|
Post by kramans on Jul 5, 2012 12:04:23 GMT 5.5
"காஞ்சி மகா பெரியவரை!" அவரை புரிஞ்சுக்க ஒரே ஒரு சம்பவம் சொல்கிறேன்....
ஒருநாள் அவருக்கு கீரை குக் பண்ணிக் கொடுத்திருக்காங்க. ஒரு வாய் சாப்பிட்டுப் பார்த்துட்டு "நன்னா இருக்கே'னு" சொல்லியிருக்கார் சுவாமிகள்.அதே மாதிரி கீரையைத் தினமும் சமைத்து சாமிகளுக்குக் கொடுத்திருக்கிறார் சமையல்காரர்.அதை சாமிகளும் சாப்பிட்டு வந்திருக்கிறார். திடீர்னு ஒருநாள்,"கீரை தினமும் சமைக்கிறியே....எங்கே கிடைக்குது'னு கேட்டிருக்கிறார் சுவாமிகள். "ஒரு விவசாயி வந்தார்.அவர்தான் கீரை கொண்டு வந்தார்.நீங்கள் கீரையைச் சாப்பிட்டுட்டு நல்லா இருக்குன்னு சொன்னேள்ன்னு சொன்னேன். அதுல இருந்து தினமும் கீரை கொண்டுவந்து கொடுக்க ஆரம்பிச்சுட்டார்.அதைத்தான் சமைச்சுக் கொடுத்துட்டு இருக்கேன்'னு சொல்லியிருக்கார் சமையல்காரர்.திடுக்னு அதிர்ச்சியான சுவாமிகள், அடுத்த ஒரு வாரம் உபவாசம் இருந்திருக்கார். அதுக்கு அவர் சொன்ன காரணம், "துறவறம் பூண்ட நான் ஒரு பொருள் மீது ஆசைப்படக் கூடாது. அதுவும் வெளியே தெரியுற அளவுக்கு ந்டந்துக்கிட்டது அதை விடத் தப்பு.அதுக்குத்தான் இந்த உபவாசம்'னு சொல்லியிருக்கார். இப்படி என் வாழ்க்கையில் தினமும் நான் கடைப் பிடிக்கிற பல நல்ல விஷயங்களை அவர் கிட்ட இருந்துதான் எடுத்துண்டு வர்றேன்!"
[விகடனைப் பார்த்து டைப் செய்தேன்]
Sri Kanchi Maha Periva Thiruvadigal Charanam
|
|
|
Post by hemalathak on Jul 5, 2012 18:52:24 GMT 5.5
shree maha periava thiruvadigal charanam Kamakoti Peeta Bhushanam Kaamakshi Vandhanapriyam Shankara avatharam Jnaanavibhooshanam Sathguru devam Namaami sathatham Chandrashekar Yathindhra Varadham santhatham mama sathgurum.
துறவறம் பூண்ட நான் ஒரு பொருள் மீது ஆசைப்படக் கூடாது. அதுவும் வெளியே தெரியுற அளவுக்கு ந்டந்துக்கிட்டது அதை விடத் தப்பு.அதுக்குத்தான ் இந்த உபவாசம்'னு சொல்லியிருக்கார். இப்படி என் வாழ்க்கையில் தினமும் நான் கடைப் பிடிக்கிற பல நல்ல விஷயங்களை அவர் கிட்ட இருந்துதான் எடுத்துண்டு வர்றேன்!"
[விகடனைப் பார்த்து டைப் செய்தேன்]
Mikka nandri for this post Vikadanaip paarthu ivar type seithirukiraar ivaraip paarthu naamum mele kooriyapadi pala nalla vizhayangalai kadaipidikka katrukolluvom. thank you for post
Sri Kanchi Maha Periva Thiruvadigal Charanam
|
|