Post by radha on Jun 4, 2018 12:31:13 GMT 5.5
முன்பு எழுதிய தக்ஷிணாமூர்த்தி என்னும் தலைப்பில் மஹாபெரியவாளுடைய ஆசாரிய ஸ்வாமிகள் கூறினதில் இருந்து எடுக்கப்பட்டது.
குரு மௌன லெக்சர் செய்கிறார். ஒன்றுமே பேசாமல் மௌனமாக சாந்தமாக உட்கார்ந்து இருக்கிறார்.சாந்தமாகி விட்டால் அப்புறம் மௌனம் தானே .? அவர் சாந்தமாக மௌனமாக உட்கார்ந்து கொண்டு இருப்பதே மற்றவர்களுக்கு பெரிய உபதேசமாக இருக்கிறது.வாய் திறத்தால் சந்தேகம் அதிகமாக உண்டாகிவிடும். அவர் வாய் மூடிக்கொண்டு மௌனியாக உட்கார்ந்து விட்டார். என்ன என்னவோ சந்தேகங்களை அவர்கள் எழுப்பிக் கொண்டு வந்தார்களே அவை எல்லாம் அந்தச் சாந்த ஸ்வருபத்தைக் கண்டவுடனே நிவ்ருத்தியாகி அப்படியே மௌனிகளாக உட்கார்ந்து விட்டார்கள். ஒரு கேள்வி கேட்கவில்லை .ஒரு பதில் இல்லை.நிறைந்த ஆனந்தம் சாந்தந்தான் எல்லாச் சந்தேகத்தையும் நிவிருத்தி செய்து விடும்.ஒன்றையும் கேட்காமல் அப்படியே சாந்தமாக அந்தச் சாந்த ஸ்வருபியைக் கண்டவுடன் அவர்கள் நின்று விட்டார்கள். இத்தனை தபஸ் பண்ணினேன் பலனாக அவர்களுக்கு இப்போது தான் இந்தத் தரிசனம் கிடைத்தது.இந்த ஆனந்தம் இந்தச் சாந்தம் எல்லாம் உண்டாயிற்று.
நாம் கூடக் கிழவர் களைப் போகாமல் யௌவனமாக எப்போதும் இருக்காமல் . ஆனால் அப்படி இருக்க வேண்டும் என்றால் ஒன்றைப் பற்றியும் நினைக்காமல் ஒரு செயலும் இல்லாமல், சாந்தமாக ஆனந்தமாக இருக்க வேண்டும். ஆனால் நம்மை அப்படி ஒரு க்ஷணங்கூட இருக்கவிடாமல் உள்ளே ஏதோ ஒன்று அரித்துக் கொண்டே இருக்கிறது . கருணைக்கிழங்கைத் தின்றால் தொண்டையை அரித்துக் கொண்டே இருக்குமே. அப்படியே ஏதோ ஒரு கவலை , ஏதோ ஒரு துக்கம் நம் மனசைப் போட்டு எப்போதும் அடித்துக்கொண்டே இருக்கிறது.அதனால் தான் கிழவர்கள் ஆகிவிடுகிறோம் . கவலை இல்லாமல் இருந்திருந்தால் நாம் கிழவர் ஆகாமலேயே இருந்திருக்கலாம்.
மனசு அப்பறம் இப்பறம் அசையாமல் இருக்க வேண்டும் என்றால் ஒரு காரியமும் இல்லாமல் இருக்க வேண்டும். மனசு குறை இல்லாமல் ஆன்ந்தத்தில் நிரம்பி இருந்தத தால் நம் மனசு நிரம்ப வேலை செய்கிறது.கவலைப்படுகிறது . அதனால் பலபல அவஸ்தைகள் மாறிமாறி வருகின்றன அதனால் கிழத்தன்மை வந்து விடுகிறது.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM