Post by radha on Jun 26, 2012 3:22:35 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA SWAMIGAL
இந்தப் பசியின் அருமையை பெரிதும் உணர்ந்த தலைவர்களில் ஒருவர்தான் எம்.ஜி.ஆர். அவருக்கும் பெரியவருக்கும் இந்த பசி விஷயத்தில் ஒரே எண்ணம் தான்!
எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்த சமயம் – முதல்வராக பொறுப்பேற்பதற்கு முதல் நாள் ஒரு சம்பவம்! அப்போது மகாபெரியவர், மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் தங்கியிருந்தார். இதே சாதுர்மாஸ்ய விரதம்தான். எம்.ஜி.ஆரை வாழ்த்தி, ஆசி கூற விரும்பினார் பெரியவர். அதன் நிமித்தம் ஒரு பொன்னாடையுடன் காமாட்சியம்மன் பிரசாதத்தை வரவழைத்து ஆசீர்வாதத்துடன், அதை வைணவ சீலரான முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சாரியார் வசம் ஒப்படைத்து, “இதை மடத்து ஆசீர்வாதமாக முதல்வரிடம் சேர்ப்பித்துவிடு” என்று கூறி அனுப்பிவித்தார்.
முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியாரும் ராமாவரம் தோட்டத்துக்கு வந்து காத்திருந்து, அந்த பிரசாதத்தை எம்.ஜி.ஆர். வசம் சேர்ப்பித்தார். பெரும் ஜனத்திரளுக்கு நடுவில் பிரசாதத்தை உரிய முறையில் சேர்க்க முடியுமா என்று சந்தேகம் இருந்தது. ஆனால், பெரியவர் கருணை அங்கே பரந்தாமன் எனும் அன்பர் மூலம் வழி நடத்தி பிரசாதத்தையும் சேர்த்துவிட்டது.
அவ்வேளையில், எம்.ஜி.ஆர் அவர்கள் லஷ்மி நரசிம்மாச்சாரியாரிடம் கூறியது ஒன்றுதான்: “மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நான் ஆட்சி செய்வேன்” என்று மட்டும் பெரியவரிடம் கூறி, என் பணிவான நமஸ்காரங்களையும் கூறிவிடுங்கள் என்றார்.
லஷ்மி நரசிம்மாச்சாரியாரும் மகிழ்வுடன் விடை பெற்றுக்கொண்டார். மறுநாள் எம்.ஜி.ஆர். பெரியவர் அணிவித்த சால்வையை அணிந்துகொண்ட பிறகே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
சதாராவிலிருந்து பெரியவர் புரிந்த ஆசிகளும், கருணையும், எம்.ஜி.ஆருக்குள் இயல்பாகவே இருந்த உதாரகுணமும் ஒன்றிணைந்தன. சத்துணவுத் திட்டம் எனும் மனிதநேய அரசியல் மொட்டவிழ்ந்தது.
காமராஜர் விதைத்தது; பெரியவர் கருணையாலே எம்.ஜி.ஆரால் பெரிதும் போஷிக்கப்பட்டது. எலியிடம் தொடங்கி, நாயிடம் தொடர்ந்து நாட்டில் வந்து முடிந்துவிட்டது பெரியவரின் கருணை.
பசிக்கொடுமைக்கு பெரியவர் விடுதலை காண விரும்பியதால்தான், ‘பிடி அரிசித் திட்டம்’ என்கிற ஒரு திட்டத்தையே கொண்டு வந்தார்.
தினமும் ஒரு கைப்பிடி அரிசியை பிறருக்காக என்று ஒவ்வொரு வீட்டிலும் எடுத்து வைத்து, அதை மடத்தைச் சார்ந்தவர்கள் வரும் போது தரவேண்டும். வீட்டுக்கு வீடு சேரும் இந்த அரிசியால், ஊருக்குள் ஒருவர்கூட பட்டினியின்றி இருக்க முடியுமே?
எப்பேர்ப்பட்ட உன்னதமான திட்டம்!
