Post by radha on Apr 2, 2017 12:38:26 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
Saanu Puthiran இன் இடுகையை Radha Krishnan பகிர்ந்துள்ளார்.
12 நிமிடங்கள் ·
Swarnalatha Natarajan மற்றும் 43 பேர் உடன் Saanu Puthiran.
31 மார்ச், 11:21 PM ·
பெரியவா சரணம்.
நம் இந்தப் பிறப்பானது பூர்வ புண்ணிய – பாப பயனாலேயே அமைகிறது எனும் போது, என்னதான் பாவங்களை முற்பிறவியிலே செய்திருந்தாலும், இப்பிறப்பிலே எதைச் செய்து நாம் நல்லன இப்பிறப்பிலேயே பெறமுடியும் என்ற கேள்விக்கு அனேகம் மஹானுபாவர்கள் சொல்வது ஒன்றைத் தான் என இருக்கிறது….
அது – குருவின் திருவடிகளிலே நம்மை சரண் புகுத்திக் கொள்வதும், குருவின் அறிவுரைகள் படியாக இவ்வாழ்விலே நடந்து கொள்வதும் தான்.
ஆம்! ப்ராரப்த கர்ம வினைகளாலே நாம் படுகின்ற துன்ப நிலைகளைக் கடந்து வரவேண்டுமானால், பிறப்பெய்திய ஜீவாத்மா மீண்டும் அந்த பரமாத்மாவிடம் நலமுற போய்ச் சேரவேண்டுமானால் குருகடாக்ஷம் அவசியம் தேவையல்லவோ!
அப்படியாக நம்மையெல்லாம் காத்து ரக்ஷிக்க வந்த, நம் உம்மாச்சித் தாத்தாவான சர்வக்ஞன், சர்வவ்யாபி, சாந்தஸ்வரூபன், சத்சித் ஆனந்தன், சகலர்க்கும் அருள்பாலிக்கும் அன்னதான பிரபு, சகலரையும் காக்கும் தன்வந்திரி மூர்த்தி, சாக்ஷாத் அந்த பரமேஸ்வரனின் அவதாரமாக வந்து ஒரு நூறு வருடங்கள் நம்மை ரக்ஷிக்கத் தேவையானவற்றைச் செய்து இன்றும் சூக்ஷம ரூபியாக நம்மை வாழ்வித்து வருகின்ற ஸ்ரீமஹாபெரியவாளின் பாதாரவிந்தங்களிலே நம்மை சரண் புகுத்திக் கொண்டு, நல்லனவற்றை இன்றே செய்ய ஆரம்பித்து, எல்லோருக்குமாகவும் ப்ரார்த்தித்து, ஏகாந்தமான ஆனந்தத்தோடு இவ்வாழ்வை வாழ்வோமே!
ஹர ஹர சங்கர… ஜய ஜய சங்கர…
#ஸ்ரீகுருகானம்
ஒரு தரம் குருவை நினைத்தால் போதும்
ஓடிவந்து அருள் நிறைந்திடுமே!
இரு கரம் கூப்பித் தொழுதால் போதும்
இனிதாய் வாழ்வும் மாறிடுமே!
(ஒரு………)
சரண்புகுந் தவர்முன் குனிந்தால் போதும்
சங்கடம் ஏதும் அணுகாதே!
சங்கர கோஷம் சொன்னால் போதும்
சடுதியில் துன்பமும் விலகிடுமே!
(ஒரு………)
திருவடி நிழலதை மனதினில் நினைத்தால்
தீரா நோயும் அகன்றிடுமே!
அன்புத் திருமுகத் தரிசனம் கண்டால்
ஆக்கமும் ஊக்கமும் பெறுகிடுமே!
(ஒரு………)
அருள்வாய் குருவே என்றே பணிந்தால்
அன்பும் பண்பும் கூடிடுதே!
அடிபணிந் தோர்க்கும் ஒப்பே யின்றி
உள்ளத் தெழிலும் ஒன்றிடுதே!
(ஒரு………)
சடைசூழ் நிலவும் கங்கையும் சூடிய
சனகர் குருவாம் சாம்பசிவன்
சங்கரன் எனவும் காலடி வந்தவன்
காஞ்சியில் ஸ்ரீசசி சேகரனே!
(ஒரு………)
காஞ்சியில் கற்பக சசிசேகரனின்
சன்னதி முன்பாய் தொழுதாலே
கருணை விழிகளின் அருட்பார் வைதனில்
அறிவாய் தெரிவாய் விளங்கிடுதே!
(ஒரு………)
தேசமெ லாம்திருப் பாதமும் பதித்தே
நடையாய் நடந்தருள் செய்தவரை
நேசமுடன் சரண் புகுவார் தமக்கும்
நெஞ்சினில் அறமும் ஓங்கிடுமே!
(ஒரு………)
நன்றே சொல்வேன் இன்றே சொல்வேன்
நயமாய் மனதினில் ஏற்றிடுவீர்!
நேயம் தருமம் நெஞ்சினில் கொண்டே
நாயகன் பாதம் சரண்புகுவீர்!
(ஒரு………)
ஓம் அம் பகவஹ மந்திரம் செபித்தே
மனத்துள் குருவைத் தொழுதாலே
உலகம் போற்றிட வாழ்வும் விளங்கிடும்
சத்தியம் பகர்ந்தேன் கேட்பீரே!
(ஒரு………)
சங்கரம் போற்றி!
காஞ்சியை அடுத்த தேனம்பாக்கத்து சிவாஸ்தானத்திலே நம் ஐயன் ஸ்ரீமஹாபெரியவா அனைவருக்குமாக, எந்த தேவதையையும் த்யானித்து வேண்டக்கூடியதாக ஒரு திருமந்திரத்தைத் தந்ததாக ஸ்ரீமான் ரா. கணபதி அண்ணா முதலாக அனேகம் சத் ஆத்மாக்களெல்லாம் கூறியபடியாக அறிந்ததையே நாமும் இந்த சர்வவ்யாபியான பரப்ரஹ்மத்தை த்யானித்துப் போற்றுவோமே என்பதாக தோன்றிய பொழுதிலிருந்து மனதிலே ஆனந்தம் குடிகொண்டுவிட்டதே அடியேனுக்கு! யாம் பெற்றதொரு இன்பம் இவ்வையகத்தோர் அனைவருக்கும் கிடைக்கவே அனுதினமும் எல்லோருக்காகவும் ப்ரார்த்திக்கின்றேன். அதனையே இந்த குருகானத்திலும் கூற விழைகின்றேன்…. அவர் அருளாலே அவர் தாள் வணங்கியபடியாக!
என்னோடு யாரெல்லாம் இத்தகைய பிரார்த்தனையிலே கூடுவீர்கள் என்று கேட்கத் தேவையே இல்லை; காரணம் இவ்வழியாக அடியேன் இருப்பதே என்னைச் சுற்றிலும் உள்ள ஒவ்வொரு சக ஜீவர்களாலே தானே! குருவருள் கொண்ர்ந்து கொடுத்த உறவுகள் தாமே!
சர்வம் ஸ்ரீ சந்திரசேகரம்!
குருவுண்டு பயமில்லை; குறையேதும் இனியில்லை
பெரியவா கடாக்ஷம்
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARA
Saanu Puthiran இன் இடுகையை Radha Krishnan பகிர்ந்துள்ளார்.
12 நிமிடங்கள் ·
Swarnalatha Natarajan மற்றும் 43 பேர் உடன் Saanu Puthiran.
31 மார்ச், 11:21 PM ·
பெரியவா சரணம்.
நம் இந்தப் பிறப்பானது பூர்வ புண்ணிய – பாப பயனாலேயே அமைகிறது எனும் போது, என்னதான் பாவங்களை முற்பிறவியிலே செய்திருந்தாலும், இப்பிறப்பிலே எதைச் செய்து நாம் நல்லன இப்பிறப்பிலேயே பெறமுடியும் என்ற கேள்விக்கு அனேகம் மஹானுபாவர்கள் சொல்வது ஒன்றைத் தான் என இருக்கிறது….
அது – குருவின் திருவடிகளிலே நம்மை சரண் புகுத்திக் கொள்வதும், குருவின் அறிவுரைகள் படியாக இவ்வாழ்விலே நடந்து கொள்வதும் தான்.
ஆம்! ப்ராரப்த கர்ம வினைகளாலே நாம் படுகின்ற துன்ப நிலைகளைக் கடந்து வரவேண்டுமானால், பிறப்பெய்திய ஜீவாத்மா மீண்டும் அந்த பரமாத்மாவிடம் நலமுற போய்ச் சேரவேண்டுமானால் குருகடாக்ஷம் அவசியம் தேவையல்லவோ!
அப்படியாக நம்மையெல்லாம் காத்து ரக்ஷிக்க வந்த, நம் உம்மாச்சித் தாத்தாவான சர்வக்ஞன், சர்வவ்யாபி, சாந்தஸ்வரூபன், சத்சித் ஆனந்தன், சகலர்க்கும் அருள்பாலிக்கும் அன்னதான பிரபு, சகலரையும் காக்கும் தன்வந்திரி மூர்த்தி, சாக்ஷாத் அந்த பரமேஸ்வரனின் அவதாரமாக வந்து ஒரு நூறு வருடங்கள் நம்மை ரக்ஷிக்கத் தேவையானவற்றைச் செய்து இன்றும் சூக்ஷம ரூபியாக நம்மை வாழ்வித்து வருகின்ற ஸ்ரீமஹாபெரியவாளின் பாதாரவிந்தங்களிலே நம்மை சரண் புகுத்திக் கொண்டு, நல்லனவற்றை இன்றே செய்ய ஆரம்பித்து, எல்லோருக்குமாகவும் ப்ரார்த்தித்து, ஏகாந்தமான ஆனந்தத்தோடு இவ்வாழ்வை வாழ்வோமே!
ஹர ஹர சங்கர… ஜய ஜய சங்கர…
#ஸ்ரீகுருகானம்
ஒரு தரம் குருவை நினைத்தால் போதும்
ஓடிவந்து அருள் நிறைந்திடுமே!
இரு கரம் கூப்பித் தொழுதால் போதும்
இனிதாய் வாழ்வும் மாறிடுமே!
(ஒரு………)
சரண்புகுந் தவர்முன் குனிந்தால் போதும்
சங்கடம் ஏதும் அணுகாதே!
சங்கர கோஷம் சொன்னால் போதும்
சடுதியில் துன்பமும் விலகிடுமே!
(ஒரு………)
திருவடி நிழலதை மனதினில் நினைத்தால்
தீரா நோயும் அகன்றிடுமே!
அன்புத் திருமுகத் தரிசனம் கண்டால்
ஆக்கமும் ஊக்கமும் பெறுகிடுமே!
(ஒரு………)
அருள்வாய் குருவே என்றே பணிந்தால்
அன்பும் பண்பும் கூடிடுதே!
அடிபணிந் தோர்க்கும் ஒப்பே யின்றி
உள்ளத் தெழிலும் ஒன்றிடுதே!
(ஒரு………)
சடைசூழ் நிலவும் கங்கையும் சூடிய
சனகர் குருவாம் சாம்பசிவன்
சங்கரன் எனவும் காலடி வந்தவன்
காஞ்சியில் ஸ்ரீசசி சேகரனே!
(ஒரு………)
காஞ்சியில் கற்பக சசிசேகரனின்
சன்னதி முன்பாய் தொழுதாலே
கருணை விழிகளின் அருட்பார் வைதனில்
அறிவாய் தெரிவாய் விளங்கிடுதே!
(ஒரு………)
தேசமெ லாம்திருப் பாதமும் பதித்தே
நடையாய் நடந்தருள் செய்தவரை
நேசமுடன் சரண் புகுவார் தமக்கும்
நெஞ்சினில் அறமும் ஓங்கிடுமே!
(ஒரு………)
நன்றே சொல்வேன் இன்றே சொல்வேன்
நயமாய் மனதினில் ஏற்றிடுவீர்!
நேயம் தருமம் நெஞ்சினில் கொண்டே
நாயகன் பாதம் சரண்புகுவீர்!
(ஒரு………)
ஓம் அம் பகவஹ மந்திரம் செபித்தே
மனத்துள் குருவைத் தொழுதாலே
உலகம் போற்றிட வாழ்வும் விளங்கிடும்
சத்தியம் பகர்ந்தேன் கேட்பீரே!
(ஒரு………)
சங்கரம் போற்றி!
காஞ்சியை அடுத்த தேனம்பாக்கத்து சிவாஸ்தானத்திலே நம் ஐயன் ஸ்ரீமஹாபெரியவா அனைவருக்குமாக, எந்த தேவதையையும் த்யானித்து வேண்டக்கூடியதாக ஒரு திருமந்திரத்தைத் தந்ததாக ஸ்ரீமான் ரா. கணபதி அண்ணா முதலாக அனேகம் சத் ஆத்மாக்களெல்லாம் கூறியபடியாக அறிந்ததையே நாமும் இந்த சர்வவ்யாபியான பரப்ரஹ்மத்தை த்யானித்துப் போற்றுவோமே என்பதாக தோன்றிய பொழுதிலிருந்து மனதிலே ஆனந்தம் குடிகொண்டுவிட்டதே அடியேனுக்கு! யாம் பெற்றதொரு இன்பம் இவ்வையகத்தோர் அனைவருக்கும் கிடைக்கவே அனுதினமும் எல்லோருக்காகவும் ப்ரார்த்திக்கின்றேன். அதனையே இந்த குருகானத்திலும் கூற விழைகின்றேன்…. அவர் அருளாலே அவர் தாள் வணங்கியபடியாக!
என்னோடு யாரெல்லாம் இத்தகைய பிரார்த்தனையிலே கூடுவீர்கள் என்று கேட்கத் தேவையே இல்லை; காரணம் இவ்வழியாக அடியேன் இருப்பதே என்னைச் சுற்றிலும் உள்ள ஒவ்வொரு சக ஜீவர்களாலே தானே! குருவருள் கொண்ர்ந்து கொடுத்த உறவுகள் தாமே!
சர்வம் ஸ்ரீ சந்திரசேகரம்!
குருவுண்டு பயமில்லை; குறையேதும் இனியில்லை
பெரியவா கடாக்ஷம்
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARA