Post by radha on May 20, 2018 9:40:33 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANA TO SRI KANCHI MAHA PERIVA
MAHA PERIVA'S BIRTHDAY. 20/05/1894
Varagooran Narayanan
Face book posting
"டேட் பர்த்டே -பெரியவா ஸ்பெஷல்" மே-20-.போஸ்ட்-.இரண்டு சம்பவங்கள
அஷ்டமி-நவமி-பிரதமை திதிகளும் அனுராதா நட்சத்திரமும்.{அனுஷம்) + "கேட்டை-மூட்டை-செவ்வாய்
மஹா பெரியவா, ஜயவருஷம், வைகாஸி மாஸம், 8-ம் தேதி [1894, மேமாஸம் 20-ம் தேதி] ஞாயிற்றுக்கிழமை, அனுஷ நக்ஷத்ரம் கூடிய புண்ய தினத்தில், பகல் நாழிகை 19-க்கு திருவவதாரம் செய்தருளினார்
[எஸ்.கணேச சர்மா எழுதிய புத்தகத்தில் இருந்து ஒரு பகுதிவரகூரான் நாராயணனால் தட்டச்சு செய்யப்பட்டது)
அனுராத [அனுஷம்] நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் அதிர்ஷ்டம் இதற்க்குத்தான். ஏனெனில் வேதத்திலேயே அனுராதாவை உயர்த்தி வைத்திருக்கிறது .எந்தக்காரியத்துக்கும் வேதவித்துகளிடமிருந்து உத்தரவு வாங்கிக் கொள்ள வேண்டுமென்பது சாஸ்திரம். அதனை அனுக்ஞை என்பர். இதற்கு உள்ள மந்திரத்தில் அனுராதாவுக்கு ஆஹூதி அளித்து [வேள்வி செய்து] மித்ரனின் [நண்பன்] அருளால் நூறாண்டுகள் இருக்க வேண்டுமென்று வேண்டப்படுகிறது .வேத,வேள்வி தழைக்கப் பிறந்தவரின் திருநட்சத்திரத்தின் சிறப்பும் எப்படி இருக்கிறது பாருங்கள்!.
பெரியவா பிறந்த திதி பிரதமை.பதினைந்து திதிகளில் அஷ்டமி,நவமி,பிரதமை மூன்றும் தள்ளத் தக்கவை. எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டோம்.
இதற்காக இந்த மூன்று திதிகளும் இறைவனிடம் சென்று அழுதனவாம்."நீதான் எல்லா திதிகளும் என்று மந்திரம் இருந்தாலும்,எங்களை எல்லோரும் தள்ளிவிடுகிறார்களே! நாங்கள் என்ன தவறு செய்தோம்" என்று கேட்டனவாம்.
உடனே ஸ்வாமி,"அப்படியா? கவலையை விடுங்கள்... மற்ற திதிகளைவிட உங்கள் மூவரையும் சிறப்பாகக் கொண்டாடும்படி நான் செய்து விடுகிறேன்!" என்று ஆறுதல் தந்தார்.
அதன்படிநவமியில்ராமனாகவும்,அஷ்டமியில்
கிருஷ்ணனாகவும், பிரதமையில் பரமாசார்யாளாகவும்
அவதாரம் பண்ணி,அந்த நாட்களை வீட்டுக்கு வீடு குதூகலமாகக் கொண்டாட வைத்தார்.
அதிலும் இந்த பிரதமைக்கு 'போனஸ்' என்னவென்றால், மாதத்தில் இரண்டு அஷ்டமி ,இரண்டு நவமி,இரண்டு பிரதமை வருகிறது.அஷ்டமியில் ஒன்றை மட்டும் உயர்த்தினார்.ஒன்றைவிட்டுவிட்டார். நவமியிலும் அவ்வாறே செய்தார்.
ஆனால்,பிரதமையில் இரண்டையுமே பெருமைப்படுத்தியிருக்கிறார்
.
கிருஷ்ணபட்சப்பிரதமையில் பெரியவா பிறந்தார்..சுக்லப்பட்சப்பிரதமையில் மறுபிறவி எடுத்தார்.அதாவது சந்நியாசம் பூண்டார். ஆகவே இரண்டு பிரதமைகளும் கொண்டாடப்படுகின்றன.
ஒரு வேளை பிரதமையை அதிகமாக அழ விட்டுவிட்டோமே என்று பச்சாதாப்பட்டு இப்படி செய்தார் போலும்.
[கிருஷ்ணாவதாரத்துக்கு பின் பெரியவா திரு அவதாரம் யுகங்கள்கடந்து விட்டதல்லவா]
..............................................................
