஜெயிலிலேயே இறந்தும் போய்விட்டார்.
நம் சமயத்துக்கு ஏன் இப்படி ஒரு சோதனை என்ற வருத்தம் என்னுள் எழாமல் இல்லை. ஒரு சிறு ஆறுதல் போல, எல்லா சமயங்களிலும் இப்படிப்பட்டவர்கள் இருந்து, அந்த சமயத்துக்கே அவப்பெயர் ஏற்படுத்துவதையும் காணமுடிகிறது.
ஆனால், ஒரு சமயவாதி – குறிப்பாக சன்னியாசி, மக்களை வழிநடத்தும் கடமை உடையவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு, பெரியவர் இலக்கணமே வகுத்து வைத்திருக்கிறார் என்பதுதான் பேருண்மை.
இந்த உண்மையை வெகுஜனங்களோடு, இந்த சமயத்தை வழிநடத்துவதாக கூறிக்கொள்பவர்களும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
வம்பு வழக்கினையும், போலீஸ் கைதையும், அந்த நாளில் அதாவது நூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்பே காஞ்சிமடமும் சந்தித்துள்ளது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
அந்த சம்பவத்தை அன்பர் ரா.கணபதி அவர்களின் ‘கருணைக் காஞ்சி கனகதாரை’ என்னும் நூல் வாயிலாக நான் அறிய நேர்ந்தபோது, பேராச்சரியமும், கூடவே பல அரிய செய்திகளையும் உணர்ந்துகொண்டேன்
--Continued in the next message,please read that also to have full details
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam
6-சந்திரசேகரம்–இந்திரா-செளந்தர்ராஜன்
…
அந்த நள்ளிரவில் புலவரின் காரை வழிமறித்து, நீங்கள்தானே புலவர்?” என்று அந்த பிராம்மணர் கேட்டபோது, அந்த புலவருக்கு பெரும் வியப்பு. ஏனென்றால், அவர் அங்கு பிரவேசம் செய்திருப்பதே எதிர்பாராத விதம்.
‘நான் வந்தபடி இருக்கிறேன்’ என்று கூற, இன்றுபோல கைபேசி வசதிகளும் இல்லாத காலம் அது. அப்படி இருக்க, இந்த பிராம்மணருக்கு தன் வருகை எப்படித் தெரிந்திருக்க முடியும் என்கிற கேள்வி, அந்த புலவருக்கு மட்டுமல்ல; புலவர் குடும்பத்தவர்க்கும் சேர்ந்தே ஏற்பட்டுவிட்டது.
அதைத் தொடர்ந்து நடந்தவைகளும் ஆச்சர்யமூட்டும் அனுபவங்கள்தான். அந்த பிராமணர், அவரை பெரியவர் தங்கியிருக்கும் படத்துக்கு அழைத்துப் போய், கைகால் கழுவி வரச் செய்து பின் அமர்வித்து தையல் இலை போட்டு, அதில் அரிசி உப்புமா, பிட்லே என்று சுடச்சுட பரிமாறியபோது புலவர் குடும்பம் சிலிர்த்துப் போனது. சாப்பிட்டு முடித்த கையோடு, பெரியவர் காத்திருப்பதாக கூறி, அவர்களை அழைத்துச் சென்று நிறுத்தியபோது பெரியவரும் விழித்திருந்தார்.
புலவரும் அவர் குடும்பத்தவரும் அந்த சாப்பாட்டையும் எதிர்பாக்கவில்லை – அந்த தரிசனத்தையும் எதிர்பாக்கவில்லை. புலவருக்கு ஆனந்தக் கண்ணீரே வந்து விட்டது.
இப்போது நடந்த அவ்வளவும் எங்கள் பாக்கியம். நாங்கள் துளியும் எதிர்பாராதது. எங்கள் வருகையும் சரி; பசியும் சரி; உங்களுக்கு எப்படித் தெரியும் என்றே தெரியவில்லை” என்றார் புலவர். அதற்கெல்லாம் எந்த பதிலையும் கூறவில்லை பெரியவர். ஒரு புன்னகைதான் பதில்.
சரி நாங்கள் இப்போதே தஞ்சாவூர் புறப்படுகிறோம்” என்று புலவர் கூறவும், படுத்து உறங்கிவிட்டு காலையில் போய்க்கொள்ளலாம்” என்று உறுதியாக கூறிவிட்டார் பெரியவர்.
படுக்கச் சென்ற இடத்தில் சூடாக பால் வேறு!
புலவர் கூட வந்தவர்களில் கைக்குழந்தை ஒன்றும் அடக்கம். அதற்கு பால்தானே சரியான உணவு!
புலவர், பெரியவரின் கருணையையும் உதவியையும் எண்ணி நெகிழ்ந்துபோனார்.
இந்தப் புலவர் யாரோ அல்ல. அந்த நாளில் புகழ்பெற்று விளங்கிய ஏ.கே. வேலன் என்பவர்தான் இவர். திராவிட இயக்கத் தொடர்போடு ஹிந்தி எதிர்ப்பு, விலைவாசி உயர்வு என்று பல போராட்டங்களில் கலந்துகொண்டவர். ஆன்மிகத்தில் நிறைய கேள்விகளை கொண்டிருந்தவர்.
இவரிடம் பெரியவர் எந்த உபன்யாசமும் செய்யவில்லை. அவர் போன வழியையும் தவறென்றோ சரியென்றோ கூறவில்லை. பெரியவர் மேல் புலவருக்கு ஒரு மதிப்பும் மரியாதையும் இருந்தது. இச்சம்பவத்துக்குப் பிறகு அது பக்தியாய் மாறிவிட்டது.
உண்மையான தவசிக்கு மாற்றுக் கருத்து உடையவர்களும் சரி; மதித்து பின் தொடர்பவர்களும் சரி, ஒன்றுதான்.
இன்றும் காஞ்சி மடத்துக்கு வெளியே ஈ.வெ.ரா. பெரியாரின் சிலை உள்ளது. தொடக்கத்தில் அங்கே சிலை நிறுவ அந்த இயக்கத்தவர்கள் முனைந்தபோது, பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியது. அது ஒரு வம்புக்கு வரும் செயல். இதனால் கலவரம் மூளும் என்றெல்லாம் பலரும் பயந்தார்கள். ஆனால், பெரியவர் அவர்களை சமாதானம் செய்து, அவர்கள் விருப்பப்படி நடந்துகொள்ளட்டும் என்று கூறிவிட்டாராம். அதற்கு அவர் சொன்ன காரணம்தான் உன்னதமானது.
எதிர்கருத்து உடையவர்கள், தங்கள் கருத்தை வலியுறுத்தத்தான் அந்த சிலையை அங்கே நிறுவுகிறார்கள். அது ஜனநாயக உரிமை. அந்த சிலையை பார்க்கும் போதெல்லாம் எனக்கும் ஒரு உத்வேகம் ஏற்படும். இத்தனை கோயில்களும் பௌராணிகர்களும் இருந்தே, இப்படி எதிர்க்கருத்து ஏற்படுகிறதென்றால், இதெல்லாம் ஏற்படாத அளவுக்கு ஆன்மிக ஞானத்தையும் அதற்கான தெளிவையும் உருவாக்கவும், அதை வழி நடத்தவுமான கடமை நமக்கு நிறைய இருக்கிறது என்பதைத்தான் அந்த சிலை வாயிலாக நான் உணர்கிறேன்!” என்றாராம். என்ன ஒரு அற்புதமான பார்வை? என்ன ஒரு தெளிவான அணுகுமுறை!
பெரியவரின் இந்த கண்ணியமான அணுகுமுறை, அந்த இயக்கத்தைச் சார்ந்தவர்களையே வியக்க வைத்தாதாகவும் நான் அறிந்தேன்.
இன்று ஆன்மிக வழி நடப்பதாக கூறிக் கொள்ளும் பல சன்னியாசிகள் மேல் நிறையவே குற்றச்சாட்டுகள். போலீஸ் அந்த சன்னியாசிகளை பிடித்து உள்ளே போடுவதும், அவர்கள் ஜாமினில் வருவதும் சகஜமாக உள்ளது. தன்னை ஒரு சன்னியாசியாக கூறிக்கொண்ட ஒருவர், பெரும் குற்றவாளிகள் கூட பெற்றிராத அளவு நீண்ட கால ஜெயில் தண்டனை பெற்று ஜெயிலிலேயே இறந்தும் போய்விட்டார்.
நம் சமயத்துக்கு ஏன் இப்படி ஒரு சோதனை என்ற வருத்தம் என்னுள் எழாமல் இல்லை. ஒரு சிறு ஆறுதல் போல, எல்லா சமயங்களிலும் இப்படிப்பட்டவர்கள் இருந்து, அந்த சமயத்துக்கே அவப்பெயர் ஏற்படுத்துவதையும் காணமுடிகிறது.
ஆனால், ஒரு சமயவாதி – குறிப்பாக சன்னியாசி, மக்களை வழிநடத்தும் கடமை உடையவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு, பெரியவர் இலக்கணமே வகுத்து வைத்திருக்கிறார் என்பதுதான் பேருண்மை.
இந்த உண்மையை வெகுஜனங்களோடு, இந்த சமயத்தை வழிநடத்துவதாக கூறிக்கொள்பவர்களும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
வம்பு வழக்கினையும், போலீஸ் கைதையும், அந்த நாளில் அதாவது நூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்பே காஞ்சிமடமும் சந்தித்துள்ளது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
அந்த சம்பவத்தை அன்பர் ரா.கணபதி அவர்களின் ‘கருணைக் காஞ்சி கனகதாரை’ என்னும் நூல் வாயிலாக நான் அறிய நேர்ந்தபோது, பேராச்சரியமும், கூடவே பல அரிய செய்திகளையும் உணர்ந்துகொண்டேன்
--Continued in the next message,please read that also to have full details
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam