Post by kramans on Jul 1, 2012 13:57:11 GMT 5.5
ஏன் நாம் வேதத்தை ரக்ஷிக்க வேண்டும் ?
மனித அறிவின் எல்லையை மீறி அகண்டமாக(எல்லையற்றவர்களாக) ஆனவர்களே மஹரிஷிகள். உலகத்திற்கு அவர்கள் மூலமே வேதமந்திரங்கள் வந்திருக்கின்றன.
நல்ல எண்ணங்கள் மக்களுக்கு உண்டாகிறது என்றால், அதை உண்டாக்குகின்ற சலனங்கள் (நுன்செயல்கள்) இருக்க வேண்டும். அவற்றிற்கான சப்தங்களும் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட சப்தங்களை நாம் உண்டாக்க முடியுமானால் உலகத்தில் உள்ள மக்களுக்கு நல்ல எண்ணங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும். அதன் மூலமாக சாதனைகளும், வெற்றிகளும், மனசாந்திகளும் பெருகிக்கொண்டே இருக்கும். இதைவிட உலகத்திற்கு பெரிய க்ஷேமம் என்ன இருக்கிறது? அப்படி எண்ணுவதற்கு அவர்களை தூண்டுகிற சக்தியை பெற்ற சப்தங்கள் தான் வேதமந்திரங்கள்.
இந்த வேத மந்திரங்களில் விசேஷம் என்னவென்றால், அர்த்தம் இல்லாமல், வெறும் சப்தரூபத்திலேயே அவை உலகத்திற்கு க்ஷேமத்தைச் செய்கின்றன. இது மட்டுமில்லை, அவற்றிற்கு உயர்ந்த அர்த்தமும் இருக்கிறது. சகல வேதங்களும், பரம தாத்பர்யமாக, �ஒரே சத்யம் தான் இத்தனையாகவும் தோன்றியிருக்கிறது� என்று சொல்கின்றன. இது தவிர, அவை சப்தங்களாக இருக்கும்போதே அந்தந்த சப்தத்திற்குறிய தேவதா ரூபங்களாகவும் இருந்து அந்தந்த தேவதையின் சாக்ஷாத்க்காரத்தையும் அநுக்ரஹத்தையும் நமக்கு ஏற்படுத்தி வைக்கின்றன.
அப்படிப்பட்ட வேதங்களை (மந்திரங்களை) உலகத்தில் நிலைத்திருக்கும்படியாகச் செய்வதில் எல்லோரும் இதயபூர்வமாக முனைந்து செயலில் இறங்க வேண்டும். இது இப்போதுள்ள ஜன சமூகம் முழுவதற்கும், பிராம்மண ஜாதிக்கு மட்டுமல்ல, சமஸ்த லோகத்திலும் உள்ள அதனை கோடி ஜீவராசிகளுக்கும் க்ஷேமம் உண்டாவதற்காக நீங்கள் செய்ய வேண்டிய கடமை. தெய்வத்தால் விதிக்கப்பட்ட கடமை. அதுவே தெய்வீகமான கடமையும் (Divine Duty) ஆகும்.
அப்படிப்பட்ட வேதத்தை அழிய விடக் கூடாது என்று சொல்லி, தொடர்ந்து வேத ரக்ஷணத்திற்கு எதாவது ஏற்பாடு பண்ணுமாறு செய்ய வேண்டும் என்று தான் உங்களைக் கேட்க வந்திருக்கின்றேன். எனக்காக, உங்களுக்காக என்று வித்யாசம் எதற்கு? நான், நீங்கள் எல்லாம் ஒன்றுதான். என் கார்யம் உங்கள் கார்யம். �வேதத்தை ரக்ஷித்து விட்டால்� அதுதான் எல்லோருக்கும் பரம ஸ்ரேயஸ்ஸை தருகிற ஒரே கார்யம். இதை செய்வதால் க்ஷேமம் உங்களுக்கு. பெயர் எனக்கு.
�காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ பரமாச்சார்ய ஸ்வாமிகள்
Sri Kanchi Maha Periva Thiruvadigal Charanam