Post by radha on Jun 24, 2012 3:11:02 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
முசுகுந்த சக்கரவர்த்தி
.dinamalar.
ஒரு சமயம் கயிலாய மலையில் சிவபெருமானும் பார்வதி தேவியும் மகிழ்ச்சியுடன் உரையாடிக் கொண்டிருந்தனர். அங்குள்ள வில்வ மரங்களில் முசுவின் (குரங்குக்) கூட்டங்கள் தங்கியிருந்தன. அவற்றில் வயது முதிர்ந்த ஆண் முசு (குரங்கு) ஒன்று, வில்வ மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்து, கீழே அமர்ந்திருந்த பார்வதி - பரமேஸ்வரர் மீது போட்டுக் கொண்டிருந்தது. அம்பிகைக்கு சற்றே கோபம் வந்தது. ஆனால் சிவபெருமான், தேவி ! இங்கே நம்மை அர்ச்சிக்கும் இந்த முசுவை கோபிக்கலாமா? என்று அவளை அமைதிப்படுத்தினார். உமையும் மனமிரங்கி முசுவுக்கு அருள்புரிய எண்ணினாள். அதேகணம், அந்த முசுவின் மனதிலுள்ள அஞ்ஞானத்தை நீக்கி மெய்ஞ் ஞானத்தை அருளினார் பரமன். ஞானம் பெற்ற குரங்கு விரைவாக கீழே இறங்கி வந்து அம்மையப்பனை வணங்கி, தனது பிழையைப் பொறுத்தருள வேண்டியது. நீ எதுவும் பிழை செய்யவில்லை; சிறந்த வில்வ பத்திரங்களால் (இலைகளால்) எம்மைப் பூசித்தாய். ஆகவே, நீ மனு வம்சத்தில் பிறந்து உலகம் முழுவதையும் அரசாள்வாயாக என்று அருள்புரிந்தார் பரமேஸ்வரன். அதைக்கேட்ட முசு, எப்போதும் தங்களையே தரிசித்துக் கொண்டு, அழியாத அந்தப் பேரானந்தத்துடன் இங்கேயே இருந்து விடுகிறேன். பூமியில் பிறந்தால் செல்வத்தின் வலையில் சிக்கி அழிவே உண்டாகும். மீண்டும் பிழைப்பது எப்படி? என்றது. உடனே சிவனார், முசுவே... உன் மனதில் தோன்றியது சரிதான். ஆனாலும் கவலை வேண்டாம். இப்போது பூமியில் பிறந்து அரசாண்டு, பிறகு நம்மிடம் வருவாயாக! என்றார். அதற்கு தலைவணங்கிய முசு, எம்பெருமானே... மானிடப் பிறவி எடுத்தாலும் உலக மாயையில் மயங்காதபடி, இந்தக் குரங்கு முகத்துடனேயே பிறக்கும்படி அடியேனுக்கு அருள்புரியுங்கள் என்று வேண்டியது. பெருமானும் அவ்வாறே வரம் தந்தருளினார். சத்தியம் காக்க தமது செல்வம், ஆட்சி, மனைவி, மகன் அனைத்தையும் இழந்த அரிச்சந்திர மகாராஜா வம்சத்தில், குரங்கு முகத்துடனும், மற்ற அவயவங்கள் மிக்க அழகுடைய மன்மதனைப் போன்றும் திகழ, அந்த முசு பூமியில் பிறப்பெடுத்தது. அந்தக் குழந்தைக்கு முசுகுந்தன் என்று பெயரிட்டனர்.
முசுகுந்தன் நன்கு வளர்ந்து சோழ நாட்டில் கருவூரில் இருந்து கொண்டு அரசாளத் தொடங்கினான். இந்நிலையில், சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்து, தேவர் பதியை மீட்ட செய்தி முசுகுந்தனுக்கு எட்டியது. கந்தவேளுக்கு, இந்திரன் தன் மகள் தேவசேனாவை திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொடுக்க இருக்கும் செய்தியையும் இந்திர தூதர்கள் முசுகுந்தரிடம் தெரிவித்தனர். அகமகிழ்ந்த முசுகுந்தன், இந்த இனிய செய்தியை சொன்ன உங்களுக்கு என்ன பிரதியுபகாரம் செய்யலாம்? என் செல்வங்கள் அனைத்தையும் தரவா? என் அரசாட்சியைத் தரவா? என்று மகிழ்ச்சிக் களிப்பில் கேட்டார். அவரின் அன்பு பக்தியைக் கண்டு இந்திர தூதர்கள் மகிழ்ந்து, அரசே.. தூதுவராகிய எங்களுக்கு இவை ஏற்கக் கூடியதல்ல! நீங்கள் திருமணத்தில் கலந்துகொள்வதே இதற்குச் சமம் என்றனர். முசுகுந்தனும் அவரது நாட்டு மக்களும் யானை, குதிரை முதலான படைகளோடும், கொக்கரை, படகம், பேரி, குடமுழா முதலான இசைக் கருவிகளை ஒலிக்கச் செய்து கொண்டும் திருப்பரங்குன்றத்தை அடைந்தனர். அங்கு முசுகுந்தர் தங்குவதற்குத் தனி மாளிகையையே அமைத்திருந்தனர். இந்திரன்-இந்திராணி மற்றும் தேவர்களைக் கண்டு வணங்கினார் முசுகுந்தர். அனைவரும் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். தெய்வானை செம்பவள நிறத்தில் புடவை அணிந்து பலவித நகைகளைச் சூடி, திருமகள், கலைமகள், அரம்பையர் புடைசூழ மணப்பெண் கோலத்தில் காட்சியளித்தாள். அழகெல்லாம் திரண்டு ஒரு வடிவமாக அமைந்த ஆறுமுகப் பரமன் மயில் வாகனத்தில் அமர்ந்து வீதியில் உலாவர, சூரிய-சந்திரர் வெண்கொற்றக் குடையைத் தாங்கினர். வாயு சாமரம் வீசினான். வருணன் ஆலவட்டம் அசைத்தான். எமன் வாட்படையை ஏவினான். அரம்பையர் ஆடினர். முனிவர்கள் ஸ்தோத்தரித்தனர். பலவித வாத்யங்கள் ஒலித்தன. குமரன் திருமணச் சாலையை அடைந்தார். தேவர்கள், முனிவர்கள், அரசர்கள் அழகு முருகனை வணங்கித் துதித்தனர். சிவபெருமான் உமாதேவியோடு ஆகாய விமானத்தில் வந்து திருப்பரங்குன்ற பூமியில் எழுந்தருளினார். தாய்- தந்தையை வணங்கி பாத பூஜை செய்து மகிழ்ந்தார் கந்தவேள். இந்திரன், இந்திராணி மற்றும் தேவர்கள், அரம்பையர் புடைசூழ தெய்வானையும் திருமண மண்டபத்தை அடைந்தாள். பிரம்மன் திருமணச் சடங்குகளைச் செய்ய, முருகனும் - தெய்வானையும் சிவாக்னியை வலம் வந்து, அம்மி மிதித்து.. என திருமணச் சடங்குகள் நடைபெற்றன; தெய்வானைக்கு திருமுருகன் மங்கலநாண் பூட்டினார். பிறகு அந்தத் தம்பதி, சிவ - பார்வதியை வணங்கி ஆசி பெற்றனர். முருக பக்தரான முசுகுந்தரும் கந்தனை துதித்து வாழ்த்திய பிறகு, நாட்டு மக்களுடன் கருவூர் திரும்பினார்!
முசுகுந்த சக்கரவர்த்தி
.dinamalar.
ஒரு சமயம் கயிலாய மலையில் சிவபெருமானும் பார்வதி தேவியும் மகிழ்ச்சியுடன் உரையாடிக் கொண்டிருந்தனர். அங்குள்ள வில்வ மரங்களில் முசுவின் (குரங்குக்) கூட்டங்கள் தங்கியிருந்தன. அவற்றில் வயது முதிர்ந்த ஆண் முசு (குரங்கு) ஒன்று, வில்வ மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்து, கீழே அமர்ந்திருந்த பார்வதி - பரமேஸ்வரர் மீது போட்டுக் கொண்டிருந்தது. அம்பிகைக்கு சற்றே கோபம் வந்தது. ஆனால் சிவபெருமான், தேவி ! இங்கே நம்மை அர்ச்சிக்கும் இந்த முசுவை கோபிக்கலாமா? என்று அவளை அமைதிப்படுத்தினார். உமையும் மனமிரங்கி முசுவுக்கு அருள்புரிய எண்ணினாள். அதேகணம், அந்த முசுவின் மனதிலுள்ள அஞ்ஞானத்தை நீக்கி மெய்ஞ் ஞானத்தை அருளினார் பரமன். ஞானம் பெற்ற குரங்கு விரைவாக கீழே இறங்கி வந்து அம்மையப்பனை வணங்கி, தனது பிழையைப் பொறுத்தருள வேண்டியது. நீ எதுவும் பிழை செய்யவில்லை; சிறந்த வில்வ பத்திரங்களால் (இலைகளால்) எம்மைப் பூசித்தாய். ஆகவே, நீ மனு வம்சத்தில் பிறந்து உலகம் முழுவதையும் அரசாள்வாயாக என்று அருள்புரிந்தார் பரமேஸ்வரன். அதைக்கேட்ட முசு, எப்போதும் தங்களையே தரிசித்துக் கொண்டு, அழியாத அந்தப் பேரானந்தத்துடன் இங்கேயே இருந்து விடுகிறேன். பூமியில் பிறந்தால் செல்வத்தின் வலையில் சிக்கி அழிவே உண்டாகும். மீண்டும் பிழைப்பது எப்படி? என்றது. உடனே சிவனார், முசுவே... உன் மனதில் தோன்றியது சரிதான். ஆனாலும் கவலை வேண்டாம். இப்போது பூமியில் பிறந்து அரசாண்டு, பிறகு நம்மிடம் வருவாயாக! என்றார். அதற்கு தலைவணங்கிய முசு, எம்பெருமானே... மானிடப் பிறவி எடுத்தாலும் உலக மாயையில் மயங்காதபடி, இந்தக் குரங்கு முகத்துடனேயே பிறக்கும்படி அடியேனுக்கு அருள்புரியுங்கள் என்று வேண்டியது. பெருமானும் அவ்வாறே வரம் தந்தருளினார். சத்தியம் காக்க தமது செல்வம், ஆட்சி, மனைவி, மகன் அனைத்தையும் இழந்த அரிச்சந்திர மகாராஜா வம்சத்தில், குரங்கு முகத்துடனும், மற்ற அவயவங்கள் மிக்க அழகுடைய மன்மதனைப் போன்றும் திகழ, அந்த முசு பூமியில் பிறப்பெடுத்தது. அந்தக் குழந்தைக்கு முசுகுந்தன் என்று பெயரிட்டனர்.
முசுகுந்தன் நன்கு வளர்ந்து சோழ நாட்டில் கருவூரில் இருந்து கொண்டு அரசாளத் தொடங்கினான். இந்நிலையில், சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்து, தேவர் பதியை மீட்ட செய்தி முசுகுந்தனுக்கு எட்டியது. கந்தவேளுக்கு, இந்திரன் தன் மகள் தேவசேனாவை திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொடுக்க இருக்கும் செய்தியையும் இந்திர தூதர்கள் முசுகுந்தரிடம் தெரிவித்தனர். அகமகிழ்ந்த முசுகுந்தன், இந்த இனிய செய்தியை சொன்ன உங்களுக்கு என்ன பிரதியுபகாரம் செய்யலாம்? என் செல்வங்கள் அனைத்தையும் தரவா? என் அரசாட்சியைத் தரவா? என்று மகிழ்ச்சிக் களிப்பில் கேட்டார். அவரின் அன்பு பக்தியைக் கண்டு இந்திர தூதர்கள் மகிழ்ந்து, அரசே.. தூதுவராகிய எங்களுக்கு இவை ஏற்கக் கூடியதல்ல! நீங்கள் திருமணத்தில் கலந்துகொள்வதே இதற்குச் சமம் என்றனர். முசுகுந்தனும் அவரது நாட்டு மக்களும் யானை, குதிரை முதலான படைகளோடும், கொக்கரை, படகம், பேரி, குடமுழா முதலான இசைக் கருவிகளை ஒலிக்கச் செய்து கொண்டும் திருப்பரங்குன்றத்தை அடைந்தனர். அங்கு முசுகுந்தர் தங்குவதற்குத் தனி மாளிகையையே அமைத்திருந்தனர். இந்திரன்-இந்திராணி மற்றும் தேவர்களைக் கண்டு வணங்கினார் முசுகுந்தர். அனைவரும் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். தெய்வானை செம்பவள நிறத்தில் புடவை அணிந்து பலவித நகைகளைச் சூடி, திருமகள், கலைமகள், அரம்பையர் புடைசூழ மணப்பெண் கோலத்தில் காட்சியளித்தாள். அழகெல்லாம் திரண்டு ஒரு வடிவமாக அமைந்த ஆறுமுகப் பரமன் மயில் வாகனத்தில் அமர்ந்து வீதியில் உலாவர, சூரிய-சந்திரர் வெண்கொற்றக் குடையைத் தாங்கினர். வாயு சாமரம் வீசினான். வருணன் ஆலவட்டம் அசைத்தான். எமன் வாட்படையை ஏவினான். அரம்பையர் ஆடினர். முனிவர்கள் ஸ்தோத்தரித்தனர். பலவித வாத்யங்கள் ஒலித்தன. குமரன் திருமணச் சாலையை அடைந்தார். தேவர்கள், முனிவர்கள், அரசர்கள் அழகு முருகனை வணங்கித் துதித்தனர். சிவபெருமான் உமாதேவியோடு ஆகாய விமானத்தில் வந்து திருப்பரங்குன்ற பூமியில் எழுந்தருளினார். தாய்- தந்தையை வணங்கி பாத பூஜை செய்து மகிழ்ந்தார் கந்தவேள். இந்திரன், இந்திராணி மற்றும் தேவர்கள், அரம்பையர் புடைசூழ தெய்வானையும் திருமண மண்டபத்தை அடைந்தாள். பிரம்மன் திருமணச் சடங்குகளைச் செய்ய, முருகனும் - தெய்வானையும் சிவாக்னியை வலம் வந்து, அம்மி மிதித்து.. என திருமணச் சடங்குகள் நடைபெற்றன; தெய்வானைக்கு திருமுருகன் மங்கலநாண் பூட்டினார். பிறகு அந்தத் தம்பதி, சிவ - பார்வதியை வணங்கி ஆசி பெற்றனர். முருக பக்தரான முசுகுந்தரும் கந்தனை துதித்து வாழ்த்திய பிறகு, நாட்டு மக்களுடன் கருவூர் திரும்பினார்!