கட்டுரை-2
"கேட்டை-மூட்டை-செவ்வாய்"
(அது மூட்டை இல்லை; மூட்டம். மூட்டம் என்றால் அமாவாஸ்யை, பேச்சு வழக்கில் மூட்டை,மூட்டை என்று மோனை முறியாமல் வந்துடுத்து")
மார்ச் 2012-ல் கதிரில் வந்ததை தமிழில் டைப் பண்ணினேன்
ஸ்ரீமடத்தில் பெரியவா முன்னிலையில் தினமும் காலையில் பஞ்சாங்க படனம் நடைபெறும். நாள்தோறும் திதி-வார-நக்ஷத்ர- யோக கரணங்களை அறிந்து கொண்டாலே மகத்தான புண்ணியம் என்பது சாஸ்திர வாக்கியம்.
ஒரு அமாவாஸ்யை திதியன்று செவ்வாய் கிழமையும் கேட்டை நட்சத்திரமும் கூடியிருந்தன. "இன்னைக்கு கேட்டை,மூட்டை, செவ்வாய்க் கிழமை எல்லாம் சேர்ந்திருக்கு,அதை ஒரு தோஷம் என்பார்கள், பரிகாரம் செய்யணும்" என்றார்கள்.
பெரியவா, "அப்பா குட்டி சாஸ்திரிகளுக்குச் சொல்லியனுப்பு. லோக க்ஷேமத்துக்காக ஹோமங்கள் செய்யச்சொல்லு..."
பரிகார ஹோமம் நடந்து கொண்டிருந்தபோது பெரியவா அங்கே வந்து பார்த்தார்கள்
. "கேட்டை,மூட்டை,செவ்வாய்க்கிழமை என்றால் என்ன அர்த்தம்?
கேட்டை என்பது நட்சத்திரம்,செவ்வாய் என்பது கிழமை,
மூட்டை என்றால் என்ன?"என்று கேட்டார்கள்.எவருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை.
பெரியவாளே சொன்னார்கள்.
"அது மூட்டை இல்லை; மூட்டம். மூட்டம் என்றால் அமாவாஸ்யை, பேச்சு வழக்கில் மூட்டை,மூட்டை என்று மோனை முறியாமல் வந்துடுத்து"
தொண்டர்களுக்கெல்லாமே ஆச்சரியமாக இருந்தது. "பெரியவா இம்மாதிரி நுட்பமான விஷயங்களை எங்கிருந்து தெரிந்துகொண்டார்கள்?"
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
MAHA PERIVA'S BIRTHDAY. 20/05/1894
Varagooran Narayanan
Face book posting
"டேட் பர்த்டே -பெரியவா ஸ்பெஷல்" மே-20-.போஸ்ட்-.இரண்டு சம்பவங்கள
அஷ்டமி-நவமி-பிரதமை திதிகளும் அனுராதா நட்சத்திரமும்.{அனுஷம்) + "கேட்டை-மூட்டை-செவ்வாய்
மஹா பெரியவா, ஜயவருஷம், வைகாஸி மாஸம், 8-ம் தேதி [1894, மேமாஸம் 20-ம் தேதி] ஞாயிற்றுக்கிழமை, அனுஷ நக்ஷத்ரம் கூடிய புண்ய தினத்தில், பகல் நாழிகை 19-க்கு திருவவதாரம் செய்தருளினார்
[எஸ்.கணேச சர்மா எழுதிய புத்தகத்தில் இருந்து ஒரு பகுதிவரகூரான் நாராயணனால் தட்டச்சு செய்யப்பட்டது)
அனுராத [அனுஷம்] நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் அதிர்ஷ்டம் இதற்க்குத்தான். ஏனெனில் வேதத்திலேயே அனுராதாவை உயர்த்தி வைத்திருக்கிறது .எந்தக்காரியத்துக்கும் வேதவித்துகளிடமிருந்து உத்தரவு வாங்கிக் கொள்ள வேண்டுமென்பது சாஸ்திரம். அதனை அனுக்ஞை என்பர். இதற்கு உள்ள மந்திரத்தில் அனுராதாவுக்கு ஆஹூதி அளித்து [வேள்வி செய்து] மித்ரனின் [நண்பன்] அருளால் நூறாண்டுகள் இருக்க வேண்டுமென்று வேண்டப்படுகிறது .வேத,வேள்வி தழைக்கப் பிறந்தவரின் திருநட்சத்திரத்தின் சிறப்பும் எப்படி இருக்கிறது பாருங்கள்!.
பெரியவா பிறந்த திதி பிரதமை.பதினைந்து திதிகளில் அஷ்டமி,நவமி,பிரதமை மூன்றும் தள்ளத் தக்கவை. எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டோம்.
