Post by radha on Jun 24, 2012 3:16:11 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
முசுகுந்த சக்கரவர்த்தி
முசுகுந்தர் ஒரு நாள் வசிஷ்ட முனிவரைச் சந்தித்து வணங்கி, சுப்ரமணியருக்கு உரிய விரதங்களை விவரமாகச் சொல்லும்படி வேண்டினார். வசிஷ்டரும் விவரிக்க ஆரம்பித்தார்: சுக்ரவார விரதம் எனும் வெள்ளிக்கிழமை விரதம் கந்த விரதங்களில் ஒன்று. இதனை அனுஷ்டிப்பவர்கள், மனதில் நினைத்த எல்லாமும் கிடைக்கப் பெறுவர். பகீரதன் எனும் பேரரசன் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தையும் அரசாட்சியையும் பெற்றான் என்ற வசிஷ்டர், அடுத்து நட்சத்திர விரதம் பற்றி கூறினார். நாரதர் விநாயகக் கடவுள் அருளியபடி கந்தனுக்குரிய கார்த்திகை நட்சத்திர விரதத்தை 12 ஆண்டுகள் மேற்கொண்டு ஏழு முனிவர்களுக்குள் மேலான பதவியைப் பெற்றார். இதே விரதத்தை மேற்கொண்ட வேதியன் ஒருவன் மறுபிறப்பில் திரிசங்கு என்ற மன்னனாகப் பிறந்து அரசாண்டான். இதைத் தவிர ஐப்பசி மாதத்து வளர்பிறை பிரதமை முதல் ஆறு நாட்கள் காலையில் நீராடி நித்யவழிபாடுகளைச் செய்து முருகனை கும்பத்தில் விதிப்படி ஆவாஹனம் செய்து பூஜித்து, வெல்லம் சேர்த்து நெய்யில் சமைத்த மோதகத்தை (கொழுக்கட்டையை) நிவேதித்து அன்று (ஆறாவது நாள்) உபவாசம் இருந்து பாராயணம் செய்து, மறுநாள் சப்தமி (ஏழாவது) திதியன்று கந்தவேளுக்கு விசேஷ பூஜை வழிபாடு செய்து.. இவ்வாறாக சஷ்டிவிரதம் அனுஷ்டித்தவர்களுக்கு எல்லாவிதமான செல்வம், யோகம் பெற்று வாழ்வாங்கு வாழ்வர் என்று உபதேசித்தார் வசிஷ்டர்.
முசுகுந்தரும் முருகனுக்கு உரிய விரதங்களை கடைப்பிடித்தார். கந்தவேள் அவருக்குக் காட்சியளித்து வேண்டும் வரங்கள் என்ன? என்று வினவினார். ஆறுமுகப் பரமனே! என் அரசாட்சி உலகெலாம் நன்கு நடைபெற, தங்களிடம் உள்ள வீரபாகு முதலான வீரர்கள் எனக்குத் துணைபுரிய அருள வேண்டும் என்று வேண்டினார். கந்தனும் அவ்வாறே வீரபாகு முதலான சேனைத் தலைவர்களை முசுகுந்தனுக்கு உதவுமாறு அறிவுறுத்தினார். ஆனால் அவர்கள் மானுட அரசனுக்குத் தொழில் புரிய மாட்டோம் என்று பதிலுரைத்தனர். எமது விருப்பத்தை நிறைவேற்ற நீங்கள் மறுத்ததால், நீங்கள் மனிதர்களாகப் பிறந்து, அதே முசுகுந்தனுக்குப் போர்வீரர்களாகக் கடவீர். பிறகு நோன்பிருந்து எம்மிடம் திரும்பிவருக! என்று கட்டளையிட்டார் கந்தன். தமது பிழையை உணர்ந்த அவர்கள் முருகன் திருவடிகளை வணங்கி அவ்வாறே முசுகுந்தனுக்குச் சேனை வீரர்களாக வந்து சேர்ந்தனர். மானுடனாக வந்த வீரபாகு புஷ்பகந்தி என்பவளை மணந்து இல்லறம் நடத்தினார். தான் பெற்ற சித்ரவல்லி என்ற பெண்ணை முசுகுந்தனுக்குத் திருமணம் செய்து வைத்தார். முசுகுந்தன் இந்திரனுக்கு துணையாகச் சென்று அரக்கனை அழித்தார். இந்திரன் தாம் பூஜித்த சோமாஸ்கந்தரான விடங்க மூர்த்தியை முசுகுந்தனுக்கு அளிக்க, அவர் அதனை திருவாரூர் முதலான ஏழு தலங்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். முசுகுந்தன் தமது மகன் அங்கிவர்மனுக்கு முடிசூட்டி, பிறகு கயிலை சென்று சிவனாரின் திருவடிகளில் இளைப்பாறினார். வீரபாகு தேவர் முதலானோர் தவம் இயற்றி மானுடத் தன்மை நீங்கி மீண்டும் கந்தபுரியை அடைந்தனர். மிகச்சிறந்த முருகனடியாரான முசுகுந்தரது பெருமைகளை கந்த புராணம் இனிது உரைக்கின்றது.
காணரும் தேவசேனை கடிமணம் கண்டுவந்தோன்
மாண் உறும் வீரவாகு துணைவரப் பெற்றோன்; வானோர்
பேணு தியாகர் ஏழுபேரையும் கொண்டு வந்தோன்
ஆணவம் அகற்ற அன்றே முசுமுகன் ஆனோன் வாழி! (-தணிகை மணியார்)
முசுகுந்த சக்கரவர்த்தி
முசுகுந்தர் ஒரு நாள் வசிஷ்ட முனிவரைச் சந்தித்து வணங்கி, சுப்ரமணியருக்கு உரிய விரதங்களை விவரமாகச் சொல்லும்படி வேண்டினார். வசிஷ்டரும் விவரிக்க ஆரம்பித்தார்: சுக்ரவார விரதம் எனும் வெள்ளிக்கிழமை விரதம் கந்த விரதங்களில் ஒன்று. இதனை அனுஷ்டிப்பவர்கள், மனதில் நினைத்த எல்லாமும் கிடைக்கப் பெறுவர். பகீரதன் எனும் பேரரசன் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தையும் அரசாட்சியையும் பெற்றான் என்ற வசிஷ்டர், அடுத்து நட்சத்திர விரதம் பற்றி கூறினார். நாரதர் விநாயகக் கடவுள் அருளியபடி கந்தனுக்குரிய கார்த்திகை நட்சத்திர விரதத்தை 12 ஆண்டுகள் மேற்கொண்டு ஏழு முனிவர்களுக்குள் மேலான பதவியைப் பெற்றார். இதே விரதத்தை மேற்கொண்ட வேதியன் ஒருவன் மறுபிறப்பில் திரிசங்கு என்ற மன்னனாகப் பிறந்து அரசாண்டான். இதைத் தவிர ஐப்பசி மாதத்து வளர்பிறை பிரதமை முதல் ஆறு நாட்கள் காலையில் நீராடி நித்யவழிபாடுகளைச் செய்து முருகனை கும்பத்தில் விதிப்படி ஆவாஹனம் செய்து பூஜித்து, வெல்லம் சேர்த்து நெய்யில் சமைத்த மோதகத்தை (கொழுக்கட்டையை) நிவேதித்து அன்று (ஆறாவது நாள்) உபவாசம் இருந்து பாராயணம் செய்து, மறுநாள் சப்தமி (ஏழாவது) திதியன்று கந்தவேளுக்கு விசேஷ பூஜை வழிபாடு செய்து.. இவ்வாறாக சஷ்டிவிரதம் அனுஷ்டித்தவர்களுக்கு எல்லாவிதமான செல்வம், யோகம் பெற்று வாழ்வாங்கு வாழ்வர் என்று உபதேசித்தார் வசிஷ்டர்.
முசுகுந்தரும் முருகனுக்கு உரிய விரதங்களை கடைப்பிடித்தார். கந்தவேள் அவருக்குக் காட்சியளித்து வேண்டும் வரங்கள் என்ன? என்று வினவினார். ஆறுமுகப் பரமனே! என் அரசாட்சி உலகெலாம் நன்கு நடைபெற, தங்களிடம் உள்ள வீரபாகு முதலான வீரர்கள் எனக்குத் துணைபுரிய அருள வேண்டும் என்று வேண்டினார். கந்தனும் அவ்வாறே வீரபாகு முதலான சேனைத் தலைவர்களை முசுகுந்தனுக்கு உதவுமாறு அறிவுறுத்தினார். ஆனால் அவர்கள் மானுட அரசனுக்குத் தொழில் புரிய மாட்டோம் என்று பதிலுரைத்தனர். எமது விருப்பத்தை நிறைவேற்ற நீங்கள் மறுத்ததால், நீங்கள் மனிதர்களாகப் பிறந்து, அதே முசுகுந்தனுக்குப் போர்வீரர்களாகக் கடவீர். பிறகு நோன்பிருந்து எம்மிடம் திரும்பிவருக! என்று கட்டளையிட்டார் கந்தன். தமது பிழையை உணர்ந்த அவர்கள் முருகன் திருவடிகளை வணங்கி அவ்வாறே முசுகுந்தனுக்குச் சேனை வீரர்களாக வந்து சேர்ந்தனர். மானுடனாக வந்த வீரபாகு புஷ்பகந்தி என்பவளை மணந்து இல்லறம் நடத்தினார். தான் பெற்ற சித்ரவல்லி என்ற பெண்ணை முசுகுந்தனுக்குத் திருமணம் செய்து வைத்தார். முசுகுந்தன் இந்திரனுக்கு துணையாகச் சென்று அரக்கனை அழித்தார். இந்திரன் தாம் பூஜித்த சோமாஸ்கந்தரான விடங்க மூர்த்தியை முசுகுந்தனுக்கு அளிக்க, அவர் அதனை திருவாரூர் முதலான ஏழு தலங்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். முசுகுந்தன் தமது மகன் அங்கிவர்மனுக்கு முடிசூட்டி, பிறகு கயிலை சென்று சிவனாரின் திருவடிகளில் இளைப்பாறினார். வீரபாகு தேவர் முதலானோர் தவம் இயற்றி மானுடத் தன்மை நீங்கி மீண்டும் கந்தபுரியை அடைந்தனர். மிகச்சிறந்த முருகனடியாரான முசுகுந்தரது பெருமைகளை கந்த புராணம் இனிது உரைக்கின்றது.
காணரும் தேவசேனை கடிமணம் கண்டுவந்தோன்
மாண் உறும் வீரவாகு துணைவரப் பெற்றோன்; வானோர்
பேணு தியாகர் ஏழுபேரையும் கொண்டு வந்தோன்
ஆணவம் அகற்ற அன்றே முசுமுகன் ஆனோன் வாழி! (-தணிகை மணியார்)