பெரியவர் இருக்கும் வரை பெரிதும் பேணப்பட்ட இந்த திட்டத்தை, இப்போது நினைவில்தான் வைத்திருக்கிறோம்; பெருமளவு செயலில் இல்லை.இந்தப் பட்டினி உணர்வு மட்டும் எப்படித்தான் பெரியவருக்கு தெரியுமோ?
ஒரு புலவர், தன் குடும்பத்தவருடன் செட்டிநாட்டுப் பகுதியிலிருந்து பயணிக்கும்போது, வழியில் எங்குமே சாப்பிடக் கிடைக்கவில்லை. பசியோ குடலைப் பிடுங்கித் தின்கிறது. நேரமோ நள்ளிரவைத் தாண்டிவிட்டது. அப்போது, புதுக்கோட்டை அருகே ஒரு ஊரில் மகாபெரியவர் தங்கி இருக்கும் அறிவிப்பு அவர் கண்களில் படுகிறது.
உடனே காரை அங்கு விடச் சொல்கிறார். குடும்பத்தவர்களோ, ‘நள்ளிரவாகி விட்ட நிலையில், பெரியவர் தங்கி இருக்கும் இடத்துக்குப் போய், அவரை சிரமப்படுத்துவது சரியில்லை’ என்கின்றனர்.
நாம் சிரமப்படுத்த வேண்டாம். காலை அவரை தரிசித்துவிட்டு செல்வோம். இந்தப் பட்டினி அவருக்கான விரதமாக இருக்கட்டும்‘’ என்கிறார் புலவர். காரும் அந்த ஊரை நெருங்கி விட்ட நிலையில், மணி ஒன்று!
ஊர் எல்லையிலேயே ஒரு பிராமணர் காத்திருந்து, வழிமறித்து நிறுத்தி, ‘நீங்கள் தானே புலவர்?’ என்று கேட்கிறார். புலவருக்கோ பெரும் வியப்பு…!
- தொடரும்…
நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)
Sri Kanchi Maha Periva Thiruvadigal Charanam
இந்தப் பசியின் அருமையை பெரிதும் உணர்ந்த தலைவர்களில் ஒருவர்தான் எம்.ஜி.ஆர். அவருக்கும் பெரியவருக்கும் இந்த பசி விஷயத்தில் ஒரே எண்ணம் தான்!
எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்த சமயம் – முதல்வராக பொறுப்பேற்பதற்கு முதல் நாள் ஒரு சம்பவம்! அப்போது மகாபெரியவர், மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் தங்கியிருந்தார். இதே சாதுர்மாஸ்ய விரதம்தான். எம்.ஜி.ஆரை வாழ்த்தி, ஆசி கூற விரும்பினார் பெரியவர். அதன் நிமித்தம் ஒரு பொன்னாடையுடன் காமாட்சியம்மன் பிரசாதத்தை வரவழைத்து ஆசீர்வாதத்துடன், அதை வைணவ சீலரான முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சாரியார் வசம் ஒப்படைத்து, “இதை மடத்து ஆசீர்வாதமாக முதல்வரிடம் சேர்ப்பித்துவிடு” என்று கூறி அனுப்பிவித்தார்.
முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியாரும் ராமாவரம் தோட்டத்துக்கு வந்து காத்திருந்து, அந்த பிரசாதத்தை எம்.ஜி.ஆர். வசம் சேர்ப்பித்தார். பெரும் ஜனத்திரளுக்கு நடுவில் பிரசாதத்தை உரிய முறையில் சேர்க்க முடியுமா என்று சந்தேகம் இருந்தது. ஆனால், பெரியவர் கருணை அங்கே பரந்தாமன் எனும் அன்பர் மூலம் வழி நடத்தி பிரசாதத்தையும் சேர்த்துவிட்டது.
அவ்வேளையில், எம்.ஜி.ஆர் அவர்கள் லஷ்மி நரசிம்மாச்சாரியாரிடம் கூறியது ஒன்றுதான்: “மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நான் ஆட்சி செய்வேன்” என்று மட்டும் பெரியவரிடம் கூறி, என் பணிவான நமஸ்காரங்களையும் கூறிவிடுங்கள் என்றார்.
லஷ்மி நரசிம்மாச்சாரியாரும் மகிழ்வுடன் விடை பெற்றுக்கொண்டார். மறுநாள் எம்.ஜி.ஆர். பெரியவர் அணிவித்த சால்வையை அணிந்துகொண்ட பிறகே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
சதாராவிலிருந்து பெரியவர் புரிந்த ஆசிகளும், கருணையும், எம்.ஜி.ஆருக்குள் இயல்பாகவே இருந்த உதாரகுணமும் ஒன்றிணைந்தன. சத்துணவுத் திட்டம் எனும் மனிதநேய அரசியல் மொட்டவிழ்ந்தது.
காமராஜர் விதைத்தது; பெரியவர் கருணையாலே எம்.ஜி.ஆரால் பெரிதும் போஷிக்கப்பட்டது. எலியிடம் தொடங்கி, நாயிடம் தொடர்ந்து நாட்டில் வந்து முடிந்துவிட்டது பெரியவரின் கருணை.
பசிக்கொடுமைக்கு பெரியவர் விடுதலை காண விரும்பியதால்தான், ‘பிடி அரிசித் திட்டம்’ என்கிற ஒரு திட்டத்தையே கொண்டு வந்தார்.
தினமும் ஒரு கைப்பிடி அரிசியை பிறருக்காக என்று ஒவ்வொரு வீட்டிலும் எடுத்து வைத்து, அதை மடத்தைச் சார்ந்தவர்கள் வரும் போது தரவேண்டும். வீட்டுக்கு வீடு சேரும் இந்த அரிசியால், ஊருக்குள் ஒருவர்கூட பட்டினியின்றி இருக்க முடியுமே?
எப்பேர்ப்பட்ட உன்னதமான திட்டம்!
பெரியவர் இருக்கும் வரை பெரிதும் பேணப்பட்ட இந்த திட்டத்தை, இப்போது நினைவில்தான் வைத்திருக்கிறோம்; பெருமளவு செயலில் இல்லை.இந்தப் பட்டினி உணர்வு மட்டும் எப்படித்தான் பெரியவருக்கு தெரியுமோ?
ஒரு புலவர், தன் குடும்பத்தவருடன் செட்டிநாட்டுப் பகுதியிலிருந்து பயணிக்கும்போது, வழியில் எங்குமே சாப்பிடக் கிடைக்கவில்லை. பசியோ குடலைப் பிடுங்கித் தின்கிறது. நேரமோ நள்ளிரவைத் தாண்டிவிட்டது. அப்போது, புதுக்கோட்டை அருகே ஒரு ஊரில் மகாபெரியவர் தங்கி இருக்கும் அறிவிப்பு அவர் கண்களில் படுகிறது.
உடனே காரை அங்கு விடச் சொல்கிறார். குடும்பத்தவர்களோ, ‘நள்ளிரவாகி விட்ட நிலையில், பெரியவர் தங்கி இருக்கும் இடத்துக்குப் போய், அவரை சிரமப்படுத்துவது சரியில்லை’ என்கின்றனர்.
நாம் சிரமப்படுத்த வேண்டாம். காலை அவரை தரிசித்துவிட்டு செல்வோம். இந்தப் பட்டினி அவருக்கான விரதமாக இருக்கட்டும்‘’ என்கிறார் புலவர். காரும் அந்த ஊரை நெருங்கி விட்ட நிலையில், மணி ஒன்று!
ஊர் எல்லையிலேயே ஒரு பிராமணர் காத்திருந்து, வழிமறித்து நிறுத்தி, ‘நீங்கள் தானே புலவர்?’ என்று கேட்கிறார். புலவருக்கோ பெரும் வியப்பு…!
- தொடரும்…
நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)
Sri Kanchi Maha Periva Thiruvadigal Charanam