இதற்காக இந்த மூன்று திதிகளும் இறைவனிடம் சென்று அழுதனவாம்."நீதான் எல்லா திதிகளும் என்று மந்திரம் இருந்தாலும்,எங்களை எல்லோரும் தள்ளிவிடுகிறார்களே! நாங்கள் என்ன தவறு செய்தோம்" என்று கேட்டனவாம்.
உடனே ஸ்வாமி,"அப்படியா? கவலையை விடுங்கள்... மற்ற திதிகளைவிட உங்கள் மூவரையும் சிறப்பாகக் கொண்டாடும்படி நான் செய்து விடுகிறேன்!" என்று ஆறுதல் தந்தார்.
அதன்படிநவமியில்ராமனாகவும்,அஷ்டமியில்
கிருஷ்ணனாகவும், பிரதமையில் பரமாசார்யாளாகவும்
அவதாரம் பண்ணி,அந்த நாட்களை வீட்டுக்கு வீடு குதூகலமாகக் கொண்டாட வைத்தார்.
அதிலும் இந்த பிரதமைக்கு 'போனஸ்' என்னவென்றால், மாதத்தில் இரண்டு அஷ்டமி ,இரண்டு நவமி,இரண்டு பிரதமை வருகிறது.அஷ்டமியில் ஒன்றை மட்டும் உயர்த்தினார்.ஒன்றைவிட்டுவிட்டார். நவமியிலும் அவ்வாறே செய்தார்.
ஆனால்,பிரதமையில் இரண்டையுமே பெருமைப்படுத்தியிருக்கிறார்
.
கிருஷ்ணபட்சப்பிரதமையில் பெரியவா பிறந்தார்..சுக்லப்பட்சப்பிரதமையில் மறுபிறவி எடுத்தார்.அதாவது சந்நியாசம் பூண்டார். ஆகவே இரண்டு பிரதமைகளும் கொண்டாடப்படுகின்றன.
ஒரு வேளை பிரதமையை அதிகமாக அழ விட்டுவிட்டோமே என்று பச்சாதாப்பட்டு இப்படி செய்தார் போலும்.
[கிருஷ்ணாவதாரத்துக்கு பின் பெரியவா திரு அவதாரம் யுகங்கள்கடந்து விட்டதல்லவா]
..............................................................
கட்டுரை-2
"கேட்டை-மூட்டை-செவ்வாய்"
(அது மூட்டை இல்லை; மூட்டம். மூட்டம் என்றால் அமாவாஸ்யை, பேச்சு வழக்கில் மூட்டை,மூட்டை என்று மோனை முறியாமல் வந்துடுத்து")
மார்ச் 2012-ல் கதிரில் வந்ததை தமிழில் டைப் பண்ணினேன்
ஸ்ரீமடத்தில் பெரியவா முன்னிலையில் தினமும் காலையில் பஞ்சாங்க படனம் நடைபெறும். நாள்தோறும் திதி-வார-நக்ஷத்ர- யோக கரணங்களை அறிந்து கொண்டாலே மகத்தான புண்ணியம் என்பது சாஸ்திர வாக்கியம்.
ஒரு அமாவாஸ்யை திதியன்று செவ்வாய் கிழமையும் கேட்டை நட்சத்திரமும் கூடியிருந்தன. "இன்னைக்கு கேட்டை,மூட்டை, செவ்வாய்க் கிழமை எல்லாம் சேர்ந்திருக்கு,அதை ஒரு தோஷம் என்பார்கள், பரிகாரம் செய்யணும்" என்றார்கள்.
பெரியவா, "அப்பா குட்டி சாஸ்திரிகளுக்குச் சொல்லியனுப்பு. லோக க்ஷேமத்துக்காக ஹோமங்கள் செய்யச்சொல்லு..."
பரிகார ஹோமம் நடந்து கொண்டிருந்தபோது பெரியவா அங்கே வந்து பார்த்தார்கள்
. "கேட்டை,மூட்டை,செவ்வாய்க்கிழமை என்றால் என்ன அர்த்தம்?
கேட்டை என்பது நட்சத்திரம்,செவ்வாய் என்பது கிழமை,
மூட்டை என்றால் என்ன?"என்று கேட்டார்கள்.எவருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை.
பெரியவாளே சொன்னார்கள்.
"அது மூட்டை இல்லை; மூட்டம். மூட்டம் என்றால் அமாவாஸ்யை, பேச்சு வழக்கில் மூட்டை,மூட்டை என்று மோனை முறியாமல் வந்துடுத்து"
தொண்டர்களுக்கெல்லாமே ஆச்சரியமாக இருந்தது. "பெரியவா இம்மாதிரி நுட்பமான விஷயங்களை எங்கிருந்து தெரிந்துகொண்டார்கள்?"
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM