|
Post by radha on Mar 20, 2012 1:09:35 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:, RESPECTS TO SRI MAHA PERIVA HARA HARA ESWARA,SIVA SIVA ESWARA, JAYA JAYA ESWARA,SANKARA SANKARA SANKARA
நடப்பது இறைவன் செயல் டிசம்பர
* ஒருவருக்கு ஆனந்தத்தை தரும் சம்பவம் மற்றொருவருக்கு துக்கத்தை தருகிறது. எது நடக்க வேண்டுமோ அது இறைவன் செயல் என்று நினைப்பதே சரியாகும். * உடல், வாய், மனம், பணம் என்னும் நான்கு வகைகளிலும் பாவம் செய்கிறோம். பாவத்திற்கு பிராயச்சித்தமாக அந்த நான்காலும் புண்ணியம் செய்ய வேண்டும். உடலால் பரோபகாரம், வாயால் தெய்வ நாமத்தைச் சொல்வது, மனதால் தியானம், பணத்தால் தர்மம் முதலியவை செய்ய வேண்டும். * சம்பாதிப்பதாலும், வேண்டாத பொருட்களை தேடிப்போவதாலும் காலவிரயம் ஏற்படுகிறது. இதனால் ஆத்மசாந்தி குலைகிறது. நாம் உயிர்வாழ இந்த பொருள் அவசியம்தானா என கணக்கு பார்த்து செலவழிப்பதே உண்மையில் கணக்காயிருப்பதாகும். * குடிமக்கள் செய்யும் பாவம் அரசனையும், மனைவி செய்யும் பாவம் கணவனையும், சிஷ்யனின் பாவம் குருவையும் அடையும். * ஆசையின்றி ஒரு செயலைச் செய்தால் பாவமில்லை. ஆசைப்பட்டு செய்வது தான் பாவம். நமக்காக இல்லாமல் பிறருக்காக செய்யும் செயலே உயர்ந்தது. -காஞ்சிப்பெரியவர்
|
|
|
Post by krsiyer on Mar 21, 2012 20:00:12 GMT 5.5
Great ! His Greatness, thanks for hsaring
jaya jaya sankara, hara hara sankara
|
|