Post by radha on Jul 10, 2017 10:21:41 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
பெரியவா சரணம்.
பூர்ணம் என்றால் அம்பாள்; அம்பாள் பரிபூர்ணம் என்பது அனைவரும் அறிந்ததே! நம் ஸ்ரீசரணாள் சாக்ஷாத் அம்பாள் ஸ்வரூபம் தாமே! அம்பாளிடம் இருப்பது சூலம்; ஐயனிடம் அதுவே தண்டமாக இருக்கின்றது.
இந்த தண்டம் என்பதனை சற்று கூர்ந்து நோக்கி அறிய முற்படலாமே என தோன்றுகிறது. எல்லாம் ஐயனின் அனுக்ரஹம் தாம் போலும்!
வாழ்க்கை நிலைகள் நாலு வகையாகச் சொல்லப்படுகிறது; ப்ரம்மசர்யம், கிரஹஸ்தம், வானப்ரஸ்தம், சன்னியாசம் என்பதாக. இந்த நால்வகை ஆசிரமத்திற்கும் அடையாள தண்டம் உண்டு.
முதலாவதான ப்ரம்மசரிய நிலையில் இருப்பவர்களுக்கு உபனயனம் செய்விக்கும் காலத்தில் கையில் அரசு அல்லது புரசு குச்சியைக் கொடுப்பர்;
இரண்டாவதாக கிரஹஸ்த நிலையினருக்குரிய அடையாளம், ஓட்டை இல்லாத மூங்கில்;
அடுத்ததாக வானப்ரஸ்த நிலையினருக்கு ஓட்டை உள்ள மூங்கிலும்
சன்னியாச ஆசிரமத்தில் இருப்போர்க்கு உரியது மூங்கில் அல்ல; மூங்கில் வகையைச் சேர்ந்த ஒரு குச்சி ஆகும். இதனையே தண்டம் என்று கூறுகிறோம். இதில் ஓட்டை கிடையாது. இது ஏக தண்டம் (சங்கரர் மற்றும் மத்வர்), த்ரிதண்டம் (வைஷ்ணவ சம்பிரதாயம் - மூன்று தண்டங்களை ஒருசேர கட்டி வைத்து), எனப்படும்.
சன்னியாய்கள் வைத்துக் கொண்டிருப்பது ஞான தண்டம் என்றும், கிரஹ்ஸ்தர்க்குரியது யோக தண்டம் என்றும் சொல்லப்படும்.
தண்டத்தின் மேற்புறத்தில் மடித்துக் கட்டப்பட்டிருக்கும் துணி "பரசு" (கோடாலி) எனப்படும். ஞான பரசு, ஞான அங்குசம் எனவும் வழங்கப்படும். அறியாமையை உடைப்பது என்பது பொருள். சுற்றியிருக்கும் கயிறு நம்மைச் சுற்றிக் கொண்டிருக்கும் பந்தத்தின் அளவைக் குறிப்பதாகும்.
ஞான பரசு கொண்டு அறியாமையை உடைத்தெறிந்து, பந்தக் கட்டிலிருந்தும் விடுபட வேண்டும் என்பதே இதன் கருத்து என பெரியோர்கள் கூறக் கேட்டறிந்ததுண்டு. தண்டத்தில் உள்ள கணுக்கள் ஒற்றைப் படையில் அமைந்திருக்கவும் வேண்டுமாம்.
பூரணத்துவமான ஞான குரு ஸ்ரீசரணாள். பூரணமான அம்பாள் ஸ்வரூபம். பூரணமாக ஆழ்மனத்தால் அவரது பாதாரவிந்தங்களில் பூரண சரணாகதி அடைந்து, பூரணமாய் அவரது அருளைப்பெற்று பூரணவாழ்வை வாழ்ந்து பரிபூரணமான அந்த பரமாத்மாவின் பாதாரவிந்தங்களில் சேர்வதே பூரணம் என்பதை அனைவரும் அறிவோமல்லவா!
பூதலமாம் இவ்வுலகில் ஜனித்துள்ள, ஜனிக்கப் போகிற ஒவ்வொரு ஜீவிகளும் பூரணம் பெற த்யானித்து இன்றைய புஷ்பத்தினை உங்கள் அனைவருடைய பரிபூரணமான பக்தியின் அடியேனும் ஒருவனாய் கலந்து உங்கள் அனைவரோடுமாக அவரது பாதாரவிந்தங்களில் சமர்ப்பிக்கின்றேன்.
பெரியவா கடாக்ஷம்
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
பெரியவா சரணம்.
பூர்ணம் என்றால் அம்பாள்; அம்பாள் பரிபூர்ணம் என்பது அனைவரும் அறிந்ததே! நம் ஸ்ரீசரணாள் சாக்ஷாத் அம்பாள் ஸ்வரூபம் தாமே! அம்பாளிடம் இருப்பது சூலம்; ஐயனிடம் அதுவே தண்டமாக இருக்கின்றது.
இந்த தண்டம் என்பதனை சற்று கூர்ந்து நோக்கி அறிய முற்படலாமே என தோன்றுகிறது. எல்லாம் ஐயனின் அனுக்ரஹம் தாம் போலும்!
வாழ்க்கை நிலைகள் நாலு வகையாகச் சொல்லப்படுகிறது; ப்ரம்மசர்யம், கிரஹஸ்தம், வானப்ரஸ்தம், சன்னியாசம் என்பதாக. இந்த நால்வகை ஆசிரமத்திற்கும் அடையாள தண்டம் உண்டு.
முதலாவதான ப்ரம்மசரிய நிலையில் இருப்பவர்களுக்கு உபனயனம் செய்விக்கும் காலத்தில் கையில் அரசு அல்லது புரசு குச்சியைக் கொடுப்பர்;
இரண்டாவதாக கிரஹஸ்த நிலையினருக்குரிய அடையாளம், ஓட்டை இல்லாத மூங்கில்;
அடுத்ததாக வானப்ரஸ்த நிலையினருக்கு ஓட்டை உள்ள மூங்கிலும்
சன்னியாச ஆசிரமத்தில் இருப்போர்க்கு உரியது மூங்கில் அல்ல; மூங்கில் வகையைச் சேர்ந்த ஒரு குச்சி ஆகும். இதனையே தண்டம் என்று கூறுகிறோம். இதில் ஓட்டை கிடையாது. இது ஏக தண்டம் (சங்கரர் மற்றும் மத்வர்), த்ரிதண்டம் (வைஷ்ணவ சம்பிரதாயம் - மூன்று தண்டங்களை ஒருசேர கட்டி வைத்து), எனப்படும்.
சன்னியாய்கள் வைத்துக் கொண்டிருப்பது ஞான தண்டம் என்றும், கிரஹ்ஸ்தர்க்குரியது யோக தண்டம் என்றும் சொல்லப்படும்.
தண்டத்தின் மேற்புறத்தில் மடித்துக் கட்டப்பட்டிருக்கும் துணி "பரசு" (கோடாலி) எனப்படும். ஞான பரசு, ஞான அங்குசம் எனவும் வழங்கப்படும். அறியாமையை உடைப்பது என்பது பொருள். சுற்றியிருக்கும் கயிறு நம்மைச் சுற்றிக் கொண்டிருக்கும் பந்தத்தின் அளவைக் குறிப்பதாகும்.
ஞான பரசு கொண்டு அறியாமையை உடைத்தெறிந்து, பந்தக் கட்டிலிருந்தும் விடுபட வேண்டும் என்பதே இதன் கருத்து என பெரியோர்கள் கூறக் கேட்டறிந்ததுண்டு. தண்டத்தில் உள்ள கணுக்கள் ஒற்றைப் படையில் அமைந்திருக்கவும் வேண்டுமாம்.
பூரணத்துவமான ஞான குரு ஸ்ரீசரணாள். பூரணமான அம்பாள் ஸ்வரூபம். பூரணமாக ஆழ்மனத்தால் அவரது பாதாரவிந்தங்களில் பூரண சரணாகதி அடைந்து, பூரணமாய் அவரது அருளைப்பெற்று பூரணவாழ்வை வாழ்ந்து பரிபூரணமான அந்த பரமாத்மாவின் பாதாரவிந்தங்களில் சேர்வதே பூரணம் என்பதை அனைவரும் அறிவோமல்லவா!
பூதலமாம் இவ்வுலகில் ஜனித்துள்ள, ஜனிக்கப் போகிற ஒவ்வொரு ஜீவிகளும் பூரணம் பெற த்யானித்து இன்றைய புஷ்பத்தினை உங்கள் அனைவருடைய பரிபூரணமான பக்தியின் அடியேனும் ஒருவனாய் கலந்து உங்கள் அனைவரோடுமாக அவரது பாதாரவிந்தங்களில் சமர்ப்பிக்கின்றேன்.
பெரியவா கடாக்ஷம்
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM